Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமாரபுரம் கொலை வழக்கில் 6 இராணுவ வீரர்களும் விடுதலை

Featured Replies

குமாரபுரம் கொலை வழக்கில் 6 இராணுவ வீரர்களும் விடுதலை
 

(மூதூர் நிருபர்)

1821414656Untitled-1.jpgமூதூர்  குமாரபுரம் கிராமத்தில் 1996 ஆம் ஆண்டு 24 பொதுமக்கள் கொல்லப்பட்டமை தொடர்பான வழக்கில்  குற்றஞ் சுமத்தப்பட்டிருந்த 6 இராணுவ வீரர்களும் குற்றவாளிகள் அல்லர் என அநுராதபுரம் மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 

அநுராதபுரம் மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன இன்று மாலை இந்த தீர்ப்பை வழங்கினார்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=news&news=18214#sthash.BCuNq373.dpuf

 

 

 

தமிழர்கள் 26 பேர் படுகொலை சம்பவம் ; 6 இராணுவ வீரர்களும் விடுதலை

 

திருகோணமலை - குமாரபுரம் பகுதியில் தமிழர்கள் 26 பேரை சுட்டு படுகொலை  செய்த வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட 6 இராணுவ வீரர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

குறித்த வழக்கு இன்று அனுராதபுர நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

20 வருடங்களுக்கு முன்பு, 1996 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 2 ஆம் திகதி  இரவு இடம்பெற்ற இந்த படுகொலை சம்பவத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 26 பேர் இராணுவத்தினால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/9494

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த லட்சணத்திலைதான் போர்குற்ற விசாரணை நடாத்தப்போகினமாம். ஐயாவும் மாமாவும் அறிக்கைவிடுறதோட சரி!

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்பார்த்த ஒன்று தானே. சுனாமிக்கு வெளிநாடுகளால் கொடுக்கப்பட்ட பணத்தையே தமிழ் மக்களுக்கு போய் சேர விடாமல் பம்மாத்து நீதிமன்றம் மூலம் மறுக்கப்பட்ட பெருமையை கொண்ட நாடு சிறிலங்கா என்பது  தெரிந்த ஒன்றே. இவர்களிடம் இருந்து நீதியை எதிர்பார்க்க முடியுமா??

  • தொடங்கியவர்

குமாரபுரம் தமிழர்கள் படுகொலை வழக்கில் முன்னாள் ராணுவத்தினர் விடுதலை

 

இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டம் குமாரபுரம் படுகொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த முன்னாள் இராணுவ வீரர்கள் 6 பேரும் இன்று புதன் கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

160727160611_kumarapuram_judgement2_640x
 

20 வருடங்களுக்கு முன்பு 1996 பிப்ரவரி 11-ம் தேதி இடம் பெற்ற இந்த படுகொலை சம்பவத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 26 தமிழர்கள் இராணுவத்தினால் சுட்டுக் கொல்லப்பட்டனர். 39 பேர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் தமிழர்கள்..

அனுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் கடந்த மாதம் 27ம் திகதி தொடக்கம் இந்த வழக்கு விசாரனை நடைபெற்று வந்த நிலையில் இன்று புதன் கிழமை மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தன.

சாட்சியங்களில் காணப்பட்ட முரண்பாடுகள் காரணமாக எதிரிகளை நிரபராதிகள் என கருதி அனைத்து குற்றச் சாட்டுக்களிலிருந்தும் விடுதலை செய்வதாக மேல் நீதிமன்ற மஞ்சுல திலகரட்ன இந்த தீர்ப்பின் போது குறிப்பிட்டுள்ளார்

இந்த வழக்கு விசாரனையின் போது சம்பவத்தில் பாதிப்புக்குள்ளான குமாரபுரம் கிராம மக்கள் , சிவில் அதிகாரிகள் உட்பட 121 பேர் சாட்சிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்

சம்பவ தினத்தில் தெகியத்த இராணுவ முகாமில் சேவையிலிருந்த 8 இராணுவ வீரர்கள் எதிரிகளாக மூதூர் போலிஸாரால் குறிப்பிடப்பட்டு இந்த வழக்கு தாக்கல் செய்யப்ப. எதிரிகளில் இருவர் மரணமடைந்த நிலையில் ஏனைய 6 பேருக்கும் எதிராகவே இந்த வழக்கு விசாரனை நடைபெற்றது

1996ம் ஆண்டு மூதூர் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணை பின்னர் திருகோணமலை மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டிருந்தது.

யுத்த சூழ்நிலையில் தங்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக காரணம் காட்டி எதிரிகள் இந்த வழக்கை அனுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர்.

மேல் முறையீட்டு நீதிமன்ற உத்தரவின் பேரிலே இந்த வழக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தன.

http://www.bbc.com/tamil/sri_lanka/2016/07/160727_kumarapuram_judgement

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குமாரபுரத்தில் கொலைகளே நடக்கவில்லையே!!!!!

அப்படியிருக்கும் போது ஏன் இப்படி சிங்கள பாசமலர்களுக்கு ஒரு களங்கத்தை ஏற்படுத்துகின்றார்கள்?:cool:

சிங்கள-பௌத்த அரச பயங்கரவாத இயந்திரத்தின் 90% ஆன சிங்கள-பௌத்த இனமதவெறிக் காடையர்களைக் கொண்ட நீதித்துறை கடந்த 68 வருடங்களில் பாதிக்கப்பட்ட தமிழர்கள் 99% ஆனவர்களுக்கு நீதியையும், நிவாரணத்தையும் பெற்றுக் கொடுத்ததாக வரலாறு இல்லை.

சிங்கள-பௌத்த அரச பயங்கரவாத இயந்திரத்தின் "நீதி"த்துறையில் உள்ள சிங்கள-பௌத்த இனமதவெறி தலைக்கேறிய அநீதிபதிகள் மிகமோசமான போர்க்குற்றவாளிகளான சிங்கள-பௌத்த ஆயுதப்படைப் பயங்கரவாதிகளை காப்பாற்றுவதே, தமிழின அழிப்பை மேற்கொள்ளும் சிங்கள-பௌத்த ரவுடிகளை  காப்பாற்றுவதே நோக்கமாக செயற்பட்டு வருவது கடந்த 68 வருடகால வரலாறு.

இந்த இலட்சணத்தில் தான் பம்மிக் கொண்டிருக்கும் சம்பந்தன் அண்மையில் சிங்கள-பௌத்த நீதித்துறை நம்பகமானது என்று உளறி தனது அரைவேக்காட்டு தனமான புத்தியை காட்டியிருந்தார்.

இந்த வழக்கு அனுராதபுரத்துக்கு மாற்றப்படும் போதே சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளும், சிங்கள-பௌத்த பயங்கரவாத அரச நீதித்துறைப் பயங்கரவாதிகளும் இணைந்து தமிழினப் படுகொலைகாரர்களை காப்பாற்றவும், பாதிக்கப்பட்ட தமிழர்களை மேலும் அழிக்கவும் தான் முயல்கிறார்கள் என்ற உண்மை தெளிவாக உணர்த்தப்பட்டு விட்டது.  

ஆனால் வழக்கு மாற்றப்பட்ட அக்காலத்தில் பேப்பர் வாசித்து பொறுக்கி அரசியல் செய்யும் சம்பந்தன் தனது உறவினர்களுக்கு விசா எடுக்க ஹிந்திய, ஐரோப்பிய தூரகங்களுக்கு அலைந்து கொண்டிருந்தாரே தவிர வாக்களித்த மக்களைப் பற்றி கவலைப்படவில்லை.  

  • கருத்துக்கள உறவுகள்

இந்த லட்ஷணத்தை சர்வதேசமும்  பாராட்டி சமாதானப் பரிசுக்கு சிபாரிசு செய்யப்போகுது. 

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கெல்லாம் நாங்கள் எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்ய ஆரம்பித்தால்

சிங்கள இனத்தவர்களுக்கு எங்கள் மீது கோபம் வந்துவிடும்.

பின்னர் சிங்கள அரசு தர இருக்கும் தீர்வுத்திடடத்திற்கு அவர்களே முட்டுக்கடடையாக இருப்பார்கள்

ஆகவே தமிழ் மக்களே அடுத்த தேர்தல் வரை அடக்கி வாசியுங்கள்.
கூட்டமைப்பினரை அடுத்த தேர்தலிலும் பாரிய வெற்றியடையச் செய்யுங்கள்.

 நாங்கள் பார்த்துக்கொள்வோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.