Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

9 ஆவது சரத்தை நீக்க வேண்டாம் : அரசியலமைப்பு குறித்து கர்தினால்

Featured Replies

9 ஆவது சரத்தை நீக்க வேண்டாம் : அரசியலமைப்பு குறித்து கர்தினால் 

 

இலங்கை மதச்­சார்­பில்­லாத நாடு என்ற மேற்­கு­ல­கத்தின் கொள்­கையை நாம் ஏற்­றுக்­கொள்ள வேண்­டிய தேவை கிடையாது எனத் தெரி­வித்­துள்ள கத்­தோ­லிக்க பேராயர் கர்­தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்­டகை இலங்­கையின் அர­சி­ய­ல­மைப்பின் 9 ஆவது ஷரத்து நீக்­கப்­படக் கூடாது என்றும் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

Malcolm_Ranjith.jpg

கம்­பஹா மாவட்­டத்தில் திரு இரு­த­ய­நாதர் தேவா­ல­யத்தில் இடம்­பெற்ற நிகழ்­வொன்றில் உரை­யாற்­று­கை­யி­லேயே பேராயர் கர்­தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்­டகை இவ்­வாறு கருத்து வெளி­யிட்­டுள்ளார்.

ஆண்­டகை அங்கு மேலும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது,

இலங்கை மதச்­சார்­பில்­லாத நாடு என்ற கொள்­கையை கடை­பி­டிக்க வேண்­டு­மென்றும் அதனை புதிய அர­சி­ய­ல­மைப்பில் உள்­ளீர்க்க வேண்­டு­மென்றும் மேற்­கு­லக நாடு­களின் கொள்கை எம்­மீது திணிக்­கப்­ப­டு­வ­தற்கு முயற்­சிகள் எடுக்­கப்­ப­டு­கின்­றன.

இதனை நாம் நிரா­க­ரிக்க வேண்டும். மதம்இ கலா­சார விழு­மி­யங்­களை கடைப்­பி­டித்த வாழ்வின் கார­ண­மா­கவே இலங்­கையில் ஒழுக்க விழு­மி­யங்­க­ளுக்­கான சமூக கட்­ட­மைப்பு உரு­வா­கி­யுள்­ளது.

எனவே மதச்­சார்­பற்ற நாடு எங்­க­ளுக்கு பொருத்­த­மா­ன­தல்ல. 2600 வரு­டங்­க­ளுக்கு மேலான மதக் கலா­சாரம் எமக்கு உள்­ளது. அதனை நீக்­கு­வது சமூக கட்­ட­மைப்பை சீர்­கு­லைக்கும்.

அதே­வேளை அர­சி­ய­ல­மைப்பின் 9 ஆவது ஷரத்து தொடர்ந்தும் பாது­காப்­ப­தாக žஜனா­தி­பதி உறு­தி­ய­ளித்­துள்ளார். இதனை வர­வேற்­கின்றோம்.

அதா­வது இலங்கை ஜன­நா­யக குடி­ய­ரசின் அதி முக்­கியம் வாய்ந்த இடத்தை பெளத்த மதத்­திற்கு வழங்கி அதனை போசிப்­பது பாது­காப்­பது அரசின் முக்­கிய கட­மை­யாகும்.

அதேவேளை, ஏனைய மதங்களையும் அரசு பாதுகாக்கும் என்ற ஷரத்து இலங்கையின் அரசியலமைப்பில் தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்றும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

http://www.virakesari.lk/article/11222

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க ஏன் சொல்லமாட்டீங்க ?

இவர் கிறிஸ்தவ பெளத்தரோ அல்லது பெளத்த கிறிஸ்தவரோ ?

இந்து, இஸ்லாமிய மத பெரியவர்கள் எல்லாம் சும்மா இருக்க, இப்ப 400, 500 வருசத்தில் இலங்கை வந்த மதத்தை சார்ந்த ஒருவர் இவ்வாறு சொல்வது அவர் சார்ந்த மதத்தை அவர் அவமதிப்பது போலாகிவிடும்.

:unsure:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

நீங்க ஏன் சொல்லமாட்டீங்க ?

இவர் கிறிஸ்தவ பெளத்தரோ அல்லது பெளத்த கிறிஸ்தவரோ ?:unsure:

அவர் ஒரு சிங்களவர். :( :grin:

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

நீங்க ஏன் சொல்லமாட்டீங்க ?

இவர் கிறிஸ்தவ பெளத்தரோ அல்லது பெளத்த கிறிஸ்தவரோ ?

இந்து, இஸ்லாமிய மத பெரியவர்கள் எல்லாம் சும்மா இருக்க, இப்ப 400, 500 வருசத்தில் இலங்கை வந்த மதத்தை சார்ந்த ஒருவர் இவ்வாறு சொல்வது அவர் சார்ந்த மதத்தை அவர் அவமதிப்பது போலாகிவிடும்.

:unsure:

நாதமண்ணை 
ஈழத்தில் கிறீஸ்தவர்கள் தங்களது இனத்தின் பின் தான் நிற்கிறார்கள் என்பதற்கு இது உதாரணம் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, அக்னியஷ்த்ரா said:

நாதமண்ணை 
ஈழத்தில் கிறீஸ்தவர்கள் தங்களது இனத்தின் பின் தான் நிற்கிறார்கள் என்பதற்கு இது உதாரணம் 

இவர் இவ்வாறு சொல்வது, பிரச்சனை வந்தால் கிறிஸ்தவ மேற்கு தம்மை காக்கும் என்ற நம்பிக்கையில்..

ஆனால் இலங்கையில் சிறுபான்மை மதங்களுக்கு ஆபத்து உள்ள நிலையில், இவர் இவ்வாறு சொல்ல வைக்கப்பட்டுள்ளாரோ என்று சந்தேகப்பட வேண்டியுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Nathamuni said:

இவர் இவ்வாறு சொல்வது, பிரச்சனை வந்தால் கிறிஸ்தவ மேற்கு தம்மை காக்கும் என்ற நம்பிக்கையில்..

ஆனால் இலங்கையில் சிறுபான்மை மதங்களுக்கு ஆபத்து உள்ள நிலையில், இவர் இவ்வாறு சொல்ல வைக்கப்பட்டுள்ளாரோ என்று சந்தேகப்பட வேண்டியுள்ளது.

உங்களுக்கு தெரியுமோ தெரியாது உந்தாள் முந்தி மன்னார் ஆயரிட்டைபோய் எதற்கு அரசியல் பேசுகிறீர்கள் ...உங்கடை பாட்டில சமயத்தை மட்டும் பாருங்கள் என்று சொல்லப்போய் நல்லா வகையாக வாங்கிக்கட்டியவர் ..கருதினாலாவதர்க்கு முன்னமே மகிந்தவிற்கு கூஜா தூக்கிய அறக்கழிஞ்சது ...

உவர் முந்தியிருந்தே இதைத்தான் பேசுறார் 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, அக்னியஷ்த்ரா said:

உங்களுக்கு தெரியுமோ தெரியாது உந்தாள் முந்தி மன்னார் ஆயரிட்டைபோய் எதற்கு அரசியல் பேசுகிறீர்கள் ...உங்கடை பாட்டில சமயத்தை மட்டும் பாருங்கள் என்று சொல்லப்போய் நல்லா வகையாக வாங்கிக்கட்டியவர் ..கருதினாலாவதர்க்கு முன்னமே மகிந்தவிற்கு கூஜா தூக்கிய அறக்கழிஞ்சது ...

உவர் முந்தியிருந்தே இதைத்தான் பேசுறார் 

அவதானித்தீர்களாயின், இலங்கைப் பிரச்சணைக்கு காரணமே, ஆட்சியைப் பிடிக்க பெளத்த மதத்தில் பற்று இருப்பதாக காட்டிய பெளத்தரல்லாதோரின் சந்தர்பவாதமே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, Paanch said:

அவர் ஒரு சிங்களவர். :( :grin:

சரியாக சொன்னீர்கள்.  tw_thumbsup:

பௌத்த மதத்தை பாதுகாக்க ஜனாதிபதியும் பிரதமரும் எடுக்கும் முயற்சி பாராட்டுக்குரியது!

பௌத்த மதத்தை பாதுகாக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் எடுக்கும் முயற்சி பாராட்டுக்குரியது என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

கம்பஹா திருச்சிலுவை தேவாலயத்திற்கு நூறு ஆண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்படும் போது பௌத்த மதத்திற்கு தற்போது காணப்படும் முன்னுரிமையை அதேவிதமாக உறுதி செய்வதாக ஜனாதிபதியும் பிரதமரும் அளித்துள்ள உறுதிமொழி பாராட்டுக்குரியது.

புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்தின் போது இலங்கையை மதங்கள் அற்ற இராச்சியமாக அறிவிக்குமாறு சிலர் கோரியிருந்தனர்.

மேற்குலக நாடுகளில் காணப்படும் மதங்களற்ற கொள்கையை நாட்டுக்குள் அறிமுகம் செய்ய முடியாது.

இந்த கொள்கையை கூறி இலங்கையின் ஆன்மீக வழிமுறைகளை அழிக்க சிலர் முயற்சிக்கின்றனர்.

இதேவேளை, தற்போது அரசியல் அமைப்பில் காணப்படும் 9ஆம் சரத்து எந்தவிதமான மாற்றங்களுக்கும் உட்படுத்தப்படக்கூடாது.

30 ஆண்டு கால போரின் பின்னர் முன்னெடுக்கும் பயணத்தின் போது மத மற்றும் இன ஒற்றுமை அவசியமானது எனவும் தெரிவித்துள்ளார்.

http://www.tamilwin.com/politics/01/117246?ref=youmaylike2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.