Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பணம் கொடுத்து நாட்டை விட்டு தப்பினார்களா விடுதலைப் புலிகள்?

Featured Replies

பணம் கொடுத்து நாட்டை விட்டு தப்பினார்களா விடுதலைப் புலிகள்?

 

இலங்கையில் இறுதிக்கட்ட போர் நடைபெற்ற போது, பாதுகாப்பு அமைச்சகத்தின் உயர் அதிகாரி ஒருவருக்கு பணம் கொடுத்து, 200-க்கும் மேற்பட்ட விடுதலை புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் நாட்டை விட்டு தப்பியோடியதாக வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

151021080045_sl_war_512.jpg
கோப்புப் படம்

காணமால் போனோர் தொடர்பாக செயல்படும் அலுவலகம் குறித்து ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் கூட்டமொன்றில் உரையாற்றிய போது அவர் இதனை தெரிவித்தார்.

இறுதிக் கட்டப் போர் நடைபெற்ற போது 200-க்கும் மேற்பட்ட விடுதலை புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் நாட்டை விட்டு தப்பியோடியுள்ளதாக தெரிவித்த அமைச்சர் சமரவீர, இவர்களுக்குள் அந்த அமைப்பின் முக்கிய தலைவர்களும் இருப்பதாக அறிவித்தார்.

இவ்வாறு தப்பியோடிய நபர்களும் காணாமல் போனோரின் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் இவ்வாறான சட்ட விரோத செயல்கள் சம்பந்தமாக ஆராய காணாமல் போனோர் தொடர்பாக செயல்படும் அலுவலகம் அமைப்பது அவசியமென்று தெரிவித்தார்.

150919174759_srilanka_war_512x288_bbc_no

 

மேலும் கருத்துக்களை தெரிவித்த அமைச்சர் சமரவீர, காணாமல் போனோரின் அலுவலகம் அமைப்பது தொடர்பாக சில எதிர்க்கட்சிகள் பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாகத் தெரிவித்தார்.

இந்த அலுவலகம் உருவாக்கப்படுவதன் மூலம் பாதுகாப்பு படையினர் பழி வாங்கப்படமாட்டார்கள் என்று அவர் கூறினார்.

மேலும் கருத்துக்களைத் தெரிவித்த அமைச்சர் மங்கள சமரவீர, உண்மை கண்டறியும் ஆணைக் குழுவொன்றை அமைக்கும் சட்ட மூலம் இந்த வருட இறுதிக்குள் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படுமென்று தெரிவித்தார்.

இதன் மூலம் கண்டறியப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, உள்ளூர் நீதிமன்ற கட்டமைப்பின் கீழ் மாத்திரம் விசாரணைகள் மேற்கொள்ளப்படுமென்று தெரிவித்த அமைச்சர் மங்கள சமரவீர, இந்த விசாரணைகளுக்கு சர்வதேச நீதிபதிகள் அழைக்கப்பட மாட்டார்கள் என்று மேலும் தெரிவித்தார்.

http://www.bbc.com/tamil/sri_lanka/2016/08/160830_srilanka_ltte

  • கருத்துக்கள உறவுகள்

140 000 மக்கள் பற்றி  பேசினால்

இவர் 200 புலிகள் பற்றி  பேசுவாராம்....

  • கருத்துக்கள உறவுகள்

"ஊசி போன இடம் தெரியும் உலக்கை போன இடம் தெரியாது" என்பது போல மங்கள சமரவீரவின் கருத்து உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு குடை பிடிக்க புலம்பெயர் தமிழர் இருக்கினம் என்ற துணீவு.....ரனீல விட கொடிய விசப்பாம்பு....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, nunavilan said:

"ஊசி போன இடம் தெரியும் உலக்கை போன இடம் தெரியாது" என்பது போல மங்கள சமரவீரவின் கருத்து உள்ளது.

அவனை ஏன் நாங்கள் குறை சொல்லவேணும்? அவனுக்கு தான் தன்ரை இனம் முக்கியம்!
பாராளுமன்றம் போய் தேவாங்கு பார்க்கிற எங்கடையளை என்னெண்டு சொல்லுறது????

  • கருத்துக்கள உறவுகள்

இன்டைக்கு இறுதி யுத்தத்தின் பின்

வெளி நாட்டுக்கு தப்பி வந்த

நூத்துக் கணக்கான போராளிகள்

உங்க பக்கத்தில உங்கள் நாடுகளில் தான்

வாழுகினம் கண்டியளோ

 

போய் அவர்களிடம் கேட்டுப் பாருங்கோ

எப்படி தப்பிச்சினம் என்று

 

காசு வாங்கி தம் இயக்க தமிழ் போராளிகளை

காட்டிக் கொடுத்த புலிப் போராளிகள் போல

சிங்கள ஆமியிலும் பலர் காசு வாங்கி

புலிகளை தப்ப விட்டனர்

 

அப்படி ஒரு வசதி இருந்திருக்கா விட்டால்

இன்னும் பல நூறு / ஆயிரம் போராளிகளை

பலி கொடுத்து இருப்போம்

நீங்களும் ஒரு அஞ்சலி செலுத்தி கொத்து ரொட்டி

சாப்பிட்டு இருப்பீர்கள்

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களவ அரசியல்வாதிகள் நல்லவர்கள்.

அவர்கள் சொல்லது அத்தனையும் உண்மை.

நீதியானவர்கள் நேர்மையானவர்கள்.

மிதித்தால் புல்லுக்கூட சாகாது.


தமிழர்கள். பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்தவர்கள். பஞ்சமகாபாதகர்கள்.:cool:.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வைரவன் said:

இன்டைக்கு இறுதி யுத்தத்தின் பின்

வெளி நாட்டுக்கு தப்பி வந்த

நூத்துக் கணக்கான போராளிகள்

உங்க பக்கத்தில உங்கள் நாடுகளில் தான்

வாழுகினம் கண்டியளோ

 

போய் அவர்களிடம் கேட்டுப் பாருங்கோ

எப்படி தப்பிச்சினம் என்று

 

காசு வாங்கி தம் இயக்க தமிழ் போராளிகளை

காட்டிக் கொடுத்த புலிப் போராளிகள் போல

சிங்கள ஆமியிலும் பலர் காசு வாங்கி

புலிகளை தப்ப விட்டனர்

 

அப்படி ஒரு வசதி இருந்திருக்கா விட்டால்

இன்னும் பல நூறு / ஆயிரம் போராளிகளை

பலி கொடுத்து இருப்போம்

நீங்களும் ஒரு அஞ்சலி செலுத்தி கொத்து ரொட்டி

சாப்பிட்டு இருப்பீர்கள்

 

வெள்ளி கொடியோடு போனவர்களையே சுட்டு தள்ளியவர்கள் இந்த இனவாதிகள்.இவர்களிடம் இருந்து எப்படியாவது தப்பினால் போதும் என்பதே தப்பிய போராளிகளின் எண்ணம். இதற்குள் கொத்து ரொட்டி எங்கு வந்தது?? மங்களவுக்கு கொடுத்தாலும் கொடுப்பீர்கள் போலுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, வைரவன் said:

இன்டைக்கு இறுதி யுத்தத்தின் பின்

வெளி நாட்டுக்கு தப்பி வந்த

நூத்துக் கணக்கான போராளிகள்

உங்க பக்கத்தில உங்கள் நாடுகளில் தான்

வாழுகினம் கண்டியளோ

 

போய் அவர்களிடம் கேட்டுப் பாருங்கோ

எப்படி தப்பிச்சினம் என்று

 

காசு வாங்கி தம் இயக்க தமிழ் போராளிகளை

காட்டிக் கொடுத்த புலிப் போராளிகள் போல

சிங்கள ஆமியிலும் பலர் காசு வாங்கி

புலிகளை தப்ப விட்டனர்

 

அப்படி ஒரு வசதி இருந்திருக்கா விட்டால்

இன்னும் பல நூறு / ஆயிரம் போராளிகளை

பலி கொடுத்து இருப்போம்

நீங்களும் ஒரு அஞ்சலி செலுத்தி கொத்து ரொட்டி

சாப்பிட்டு இருப்பீர்கள்

 

அங்கால கொத்து, நீங்கள் பார்டி அவ்வளவுதான் வித்தியாசம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.