Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழ நீதியரசி சித்திராவின் வறுமைக்கு தீர்வு கிடைக்குமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

இப்படியான ஆறப்போடும் காரணங்களினால்தான் நான் யாழ்களத்தின் ஊடாக எவ்வித உதவி நடவடிக்கைகளில் பங்கெடுப்பதில்லை என முடிவெடுத்திருக்கின்றேன். அவசரம் அவசரமாக பணத்தை சேர்த்து விட்டு.......உடனடியாக யாருக்கும் உதவாமல்  பணம் வங்கியில் புளுக்கூடு கட்டிக்கொண்டிருக்கும். ஒரு ஆயிரம் ஈரோவை வைத்து அறுபத்தெட்டு ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பார்கள்.

வளங்களும் தேவைகளும் அதிகரித்துள்ள சூழலில் பாதிக்கப்பட்டுப் பராமரிப்பற்ற நிலை ஒதுக்குதல் ஓரங்கட்டுதல் போன்ற மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் என்பன இடம்பெறும் நிலையில் புலத்திலேயிருந்து உதவும் உறவுகள் நிதானமாகச் செயற்படவேண்டியது அவசியமானது. செய்யும் உதவி சரியாகச் சென்றடைவதையும் அது எந்தவகையிலே பயனாளிகளுக்குப் பயன்படுகிறது என்பதையும் அவதானித்துக் கையாளுதல் அதனைப் பொறுப்பேற்றுச் செய்வோரின் கடமையும் கூட என்பதை நாம் புரிந்த கொள்ள வேண்டுமல்லவா?

1. இந்த நிதியை அந்தப் பிள்ளைகள் கற்கும் அதிபரோடு தொடர்புகொண்டு ஆராய்ந்து அதனடிப்படையில் உதவுதல்.

2. அவசரஉதவி தேவைப்படும் குடும்பங்களின் தரவுகளைப்பெற்று அவர்களில் ஒரு குடும்பத்துக்கு முழுமையாக உதவுதல். பொருத்தமானதாகும்.

3. நிழலியவர்களின் கருத்தையும் உள்வாங்குவதும் சாத்தியமானது.

  • Replies 87
  • Views 13.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

இப்படியான ஆறப்போடும் காரணங்களினால்தான் நான் யாழ்களத்தின் ஊடாக எவ்வித உதவி நடவடிக்கைகளில் பங்கெடுப்பதில்லை என முடிவெடுத்திருக்கின்றேன். அவசரம் அவசரமாக பணத்தை சேர்த்து விட்டு.......உடனடியாக யாருக்கும் உதவாமல்  பணம் வங்கியில் புளுக்கூடு கட்டிக்கொண்டிருக்கும். ஒரு ஆயிரம் ஈரோவை வைத்து அறுபத்தெட்டு ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பார்கள்.

ஆயிரம் euro  உங்களுக்கு வேண்டுமானால் சின்ன தொகையாக இருக்கலாம் ஆனால் எல்லோருக்குமல்ல. செய்யும் உதவி விழலுக்கு இறைத்த நீராக போய்விடக்கூடாது என்பதில் கவனமாய் இருப்பது ஒன்றும் தவறல்லவே.

  • கருத்துக்கள உறவுகள்
On 10.4.2016 at 2:18 PM, வாத்தியார் said:

வணக்கம் சாந்தி அக்கா
nesakkaram@gmail.com என்கிற முகவரிக்கு paypal ஊடாக 100 € வியாழன் அன்று அனுப்பியிருந்தேன்.
IWAN GERT என்ற பெயரில் வந்திருக்கும்
கள உறவுகளின் ஆலோசனைப்படி எந்தத் திட்டத்திற்காவது
எனது பங்களிப்பையும் சேர்த்து விடுங்கள் .
நன்றி

வாத்தியார், உங்கள் உதவி கிடைத்தது. 

சனிக்கிழமை வரை உதவிய நணபர்களின் கருத்தை தொகுத்து முடிவெடுக்கலாம் என்பது என் கருத்து.  வளர்மதிக்கு பல்வேறு வழிகளில் இச்செய்தி வருவதற்கு முன்னரும் கிடைத்து கொண்டிருந்திருக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரையில் பலரது விரும்பமும் மேற்படி உதவியை பயனுள்ள வகையில் வேறு உறவுகளுக்கு கொடுக்கலாம் என்பதே. 

Eppothum Thamizhan நீங்கள் அனுப்பிய ஒருவருடத்திற்கான உதவியை முன்னாள் போராளியொருவரின் பெண்பிள்ளைகளின் கலுவிக்கு வழங்கலாம் என்பது எனது முடிவு. உங்கள் விருப்பத்தை அறியத்தாருங்கள். 

தாய் போரில் இறந்துவிட்டார்.  தந்தை கையொன்றை தோளோடு இழந்துவிட்டார். 3பெண் பிள்ளைகளையும் கூலித்தொழில் செய அது பராமரித்து வருகிறார். 15, 13வயதான மூத்த பிள்ளைகளை இளவாலையில் கொஸ்ரலில் விட்டு படிப்பிக்கிறார். மாதம் கொஸ்ரலுக்கு 2பிள்ளைகளுக்கும் ஆறாயிரம் ரூபா கட்டிக்கொண்டிருக்கிறார். பிள்ளைகளை வாழும் இடத்தில் வைத்து கல்வியை கொடுப்பது என்பது தந்தையால் முடியாது உள்ளது. தனது ஒற்றைக்கையோடு மேசன் தொழில் செய்தே பிள்ளைகளை படிப்பிக்கிறார். இளைய மகளை பகலில் உறவினர் ஒருவரிடம் பொறுப்பு கொடுத்தவிட்டே வேலைக்கு போய் வருகிறார். 

முட்டைக்கோழி 100 வளர்க்க உதவி கோரியுள்ளார். இதுவரையில் 40ஆயிரம் ரூபாய் ஒரு கிறிஸ்தவ சபைமூலம் பெற்றுள்ளார். மேலதிகமாக எவ்வித உதவியும் கிடைக்கவில்லை.  பிள்ளைகளின் கல்விக்கு உதவும் நீங்கள் பிள்ளைகளுடன் தொடர்பாடலை மேற்கொள்ளலாம். குறித்த போராளியுடன் உங்கள் தொடர்புகளை பேணிக் கொள்ளலாம்.  

 

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, shanthy said:

இதுவரையில் பலரது விரும்பமும் மேற்படி உதவியை பயனுள்ள வகையில் வேறு உறவுகளுக்கு கொடுக்கலாம் என்பதே. 

Eppothum Thamizhan நீங்கள் அனுப்பிய ஒருவருடத்திற்கான உதவியை முன்னாள் போராளியொருவரின் பெண்பிள்ளைகளின் கலுவிக்கு வழங்கலாம் என்பது எனது முடிவு. உங்கள் விருப்பத்தை அறியத்தாருங்கள். 

தாய் போரில் இறந்துவிட்டார்.  தந்தை கையொன்றை தோளோடு இழந்துவிட்டார். 3பெண் பிள்ளைகளையும் கூலித்தொழில் செய அது பராமரித்து வருகிறார். 15, 13வயதான மூத்த பிள்ளைகளை இளவாலையில் கொஸ்ரலில் விட்டு படிப்பிக்கிறார். மாதம் கொஸ்ரலுக்கு 2பிள்ளைகளுக்கும் ஆறாயிரம் ரூபா கட்டிக்கொண்டிருக்கிறார். பிள்ளைகளை வாழும் இடத்தில் வைத்து கல்வியை கொடுப்பது என்பது தந்தையால் முடியாது உள்ளது. தனது ஒற்றைக்கையோடு மேசன் தொழில் செய்தே பிள்ளைகளை படிப்பிக்கிறார். இளைய மகளை பகலில் உறவினர் ஒருவரிடம் பொறுப்பு கொடுத்தவிட்டே வேலைக்கு போய் வருகிறார். 

முட்டைக்கோழி 100 வளர்க்க உதவி கோரியுள்ளார். இதுவரையில் 40ஆயிரம் ரூபாய் ஒரு கிறிஸ்தவ சபைமூலம் பெற்றுள்ளார். மேலதிகமாக எவ்வித உதவியும் கிடைக்கவில்லை.  பிள்ளைகளின் கல்விக்கு உதவும் நீங்கள் பிள்ளைகளுடன் தொடர்பாடலை மேற்கொள்ளலாம். குறித்த போராளியுடன் உங்கள் தொடர்புகளை பேணிக் கொள்ளலாம்.  

 

சாந்தி, அப்படியே செய்துவிடுங்கள். யாராவது கஷ்டப்படும் குடும்பத்தின் குழந்தைகளுக்கு உதவுவதே எனது நோக்கம். படிப்புத்தான் எமது சொத்து, எமது விடிவுக்கான பாதை. அவர்களின் குடும்பத்திற்கு தொடர்ந்து கல்வி சம்பந்தமான செலவுகளுக்கு உதவ நீங்கள்  எப்போதும் என்னை நாடலாம். என்னால் இயன்ற உதவியை செய்வேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 12.4.2016 at 7:01 PM, Eppothum Thamizhan said:

ஆயிரம் euro  உங்களுக்கு வேண்டுமானால் சின்ன தொகையாக இருக்கலாம் ஆனால் எல்லோருக்குமல்ல. செய்யும் உதவி விழலுக்கு இறைத்த நீராக போய்விடக்கூடாது என்பதில் கவனமாய் இருப்பது ஒன்றும் தவறல்லவே.

எனது உள்கருத்து பண தொகையை பற்றியது அல்ல.

கதையை எழுதி விட்டு கதைக்கு தலையங்கம் வைப்பது நல்லதா?
இல்லையேல் தலையங்கம் வைத்து விட்டு கதை எழுதுவது நல்லதா?


இன்னாருக்கென்று உதவியை திரட்டிவிட்டு....அதன் பின் அவருக்கா இவருக்கா என்ற ஆலோசனகளும்...அதற்கான இழுத்தடிப்புகளும் உதவி செய்யும் மனப்பான்மையை பின்னடிக்க வைக்கின்றன.
இப்படியான தாமதம் முதற்தடவையல்ல....

  • கருத்துக்கள உறவுகள்
On 19.4.2016 at 3:40 PM, Eppothum Thamizhan said:

சாந்தி, அப்படியே செய்துவிடுங்கள். யாராவது கஷ்டப்படும் குடும்பத்தின் குழந்தைகளுக்கு உதவுவதே எனது நோக்கம். படிப்புத்தான் எமது சொத்து, எமது விடிவுக்கான பாதை. அவர்களின் குடும்பத்திற்கு தொடர்ந்து கல்வி சம்பந்தமான செலவுகளுக்கு உதவ நீங்கள்  எப்போதும் என்னை நாடலாம். என்னால் இயன்ற உதவியை செய்வேன்.

வணக்கம் Eppothum Thamizhan,
தனிமடலில் உங்களுடன் தொடர்பு கொள்ளக்கூடிய வகையை ஏற்படுத்தி தாருங்கள். குறித்த போராளி குடும்பத்துடன் நீங்கள் தொடர்பு கொள்ளும் விபரங்களை அனுப்பி வைக்கிறேன்.

Eppothum Thamizhanஅவர்களின் உதவி இரண்டு பிள்ளைகளின் கல்விக்கு அனுப்பப்பட்டுள்ளது. மீதி பணத்தை யாருக்கு கொடுக்கலாம் என்பதனை மற்றவர்கள் யாரும் தெரிவிக்காமையால் எனது பரிந்துரையை மட்டும் தெரிவிக்கிறேன். சிலருக்கு இந்த முடிவு சங்கடமாகவும் இருக்கலாம். பணம் என்னிடம் இருப்பது எனக்கும் சங்கடத்தை தரும் விடயம்.

நோயோடு போராடும் பாடகர் மாவீரர்கள் இருவரைத் தந்த தந்தை சாந்தன் அவர்களது மருத்துவத்திற்கு கொடுத்தால் என்ன ? ஓம் என்றால் தெரிவியுங்கள் அவருக்கு அனுப்பி வைப்போம்.

 

  • கருத்துக்கள உறவுகள்

நோயோடு போராடும் ஒருவருக்கு, அவர் எவராக இருந்தாலும், மருத்துவ உதவி செய்வதை வரவேற்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முடிவு, உதவி செய்துவிடுங்கள் அவருக்கு, சந்தோஷம் எனக்கு கஷ்டப்படும் ஒருவருக்கு உதவி சேர்வதால்

  • கருத்துக்கள உறவுகள்

மொத்தம் யூரோவில் கிடைத்த உதவி - 1158. 86€. 

இலங்கை ரூபாவிலை கிடைத்த உதவி - 42125. 00ரூபாய். 

வளர்மதிக்கு வழங்கப்பட்ட உதவி - 30000. 00 ரூபாய். 

எப்போதும் தமிழ் உதவிய உதவி போராளி குடும்பம் ஒன்றின் பிள்ளைகளுக்கான உதவி 450. 00€

பாடகர் சாந்தன் அவர்களின் மருத்துவ உதவி -700. 00€( இத்தோடு 12125ரூபாயும் சாந்தன் அவர்களின் மருத்துவத்திற்காக வழங்கப்பட்டுள்ளது. 

முழுத்தொகையும் உதவி தேவைப்பட்டவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. 

 

 

2 minutes ago, shanthy said:

முழுத்தொகையும் உதவி தேவைப்பட்டவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. 

நன்றி 

  • கருத்துக்கள உறவுகள்

கிடைத்த உதவிகள் எங்கள் துன்பங்களை எந்தளவிற்கு நீக்கப் பயன்பட்டது என்பதைப் பயனாளிகள் மூலம் அறிந்து அதனை இங்கு அனைவரும் அறியும்படி தெரிவிக்க முடிந்தால் அது உதவும் உறவுகளுக்கு மேலும் உதவிபுரியக்கூடிய மனதை வளர்க்கும். புதியவர்களும் இணைவதற்கு வாய்ப்பளிக்கும்.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

உதவிகள் பாடகர் சாந்தன் , மற்றும் இன்னொரு குடும்பத்தின் குழந்தைகளின் கல்விக்கும் பெற்றுக் கொண்டுள்ளார்கள். முன்னேற்ற அறிக்கை விபரங்கள் கிடைத்ததும் அறியத்தருகிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.