Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒற்றையாட்சியை நிராகரித்த சம்பந்தன் – சிங்களத் தலைவர்களின் கருத்து என்ன?

Featured Replies

ஒற்றையாட்சிக் கோட்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், அதி உச்ச அதிகாரப் பகிர்வை உள்ளடக்கிய சமஷ்டி முறை மூலமே, தமிழர் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ள கருத்துக்கு சிங்கள அரசியல் தலைமைகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.

இரா சம்பந்தன் வெளியிட்டுள்ள கருத்து தொடர்பாக சிங்கள அரசியல் தலைவர்கள் பலரும் வெளியிட்டுள்ள கருத்துக்களின் தொகுப்பு.

வாசுதேவ நாணயக்கார -

vasudeva-nanayakkaraசிறிலங்காவில் சமஷ்டி முறைமையில் அதிகாரப் பகிர்வு என்ற பேச்சுக்கே இடமில்லை. ஒற்றையாட்சிக்குள்ளேயே அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்பட வேண்டும்.

இதற்குள் 13 ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

அதேவேளை அரச திட்டமிடல், பாதுகாப்பு, நிதி , நிர்வாகம் உட்பட முக்கிய அதிகாரங்கள் மத்திய அரசிடமே இருக்க வேண்டும். சம்பந்தனின் கூற்றை ஏற்றுக் கொள்ள முடியாது.

 தினேஸ் குணவர்த்தன – 

Dinesh-Gunawardana

ஒற்றையாட்சியை தாண்டி எவ்வாறான முறைமைக்கும் அரசாங்கம்  செல்லாது. சிறிலங்கா அதிபரும் பிரதமரும் ஒற்றையாட்சி முறைமையை மீறி செல்லமாட்டோம் என கூறியுள்ளனர். அதனை அவர்கள் நிறைவேற்றுவார்கள் என்று நம்புகின்றோம்.

ஆனால் 16 ஆசனங்களை வைத்துக் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கைகளை முன்வைப்பது நாட்டில் அரசியல் நெருக்கடிகளையே ஏற்படுத்தும். சம்பந்தனின் கோரிக்கைகள் நிறைவேறுவதற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்.

நாட்டுக்கு எதிரான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டால் தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி  உறுப்பினர்கள்  ஒன்றிணைந்த எதிர்க்கட்சியுடன் இணைந்துவிடுவார்கள்.

நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்ப்போம். அவ்வாறு நாங்கள் எதிர்க்க முன்வந்தால் அரசாங்கத்துககு மூன்றில் இரண்டு பெரும்பான்மையைவிடுத்து சாதாரண பெரும்பான்மைக் கூட கிடைக்காது.

ஐக்கிய இலங்கை என்ற கோட்பாடு வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைத்தல், சமஷ்டி முறைமை பகிரப்பட்ட இறையாண்மை உள்ளிட்ட கூட்டமைப்பின் எந்தவொரு கோரிக்கைக்கும் நாங்கள் இடமளிக்கமாட்டோம்.

அமைச்சர் சம்பிக்க ரணவக்க –

champika-ranawakaஒரு சிலர் நாட்டை பிரிக்கும் வகையில் கருத்துக்களை பரப்பினாலும் தமிழ் மக்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட பிரதான கட்சிகளின் பிரதிநிதிகளும் பிரிவினைக்கு எதிரான அரசியல் பயணத்தையே விரும்புகின்றனர்.

நாட்டை பிரிக்கும் செயற்பாடுகள் தமிழர் தரப்பில் இருந்து வராது என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது.

அதேபோல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது அதி உச்ச அதிகாரப் பகிர்வு என்னவென தமது வரைபை முன்வைக்க வேண்டும். அவர்களின் நிலைப்பாடு எவ்வாறு என்பதை தெளிவாக அரசாங்கத்திடம் தெரிவிக்க வேண்டும்.

அவ்வாறு இல்லாது அதியுச்ச அதிகாரப் பகிர்வு என கருத்தின் உட்பொருள் என்னவென்பது தெரியாது எதையும் எம்மால் தெரிவிக்க முடியாது.

அமைச்சர் விஜேதாச ராஜபக்ச-

Wijeyadasa Rajapaksheதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் வெளியிட்டுள்ள கருத்துக்கு நான் கருத்துக் கூற முடியாது. அவர் என்ன அடிப்படையில் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார் என்று எனக்குத் தெரியவில்லை.

ஆனால் பொதுவான ஒரு விடயத்தை என்னால் குறிப்பிட முடியும்.  புதிய அரசியலமைப்பு மற்றும் அதில் உள்ளடக்கப்படவேண்டிய தீர்வு முறைமை தொடர்பில் அரசாங்கம் சகல கட்சிகளுடனும் பேச்சு நடத்தி இணக்கப்பாட்டுக்கு வந்த பின்னரே இறுதி முடிவு எடுக்கும்.

இங்கு சகல கட்சிகளுடனும் பேச்சு நடத்துவோம் என்கின்றபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதில் உள்ளடங்கும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும் அரசாங்கம் பேச்சு நடத்தும். இதன்போது தற்போது எழுந்துள்ள சிக்கல்கள் தொடர்பில் பேச்சு நடத்தி பொதுவான இணக்கப்பாட்டுக்கு வர முடியும் என்று நம்புகிறோம்.

http://www.whathits.com/puthinappalakai

சிங்கள தலைவர்களே டென்சனீகாதீங்க. நம்ம சம்பந்தர் மேடையில் மட்டும் தான் இப்படி பேசுவார். உங்களிடம் பேச்சுக்கு வரும் போது நீங்களாக பாத்து ஏதாவது செய்யுங்கோ என்று குழைவார். 

Edited by trinco

இதில் கருத்துச்சொன்ன ,எழுதிய எவருடனும் தமிழர் தரப்பு பேசவில்லை .

12 hours ago, Iraivan said:

அமைச்சர் சம்பிக்க ரணவக்க –

champika-ranawakaஒரு சிலர் நாட்டை பிரிக்கும் வகையில் கருத்துக்களை பரப்பினாலும் தமிழ் மக்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட பிரதான கட்சிகளின் பிரதிநிதிகளும் பிரிவினைக்கு எதிரான அரசியல் பயணத்தையே விரும்புகின்றனர்.

நாட்டை பிரிக்கும் செயற்பாடுகள் தமிழர் தரப்பில் இருந்து வராது என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது.

அதேபோல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது அதி உச்ச அதிகாரப் பகிர்வு என்னவென தமது வரைபை முன்வைக்க வேண்டும். அவர்களின் நிலைப்பாடு எவ்வாறு என்பதை தெளிவாக அரசாங்கத்திடம் தெரிவிக்க வேண்டும்.

அவ்வாறு இல்லாது அதியுச்ச அதிகாரப் பகிர்வு என கருத்தின் உட்பொருள் என்னவென்பது தெரியாது எதையும் எம்மால் தெரிவிக்க முடியாது.

அடக்கி வாசிக்கின்றார் .,யதார்த்தமான பதில் .

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Iraivan said:

வாசுதேவ நாணயக்கார -

vasudeva-nanayakkaraசிறிலங்காவில் சமஷ்டி முறைமையில் அதிகாரப் பகிர்வு என்ற பேச்சுக்கே இடமில்லை. ஒற்றையாட்சிக்குள்ளேயே அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்பட வேண்டும்.

இதற்குள் 13 ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

அதேவேளை அரச திட்டமிடல், பாதுகாப்பு, நிதி , நிர்வாகம் உட்பட முக்கிய அதிகாரங்கள் மத்திய அரசிடமே இருக்க வேண்டும். சம்பந்தனின் கூற்றை ஏற்றுக் கொள்ள முடியாது.

சம்பந்தி விக்கி வேறைமாதிரிச் சொல்லுறார். அவர் சொன்னால் ஏற்றுக்கொள்வாரா சம்பந்தி வாசு! <_<

  • கருத்துக்கள உறவுகள்
On 24/1/2016 at 10:25 AM, Iraivan said:

அமைச்சர் சம்பிக்க ரணவக்க –

champika-ranawakaஒரு சிலர் நாட்டை பிரிக்கும் வகையில் கருத்துக்களை பரப்பினாலும் தமிழ் மக்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட பிரதான கட்சிகளின் பிரதிநிதிகளும் பிரிவினைக்கு எதிரான அரசியல் பயணத்தையே விரும்புகின்றனர்.

நாட்டை பிரிக்கும் செயற்பாடுகள் தமிழர் தரப்பில் இருந்து வராது என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது.

அதேபோல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது அதி உச்ச அதிகாரப் பகிர்வு என்னவென தமது வரைபை முன்வைக்க வேண்டும். அவர்களின் நிலைப்பாடு எவ்வாறு என்பதை தெளிவாக அரசாங்கத்திடம் தெரிவிக்க வேண்டும்.

அவ்வாறு இல்லாது அதியுச்ச அதிகாரப் பகிர்வு என கருத்தின் உட்பொருள் என்னவென்பது தெரியாது எதையும் எம்மால் தெரிவிக்க முடியாது.

 

 

14 hours ago, Gari said:

 அடக்கி வாசிக்கின்றார் .,யதார்த்தமான பதில் .

உண்மை தான்

இது போன்ற கருத்துக்களே தேவை..

  • கருத்துக்கள உறவுகள்

 

இந்தியா தரப்பில் இருந்து  வரும் கண்டியளோ.

Quote

தமிழர் தரப்பில் இருந்து வராது என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது.

 

 

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரி அவர்களின் ஆட்சி உள்ளவரை தான் இந்தப் பேச்சுவார்த்தை ஏற்பாடெல்லாம்.
பின்னர் எல்லாம் காத்தோடு போயிடும்.
மெலே உள்ளவர்கள் நாலுபேரும் சிங்களத்தலைவர்கள் அல்ல
சிங்கள இனவாதிகள் இவர்களால் இப்படித்தான் பேச முடியும்.
அதிகாரத்தில் உள்ளவர்கள் அடக்கி வாசிப்பது எப்போதும் நடப்பவையே.
எதிர்க்கட்சி ஆட்சி அமைத்தால் மட்டுமே அவர்களின் உண்மை முகம் வெளிப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் நீதியமைச்சரே கிளியரா சொல்லிட்டரே.. சம் சும் குடுகுடுப்பைக் கும்பலோடு.. ஒற்றையாட்சிக்குள் தான் பேச்சுன்னு. இதில சில சம் சும் வாலுகள்.. அவைக்கு இன்னும் பந்தா.. காட்டினம். tw_blush:

  • தொடங்கியவர்

ஒற்றை ஆட்சிக்குள்தான் இனி எல்லாம். மாற்று வழிகளுக்கு இடமேயில்லை.

அரசியலமைப்பு மாற்றத்திற்கு பொன்னான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது: ஜயம்பதி விக்கிரமரட்ண
[ புதன்கிழமை, 27 சனவரி 2016, 09:31.27 PM GMT ]
jayapam_pathi_001.jpg
நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்து தேசிய அரசாங்கத்தை அமைத்து நல்லாட்சியை செலுத்துவதால் அரசியலமைப்பு மாற்றத்துக்கு பொன்னான சந்தர்ப்பம் கிடைத்துள்ளதென அரசியலமைப்பு சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி ஜயம்பதி விக்கிரமரட்ண தெரிவித்துள்ளார். 

சென்னையிலிருந்து வெளிவரும் இந்து பத்திரிகைக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

1978ஆம் ஆண்டு முதல் அரசியலமைப்பு மாற்றம் தொடர்பில் கலந்துரையாடி வருவதால் இம்முயற்சியை மேலும் இழுத்தடிக்காமல் ஆறு மாதங்களில் பூர்த்திசெய்ய வேண்டும் என்றார்.

13ஆவது அரசியலமைப்பின் கீழ் தேசிய கொள்கை அமைப்பது என்ற போர்வையில் வழங்கப்பட்ட அதிகாரங்கள் மீளப்பெறப்பட்டன. இவ்வாறான நிலையில் சகல மாகாணங்களுக்கும் அதிகாரங்கள் பகிரப்படவேண்டும். அதிகாரங்களைப் பகிர்வதன் அடிப்படையில் தேசிய கொள்கைகளை அமைப்பதில் எதுவித தவறும் இல்லை என்றும் அவர் கூறினார்.

அதிகாரப் பகிர்வு என்பது பிரச்சினைக்குத் தீர்வு மாத்திரமன்றி, அபிவிருத்தியில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகளை நீக்கக்கூடிய கருவியாகவும் உள்ளது. சகல இன மக்களையும் உள்வாங்கும் வகையில் அரசியலமைப்பு மாற்றம் அமைய வேண்டும் என்றும் கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்ன மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, “பிரிவினைவாதப் போக்கிலிருந்து நாட்டை பாதுகாப்பதற்கான கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும். அதேநேரம், இந்நாட்டில் பெரும்பான்மையானவர்கள் ஒன்றிணைந்து, கொடுக்கப்பட்டுள்ளவற்றை (தற்பொழுது) மீளஎடுத்துக்கொள்வதையும் பாதுகாக்க வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ‘ஒற்றையாட்சி’ ‘சமஷ்டி’ என்ற லேபல்கள் அவசியமில்லை. அதிகாரப் பகிர்வு என்பது நாட்டைப் பிரித்துவிடும் என்ற அச்சம் சிங்கள மக்கள் மத்தியில் காணப்படுகிறது. இதனாலேயே பெரும்பான்மையானவர்கள் ‘ஒற்றையாட்சி’ என்ற பதத்தைப் பிடித்துக்கொண்டிருக்கின்றனர்.

எனினும் தற்பொழுது வழங்கப்பட்டிருப்பவை நாளை மீளப்பெற்றுக்கொள்ளப்பட்டுவிடலாம் என்ற அச்சம் தமிழ் மக்கள் மத்தியில் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.