Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானியாவுக்கு பயணமானார் ஜனாதிபதி

Featured Replies


பிரித்தானியாவுக்கு பயணமானார் ஜனாதிபதி
 
 

article_1462952463-01.JPG

பிரித்தானியாவில் நடைபெறும் ஊழலுக்கு எதிரான சர்வதேச மாநாட்டில் பங்குபற்றுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று புதன்கிழமை (11) முற்பகல் லண்டன் பயணமானார்.

ஜனாதிபதியும் தூதுக்குழுவினரும் இன்று (11) முற்பகல் 10.05க்கு எமிரேட்ஸ் EK 651 விமானத்தில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டன் நோக்கிப் பயணமாகினர்.
 
பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூனின் தலைமையில் பல்வேறு நாடுகளின் அரச தலைவர்களும் பிரதிநிதிகளும் பங்குபற்றும் ஊழலுக்கெதிரான சர்வதேச மாநாடு, நாளை வியாழக்கிழமை (12) லண்டன் நகரில் ஆரம்பமாகவுள்ள அதேநேரம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அம்மாநாட்டில் உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

கடந்த ஜனவரி மாதம் மோல்டாவில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் விடுத்த அழைப்பையேற்றே ஜனாதிபதி இம்மாநாட்டில் கலந்துகொள்கிறார். 

இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூனுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளையும் மேற்கொள்ளவுள்ளார்.

- See more at: http://www.tamilmirror.lk/171965/%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%A9-%E0%AE%AF-%E0%AE%B5-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE-%E0%AE%A9-%E0%AE%B0-%E0%AE%9C%E0%AE%A9-%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%A4-#sthash.BTFDdKKQ.dpuf
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, நவீனன் said:

ஜனாதிபதியும் தூதுக்குழுவினரும் இன்று (11) முற்பகல் 10.05க்கு எமிரேட்ஸ் EK 651 விமானத்தில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டன் நோக்கிப் பயணமாகினர்.

உந்தாளுக்கெண்டு சொந்தமாய் ஒரு கப்பலும் இல்லையோ?

  • கருத்துக்கள உறவுகள்

உவருக்கு எதிராக ஒருத்தரும் ஆர்ப்பாட்டம் செய்யேல்லையோ?...இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக லண்டனில் ஆர்ப்பாட்டம் செய்யப் போயினாம் என்று எங்கேயோ படித்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இவர் 2009 மே இனப்படுகொலை நினைவு நாட்களில் இந்தப் பயணத்தை மேற்கொள்வது.. தமிழர்களின் ஒற்றுமையின் கொதிநிலையை அறிவதாகக் கூட இருக்கலாம். நிச்சயம் 2009 மே இனப்படுகொலையின் பங்காளியான மைத்திரிக்கு எதிராக.. மானுட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் பண்ண வேண்டியது கட்டாயக் கடமை. tw_warning:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கரின் கருத்தை உடையவர்கள் தயவு செய்து அவரோடு சேர்ந்து ஒரு ஆர்ப்பாட்டத்தை முன் நின்று நடத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

உவருக்கு எதிராக ஒருத்தரும் ஆர்ப்பாட்டம் செய்யேல்லையோ?...இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக லண்டனில் ஆர்ப்பாட்டம் செய்யப் போயினாம் என்று எங்கேயோ படித்தேன்.

முகநூலில் படங்கள் இருக்கிறது இன்று மதியம் இரண்டு மணிவரை ஆர்ப்பாட்டம் நடந்ததாக

  • கருத்துக்கள உறவுகள்

ஓ...அப்படியா?...ஊரில் இருப்பவர்களுக்கும்,புலத்தில் இருப்பவர்களுக்கும் இடைவெளி கூடுதா அல்லது குறையுதா?

  • கருத்துக்கள உறவுகள்

காசு அனுப்பினால் இடைவெளி குறையும் இல்லாவிட்டால் கூடும்

1 minute ago, ரதி said:

ஓ...அப்படியா?...ஊரில் இருப்பவர்களுக்கும்,புலத்தில் இருப்பவர்களுக்கும் இடைவெளி கூடுதா அல்லது குறையுதா?

 

  • கருத்துக்கள உறவுகள்

ஹா ஹா நீங்கள் சொல்வது உண்மை தான். ஆனால் நீங்கள் சொல்வது குடும்பம்,சமூகம் சார்ந்தது.அரசியல் சார்ந்து இருவருக்குமான இடைவெளி கூடிக் கொண்டு போகின்றது என்பது எனது கருத்து

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

உவருக்கு எதிராக ஒருத்தரும் ஆர்ப்பாட்டம் செய்யேல்லையோ?...இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக லண்டனில் ஆர்ப்பாட்டம் செய்யப் போயினாம் என்று எங்கேயோ படித்தேன்.

இப்போது ஊரிலே இயக்க அரசியல் முடிந்து  இணக்க அரசியல் ஏற்பட்டுவிட்டது.

புலம்பெயர்ந்தவர்களும் நாடு திரும்பி அங்கேயே குடியும் குடித்தனமுமாக வாழத்  தயாராகிவிட்டனர்.  
பின்னர் எதற்கு ஆர்ப்பாட்டம்.

நேரடியாக மோதும் எதிரியை நம்பலாம்.
அவனுக்கு எதிராகத் துணிந்து போராடலாம்.
வேசம் போடும் எதிரியுடன் போராட்டத்தில் ஈடுபடும்போது அவதானம் முக்கியம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
17 hours ago, ரதி said:

ஹா ஹா நீங்கள் சொல்வது உண்மை தான். ஆனால் நீங்கள் சொல்வது குடும்பம்,சமூகம் சார்ந்தது.அரசியல் சார்ந்து இருவருக்குமான இடைவெளி கூடிக் கொண்டு போகின்றது என்பது எனது கருத்து

சம்சும் கொம்பனி அடிக்கடி கனடா,அவுஸ்,லண்டன் எண்டு அடிக்கடி வந்து சுத்திக்கொண்டு போயினம் தானே....எண்டேக்கை இடைவெளி சுருங்கித்தானே இருக்க வேணும் tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

நாளை இந்தியா வருகிறார் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன

இலங்கை அதிபர் சிறிசேனா 2 நாட்கள் பயணமாக நாளை இந்தியாவுக்கு வருகிறார். டெல்லியில் நாளை பிரதமர் மோடியை சிறிசேனா சந்தித்து பேசுகிறார்.

Edited by Nathamuni

ஒரு சின்ன பயத்தில் இலங்கை தமிழர்களின் தீர்வு பற்றி மைத்திரி வாய் திறந்தாலும் மோடி முடிந்த கதை மூடுங்கோ என்பார் .

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, arjun said:

ஒரு சின்ன பயத்தில் இலங்கை தமிழர்களின் தீர்வு பற்றி மைத்திரி வாய் திறந்தாலும் மோடி முடிந்த கதை மூடுங்கோ என்பார் .

அப்படி இருக்காதன்னை...

இவரைக் கூப்பிட்டு, கமொரன் முதல் மோடி வரை ஏதோ காதுக்க போட்டு விடுகினம்.

ஏறுதோ, வெளியால போகுதோ தெரியாது.

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.