Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எமது நாட்டின் வரலாற்றில் சில பிரச்சினைகள் உள்ளது!- பிரதமர்

Featured Replies

இலங்கைளின் வரலாறு ஒப்பீட்டளவில் சில பிரச்சினைகள் உள்ளதாக பிரதமர் ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தெஹிவளை-நெதிமால பௌத்த கலாச்சார மையத்தினால் மகா வம்சத்தின் புதிய பதிப்புவெளியீட்டு நிகழ்வில் இன்று கலந்து கொண்ட போதே அவர் இதனைத்தெரிவித்துள்ளார்.

மேலும் இன்று நாட்டின் வரலாறு பற்றி பலருக்கு தவறான கருத்து உள்ளது.எனவேஅவர்கள் வரலாற்றைப் பற்றி தவறாக கதைப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் மகாவம்சத்தை விட பழைய நூல்கள் இருந்ததாகவும் ஆனால் அவை இன்றுதேடமுடியாமல் போய்விட்டதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளமைகுறிப்பிடத்தக்கது.

இதேவேளை வரலாற்று நூலான மகாவம்சத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க வேண்டிய தேவைஏற்பட்டுள்ளதாகவும்,அதற்காக தேவைப்படும் செலவுகள் பற்றி தேடவேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்ட பிரதமர் இதற்காக சிறந்த குழு ஒன்று தனக்குதேவை என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கையின் வரலாற்றை குறையில்லாமல் தருவதற்கான அவதானம்செலுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதமர் இதன்போது குறிப்பிட்டுள்ளமைசுட்டிக்காட்டத்தக்கது.

http://www.tamilwin.com/politics/01/107673

  • கருத்துக்கள உறவுகள்

மகாவம்சத்தை தூசுதட்டி பார்கணுமெண்டு பிரதமருக்கு அப்படியொரு ஆசை. இவங்க திருந்தவே மாட்டாங்க. மகாவம்சத்தை தூக்கி கக்கூசு வாழிக்கை போட்டுட்டு ஒரு பொறுப்புள்ள பிரதமரா நடக்க கத்துக்கணும். நாட்டிலை இவ்வளவு பிரச்சின தீர்க்கப்படாமலே இருக்கு இனங்களுக்கிடையிலை சமத்துவம் இல்லை நீதியில்லை வாழ்வாதாரம் மேம்படலை. கண்முன்னை கிடக்கிற பிரச்சினையை விட்டுட்டு சரித்திர பிரச்சினையை பார்க்க வெளிக்கிட்டுட்டாரு.

  • தொடங்கியவர்

மாபெரும் தமிழின அழிப்பை செய்துவிட்டு "Zero Casualty" என்று உலகை ஏமாற்றிய சிங்கள-பௌத்த இனமதவெறியர்களால் ஒருபோதும் உண்மையான வரலாற்றை எழுத முடியாது.

உலகில் மிகமிக மோசமான கட்டுக் கதை இந்த மகா வம்சம் தான். 300-400 வருடங்களின் முன்னர் சிங்கள-பௌத்த இனமதவெறியர்களால் எழுதப்பட்ட 2,500 ஆண்டு வரலாறு என்றுமே உண்மையாக இருக்கப் போவதில்லை. காலத்துக்கு காலம் தமிழ் அரசர்களின் பெயர்களை திரித்து, தமிழ் கோவில்களை அழித்து விகாரைகளை அமைத்து சிங்கள-பௌத்த மயமாக்கப்பட்ட பொய் வரலாறே இந்த கட்டுக்கதை. இந்த உண்மைகள் 1990 களில் அனுராதபுரத்தில் UNESCO தாபனத்தால் செய்யப்பட்ட  அகல்வாராய்ச்சிகளின் போது நிரூபிக்கப்பட்டவை.

அதனால் தான் இதை இப்போது தமிழ் வரலாற்று ஆசிரியர்கள் மகா பொய் வம்சம்  (மகா பொறு வம்சம்) என்று அழைக்கின்றனர்.  

  • கருத்துக்கள உறவுகள்

வரலாறு வரலாறு என்று இந்த கோதாரி பிடிச்சதானே படிப்பித்தார்கள் ?

  • தொடங்கியவர்
18 minutes ago, முனிவர் ஜீ said:

வரலாறு வரலாறு என்று இந்த கோதாரி பிடிச்சதானே படிப்பித்தார்கள் ?

முனிவர்ஜீ! கதிர்காமத்துக்கு நீண்ட காலமாக பாத யாத்திரை செல்பவர் என்றால் தமிழர் கையில் இருந்த கோவில்கள் பல எப்படி சிங்கள-பௌத்த இனமதவெறியர்களின் கைகளுக்கு மாறின என்ற நேரில் கண்ட உண்மைகளை எழுதலாமே.

என் கண்முன்னால் பறிபோனவை
(1) பிரதான கோவில் -> அன்று தமிழ் பேசும் வேடுவர்கள் கையில் இருந்தது இப்ப முழுமையாக சிங்கள-பௌத்த வெறியர்களின் கைகளில்
(2) சூரன் கோட்டை -> முன்பு விகாரை இல்லை - இப்ப அண்மையில் அமைக்கப்பட்ட மாபெரும் கிரிவிகாரை
(3) கதிரமலை -> அன்று முழுமையாக தமிழர் கைகளில் - இப்ப முழுமையாக சிங்கள-பௌத்த வெறியர்களின் கைகளில்
(4) வள்ளி குகை பகுதி - அன்று முழுமையாக தமிழர் கைகளில் - இப்ப முழுமையாக சிங்கள-பௌத்த வெறியர்களின் கைகளில்
(5) செல்லக்கதிர்காமம் -> அன்று முழுமையாக தமிழர் கைகளில் - இப்ப முழுமையாக சிங்கள-பௌத்த வெறியர்களின் கைகளில்
(6) இராமகிருஷ்ன மிஷன் அன்னதான விடுதி - அன்று முழுமையாக தமிழர் கைகளில் - இப்ப முழுமையாக சிங்கள-பௌத்த வெறியர்களின் கைகளில்

மிகுதியை நீங்கள் எழுதுங்கள்!  

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல  ஒரு கேள்வி தான் அண்ணேய் 

ஆரம்ப காலத்தில் இருந்து பல பகுதிகள்  தமிழ் மக்களின் கையில் தான் இருந்தது உன்மையே விட்டுக் கொடுப்புகள் கைவிட்டு செல்லுதல் போன்ற காரணங்களால் இவை பறிபோகிறது பறி போய் கொண்டு இருக்கிறது  இன்னும்

சிங்கள மக்கள் எந்த இடத்திலும் வாழ்வார்கள் வாழ பழகி கொள்வார்கள். ?

கதிர்காமம் ஆரம்பத்தில் கார்த்திகேய கிராமமாக இருந்தது பின்னர் கஜரகம என்று திரிவுபடுத்தலினால் கதிர்காமம் என்று  மாறியது

மகாவம்சத்தில்

கிட்டத்தட்ட 2500 ஆண்டுகளுக்கு முன் எல்லாளனுடன் போர் புரிந்து துட்ட கைமுனு வெற்றி பெற நேர்த்திக்கடன் வைத்ததாகவும்  அந்த போரில் வெற்றி பெற்ற தாகவும்  மகாவம்சம் கூறுகிறது

கதிர்காமம்  ஜனாதிபதியான பிரமேதாச காலத்தில் தான் மிக பிரபலடைந்ததும் கூட அந்த பகுதியில் மக்களை குடியேறவைத்து அப் பிரதேசத்தில்  தேவையான அபிவிருத்திகளை செய்து கோவில்  பகுதியை புனித பூமியாக அறிமுகம் செய்தார்

இதன்  வருமானம் அனைத்தும் அரசாங்கத்திற்கு  செல்கின்றது

சூரன்  மலை இது வரையில் நான் சென்றதில்லை அங்கே ஆரம்பத்தில் ஒரு கண்ணாடி பேழைமட்டும் இருந்தது என நினைக்கிறேன் பிறகுதான் வி காரை அமைத்து வழி பட தொடங்கினார்கள் என நினைக்கிறேன். 

செல்ல கதிர்காமம்

இப்போதும் கூட தமிழ் ஐயர்மார்தான் பூஜை செய்கிறார்கள் நிர்வாகம் யார் கையில் என்பது தெரியாது 

இராமகிருஷ்ண மிஷனில் முதல் அன்னதானம் கொடுப்பார்கள் இலங்கை இந்து மாமன்றம்  பல செட்டிமார்களைக் கொண்டு அன்னதானம் கொடுக்கிறார்கள் இப்பவும் இது இன்னும் கைமாறப்படவில்லை இங்கே திருவிழாக்காலம் மட்டுமே தமிழ் ஆட்களை  காண கிடைக்கும் 

கதிரமலையில் பல ஆண்டுகளுக்கு முன் ஊண்டப்பட்ட சுளகு போல் உள்ள  வேல் எப்போது இடமாற்றப்பட்டதோ அன்றிலிருந்து மலையேறுவது கிடையாது நான்  

கோவில் விரிவாக்கம் என்ற பெயரில் அங்கேயும் மலையில் கூட விகாரை  

இன்னும் தகவல்கள் தரலாம் அண்ணா விட்டுக்கொடுப்பும் ஆக்கிரமிப்பும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது இதை தட்டி கேட்க முன்னோர்களும் இல்லை இப்ப  உள்ளவர்களும்  இல்லை என்பது தான்  வேதனை வடகிழக்கு கூட இப்ப மாறிக்கொண்டு வருகிறது ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் வாதிகள்............ மட்டும் 

 

1 hour ago, போல் said:

முனிவர்ஜீ! கதிர்காமத்துக்கு நீண்ட காலமாக பாத யாத்திரை செல்பவர் என்றால் தமிழர் கையில் இருந்த கோவில்கள் பல எப்படி சிங்கள-பௌத்த இனமதவெறியர்களின் கைகளுக்கு மாறின என்ற நேரில் கண்ட உண்மைகளை எழுதலாமே.

என் கண்முன்னால் பறிபோனவை
(1) பிரதான கோவில் -> அன்று தமிழ் பேசும் வேடுவர்கள் கையில் இருந்தது இப்ப முழுமையாக சிங்கள-பௌத்த வெறியர்களின் கைகளில்
(2) சூரன் கோட்டை -> முன்பு விகாரை இல்லை - இப்ப அண்மையில் அமைக்கப்பட்ட மாபெரும் கிரிவிகாரை
(3) கதிரமலை -> அன்று முழுமையாக தமிழர் கைகளில் - இப்ப முழுமையாக சிங்கள-பௌத்த வெறியர்களின் கைகளில்
(4) வள்ளி குகை பகுதி - அன்று முழுமையாக தமிழர் கைகளில் - இப்ப முழுமையாக சிங்கள-பௌத்த வெறியர்களின் கைகளில்
(5) செல்லக்கதிர்காமம் -> அன்று முழுமையாக தமிழர் கைகளில் - இப்ப முழுமையாக சிங்கள-பௌத்த வெறியர்களின் கைகளில்
(6) இராமகிருஷ்ன மிஷன் அன்னதான விடுதி - அன்று முழுமையாக தமிழர் கைகளில் - இப்ப முழுமையாக சிங்கள-பௌத்த வெறியர்களின் கைகளில்

மிகுதியை நீங்கள் எழுதுங்கள்!  

 

  • தொடங்கியவர்
56 minutes ago, முனிவர் ஜீ said:

இராமகிருஷ்ண மிஷனில் முதல் அன்னதானம் கொடுப்பார்கள் இலங்கை இந்து மாமன்றம்  பல செட்டிமார்களைக் கொண்டு அன்னதானம் கொடுக்கிறார்கள் இப்பவும் இது இன்னும் கைமாறப்படவில்லை இங்கே திருவிழாக்காலம் மட்டுமே தமிழ் ஆட்களை  காண கிடைக்கும் 

இதில் ஒரு சிறு திருத்தம்.

இராமகிருஷ்ண மிஷனை சிங்கள-பௌத்த இனமதவெறி அரசு அடாத்தாக கையகப்படுத்தி 25 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இன்று இந்த நிமிடம் வரை அங்கு அன்னதானம் வழங்கப்படுவதில்லை. இராமகிருஷ்ண மிஷன் கட்டுப்பாடில் அது இல்லை. சிங்கள-பௌத்த இனமதவெறி அரசு அங்கு பல வருடங்கள் நூதன சாலை அமைந்திருந்தது. இப்போது நூதனசாலை அருகில் உள்ள புதிய கட்டிடத்துக்கு மாற்றப்பட்டுவிட்டது. இப்போது அது சில சிங்கள புத்தபிக்குகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது (இந்த நிமிடம் வரை).  

அகில இலங்கை இந்து மாமன்றத்தைச் சேர்ந்தவர்கள், தொண்டர் சபையைச் சேர்ந்தவர்கள் அன்னதானம் வழங்குவது தெய்வயானை அம்மன் கோவிலில். அது சில நூற்றாண்டுகளாக வட இந்திய இந்து ஆச்சிரமம் ஒன்றின் கட்டுப்பாட்டில் இருப்பதால் சிங்கள-பௌத்த இனமதவெறி அரசினால் அதை இன்னும் கைப்பற்ற முடியவில்லை. அதை கைப்பற்ற பல முயற்சிகள் நடந்தாலும் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் தலையீட்டால் சிங்கள-பௌத்த இனமதவெறி அரசினால் அதை இன்னும் கைப்பற்ற முடியவில்லை என்று அறிகிறேன்.

இம்முறை போகும் போது தெய்வயானை அம்மன் கோவில் முகாமையாளரை (திருகோணமலைத் தமிழர் - பெயர் ஞாபகம் இல்லை) சந்தியுங்கள். அவரிடமும் பேசிவிட்டு உங்கள் யாத்திரைக் கட்டுரையை யாழில் பதியுங்கள்.

இவை தான் நாம் சிறுகச் சிறுகச் எமது வரலாற்றை பதிய செய்யும் பேருதவியாக இருக்கும். நான் சேகரித்த சில ஆதாரங்களை தேடி எடுத்து பின்னர் இணைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, போல் said:

இதில் ஒரு சிறு திருத்தம்.

இராமகிருஷ்ண மிஷனை சிங்கள-பௌத்த இனமதவெறி அரசு அடாத்தாக கையகப்படுத்தி 25 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இன்று இந்த நிமிடம் வரை அங்கு அன்னதானம் வழங்கப்படுவதில்லை. இராமகிருஷ்ண மிஷன் கட்டுப்பாடில் அது இல்லை. சிங்கள-பௌத்த இனமதவெறி அரசு அங்கு பல வருடங்கள் நூதன சாலை அமைந்திருந்தது. இப்போது நூதனசாலை அருகில் உள்ள புதிய கட்டிடத்துக்கு மாற்றப்பட்டுவிட்டது. இப்போது அது சில சிங்கள புத்தபிக்குகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது (இந்த நிமிடம் வரை).  

அகில இலங்கை இந்து மாமன்றத்தைச் சேர்ந்தவர்கள், தொண்டர் சபையைச் சேர்ந்தவர்கள் அன்னதானம் வழங்குவது தெய்வயானை அம்மன் கோவிலில். அது சில நூற்றாண்டுகளாக வட இந்திய இந்து ஆச்சிரமம் ஒன்றின் கட்டுப்பாட்டில் இருப்பதால் சிங்கள-பௌத்த இனமதவெறி அரசினால் அதை இன்னும் கைப்பற்ற முடியவில்லை. அதை கைப்பற்ற பல முயற்சிகள் நடந்தாலும் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் தலையீட்டால் சிங்கள-பௌத்த இனமதவெறி அரசினால் அதை இன்னும் கைப்பற்ற முடியவில்லை என்று அறிகிறேன்.

இம்முறை போகும் போது தெய்வயானை அம்மன் கோவில் முகாமையாளரை (திருகோணமலைத் தமிழர் - பெயர் ஞாபகம் இல்லை) சந்தியுங்கள். அவரிடமும் பேசிவிட்டு உங்கள் யாத்திரைக் கட்டுரையை யாழில் பதியுங்கள்.

இவை தான் நாம் சிறுகச் சிறுகச் எமது வரலாற்றை பதிய செய்யும் பேருதவியாக இருக்கும். நான் சேகரித்த சில ஆதாரங்களை தேடி எடுத்து பின்னர் இணைக்கிறேன்.

உங்கள் தகவலுக்கும் நன்றி நீங்கள் சொல்வது சரி இந்து கலாச்சார மண்டபம் என்று உள்ளது அதாவது கதிர்காம பஸ் தரிப்பு  நிலையம் அருகில் அதை தான் நான் சொல்ல வந்தது அதில்  அன்னதானம் நடப்பது என்று நினைக்கிறேன் நூதன சாலை கோவில் வளாகத்தில் அமைந்துள்ள தை சொல்லகிறீர்ளா

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கத்தோடு குடும்பம் நடத்தி நாங்க பிறந்தோம் எண்டு எழுதினால் வரலாறு கொஞ்சம் பிரச்சினையாத்தான் இருக்கும்.. :D:

  • கருத்துக்கள உறவுகள்

முதல்ல ரணில் இதுக்கு முடிவு கட்டினால் தான்.. மகாவம்சத்தை எவனும் நம்புவான்..! மகாவம்சப்படி.. சிங்களவர் என்ற ஒரு இனமே சாத்தியமில்லாதது.tw_blush: 

 

fake-mahavamsa.png

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, போல் said:

மாபெரும் தமிழின அழிப்பை செய்துவிட்டு "Zero Casualty" என்று உலகை ஏமாற்றிய சிங்கள-பௌத்த இனமதவெறியர்களால் ஒருபோதும் உண்மையான வரலாற்றை எழுத முடியாது.

 

அவர்கள் எப்போது அழிக்கவில்லை என்று கூறினார்கள் 
கிட்டதட்ட இனியும் அழிப்போம் என்றுதான் சொல்கிறார்கள்.

எங்களின் ** தான் உலகம் முழுதும் கூவி திரிகிறார்கள் 
அடுத்த ஐ நா ரவுண்டுக்கு தயாராகி கொண்டு இருக்கிறார்கள் 

  • தொடங்கியவர்
5 hours ago, nedukkalapoovan said:

முதல்ல ரணில் இதுக்கு முடிவு கட்டினால் தான்.. மகாவம்சத்தை எவனும் நம்புவான்..! மகாவம்சப்படி.. சிங்களவர் என்ற ஒரு இனமே சாத்தியமில்லாதது.tw_blush: 

 

fake-mahavamsa.png

 

මහා බොරු වංශය (මහා බොරු වම්සම්)     மகா பொய் வம்சம்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.