Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பின்னால் இருந்து துப்பாக்கி சூடு...! முன்னால் இருந்தவருக்கு சூடு பட்டது எப்படி..? யாழ். மாணவர்கள் மரணத்தில் மறைப்படும் உண்மைகள்

Featured Replies

இருவர் அமர்ந்து சென்ற மோட்டார் சைக்கிள் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தால், பின்னால் இருந்தவருக்கு சூட பட்டிருக்க வேண்டும்.எனினும், மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றவர் மீது எவ்வாறு குண்டு பாய்ந்திருக்க முடியும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் பாராளுமன்றில் கேள்வியெழுப்பியுள்ளார்.

23/2 நிலையியற் கட்டளையின் கீழ், நேற்று பாராளுமன்றில் கேள்வியெழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரும் வீதி விபத்தில் உயிரிழந்ததாக ஆரம்பத்தில் பொலிஸார் தெரிவித்தனர். எனினும், மறுநாள் பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டமை தெரியவந்தது.

மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றவரின் உடலில் துப்பாக்கிச் சூட்டுக் காயம் இருந்தது. எனினும், பின்னால் இருந்து சென்றவர் தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார் உத்தரவிட்டபோதும், நிறுத்தாது சென்றதால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகப் பொலிஸர் தற்பொழுது தமது நிலைப்பாட்டை மாற்றியுள்ளனர் என அவர் கூறியுள்ளார்.

சட்டத்துக்கு முரணான பொலிஸாரின் இந்த நடவடிக்கையை கண்டிப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், குறித்த விடயம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட்ட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

நிறுத்தாமல் சென்ற மோட்டார் சைக்கிள் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டிருந்தால் மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்தவர் மீது துப்பாக்கிச் சூடு பட்டிருக்க வேண்டும். எனினும், மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் மீது எவ்வாறு குண்டு பாய்ந்தது என்ற உண்மை பக்கச்சார்பற்ற விசாரணைகளில் கண்டறியப்பட வேண்டும் இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

http://www.tamilwin.com/special/01/122285?ref=home

  • கருத்துக்கள உறவுகள்

இவர் என்ன சொல்லவாறார்.. பொலிஸ் ஓட விட்டிட்டு.. சுட்டிருந்தால்.. பின்னால் இருந்தவருக்கு தான் வெடி பட்டிருக்கும்.. இது அவர்களே தங்களை தாங்களே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.... அப்படின்னா..

இரத்தக் கறை படியாத மனுசன்.. எப்படி இப்படியான இரத்தக் கறை படிந்த சம்பவங்களை எல்லாம் அலசி ஆராய்ந்து பேசுறார்... வியப்பாக் கிடக்கு.  :rolleyes:tw_angry:

 

  • தொடங்கியவர்

சம்பந்தனை என்ன தான் கேலி செய்தாலும் இந்த மாணவர்களின் படுகொலை விடயத்தில் சம்பந்தன் மேற்கொண்ட உடனடி முயற்சிகள் பாராட்டுக்குரியவை.

  • கருத்துக்கள உறவுகள்

அங்கஜனும் தான்.. அறிக்கை விட்டவர். அவரும் பாராட்டுதலுக்குரியவர் ஆகிட்டாரோ.

ஒரு சம்பவம் நடக்க முதல் தடுப்பது தான் அரசியல் சாணக்கியமே தவிர.. நடந்த பின் அறிக்கை விட்டு சமாளிப்பது.. அல்லது படுகொலையாளர்களை காலப் போக்கில் தப்பிக்க விடுவது.. அரசியல் சாணக்கியமோ.. விவேகமோ கிடையாது. பக்கா.. சந்தர்ப்பவாதம். tw_angry::rolleyes:

  • தொடங்கியவர்
Just now, nedukkalapoovan said:

அங்கஜனும் தான்.. அறிக்கை விட்டவர். அவரும் பாராட்டுதலுக்குரியவர் ஆகிட்டாரோ.

ஒரு சம்பவம் நடக்க முதல் தடுப்பது தான் அரசியல் சாணக்கியமே தவிர.. நடந்த பின் அறிக்கை விட்டு சமாளிப்பது.. அல்லது படுகொலையாளர்களை காலப் போக்கில் தப்பிக்க விடுவது.. அரசியல் சாணக்கியமோ.. விவேகமோ கிடையாது. பக்கா.. சந்தர்ப்பவாதம். tw_angry::rolleyes:

இந்த படுகொலை விடயத்தில் இங்கு நடப்பவை, நடந்தவை தெரியாமல் கருது எழுதுவது விவேகத்துக்குரிய செயல் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, போல் said:

இந்த படுகொலை விடயத்தில் இங்கு நடப்பவை, நடந்தவை தெரியாமல் கருது எழுதுவது விவேகத்துக்குரிய செயல் இல்லை.

எல்லாப் படுகொலைகளும் இப்படித்தான் சொல்லப்பட்டு.. மறைக்கப்பட்டு வருகின்றன.. அல்லது மறக்கடிக்கப்பட்டு வருகின்றன. நீங்கள்... இதனை இப்போ செய்வது.....???????!:rolleyes:

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவை.. பக்கச் சார்பற்ற நீதி விசாரணையும்... நீதியும்.. நிரந்தரப் பாதுகாப்பும்.. நிம்மதியும். சமாளிப்புகளும்.. அறிக்கைகளும் அல்ல. 

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தருக்கு ஒரு அமைச்சர் ஆகாயத்தை நோக்கி சுட்டது தான் தவறாக மாணவர் மீது விழுந்ததாக சொல்லி இருக்கிறார்.இது கூட தெரியாமல்........
 

  • கருத்துக்கள உறவுகள்

குண்டு ஒரு மாணவருக்கு பட்டு இறந்ததாகவும் காயப்பட்ட மற்றவர் அடித்து கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.இதனை அயலவர்கள் கண்டதாகவும் கூறப்படுகிறது.:unsure:

  • கருத்துக்கள உறவுகள்

வானத்தை நோக்கி சுட்ட குண்டு

நிலத்தில் விழும்போது மோட்டார்சைக்கிளை ஓடியவரின் நெஞ்சிலே விழுந்திருக்கலாம் -  சிறீலங்கா சட்ட மற்றம் நீதி அமைச்சர்.

  • தொடங்கியவர்

மாணவர்கள் படுகொலைக்கு பின்னால் வெளிச்சக்திகளா? சுமந்திரன் எம்.பி கேள்வி

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரினால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்குப் பின்னால் வேறு ஏதாவது சக்திகள் இயங்கியிருந்தால், அதனை வெளிச்ச த்திற்கு கொண்டு வருவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் குறிப்பிட்டார்.

மாணவர்கள் இருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த சம்பவத்தை ஒரு வீதி விபத்து என வர்ணித்து, மூடி மறைக்க முயற்சித்த பொலிஸாரின் செயற்பாட்டி ற்கும் அவர் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தை பொலிஸார் ஏன் மூடி மறைக்க முனைந்தார்கள் என்பது பாரியதொரு கேள்வியாக உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், மாணவர்கள் ஓடி ஒழிக்கப் பார்த்ததாகவும், மோட்டார் சைக்கிளை மறித்த போது நிறுத்தவில்லை, அதனாலேயே சுட்டோம் என பொலிஸார் கூறுவதிலும் பல சந்தேகங்கள் எழுந்துள்ளதாகவும் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் ஓடுபவர்களுக்குப் பின்னால் இருந்து சுட்டால், வாகனம் ஓட்டியவருக்கு எவ்வாறு முன்னால் துப்பாக்கி சூடுபட்டது என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

இந்த சம்பவத்தை முழுமையாக ஆராய்ந்து, இதற்கு பின்னால் வேறு சூழ்ச்சிகள் உள்ளதா? ஏன் இவ்வாறு பொலிஸார் நடந்து கொண்டார்கள் என்ற கேள்விகளுக்கு பதில் தேவையாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாணவர்களின் படுகொலைச் சம்பவத்தை சாதாரண விடயமாக எடுத்துவிட முடியாது எனக் குறிப்பிட்ட எம்.ஏ. சுமந்திரன், இதற்கு பொறுப்பானவர்களை சட்டத்தின் முன்நிறுத்தும் வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழுமையான பங்களிப்பை வழங்கும் என்றும் குறிப்பிட்டு ள்ளார்.

இந்தச் சம்பவத்தின் பின்னர் வட மாகாணத்தில் பொலிஸாரை வீதியில் காண முடியாது உள்ளதாகவும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் மரணச் சடங்கின் போது, வீதியால் பெருந்தி ரளான மக்கள் சென்ற போதும் கூட, பொலிஸார் எவரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடவி ல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது கண்டிக்கத்தக்க விடயம் எனக் குறிப்பிட்ட எம்.ஏ. சுமந்திரன், பொலிஸார் தங்களுடைய கடமையில் ஈடுபடாமல் இருப்பதற்கு, இதற்கு பின்னால் ஏதாவது சிந்தனைகள் இருக்கி ன்றதா என்பது குறித்து ஆராயப்பட வேண்டும் என்றும் பொலிஸ் மாஅதிபர் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

http://www.tamilwin.com/politics/01/122364?ref=home

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு கேள்வி படும் கதைகளை வைத்து பார்க்கும்போது 
மாணவர்கள் மீதுதான் பிழை என்று தெரிகிறது.

போலீசார் சடடத்தையும் தமிழரையும் பாதுகாப்பதில் 
கண்ணும் கருத்துமாக இருந்து இருக்கிறார்கள். 

பின்னால் இருந்தவர் தனது உடலில் பாய்ந்த குண்டை 
எடுத்து முன்னால் இருந்தவரின் உடலில் வைச்சு அமத்தி இருக்கவும் 
சாத்தியம் உண்டு.

வழக்கு விசாரணையில் இருப்பதால் மேல்கொண்டு 
எழுதுவது சரியாக தெரியவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, Maruthankerny said:

இங்கு கேள்வி படும் கதைகளை வைத்து பார்க்கும்போது 
மாணவர்கள் மீதுதான் பிழை என்று தெரிகிறது.

போலீசார் சடடத்தையும் தமிழரையும் பாதுகாப்பதில் 
கண்ணும் கருத்துமாக இருந்து இருக்கிறார்கள். 

பின்னால் இருந்தவர் தனது உடலில் பாய்ந்த குண்டை 
எடுத்து முன்னால் இருந்தவரின் உடலில் வைச்சு அமத்தி இருக்கவும் 
சாத்தியம் உண்டு.

வழக்கு விசாரணையில் இருப்பதால் மேல்கொண்டு 
எழுதுவது சரியாக தெரியவில்லை. 

ம்ம்ம்

நானும் அப்டித்தான் நினைக்கின்றேன்

மற்றவரது இழப்பு மோட்டார் சைக்கிள் இரும்பினால் ஆனதால் நடந்திருக்கிறது

இனி  பஞ்சினால்செய்தால் மக்களை இவ்வழிவிலிருந்து காக்கலாம்...

இந்த துக்கம் காரணமாக 5 பொலிசாருக்கும் இதயவலி ஏற்பட்டதாகவும் தகவல்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாவீரர்தினம் வருதெல்லே.....அதுதான் ஏதும் முன்னேற்பாடாய்  வெருட்டி அடக்க வெளிக்கிட்டாச்சோ தெரியேல்லை..

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

மாவீரர்தினம் வருதெல்லே.....அதுதான் ஏதும் முன்னேற்பாடாய்  வெருட்டி அடக்க வெளிக்கிட்டாச்சோ தெரியேல்லை..

ஆனால் இந்தமுறை

மாவீரர் நாள் அவர்களுக்கு மட்டுமல்ல

இங்கும் பலருக்கும் பதில் சொல்லும்..

  • கருத்துக்கள உறவுகள்

பெரிய சிதம்பர ரகசியம் ஒன்றுமில்லை...பொலீஸ் மறிக்கும் போது அவர்கள் நிற்கவில்லை... அவர்களை தங்கட மோ.சைக்கிளில் துரத்தி வந்த பொலீஸ் ஓவர் டேக் பண்ணி நெஞ்சில சுட்டு இருக்க்கிறார்கள்.

நேற்று ஒரு செய்தி வாசித்தேன்.அமெரிக்காவில் ஒரு பெண் அதுவும் ஜந்து மாதக் கர்ப்பிணிப் பொலிசால் சுட்டுக் கொல்லப்பட்டாராம்.அவரது குழந்தைகளுக்கு முன்னாலேயே அவர் சுட்டு கொல்லப்பட்டு இருக்கிறார். அவர் தனது பிள்ளைகளை துவக்கைக் காட்டி பயமுறுத்திக் கொண்டு இருந்தாராம்...ஏன் அந்தப் பெண்ணை சுடாமல் பொலீசாரால் அக் குழந்தைகளை காப்பாற்றி இருக்க முடியாதா?

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ரதி said:

பெரிய சிதம்பர ரகசியம் ஒன்றுமில்லை...பொலீஸ் மறிக்கும் போது அவர்கள் நிற்கவில்லை... அவர்களை தங்கட மோ.சைக்கிளில் துரத்தி வந்த பொலீஸ் ஓவர் டேக் பண்ணி நெஞ்சில சுட்டு இருக்க்கிறார்கள்.

நேற்று ஒரு செய்தி வாசித்தேன்.அமெரிக்காவில் ஒரு பெண் அதுவும் ஜந்து மாதக் கர்ப்பிணிப் பொலிசால் சுட்டுக் கொல்லப்பட்டாராம்.அவரது குழந்தைகளுக்கு முன்னாலேயே அவர் சுட்டு கொல்லப்பட்டு இருக்கிறார். அவர் தனது பிள்ளைகளை துவக்கைக் காட்டி பயமுறுத்திக் கொண்டு இருந்தாராம்...ஏன் அந்தப் பெண்ணை சுடாமல் பொலீசாரால் அக் குழந்தைகளை காப்பாற்றி இருக்க முடியாதா?

அமெரிக்கா பெண் துவக்கு வைத்திருந்தவ .....ஆனால் பெடியள் (இரண்டு எழுத்து பெடியள் அல்ல)என்ன வைத்திருந்தவையள் பொலிஸார் முன்னால் வந்து சுடுவதற்கு ....இப்படி நான் கேட்கவில்லை.... சம்பந்தன் கேட்ககூடும்tw_tounge_wink:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.