Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈழத்து பிரபல எழுத்தாளன் செங்கை ஆழியான் பூதவுடல் தீயில் சங்கமம்!

Featured Replies

ஈழத்து பிரபல எழுத்தாளன் செங்கை ஆழியான் பூதவுடல் தீயில் சங்கமம்!
 
 
ஈழத்து பிரபல எழுத்தாளன் செங்கை ஆழியான் பூதவுடல் தீயில் சங்கமம்!
இலக்கியத் துறையிலும், எழுத்துத் துறையிலும் செங்கை ஆழியான் விட்டுச் சென்றுள்ள வெற்றிடத்தினை நிரப்புவதென்பது பெரும் சவாலான விடயமென இன்று  இறுதி அஞ்சலி செலுத்திய துணைவேந்தர்கள், கல்வி மான்கள், சமூகவியலாளர்கள் தெரிவித்தனர்.
 
செங்கை ஆழியான் என்று அழைக்கப்படும் மிகப்பெரிய எழுத்தாளர் குணராசாவின் இறுதிக் கிரியைகள் இன்று நீராவியடியில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்றது.
 
இறுதி அஞ்சலியின் போது, அரசியல் கட்சியினர் மற்றும் பல்கலைக்கழக துணைவேந்தர்கள், எழுத்தாளர்கள் பெரும் திரளானோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.
 
அன்னாரின் பூதவுடல் கோம்பயன் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. செங்கையாழியான் என அறியப்படும் க.குணராசா தனது 75ஆவது வயதில் காலமானார். சிறிது காலமாக சுகயீனமுற்று இருந்த அவர், யாழ்ப்பாணம் பிறவுன் வீதியில் உள்ள அவரது இல்லத்தில் மாசி மாதம் 28ஆம் திகதி காலமானார்.
 
1941 இல் பிறந்த செங்கையான் மிகப்பெருமளவு நூல்களை வெளியிட்ட ஈழத்து எழுத்தாளராவார். புதினங்கள், சிறுகதைகள், புவியியல் நூல்கள், வரலாற்று ஆய்வுகள், தொகுப்பு மற்றும் பதிப்புத்துறை எனப் பல்வேறு துறைகளிலும் கொடிகட்டி பறந்த க. குணராசாவின் பங்களிப்பு மிகப்பெரியதாகும்.
 
இவர், நந்திக்கடல், சித்திரா பௌர்ணமி, ஆச்சி பயணம் போகிறாள், முற்றத்து ஒற்றைப் பனை, வாடைக்காற்று, காட்டாறு, இரவின் முடிவு, ஜன்ம பூமி, கந்தவேள் கோட்டம், கடற்கோட்டை போன்ற புதினங்களையும் பூதத்தீவுப் புதிர்கள் மற்றும் ஆறுகால்மடம் போன்ற சிறுவர் புதினங்களையும் யாழ்ப்பாண அரச பரம்பரை, நல்லை நகர் நூல் மற்றும் மகாவம்சம் தரும் இலங்கைச் சரித்திரம் போன்ற வரலாற்று நூல்களையும் ஈழத்துச் சிறுகதை வரலாறு என்ற ஆய்வு நூலையும் மல்லிகைச் சிறுகதைகள் – 1 மல்லிகைச் சிறுகதைகள் – 2 சுதந்திரன் சிறுகதைகள், மறுமலர்ச்சிச் சிறுகதைகள், ஈழகேசரிச் சிறுகதைகள், முனியப்பதாசன் கதைகள், ஆயிரமாயிரம் ஆண்டுகள் போன்ற தொகுப்புக்களையும் வெளியிட்டார். ஈழத்து எழுத்துத்துறைக்கு அன்னாரின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.
 
இப்படைப்புகளில் வாடகைக்காற்று திரைப்படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அத்துடன் ஈழநாடு பத்திரிகையில் வெளிவந்த கிடுகு வேலி அனைவராலும் விரும்பப்பட்ட படைப்பாகும். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கல்வி கற்ற இவர் பட்டபடிப்பினை பேராதனை பல்கலைக்கழகத்தில் கற்றார். யாழ்.மாநகர சபை ஆணையாளராகவும், யாழ். பல்கலைக்கழகப் பதிவாளராகவும் கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
                                             sengaiyaliyan1.jpg
 
                                             sengaiyaliyan3.jpg
 
                                             sengaiyaliyan2.jpg
 
 
  • கருத்துக்கள உறவுகள்

அண்ணாரின் ஆத்மா சாந்தியடையட்டும்....!

  • தொடங்கியவர்

செங்கை ஆழியானின் இறுதிப் பயணம்!

 

 

செங்கை ஆழியானின் இறுதிப் பயணம்!

 

ஈழத்தின் புகழ் பூத்த எழுத்தாளர்களில் ஒருவரான செங்கை ஆழியானின் இறுதிக் கிரியைகள் இன்று யாழ்ப்பாணம் - நீராவியடியிலுள்ள அண்ணாரது இல்லத்தில் இடம்பெற்றது.

இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழில் வைத்து சுகயீனம் காரணமாக தனது 75வது வயதில் இயற்கை எய்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

செங்கை ஆழியான் என்கிற கலாநிதி கந்தையா குணராசா 1941 ஜனவரி 25ம் திகதியன்று பிறந்தார்.

ஈழத்து வரலாறு சார் புனைகளையும், ஆய்வுகளையும், சிறுகதைகளையும் எழுதியுள்ள இவரால் இலங்கையைச் சேர்ந்த பத்திரிகை ஒன்றில் எழுதப்பட்ட தொடர்கதையான ‘கிடுகுவேலி’ வாசகர்கள் மத்தியில் பிரபல்யமானது. அவரது ‘வாடைக் காற்று’ மற்றும் ‘புதினம்’ ஆகிய படைப்புக்கள் திரைப்படமாகவும் தயாரிக்கப்பட்டது.
 

 கனடாவில் இருந்து சென்ற அவரது உறவுகள் வாணி ,யசோவும் இறுதி கிரியையில் கலந்துள்ளார்கள் .

படத்தில் நிற்கின்றார்கள்  

 

Edited by arjun
எழுத்து திருத்தம் .

  • கருத்துக்கள உறவுகள்

டக்கியும் தானும் தானும் என்று வந்து நிக்கிறார்..??! :rolleyes: விளம்பரம் கிடைக்குமுன்னா.. சாவு வீட்டையும் விடமாட்டாளோ..ஓடி வருவாளோ..?! tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்

அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்.

எமது உறவினரான அவரின் நேற்றைய இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு இறுதி அஞ்சலியை  செலுத்தி இருந்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்

அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும். அவருடைய எழுத்துக்கள் எங்கள் உள்ளத்தில் ஒற்றுமையும், மண்பற்றும் வளர்க்க உதவட்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.