Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சலனம்! - சிறுகதை

Featured Replies

சலனம்! - சிறுகதை

கமலி பன்னீர்செல்வம், ஓவியம்: பிரேம் டாவின்ஸி

 

p43a.jpg

ணி ஐந்தைத் தொட மூன்று நிமிடம் இருந்தது. கம்ப்யூட்டர் திரையைச் சுருக்கிவிட்டு தன் இருக்கையில் இருந்து எழுந்து ரெஸ்ட் ரூம் சென்றாள் மேரி. மீண்டும் தன் இருக்கைக்கு வரவும், மணி ஐந்தாகவும் சரியாக இருந்தது.

``மணி அஞ்சாய்டுச்சுனா டான்னு கிளம்பிடுங்க” என்று சற்றே நக்கல் கலந்த தொனியில் மேனேஜர் கோவிந்தராஜ் சொல்ல, மேரி பல்லைக் கடித்துக் கொண்டு நின்று கொண்டிருந்தாள். கோப்புகளில் இல்லாத பிழைகளை அவர் பொறுப்பாகத் தேடிக் கொண்டிருந்தார்.

கோவிந்தராஜுக்கு வயது 63. பிள்ளைகள் இருவரும் மேற்படிப்புக்காக வெளியூரில் தங்கி இருக்க, மனைவி வேறு ஒரு நிறுவனத்தில் உயரதிகாரியாக பணிபுரிகிறார். மனைவி வீடு திரும்ப நேரமாகும் என்பதால், இவர் இங்கேயே ஏழு மணி வரை உட்கார்ந்து ஏதாவதொரு புதிய நிறுவனத்துக்கு யோசனைகளும், தனிப்பட்ட புகார்களும் எழுதிக்கொண்டோ, நெட்டில் ஏதாவது தேடிக்கொண்டோ இருப்பார்.

மேரி மெதுவாக, “சார் ட்ரெயின் போயிடும், இதை விட்டா அடுத்த ட்ரெயின் அரை மணி நேரம் கழிச்சுதான்” என்றாள். சொன்னவளை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, ``சரி...சரி போ நாளைக்கு கொஞ்சம் வேலை நிறைய இருக்கு. வீட்டுக்குப் போக லேட்டாகும். போர்டு மீட்டிங்குக்கு ரிப்போர்ட் தயார் செய்யணும்” என்றார். வேகமாக நன்றி சொல்லிவிட்டு கைப்பையை எடுத்துக் கொண்டு ஓட்டமும் நடையுமாக வெளியே வந்தாள் மேரி.

p43b.jpg

இந்த முப்பத்தைந்து வயதில் காலையும் மாலையும் ஓடவேண்டி இருப்பது சற்று சிரமமாகத்தான் இருந்தது. ஆனாலும், பொருளாதார ஓட்டம் ஓடியே ஆகவேண்டும். இவள் சென்று நிற்கவும், ட்ரெயின் வரவும் சரியாக இருந்தது. பெண்கள் கம்பார்ட்மென்ட்டில் தன்னைத் திணித்துக்கொண்டு உள்ளே சென்றாள். ஆசுவாசமுடன்  இடம் தேடி பையில் இருந்த அவள் விகடனை வாசிக்கத் தொடங்கினாள். நிறுத்தம் வந்தவுடன் இறங்கி, வீட்டுக்கு வரும் வழியில் காய்கள் வாங்கிக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்து வேலைகளை ஆரம்பித்தாள்.

இரவு சாப்பாடு முடிந்து படுக்கைக்கு செல்லும் முன் கணவன் சுந்தரிடம், ``நாளைக்கு நான் வர லேட்டாகும்ப்பா. நீ சீக்கிரம் வந்துடுறியா?'' என்று சொல்ல, ``சரி, நான் பர்மிஷன் போட்டுட்டு வர்றேன்” என்று பதில் வந்தவுடன் `அப்பாடா’ என்றொரு நிம்மதி பரவியது. நாளைய கவலையை ஒத்திவைத்துவிட்டு மெள்ள கண் அயர்ந்தாள். விடிந்ததும் அரக்க பரக்க எல்லா வேலைகளையும் முடித்து, ஓட்டமும் நடையுமாக வந்து ட்ரெயின் பிடித்து அலுவலகத்துக்கு சரியான நேரத்துக்கு வந்தாள்.வேலையில் மூழ்கிய மேரிக்கு பதினோரு மணிக்கு டீ வரும்போதுதான் நிமிரவே முடிந்தது.

மாலை ஐந்தடிக்க ஒவ்வொருவராக புறப்பட்டார்கள். எல்லாரும் சென்ற பின், ``இது கொஞ்சம் சீக்ரெட் ஃபைல். அதான்...” என்று அவள் அருகில் அமர்ந்து டிக்டேஷன் கொடுக்க ஆரம்பித்தார் கோவிந்தராஜ்.

வேலை முடியவும் அட்டெண்டர் டீ, பிஸ்கட் வாங்கி வரவும் சரியாக இருந்தது. மூவரும் சாப்பிட, மணி ஆறரையைத் தாண்டி இருந்தது. டீ தந்த தெம்புடன் மெள்ள எழுந்து ``கிளம்புகிறேன் சார்” என்றாள். ``இரு... போற வழியில் நானே ட்ராப் பண்ணிடறேன்” என்றார் கோவிந்தராஜ்.

ட்ரெயின் கூட்டத்தில் இடிபடாமல் செல்லலாம் என்ற சின்ன சந்தோஷம் மனதுக்குள் எட்டிப் பார்க்க `சரி' என்றாள். கார் கதவை முன்னால் திறந்துவிட்டார். அலுவலக வேலை, வீடு, பிள்ளைகள் படிப்பு, கணவர் என்று பேச்சைத் தொடர, மேரியும் பதில் சொல்லிக்கொண்டே வந்தாள்.

கார் மெயின் ரோட்டைத் தொட்டது. ``மேரி... ஸீட் பெல்ட் போட்டுக்கோம்மா” என்றார். அவள் ஸீட் பெல்ட் போட முடியாமல் தடுமாற, ``கொஞ்சம் இரு... நானே போட்டுவிடுறேன்'' என்று மெல்ல ஸீட் பெல்ட்டை மாட்டிவிட்டார். மாட்டும்போது அவர் கையின் நடுக்கமும் தொடுஉணர்வும் மேரியை சட்டென துணுக்குற வைத்தது. உடனடியாக, `ச்சே... அப்படி எல்லாம் இருக்காது... இதுவரை ஒரு பார்வை தப்பா பார்த்ததில்லை, ஒரு வழிசல் இல்லை. அவருக்கு என்ன வயசு,  நமக்கு ஏன் இவ்ளோ அல்பபுத்தியா இருக்கு' என்று தன்னையே கடிந்துகொண்டாள்.

ஒரு வாரம் சுமுகமாக ஓடியது. அடுத்து வந்த ஒரு நாள் அலுவலகத் தோழியின் திருமணத்துக்குச் சென்று திரும்பும்போது ``வா... என் கார்லயே ஆபீஸ் போயிடலாம்” என்று கோவிந்தராஜ் கூப்பிட, மேரி சற்று தயங்கி,  பின்னர் ஏறிக்கொண்டாள். கார் சிறிது தூரம் கடந்திருக்கும். ஸீட் பெல்ட் மாட்ட அவர் கையை கொண்டு வர சில விநாடிகளில் இம்முறை அவரின் தடுமாற்றம், அவர் கை பட்ட இடம் பட்டென மேரிக்கு புரிந்தது. ``கையை எடுங்க சார்... நானே மாட்டிக்கிறேன்” என வெடுக்கென சொல்லி அவரை பார்க்க, அவர் பார்வையை வேறு பக்கம் திருப்பி இருந்தார்.

மனதுக்குள் குறுகுறுப்பு மேரிக்கு... `என்ன ஆயிற்று இவருக்கு? எது இவரை இப்படி தூண்டியது? நாம் இவரிடம் ஏதேனும் சலுகை எடுத்துக்கொண்டிருக்கிறோமா? பேச்சில், உடையில் ஏதாவது சலனப்படுத்தி இருக்கிறோமா? இல்லை... ஏதாவது அட்வான்டேஜ் எடுத்துக்கொள்ள அனுமதித்திருக்கிறோமா? இந்த செக்‌ஷன் வந்து ஆறு வருடமாகிறது. ஒரு நாள்கூட ஒரு பார்வையோ, பேச்சில் வழிசலோ இருந்ததில்லை. இப்போது ஏன்?' - கேள்விகள் ஒன்றின் மேல் ஒன்றாக தோன்றி எல்லாவற்றையும் மனம் அசை போடத் தொடங்கியது. ஒன்றுமே புரியவில்லை. உள்ளுக்குள் மிகவும் சோர்ந்து போனாள்.

விறுவிறுவென தன் இருக்கை சென்று அமர்ந்தவள், மிகுந்த குழப்பத்துடன் கம்ப்யூட்டரை உயிர்ப்பித்தாள். கோவிந்தராஜ் அவர் இருக்கையில் அமைதியாக அமர்ந்தார். யாரையும் பார்க்க வில்லை. ஃபைலில் தன்னைப் புதைத்துக்கொண்டார்.

டீ பிரேக்கின் போது விமலா விடம் மட்டும் சொல்வோம் என்று நினைக்க, அவள் கணவன் சுந்தரி டம் இருந்து மொபைல் அழைப்பு. ``என்ன சரியான நேரத்துக்கு ஆபீஸ் போயிட்டியா?” என்று கேட்க, கணவனிடம் மெள்ள விஷயத்தைச் சொன்னாள். ``நீ இப்போ யார்கிட்டயும் எதுவும் பேசாத... ஆபீஸ் வேலையை மட்டும் பார்... வீட்டுக்கு வந்து பேசிக்கலாம்'' என்றான் சுந்தர்.

மாலை எப்போதும்போல அலுவலகம் முடிந்த பின், இவள் செல்வதற்கு அனுமதி கேட்க, தலையை நிமிர்த்தாமலே கோவிந்தராஜ் `சரி' என்றார். இருவருக்கும் இடையில் நூற்கண்டில் சிக்கிய முடிச்சு போல அடி நுனி புரியாமல் வார்த்தைகள் சிக்குண்டு கிடந்தன. சிந்தனை எங்கெங்கோ இருந்தாலும் பழக்கப் பட்ட பாதை அவளை வீட்டில் கொண்டு வந்து நிறுத்தியது.

சுந்தர் வேலை முடிந்து வந்தான். மனைவியின் நிலை புரிந்து, அவளுக்கு டீ போட்டுக் கொடுத்து, தானும் அவள் பக்கத்தில் உட்கார்ந்தான். ``மொட்டைமாடிக்குப் போகலாம் வா” என்று அழைத்தான். ``நான் என்ன செய்யறதுனே தெரியல” என்று அவளின் எல்லா குழப்பங்களையும், மன உளைச்சலையும் கொட்டிவிட்டு அவன் நெஞ்சில் சாய்ந்தாள்.

மெள்ள அவள் தலையைக் கோதிவிட்ட சுந்தர், “இது ஒரு பெரிய பிரச்னையே இல்லைடா. எங்கே போனாலும் இந்த மாதிரி  சிக்கல்களைச் சமாளித்துதான் ஆகணும். இதற்கு முன் உனக்கு இந்த அனுபவம் இல்லாததால் குழம்பிப் போயிட்ட... அவ்வளவு தான். உன் மேனேஜரும் மோசமான ஆள் இல்லை. இவ்வளவு நாட்கள் எதுவும் பேசியதில்லை... எந்த ஒரு எதிர்மறை விஷயமும் பார்த்ததில்லை. அப்படின்னா, ஏதோ அந்த நொடி சபலத்தில்தான் நடந்திருப்பார். அப்படி நடந்து கொண்டதற்கு அவரே அவரை நொந்துகொண்டுதான் இருப்பார்.

 நீ இப்போது நடந்துகொள்ளும் விதத்தில்தான் இந்தப் பிரச்னை ஒன்றுமில்லாமல் ஆவதும் பெரிதாவதும். நாளை அவரிடம், `சார், நேற்று நடந்தது ஏதோ அந்த நிமிட நிகழ்வு. திட்டமிட்டு எல்லாம் நீங்கள் செய்யலைன்னு எனக்கு தெரியும்... மறந்துடுவோம், அது பத்தி நான் யாரிடமும் எதுவும் சொல்ல மாட்டேன். ஆனால், இனி நாம இருவரும் மட்டும் சேர்ந்து வேலை செய்யவோ, பயணிக்கவோ வேண்டாம். நீங்களும் தேவையில்லாத குற்ற உணர்வுக்கு ஆளாக வேண்டாம். அப்படியே விட்டுடுவோம். எப்பவும் போல இருப்போம்' என்று சொல்லிவிடு.

பிரச்னையே இல்லாத வாழ்க்கை இல்லை மேரி. அடுத்த பிரச்னை வரும்போது என்ன செய்வது என்று அப்போது யோசிக்கலாம். இப்போது நல்லதே நினைப்போம். இப்போ இதைச் செய்...'' என்று அவளை அணைத்துக் கொண்டான். கோவிந்தராஜின் சலனத்துடன் சேர்த்து மேரியின் சலனத்துக்கும் தீர்வு கிடைத்திருந்தது!

  • கருத்துக்கள உறவுகள்

பிரச்னையே இல்லாத வாழ்க்கை இல்லை மேரி. அடுத்த பிரச்னை வரும்போது என்ன செய்வது என்று அப்போது யோசிக்கலாம். இப்போது நல்லதே நினைப்போம். இப்போ இதைச் செய்...'' என்று அவளை அணைத்துக் கொண்டான். கோவிந்தராஜின் சலனத்துடன் சேர்த்து மேரியின் சலனத்துக்கும் தீர்வு கிடைத்திருந்தது!

tw_blush:  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

சபலத்தை கட்டுப்படுத்திறது ரொம்ப கஸ்டமுங்கோ. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.