Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யானைகளின் கடவைப் பாதைகளில் புகையிரதங்கள் வேகம் தணிக்க வேண்டும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யானைகள் இடம்பெயரும் கடவைப் பாதைகளில் புகையிரதப்பாதைகள் குறுக்கிடுகின்றன. இந்தப் பகுதிகளில் புகையிரதங்கள் வேகத்தைத் தணிக்க வேண்டும் என்று வடக்கு சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கேட்டுக்கொண்டுள்ளார்.


நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு (16.08.2016) தலைமன்னார் - மதவாச்சி புகையிரதப் பாதையில் மெனிக்ஃபார்ம் அருகே புகையிரதம் மோதியதில் நான்கு யானைகள் உயிரிழந்தன. சம்பவத்தை நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர் பொ.ஐங்கரநேசன் புகையிரதத் திணைக்கள அதிகாரிகள், வனவிலங்குப் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரிடம் இவ்விபத்துப்பற்றிக் கேட்டறிந்துகொண்டார். இதன்பின்னர் அங்கு ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்குறிப்பிட்டவாறு கேட்டுக் கொண்டுள்ளார்.


அங்கு அவர் இதுபற்றித் தெரிவிக்கையில்,
யானைகள் வாழுகின்ற காடுகள் இன்று காடழிப்பாலும், புகையிரதப் பாதைகளாலும், பெருந்தெருக்களாலும் சிறுசிறு துண்டுகளாகப் பிரிக்கப்பட்டுவிட்டன. யானையொன்றுக்குத் தினமும் 100 இலீற்றர் தண்ணீரும், 150 கிலோ எடையுள்ள இலை தழைகளும் தேவைப்படுகின்றது. இவ்வளவு தண்ணீரையும் தீனியையும் ஒரு சிறிய காட்டுத்துண்டில் இருந்து பெறமுடியாது. இதனால்தான் யானைகள் அடுத்த காட்டுத்துண்டை நோக்கி இடம்பெயருகின்றன.


யானைகள் ஒருபோதும் வழித்தடங்களை மாற்றுவதில்லை. இதனால்தான் ஒரு காட்டுத்துண்டில் இருந்து இன்னொரு காட்டுத்துண்டுக்கு யானைகள் இடம்பெயரும் கடவைப்பாதையில் புகையிரத வீதிகளோ, தெருக்களோ குறுக்கிட்டால் அப்பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் குறித்த எச்சரிக்கைகள் செய்யப்படுகின்றன. இக்கடவைப் பாதைகளில் புகையிரதங்கள் மணித்தியாலத்துக்கு 15 கிலோமீற்றர் வேகத்தில்  செல்ல வேண்டும் என்றும் உள்ளது. ஆனால், புகையிரதங்கள் இந்த வேகக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்காததாலேயே யானைகள் அநியாயமாக உயிர் இழக்கின்றன.


கடந்த ஒன்றரை ஆண்டுகளில் வடக்கில் புகையிரதம் மோதியதில் 12 யானைகள் கொல்லப்பட்டுள்ளன. ஆசிய யானைகளில் இலங்கையில் உள்ளது தனித்துவமான ஒரு உப இனம். ஒரு காலத்தில் 20,000 வரை இருந்த இவை இப்போது ஐயாயிரத்துக்கும் கீழாகக் குறைந்திருப்பதால் அழியும் உயிரினங்களின் பட்டியலில் இலங்கை யானைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. தொடர்ந்தும், புகையிரதத்தால் யானைகள் மரணமாவதைத் தடுப்பதற்கு கடவைப்பாதைகளில் புகையிரதங்கள் வேகத்தைத் தணிக்க புகையிரதத் திணைக்களம் ஆவன செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.  

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/135031/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

யானைகள் மேல் உள்ள கருசணையில் கொஞ்சத்தை.. வடக்குக் கிழக்கில் சொறீலங்கா தொடரூந்துகள் மோதி இறக்கும்..தமிழர்கள் மீதும் காட்டலாமே. :rolleyes:tw_anguished:

  • கருத்துக்கள உறவுகள்
On 18/08/2016 at 4:42 PM, nedukkalapoovan said:

யானைகள் மேல் உள்ள கருசணையில் கொஞ்சத்தை.. வடக்குக் கிழக்கில் சொறீலங்கா தொடரூந்துகள் மோதி இறக்கும்..தமிழர்கள் மீதும் காட்டலாமே. :rolleyes:tw_anguished:

சிங்களத்திடமா கோரிக்கை......??

open_level_crossing_sign.jpg

இப்படி ஒரு அறிவுப்பு பலகைகளை யானைகளுக்கும் வைக்கலாமே. தமிழ் ஏரியாவுல தமிழிலும், சிங்கள ஏரியாவில் சிங்களத்திலும் இல்லை யானைக்கு ஆங்கிலம்தான் தெரியுமெண்டால் ஆங்கிலத்திலும். யானைகள் பாத்திட்டு திரும்பி போய்விடும்.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகத்திலை மிருகவதையை தடுக்கிறதுக்கெண்டு கொஞ்ச சங்கங்கள்  கிளப்புகள்  திரியுதுகள்...அதுகளிட்டை சொன்னால் பார்த்து பாராமல் இரக்கப்பட்டு வேலியடைச்சாவது மிருகங்களை காப்பாத்துங்கள்.
உந்த விசயத்திலை இந்தியாவும் தடுக்காது....சீனாவும் தடுக்காது...ரஷ்யாவும் முட்டுக்கட்டை போடாது......அமெரிக்காவும் வழிவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்

 தமிழனின் இழப்புகளுக்காக கண்ணீர் விட, அதைத் தடுக்க, அதற்காக பேச தமிழனே தயாரில்லை. உலகத்திலேயே பாவப்பட்ட  இனம் தமிழினம். 

  • கருத்துக்கள உறவுகள்
On 18.8.2016 at 3:41 PM, பிழம்பு said:

யானைகள் இடம்பெயரும் கடவைப் பாதைகளில் புகையிரதப்பாதைகள் குறுக்கிடுகின்றன. இந்தப் பகுதிகளில் புகையிரதங்கள் வேகத்தைத் தணிக்க வேண்டும் என்று வடக்கு சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஐங்கர நேசன்  அண்ணா....
அப்ப.... நாங்கள், கொழும்புக்கு..... 
யாழ் தேவியில் போக.... கனக்க நேரம் எடுக்குமே....

புகையிரதங்களின் வேகங்கள் குறைக்கப்படவுள்ளன!

புகையிரத பாதைகளில் யானைகளின் குறுக்கீடுகள் அதிகளவு காணப்படும் பிரதேசங்களில்பயணிக்கும் புகையிரதங்களின் வேகங்களை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யானைகள் கடக்கும் புகையிரத பாதைகள் தொடர்பாக ஆராய்வதற்கு புகையிரத திணைக்களஅதிகாரிகளும், வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் நேற்றும், இன்றும் மேற்கொண்டஆராய்வு பயணங்களின் முடிவிலேயே இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் யானைகள் புகையிரத பாதைகளை கடக்கும் பிரதேசத்தில் இரு பக்கங்களிலும்அமைந்துள்ள புதர்களை வெட்டி அகற்றுவதற்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாககுறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்மூலம் யானைகள் புகையிரதப் பாதைகளை கடக்கும் பிரதேசங்களை புகையிரதசாரதிகளால் இலகுவில் அடையாளங் காணக்கூடியதாக இருக்கும் எனவும் அதிகாரிகள்சுட்டிக்காட்டியுள்ளனர்.

புகையிரத பாதைகளில் யானைக் கூட்டங்களை பிரதேசவாசிகள் அவதானிக்கும்சந்தர்ப்பத்தில் அது தொடர்பில் வனஜீவராசிகள் அதிகாரிகளுக்கு தகவல்தெரிவிக்கும் முறை ஒன்றும் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் அதிகாரிகள்குறிப்பிட்டுள்ளனர்.

பிரதேசவாசிகளால் தெரிவிக்கப்படும் விடயங்களை சாரதிகளுக்கு அறிவிக்கவும்நடவடிக்கைகள் முன்னெடுக்கவுள்ளதாகவும்,இதன்மூலம் யானைகள் புகையிரதங்களில் மோதிஉயிரிழப்பதை தடுக்க முடியும் என்றும் புகையிரத திணைக்கள அதிகாரிகள்தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

http://www.tamilwin.com/transport/01/114934

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.