Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு இராணுவ ஆக்கிரமிப்பை தெற்கு மக்களிடம் விளக்குங்கள்! மாவை பா.உ.

Featured Replies

வடக்குக்கு வருகை தரும் அமைச்சர்கள் இங்கு தொடரும் இராணுவ ஆக்கிரமிப்புக்குறித்து தெற்கு மக்களிடம் தெளிவாக எடுத்துக் கூறவேண்டும். எமது மக்களின்விவசாய நிலங்கள் பல இன்னும் இராணுவத்தினர் வசமே உள்ளன. இதனால் வாழ்வாதாரத்தைஇழந்து மக்கள் தொடர்ந்தும் துன்பப்படுகின்றார்கள். இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

விவசாயிகளுக்கான சலுகைக் கட்டணம் வழங்கும் தேசிய அங்குரார்ப்பண விழாநீர்வேலியில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டுஉரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:-

கடந்த ஆட்சி மாற்றத்துடன் நாம் சில இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றோம். எமக்குரிய அரசியல் தீர்வை இந்த அரசும் தராது விட்டால் நாம் என்னசெய்வோம் என்பதை ஐ.நா. செயலர் பான்கீ மூன் இலங்கை வந்தவேளை அவருக்குத்தெளிவாகத் தெரிவித்துள்ளோம்.ஆகவே, இந்த நல்லாட்சி அரசு எமக்குரிய தீர்வுத் திட்டத்தை முன்வைக்கும்என்பதில் முழுமையான நம்பிக்கையுண்டு.

எமது மக்களின் பெருமளவான விவசாய நிலங்கள் இன்றுவரை இராணுவம் வசமே உள்ளன.அதனால் விவசாயத்தையே வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்ந்து வரும் மக்கள் தமதுநிலங்களை இழந்து துன்பப்பட்டு வருகின்றனர். எனவே, இன்று இங்கு வருகைதந்திருக்கும் மின்சக்தி அமைச்சர், மின்சக்தி பிரதி அமைச்சர் மற்றும்அதிகாரிகள் ஆகியோர் எமது மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளை உணர்ந்து இராணுவம்வசமுள்ள எமது மக்களின் காணிகள் அனைத்தையும் விடுவிக்க உதவவேண்டும்.

எமது பிள்ளைகள் இந்த நல்லாட்சி அரசுக்குக் கைலாகு கொடுத்து மாலைகள் அணிவித்துவரவேற்கிறார்கள் என்றால் அது உங்களை மகிழ்விப்பதற்காக மட்டுமல்ல. எங்களைவிடுதலையுடனும், மகிழ்வுடனும் இந்த நாட்டில் வாழவிடுங்கள் என்பதற்காகவே. அதுவேபிள்ளைகளின் எதிர்பார்ப்பு.

எமது மக்களின் விடுதலைக்காகப் பல உயிர்கள் தியாகம் செய்யப்பட்டுள்ளன. எமதுமக்களும் கடந்த காலப் போர் காரணமாக பல இழப்புக்களைச் சந்தித்துள்ளனர். நாம்எமது வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டியுள்ளது. அதற்கு முக்கிய பங்கு வகிப்பதுவிவசாயம்.ஆனாலும், எமக்கான சந்தைப்படுத்தல் வசதியின்மையால் இன்றுவரை எமது மக்கள் உரியவருவாயைப் பெறமுடியாதுள்ளது.

தென்னிலங்கையில் உள்ள பெரிய வியாபாரிகள் எமதுவிவசாயிகளிடம் கொள்வனவு செய்யும் மரக்கறிகளைப் பொலித்தீனில் சுற்றி பூட்சிட்றி, கடைகள் வாயிலாக விற்பனை செய்கின்றனர். எமது விவசாயிகள் நவீன இரசாயனஉரங்களைப் பயன்படுத்துகின்றனர். இதனால் விவசாய நிலம் வளமிழக்கிறது என்றார்.

http://www.tamilwin.com/politics/01/119635?ref=morenews

அதுக்கு தானே இவரை மக்கள் பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெஎடுத்தவையள் !!!

  • கருத்துக்கள உறவுகள்

கலோ!மிஸ்டர் மாவை !பான்கிகூன் இன்னும் 3 மாதத்தில் பதவிவிலகுகிறார். அவரிட்டைப்போய் சொல்லியிருக்கிறீங்களே.முள்ளிவாய்க்காலில் தமிழினம் அழிந்து கொண்டிருந்தபொழுது பார்த்துக்கொண்டிருந்தவர்தான். பான்கிமூன்.இதைவிட நீங்கள் ராஜபக்சவிடம் சொல்லியிருக்கிறோம். இந்த வரடத்திற்குள் தீர்வு தராவிட்டால் உங்களுக்கு ஆதரவு என்று சொல்லியிருந்தால் நம்பியிருப்போம். கொசுத்தெல்லை தாங்க முடியலைப்பா!!!

  • கருத்துக்கள உறவுகள்

இதை தேசிய விழாவில் வைத்து சொல்லியிருக்கலாம். எல்லாருக்கும் போயிருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

தெற்கு மக்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை.இனித்தான் அரிவரியில் இருந்து தொடங்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.