Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

IBC தமிழ் முரணும் முடிவும் நிகழ்சியில் நிவேதா உதயராஜன்

Featured Replies

 

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தமிழ் ஊடகத்துறையை நன்கு பிடிக்கும், எனென்றால் எந்த விதமான தரவுகளும், உசாத்துணையும் இன்றி, வாய்க்கு வந்ததை எல்லாம் உளரலாம். 

ஆங்கில ஊடகங்கள் ஒருத்தரை பேட்டிகாணும் போது அவர் இப்படி உளரிக் கொட்டினால், எல்லாரும் சாண்ட்விச் சாப்பிடீனம் எண்டு லூசுத்தனமாய் (நனி சீமான்) கதைத்தால், பேட்டி காண்பவரே போட்டு வாங்கி விடுவார். இங்க மொடெரேற்றர் நல்லா அசடு வழியிறார். ஏனெண்ட்டா கேள்வி கேட்கும் அளவுக்கு அவருக்கும் மேல் வீட்டில் சரக்கில்லை, பதில் சொல்லுபவர்கும் இல்லை.

இனம் இனத்தோடு சேரும் என்பர். அதுபோல இந்த அம்மணிக்கு தெரிந்தவர்கள், சொந்தங்கள் கஞ்சர்களாயும், சமைத்து சாப்பிடாத ஆக்களாயும், இருக்கீனம் போல, அதுக்காக எல்லாரையும் ஒரே சட்டியில் போட்டு வறுக்க முடியாது.

ஆனால் ஒன்று இப்படி ஒரு கடிக்கேசை கண்டு வணக்கம் வைக்காமல் பின்கதவால் ஓடிய ஆக்களையும் தப்பு சொல்ல முடியாது. நானும் அப்படியே செய்திருப்பேன்.

இதில் கொஞ்சம் அறிவு பூர்வமாய் கதைத்தது போனில் பேசிய அந்த பெண்மணி தான்.

பேசசாமல் இதை நகைச்சுவை பகுதிக்கு மாற்றி விடலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, goshan_che said:

எனக்கு தமிழ் ஊடகத்துறையை நன்கு பிடிக்கும், எனென்றால் எந்த விதமான தரவுகளும், உசாத்துணையும் இன்றி, வாய்க்கு வந்ததை எல்லாம் உளரலாம். 

ஆங்கில ஊடகங்கள் ஒருத்தரை பேட்டிகாணும் போது அவர் இப்படி உளரிக் கொட்டினால், எல்லாரும் சாண்ட்விச் சாப்பிடீனம் எண்டு லூசுத்தனமாய் (நனி சீமான்) கதைத்தால், பேட்டி காண்பவரே போட்டு வாங்கி விடுவார். இங்க மொடெரேற்றர் நல்லா அசடு வழியிறார். ஏனெண்ட்டா கேள்வி கேட்கும் அளவுக்கு அவருக்கும் மேல் வீட்டில் சரக்கில்லை, பதில் சொல்லுபவர்கும் இல்லை.

இனம் இனத்தோடு சேரும் என்பர். அதுபோல இந்த அம்மணிக்கு தெரிந்தவர்கள், சொந்தங்கள் கஞ்சர்களாயும், சமைத்து சாப்பிடாத ஆக்களாயும், இருக்கீனம் போல, அதுக்காக எல்லாரையும் ஒரே சட்டியில் போட்டு வறுக்க முடியாது.

ஆனால் ஒன்று இப்படி ஒரு கடிக்கேசை கண்டு வணக்கம் வைக்காமல் பின்கதவால் ஓடிய ஆக்களையும் தப்பு சொல்ல முடியாது. நானும் அப்படியே செய்திருப்பேன்.

இதில் கொஞ்சம் அறிவு பூர்வமாய் கதைத்தது போனில் பேசிய அந்த பெண்மணி தான்.

பேசசாமல் இதை நகைச்சுவை பகுதிக்கு மாற்றி விடலாம்.

எண்டாலும் 80/85 க்கு முதல் வந்த எங்கடை லண்டன் ரமில்ஸ்க்கு ஒரு தனிக்குணம் இருக்கு கண்டியளோ.:cool:

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

எண்டாலும் 80/85 க்கு முதல் வந்த எங்கடை லண்டன் ரமில்ஸ்க்கு ஒரு தனிக்குணம் இருக்கு கண்டியளோ.:cool:

எது இருந்தாலும், எங்கண்ட அக்காவுக்கு மைக் கிடைச்சால் போதும், வில்லுப்பாட்டுத்தான்.

ஜேரமன் வெள்ளயளக் கண்டு அளுத்துப் போய், இலண்டன் வெள்ளையளுக்கு வணக்கம் சொல்லப் போனா, இவவைக் கண்டோண்ண வெட்டிக் கொண்டோடாமா என்ன செய்வினமாம்? :grin:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப அக்கா சரியான ஆளுக்கு முன்னால தான் குந்தினவாவோ இல்ல..................... இப்பவும் பிரச்சனை தானோ..?! அக்கா முன்னாடி குந்திறவன் பாடு திண்டாட்டம் தான்.  :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

நானும் நீண்ட காலங்கள் லண்டனில் வாழ்ந்தவன் என்ற முறையில் நிவேதாவின் கருத்துக்களுடன் எனக்கு உடன்பாடில்லை!

ஒரு புலம் பெயர்ந்த தலை முறை.. குறிப்பாக மாணவர்கள் விசாவில் வந்தவர்கள் லண்டனில் அதிகம்.. தங்களை நிலை நிறுத்துவதற்காகவும், தங்கள் சார்ந்த ஊரிலுள்ள குடும்பத்தினர்களின் எதிர்பார்ப்புக்களுக்காகவும், ஊரில் தங்களது வாழ்வு பற்றி ஏற்கனவே இருக்கும் விம்பத்தைக் காப்பாற்றுவதற்காகவும் நிறைய நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கும்! மாணவர் விசாவில் வாழ்வதால்.. கல்லூரிகளுக்குப் பணம் கட்டுவதுடன், இந்திய இலங்கை முதாலாளிகளின் சுரண்டல்களுக்கும் முகம் கொடுத்து வாழ வேண்டியிருக்கும்! அதனால் வீட்டில் அதிக நேரம் தங்குவதோ,,அல்லது விருந்தோம்புவதோ மிகவும் குறைவு! இதனை அப்போது லண்டனில் வாழ்ந்த அனைவருமே புரிந்து கொண்டிருந்தார்கள்! எனினும் மற்றவரைக் காணும்போது முகம் சுழித்துக் கொண்டு போவதையோ, பாதை மாறிச் செல்வதையோ நான் கண்டதில்லை! 

பின்னர் புலம் பெயர்ந்த  அகதிகள் தலைமுறையின் பின்னரே பல மாற்றங்கள் ! அவர்கள் எதிர்பார்ப்புகளும் அதிகமாக இருந்தது! அவர்களுக்கு அரசாங்கம் உதவி செய்தது! நிறைய ஓய்வு நேரம் கிடைத்தது! களவாக வேலையும் செய்யக் கூடியதாக இருந்தது!

கலியாண வீடுகள், சாமத்திய வீடுகள், கோயில் திருவிழாக்கள் எல்லாம் பெரும் எடுப்புக்களுடன் நடை பெறத் தொடங்கின!

வெள்ளைக்காரனே அண்ணார்ந்து பார்க்குமளவுக்கு எமது பெருமை என்னவோ கொடி கட்டிப் பறக்கின்றது என்பது என்னவோ உண்மை தான்!

எங்களைப் போன்ற பாவப்பட்ட தலைமுறை... பின்பு வந்த தலைமுறையைப் போல வாழ முடியவில்லை!  வாழவும் விரும்பவில்லை!

கோஷான் குறிப்பிட்டது போலவே...நான் நினைத்ததை போனில் பேசிய பெண்மணி மிகவும் தெளிவாகவே விளக்கமளித்திருந்தார்!

நாதமுனி, அர்ஜுன் நீங்களும் கொஞ்சம் விளங்கப்படுத்துங்கோ!

 

Edited by புங்கையூரன்
வழக்கம் போல எழுத்துப் பிழை

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

இனம் இனத்தோடு சேரும் என்பர். அதுபோல இந்த அம்மணிக்கு தெரிந்தவர்கள், சொந்தங்கள் கஞ்சர்களாயும், சமைத்து சாப்பிடாத ஆக்களாயும், இருக்கீனம் போல, அதுக்காக எல்லாரையும் ஒரே சட்டியில் போட்டு வறுக்க முடியாது.

ஆனால் ஒன்று இப்படி ஒரு கடிக்கேசை கண்டு வணக்கம் வைக்காமல் பின்கதவால் ஓடிய ஆக்களையும் தப்பு சொல்ல முடியாது. நானும் அப்படியே செய்திருப்பேன்.

வேலைக்குப் போகாமல் வீட்டில் இருந்தால் விருந்தினர்களுக்கு மூன்று வேளையும் விருந்து படைக்கலாம். ஆனால் ஆணும் பெண்ணும் வேலைக்கு போகும் வீடுகளில் சமைத்த உணவு பிரிட்ஜில்தான் இருக்கும். இதில் குற்றம் சொல்ல எதுவுமில்லை.

நாங்கள் "சமறி" போட்டுச் சமைத்த காலங்களில் வீட்டுக்கு யார் வந்தாலும் சாப்பாடு கொடுக்காமல் விடுவதில்லை. அதற்காக காலையில் புட்டவிச்சுக் கொடுப்பதில்லை!

கோஷான், அம்மணி யாரென்று தெரியாமல் எழுதியுள்ளீர்கள். 2009 இல் பாராளுமன்றத்தின் முன்னர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டபோது, பெரிய பையில் புலிச்சின்னம் பொறித்த ஸ்கார்வ், ரீ-சேர்ட் எல்லாம் அம்மணியின் கதைக்குப் பயந்தே வாங்கினேன்!

அதன் பின்னர் நடைபெற்ற ஊர்வலங்கள் எல்லாவற்றிலும் முன்னுக்குப் போனதே கிடையாது. பெரிய பானர்களைக் கையில் தந்து உரக்கக் கத்தச் சொல்லுவா என்ற பயம்தான்!

லண்டன்காரரை நையாண்டி செய்தாலும், ஜேர்மனியில் இருந்து இலண்டன் வந்து குடியேறி இருப்பதன் காரணம் புரியவில்லை. சந்தோசமாக இருக்காமல் ரென்சனுக்குள் இருக்கவேண்டும் என்று விரும்பியதாலோ!

 

பி.கு.

அம்மணி மெசப்பொத்தேமியாவில் இருந்து நடந்தே வந்து யாழ் களத்தில் கதைகளும், கவிதைகளும் என்று எழுதித் தள்ளியிருக்கின்றார். படிக்கவில்லையா!

நேர்காணல்கூட அண்மையில் இணைத்திருந்தேன்!

  • கருத்துக்கள உறவுகள்

வந்ததுங்க எல்லாம் நாடோடிங்க... அதில.. ஒன்னு ஜேர்மனியாம்.. இன்னொன்னு லண்டனாம்.. காரராம். முதல்ல உங்களை எல்லாம்.. சொறீலங்கா தமிழர்கள் என்று சொல்லுங்க.

இங்கிலாந்தின் வழக்கப்படி.. டினர் தான் முக்கிய உணவு. சோறு சாப்பிடுவது இல்லை எனலாம். எல்லாம் உந்த தமிழ் கடையும் பாக்கி கடையும் வந்த பின் தான்.. அதுக்கு முதல் அமெரிக்கன் லோங் ரைஸில்.. ஏதோ சோறுன்னு இருக்கும். 

இங்கிலாந்தில் வேலைக் காலம் அதிகம். 9 தொடக்கம் 5 வரை வேலையில் போகும் பலருக்கு. இந்த நிலையில்.. டினர் தான் பிரதான உணவு. 

இங்கிலாந்து.. பிரித்தானிய பாரம்பரிய நடைமுறைகளை விளங்கிக் கொள்ளாத உளறல் தான் எல்லாம். சோறு இங்கிலாந்திற்கு ஏற்ற உணவும் அல்ல. ஜேர்மனில ஏதோ சோறு தேசிய உணவு போல கதைக்கினம். 

மேலும் இங்கிலாந்தில்.. அகதிகள் தாங்கள் விரும்பின இடத்தில் வாழலாம். ஜேர்மனியில் வெள்ளையோட கலக்க விடுவினம். அதனால்.. மொழி தெரியாமல்.. தமிழர்கள் தமக்குள் கதைச்சு வாழ்ந்துவிட்டு.. இங்கிலாந்து வந்து ரோட்டில போறவனை எல்லாம் அக்கா.. அண்ணா.. வணக்கம் என்றால்.. வெறுப்பு வராமல் என்ன வரும்..?! tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

 

கோஷான், அம்மணி யாரென்று தெரியாமல் எழுதியுள்ளீர்கள். 2009 இல் பாராளுமன்றத்தின் முன்னர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டபோது, பெரிய பையில் புலிச்சின்னம் பொறித்த ஸ்கார்வ், ரீ-சேர்ட் எல்லாம் அம்மணியின் கதைக்குப் பயந்தே வாங்கினேன்!

? 2009 இல் நானும் அங்கேதான் சுத்திக் கொண்டிருந்தேன். உங்களுக்கு நியாபகம் இருக்குமோ தெரியாது ஒருமுறை ஒரு 5 அல்லது 6 வெள்ளை இனப்பையன்கள் மிக ஆர்வமாய் வந்து அவர் லீடர் கோசம் போட்டார்கள். லிப்டெம் பிரதி தலைவரும் அன்றிரவே வந்து பேசியதாய் நியாபகம். பின்பக்கத்தில் கொத்துரொட்டி சப்ளை ஆகும் இடத்தில் நின்றபடி இதையெல்லாம் சிலாகிச்சு, அடுத்தது மிலிபான்ட் வருவார், நாங்கள் தொடர்ந்து புலிக்கொடியையும், தலைவரையும் முன்னிறுத்தினால் மட்டுமே மக்களை காப்பாத்தலாம் எண்டு யாரோ ஒரு பெண்மணி பேசியது என்காதிலும் விழத்தான் செய்தது. 

  • கருத்துக்கள உறவுகள்

 

மேலே உள்ளது ஒரிஜினல் காணொளி. அதை ரஜீவன் என்பவர் எடிட் செய்து வேண்டுமென்றே போட்டுள்ளார்.

watch.htm

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்

மாலை வந்து விரிவாக எழுதுகிறேன்

வீட்டுக்கு வீடு நிலமைகள் வித்தியாசம். இது எல்லா நாடுகளுக்கும் பொருந்தும். சுமேரியர் தொலைக்காட்சியில் துணிவாக கதைப்பதை பாராட்டவேண்டும். ஆனால், கூறுகின்றவிடயங்கள் யதார்த்தத்துடன் உடன்படுபவையாக இல்லை. வெவ்வேறு நாட்டினர் பிறநாட்டினரை நையாண்டி செய்வது இயல்பு. நான் அண்மையில் கனடாவிலிருந்து யூகே செல்லமுன் தொலைபேசியில் எனது கனேடிய நண்பர் ஒருவருடன் உரையாடியபோது அவர் சொன்னார் லண்டனில் எம்மவர் வீடுகளிற்கு சென்றால் சாப்பிட்டாயா, தண்ணீர் குடித்தாயா என்றும் கேட்கமாட்டார்கள் என்று. இவ்வாறே யூகேயிலிருந்து கனடாவிற்கு வந்து செல்பவர்கள் சிலர் கனடாவை பற்றி குறைகூறுவார்கள். லண்டனிலிருந்து ஓர் நண்பர் கனடாவுக்கு அகதியாய் குடிபெயர்ந்து வந்தார். கனடாவில் இருந்துகொண்டு யூகேயை ஒப்பீடு செய்து ஒவ்வொன்றிலும் யூகே திறம் என்று சொல்வார். 

நான் அண்மையில் யூகே சென்றுவந்தேன். எனக்கு ஆச்சரியமாய் இருந்த விடயங்களில் சில இளம்வயதினர் பலர் தனித்தமிழில் என்னுடன் உரையாடினார்கள். நான் ஆங்கிலத்தில் பேசியவற்றுக்கும் தமிழில் பதில் தந்தார்கள். இவ்வாறே ஆன்மிகத்தில் அதிகளவு ஈடுபாட்டையும் அவதானித்தேன்.  நான் எனது மாமி வீட்டில் தங்கி இருந்தேன். அருமையான, சுவையான உடன்செய்த சாப்பாடு கிடைத்தது. அதேசமயம் என்னை கடைக்கு கூட்டிக்கொண்டு உணவு வாங்கித்தந்தவர்களும் உள்ளார்கள்.இது வீட்டுக்கு வீடு மாறுபடலாம். எனவே குறை சொல்வதற்கு ஒன்றும் இல்லை. 

மேலே 49 நிமிட உரையாடலை முழுமையாக கேட்கவில்லை. சுமேரியர் பேசியதை மட்டும் முழுமையாக பார்த்தேன். என்ன இருந்தாலும் சுமேரியர் தொலைக்காட்சியில் கூச்சமில்லாமல் கதைப்பதுபோல் என்னால் கதைக்கமுடியாது. இப்படி ஓர் விவாதத்தில் பங்குபற்றினால் எதை உளறிக்கொட்டுவேனோ தெரியாது. :wub:

Edited by கலைஞன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.