Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

29/05/16 ஞாயிறு அன்று கிழக்கு மாகாணம் ஓட்டமாவடியில் ..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

13307236_10208901223343620_536818780562904363_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

நான் கே பி எழுதி வெளியிட இருக்கும் புத்தகத்துக்காக 
காத்திருக்கிறேன்!
அவர்தான் அப்படியே அடிச்சு வைச்ச மாதிரி இனி 
உண்மைகளை கொட்ட கூடியவர்!

மற்றவர்கள் எல்லோரும் சிந்தி சிதறி விட்டினம் 
மொத்தமாய் இனி புதுசா கொட்ட முடியாது 

ஒருவேளை பிரபகாரன் தானே எழுதி 
வெளியிடும்படி கே பி இடம் கொடுத்து 
இதுவரையில் வெளிவராது கே பி அவர்கள் 
இனி வெளியிடும் நிலையும் வரலாம்.

குறிப்பா அவர் இப்படி எழுதி இருப்பார் ....
"ஒரு காலத்திற்கு பிறகு எல்லா தமிழரையும் போட்டு தள்ளுவது என்று முடிவுசெய்தேன். ஒரே அடியாக செய்தால் பிரச்சனை என்பதால் கட்டம் கட்டமாக செய்தேன்"
எப்பதான் கே பி வெளியிடுவாரோ ?? 

  • கருத்துக்கள உறவுகள்

அது யார் காகம்? கோமகனா?...ஒருங்கினைச்சு செய்கிறவர்கள் கூட புனைப் பெயரில் செய்யினம்.இந்த புத்தக வெளீயிடு முழுக்க,முழுக்க முஸ்லீம் மக்களுக்காக போல் உள்ளது.எது எப்படி இருந்லும் புத்தக வெளீயீடு ஒரு பிரச்சனையும் இல்லாமல் நடக்க வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பேசும் முஸ்லீம் மக்களுக்கு உரியது..... 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
 
hier ·
 
 
 
இன்று ஓட்டமாவடியில் நான்கு நூல்களுக்கான அறிமுக விழாவை காகம் பதிப்பகத்தார் ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்வில்,

Noel Nadesan அவர்களின் வாழும் சுவடுகள் நூலுக்கான அறிமுக உரையை நானும்,

Gowripal Sathiri Sri அவர்களின் ஆய்த எழுத்து நாவலுக்கான அறிமுக உரையை திலீப்பும்,

Sivarasa Karunagaran அவர்களின் இரத்தமாகிய இரவும் பகலுமுடைய நாள் மற்றும் படுவான்கரைக் குறிப்புகள் கவிதைத் தொகுதிக்கான அறிமுக உரையை Samsudeen Naleem உம்,

Thiagarajah Rajarajan (கோமகன்) அவர்களின் தனிக்கதை சிறுகதைத் தொகுதிக்கான அறிமுக உரையை Jiffry Hassan உம் நிகழ்த்தினோம்.

அறிமுக உரைகளின் பின், ஆய்த எழுத்து தொடர்பாக திலீப் முன்வைத்த சில கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு, ஈழப்போராட்டம் குறித்த சில அரிய தகவல்களை (சிறிது நேரமே எனினும்) கருணாகரன் எம்முடன் பகிர்ந்துகொண்டார். அற்புதமான மாலைப்பொழுது - அவசரமாக முடிவடைந்த கவலையுடன்.....

13321908_1114891981901842_16920390597068

13308579_1114891935235180_81009780462714

13329322_1114892031901837_93626617693620

13243890_1114892121901828_73513288453356

12322597_1114892191901821_37768745572513

13327576_1114909345233439_37796388782724

13343153_10208386943542643_3475866503029

புலனாய்வாளர்கள் எழுதிய புத்தகங்கள் என்றல்லவா சொன்னார்கள் இவர்கள் எழுதிய புத்தகங்களா? தமிழினி அக்காவின் கணவரால் தயாரிக்கப்பட்ட புத்தகத்தையும் சேர்த்து வெளியிட்டிருக்கலாமே.இவர்களுக்குள்ளும் பிரிவா?   

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி சாத்திரியார்....!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, suvy said:

பகிர்வுக்கு நன்றி சாத்திரியார்....!

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

யோவ் சாத்து இப்போ உங்கள் அரசியல் சிறிலங்கா மட்டும் விரிந்திட்டுதா?

வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஈழப்பிரியன் said:

யோவ் சாத்து இப்போ உங்கள் அரசியல் சிறிலங்கா மட்டும் விரிந்திட்டுதா?

வாழ்த்துக்கள்.

நன்றி

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆயுத எழுத்து புத்தக விமர்சனம் .ஓட்டமாவடி
(கிழக்கு மாகாணம் )

விமர்சனம் ..திலீப் .

திலீப் என்பவரின் விமர்சனத்தில் பலவற்றில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதோடு அவரிடம் சில தகவல் தவறுகளும் உள்ளது ..அனைத்தும் நிகழ்வின் இறுதியில் அவருக்கு தெளிவு படுத்தப் பட்டுள்ளது ..

விமர்சன உரை 30 நிமிடங்கள் ..நேரமும் பொறுமையும் உள்ளவர்கள் கேட்கலாம் ..

https://www.youtube.com/watch?v=djJgzphcvn8&feature=youtu.be

 

 

  • 1 month later...

ஈழப் போராட்டத்தின் துயர நிழல்!

ayudha_2908569f.jpg

ஒரு மொழி பேசும் இன மக்களை இன்னொரு மொழி பேசும் இன மக்கள் பூர்வகுடிகள் என்று தாங்கள் நம்பும் அதிகாரத்தைக் கொண்டு எல்லா வகைகளிலும் ஒடுக்க முனைவதை யாராலும் ஏற்க முடியாது. அதை ஒடுக்க அல்லது வேரறுக்கக் கிளர்ந்தெழும் விடுதலை வேட்கை கொண்ட இயக்கங்களும் சொந்தச் சமூகத்தைப் பற்றிய போதிய புரிதல் இல்லாமல் இருந்தது குறித்தும், இன விடுதலையின் பெயரால் தமிழ்ப் பகுதிகளிலிருந்து முஸ்லிம்களின் உடைமைகளைப் பறித்துக்கொண்டு வெளியேற்றிய கொடூரத்தையும் பற்றி விவரிக்கும் நாவல்தான் சாத்திரியின் ‘ஆயுத எழுத்து’.

அப்போதைய தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் ஈழ மக்கள் மீது கொண்ட பரிவு, புலிகளின் தமிழக ஆயுதப் பயிற்சிகள் என விரிகிற நூலில் பெண் போராளிகள் குறித்தும், முதல் கரும்புலி பற்றியான குறிப்புகளும் இந்த நாவலின் இடம்பெறுகின்றன. கண்ணி வெடியும் தற்கொலைப் படையும் புலிகளின் பிரத்தியேகப் போராட்ட உத்திகளாக இருந்தன என்பதை இந்த நாவலின் மூலம் காண முடிகிறது. அதே நேரத்தில் சிங்கள பேரினவாதத்தின் கொடூரத்தையும் மிகத் துல்லியமாகவே நாவல் பதிவு செய்துள்ளது. உல்லாசம், காமம், காதல், சாகசம், நெருக்கடி என மனித வாழ்நிலையின் பல்வேறு சுவராசியங்களையும் சுமந்தும், கடந்தும் நிற்கும் ஒரு இயக்கப் போராளியின் அனுபவங்கள் நிறைந்த இந்த நாவல் முழுமையானதல்ல என்றாலும் ஈழப் போர் குறித்த ஆவணப் படைப்புகளுள் ஒரு முக்கிய வரவு இந்த நாவல்.

ஆயுத எழுத்து

சாத்திரி

விலை: (இந்தியாவில்) ரூ. 300

வெளியீடு: திலீபன் பதிப்பகம்.

இந்தியாவில் விற்பனை உரிமை: எதிர் வெளியீடு: 98650 05084

http://tamil.thehindu.com/general/literature/ஈழப்-போராட்டத்தின்-துயர-நிழல்/article8772376.ece?ref=relatedNews

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.