Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆடம்பர மாளிகையை விரும்பாத ஜனாதிபதி

Featured Replies

ஆடம்பர மாளிகையை விரும்பாத ஜனாதிபதி
 
 
ஆடம்பர மாளிகையை  விரும்பாத ஜனாதிபதி
ஆடம்பர மாளிகையோ, ஆடம்பரமான வாழ்க்கையையோ தான் விரும்புவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையினை மக்களின் பார்வைக்காக உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் மாணவர்கள் மத்தியில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஆடம்பரமான முறையில் இந்த மாளிகை காணப்படுகின்ற போது நீங்கள் ஏன் இதனை விடுத்து இன்னுமொரு மாளிகையினை தேர்ந்தெடுத்தீர்கள் என திருகோணமலையைச் சேர்ந்த தமிழ் மாணவன் ஒருவனினால் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 
அத்துடன், குறித்த மாளிகையில் தங்குவதாயின் அதனை பராமரிப்பதற்கு மாதாந்தம் 75 லட்சம் ரூபாய் மேலதிகமாக செலவு செய்ய வேண்டும் என்பதனால் குறித்த அநாவசியச் செலவை தவிர்ப்பதற்காகவே தான் வேறு இடத்தினை தெரிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ள ஜனாதிபதி, தான் தேவையற்ற ஆடம்பரமான வாழ்க்கையினை விரும்புவதில்லை எனவும்  இதன்போது தெரிவித்துள்ளார்.
 
மேலும், எதிர்வரும் காலத்தில் கொழும்பு, கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையினை ஆண்டுதோறும் குறிப்பிட்ட காலப்பகுதிக்கு பொதுமக்களின் பார்வைக்குத் திறந்து வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
கண்டி மற்றும் நுவரேலியாவிலுள்ள ஜனாதிபதி வாசஸ்தலங்களும் இனிவரும் காலங்களில் ஆண்டுதோறும் பொதுமக்களின் பார்வைக்கு திறந்து வைக்கப்படுமெனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
 
இந்தநிகழ்வில் எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன், அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸிர் அஹமட் உள்ளிட்ட பலரும் பங்கேற்றிருந்தனர்.
 
  • கருத்துக்கள உறவுகள்

image_1465391570-b0620bce16.jpgimage_1465391500-e908d34d6f.jpg

  • கருத்துக்கள உறவுகள்

image_1465391500-e908d34d6f.jpg

 

சம் மகிந்தவின் படத்தை பார்த்ததும்..(மனசுகுள்).. என் இந்த வாழ்வு இவன் பாவி போட்ட பிச்சை. வெளிப்படையா சொல்லிக்க முடியல்ல.. இருந்தாலும் மனசுக்க வாழ்த்துவம். tw_blush:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

image_1465391570-b0620bce16.jpg

இதயத்தால் மட்டும் ஒன்றாகவில்லை......உடலாலும் ஒன்றாகிவிட்டார்கள். t4608.gif

சிங்கள-பௌத்த இனமதவெறி பிடித்த கடற்படை கப்டனை சரமாரியாக வெளுத்து வாங்கியதற்காக கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸிர் அஹமட்க்கு கிடைத்த சிறப்பு வரவேற்பு.

வட மாகாண முதலமைச்சரும் நாகரிகம், கண்ணியங்களை மீறி சிங்கள-பௌத்த இனமதவெறி பிடித்த கும்பலைத் தாக்கி இருந்தால் அவருக்கும் இதுபோன்ற சிறப்பு வரவேற்பு கிடைத்திருக்கும். எனினும் அவரது கண்ணியமான,நாகரிகமான ஆனால் உறுதியான செயற்பாடுகள் நீண்ட தூரம் தமிழர்களின் உயர்வுக்கு உதவும்.

நல்லாட்சி என்ற பெயரில் சிங்கள-பௌத்த இனமதவெறிபிடித்த கும்பல் சிக்கலின்றி தமிழினத்தை தொடர்ந்து நசுக்கியபடி சர்வதேச அழுத்தங்களை சாமாளித்து அரசை கொண்டுசெல்ல சம்பந்தன் உதவுவதால் சம்பந்தனுக்கு விசேட மரியாதை.

துணிந்து சிங்கள-பௌத்த இனமதவெறிக் கும்பலை தாக்கிய சில கணங்களுக்காக நஸிர் அஹமட்க்கு கிடைத்தது கௌரவ மரியாதை. ஆனால் சம்பந்தனுக்கு கிடைத்ததோ எட்டப்பர்களுக்கு கிடைக்கும் மரியாதை. சிங்கள-பௌத்த இனமதவெறிக் கும்பலின் இந்த மரியாதைகள் அனைத்தும் நீர்க்குமுழிகள் போன்றவையே!

  • தொடங்கியவர்
அழகு மாளிகை மக்கள் பார்வைக்கு...
 
08-06-2016 10:07 PM
Comments - 0       Views - 175

article_1465404005-Ph-%28205%29.jpg

கொழும்பு, கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகை மற்றும் கோர்டன் பூங்கா ஆகியவையவற்றை பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வைக்காக இன்று புதன்கிழமை(08) ஜனாதிபதி மைத்திரிபால திறந்துவைத்தார்.

இந்த நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர், வடமாகாண ஆளுநர், கிழக்கு மாகாண முதலமைச்சர் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டனர்.

இன்று ஜூன் 08ஆம் திகதி முதல் வரும் 14ஆம் திகதி வரையான காலப்பகுதியில், ஜனாதிபதி மாளிகையை பார்வையிடலாம்.

article_1465404020-Ph-%2815%29.jpg

article_1465404029-Ph-%284%29.jpg

article_1465404039-Ph-%2848%29.jpg

article_1465404048-Ph-%2888%29.jpg

article_1465404058-Ph-%28202%29.jpg

article_1465404070-Ph-%28171%29.jpg

article_1465404088-Ph-%28143%29.jpg

- See more at: http://www.tamilmirror.lk/174266/அழக-ம-ள-க-மக-கள-ப-ர-வ-க-க-#sthash.EN7ICjZN.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

image_1465391500-e908d34d6f.jpg

எதிர்க்கட்சித்  தலைவர்... மாளிகையிலும், மகிந்தவின் இப்படியான படத்தை வைக்கலாம்  என்று,
சம்பந்தனின் மூளை.... பயங்கரமாய், சிந்திக்கின்றது.
tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரியின் வாழ்வு எனக்கு பிடித்திருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Maruthankerny said:

மைத்திரியின் வாழ்வு எனக்கு பிடித்திருக்கிறது.

ராணுவ முகாம்  ஆயுதக்கிடங்கு வெடிப்பு சம்பவத்தில் சிங்கள மக்கள்  அகதிகளாக முகாம்களில் வாழ்ந்து  வருவதாக ஒருவர் கூறியதற்கு அதற்கு 

ஜனாதிபதி அவர்கள் தமிழ் மக்கள் முப்பது வருடங்களுக்கு மேலாக இந்த  வாழ்க்கையை வாழ்ந்துதான் வந்தார்கள் என்று எடுத்துக் கூறினார்  அகதி வாழ்க்கை பற்றி ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, முனிவர் ஜீ said:

ராணுவ முகாம்  ஆயுதக்கிடங்கு வெடிப்பு சம்பவத்தில் சிங்கள மக்கள்  அகதிகளாக முகாம்களில் வாழ்ந்து  வருவதாக ஒருவர் கூறியதற்கு அதற்கு 

ஜனாதிபதி அவர்கள் தமிழ் மக்கள் முப்பது வருடங்களுக்கு மேலாக இந்த  வாழ்க்கையை வாழ்ந்துதான் வந்தார்கள் என்று எடுத்துக் கூறினார்  அகதி வாழ்க்கை பற்றி ?

உப்பிடியே தொடர்ந்து கதைப்பர் எண்டால் அடுத்த லெக்ஸனிலை வீட்டைதான் போகோணும்:grin:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

உப்பிடியே தொடர்ந்து கதைப்பர் எண்டால் அடுத்த லெக்ஸனிலை வீட்டைதான் போகோணும்:grin:

ம் அதேதான்

அவரும் அத்தனை வருடங்கள் பார்த்து கொண்டு தானே இருந்தவர்

6 hours ago, முனிவர் ஜீ said:

ராணுவ முகாம்  ஆயுதக்கிடங்கு வெடிப்பு சம்பவத்தில் சிங்கள மக்கள்  அகதிகளாக முகாம்களில் வாழ்ந்து  வருவதாக ஒருவர் கூறியதற்கு அதற்கு 

ஜனாதிபதி அவர்கள் தமிழ் மக்கள் முப்பது வருடங்களுக்கு மேலாக இந்த  வாழ்க்கையை வாழ்ந்துதான் வந்தார்கள் என்று எடுத்துக் கூறினார்  அகதி வாழ்க்கை பற்றி ?

நல்ல கற்பனை!

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, போல் said:

நல்ல கற்பனை!

ஹாஹா உன்மை யப்பா

1 hour ago, முனிவர் ஜீ said:

ஹாஹா உன்மை யப்பா

சரி, சரி அப்பிடியே இருக்கட்டும்!

:unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.