Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்றி கூறினார் டக்ளஸ்

Featured Replies


நன்றி கூறினார் டக்ளஸ்
 
 

article_1480326566-Douglas120.jpgஉயிர்நீத்த உறவுக்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு, தமிழ் மக்களுக்கு அனுமதி அளித்தமைக்காக, அரசாங்கத்துக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக, ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் செயலாளர் நாயகமும், எம்.பியுமான டக்ளஸ் தேவானந்தா சபையில் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில், நேற்றுத் திங்கட்கிழமை இடம்பெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் மற்றும் ஊடகத்துறை அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கியூபா நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மறைந்த, தோழர் பிடல் காஸ்ட்ரோவுக்கு தமிழ்மக்களின் சார்பில் அனுதாபத்தை தெரிவித்துகொள்கின்றேன். அத்துடன், உயிர்நீத்த தங்களுடைய உறவுகளை, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தினர். நினைவு கூர்வதற்கு அனுமதியளித்தமைக்காக அரசாங்கத்துக்கு நன்றியை தெரிவித்துகொள்கின்றேன்.

இதேவேளை, இலங்கை ஒலி மற்றும் ஒளிப்பரப்பு கூட்டுத்தாபங்களின் சேவைகளில் சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதங்கள் இசைக்கப்படுகின்றன. தேசிய கீததத்தை தமிழ் மொழியிலும் இசைப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

- See more at: http://www.tamilmirror.lk/187070/நன-ற-க-ற-ன-ர-டக-ளஸ-#sthash.PXVRy1aN.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

அடுத்ததாக நன்றி கூற கருணாம்மானை மேடைக்கு அழைக்கிறோம். tw_cry:

  • கருத்துக்கள உறவுகள்

கடந்தகாலங்களை யாரும் மறந்திருக்க மாட்டார்கள் ...... பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுறாக்கும் 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் சார்பில் அனுதாபம் தெரிவிக்க யார் இவருக்கு அனுமதி கொடுத்தது. இப்படியே சொல்லி இலங்கைத்தீவில் தமிழருக்கு தானே தலைவன் என்று தம்பட்டமடிக்கபோகிறாரு டக்கி. வேணுமானா தோழர் பிடலுக்கு தன்னுடைய கட்சியின் சார்பில் அனுதாபத்தை தெரிவிக்கலாமே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, Nathamuni said:

அடுத்ததாக நன்றி கூற கருணாம்மானை மேடைக்கு அழைக்கிறோம். tw_cry:

வெளிநாட்டிலையும் கொஞ்சப்பேர் இருக்கினம்.......ஐ மீன் அரசாங்கத்துக்கு நன்றி சொல்ல :cool:

  • கருத்துக்கள உறவுகள்

என்ன தான் சொன்னாலும்  அரசாங்கத்துக்கு நன்றி சொல்லத்தான் வேணும் 
மகிந்தா அரசு என்றால் இறுக்கமாகதான் இருந்து இருக்கும்  உள்ளூரில் இருந்து செய்தியாளர் சாமி ஜீ

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, முனிவர் ஜீ said:

என்ன தான் சொன்னாலும்  அரசாங்கத்துக்கு நன்றி சொல்லத்தான் வேணும் 
மகிந்தா அரசு என்றால் இறுக்கமாகதான் இருந்து இருக்கும்  உள்ளூரில் இருந்து செய்தியாளர் சாமி ஜீ

சம் சும்  கோவிக்கப்போயினம்...

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விசுகு said:

சம் சும்  கோவிக்கப்போயினம்...

அவர்கள் அறிக்கை வரும் வெயிட் அண்ணை  

  • கருத்துக்கள உறவுகள்
Just now, முனிவர் ஜீ said:

அவர்கள் அறிக்கை வரும் வெயிட் அண்ணை  

சரி  சரி

யார் குத்தினா என்ன?

அரிசி தானே எமக்கு தேவை....

6 hours ago, நவீனன் said:



நன்றி கூறினார் டக்ளஸ்
 
 

article_1480326566-Douglas120.jpgஉயிர்நீத்த உறவுக்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு, தமிழ் மக்களுக்கு அனுமதி அளித்தமைக்காக, அரசாங்கத்துக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக, ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் செயலாளர் நாயகமும், எம்.பியுமான டக்ளஸ் தேவானந்தா சபையில் தெரிவித்தார்.

மாமா ரொம்ப கவனமாக வாசிக்கிறார்:

புலிகள்

மாவீரர் என்பதை தவிர்த்து

உயிர் நீத்த உறவுகள் என்கிறார்

பாவம்

சிங்களவன் மொக்கன் என்று இன்னும் நினைத்திருக்கிறார் போலும்

அதுக்கு கார்த்திகை 27 எதுக்கடா என்று எவனும் கேட்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, முனிவர் ஜீ said:

என்ன தான் சொன்னாலும்  அரசாங்கத்துக்கு நன்றி சொல்லத்தான் வேணும் 
மகிந்தா அரசு என்றால் இறுக்கமாகதான் இருந்து இருக்கும்  உள்ளூரில் இருந்து செய்தியாளர் சாமி ஜீ

நான் அப்படி பார்க்கவில்லை, முனிவர்.
1958, 77, 83 மாதிரி, எல்லா கொடுமையான வேலைகளையும் செய்து விட்டு, மீடியாக்களின் வாய்களை பூட்டி, உருத்திராட்ச்சை மாலை அணிந்த பூனை மாதிரி, (ஜே ஆர் போன்ற ) இனியும் இருக்க முடியாது.

மட்டக்களப்பு தூசணப் பிக்கர் அடாவடி, அடுத்த நிமிசம் உலகம் முழுவதும் மின்னியதும், இனவாதம் பேசினால் சிறை என்று அறிவித்துக் கொண்டே, ஞானசேர பிக்கரின் தலைமையில் நாலு பேரை கூப்பிட்டு, நிலைமையினை விளக்கி, ஒரு எட்டு போய், தூசனப் பிக்கரிடமும் காதில், நம்ம சிக்கலைப் போட்டு வையுங்கோ என்று நீதி அமைச்சர் சொல்லுற நிலைமை.

இம்முறை மாவீரர் நிகழ்வுக்கான அனுமதி, கொழும்பின் முடிவல்ல. அதன் மீதான வெளி அழுத்தத்தின் விளைவு என்பது எனது கருத்து.

இந்த அழுத்தம் காரணமாகவே, டொனால்ட் ஐயாவுக்கு, கடதாசி போடப் போகிறேன் என்கிறார் மைத்திரி.

இவர்கள் குழப்பத்துக்கு இன்னுமோர் காரணமும் உண்டு: விக்கியர்.

அவர், வடகிழக்கு மக்களிடையே, சுஜ நிர்ணய உரிமை குறித்த தேர்தல் ஒன்றை கோரும் நிலைமையினை உண்டாக்க கூடாது என்பதே முக்கியமாக உள்ளது அவர்களுக்கு.

அவ்வாறு கோரினால் அதை நிராகரிக்க முடியாத, தார்மீக காரணிகள் உருவாக கூடாது என்பதே அவர்கள் முன் உள்ள சிக்கல்.

ஒன்று உரிமைகளைக் கொடு, அது முடியாவிடில் தமது நிலை எப்படி இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கும் சுஜ நிர்ணய உரிமை கொடு. இவை இரண்டையுமே மறுத்துக் கொண்டே காலம் தள்ள முடியாது. உலக ஒழுங்கு அவ்வாறு இல்லை. எக்கேடும் கெட்டுப் போங்கள் என்று விடப்படட சோமாலியா, ஜவேரி கோரஸ்ட் போன்ற, பொருளாதார, கேந்திர முக்கியத்துவம் இல்லாத நாடுகள் போல், இலங்கைத்தீவு இல்லை.

இதனிடையே மகிந்தரையும் சீனாவினூடு மடக்க முயற்ச்சி நடை பெறுகின்றது.

இங்கே முக்கியமான விடயம் என்னவெனில், அமெரிக்காவோ, சீனாவோ, இந்தியாவோ அல்லது கொழும்போ, அனைவருக்கும் அமைதியான தீவே தேவை. 

அந்த அமைதியை கொண்டு வர, தென் பகுதில் இருந்து வரக் கூடிய சிங்கள அரசியல் எதிர்ப்பினை வெள்ளை வான் கொண்டு அடக்கக் கூடிய, எதிர்மறை ஆளான கோத்தபாயவிடம் கூட பதவி ஆசை காண்பிக்கப் பட்டுள்ளது. 

அதேவேளை, மனித உரிமை, யுத்தக் குற்ற சிக்கலில் இருக்கும் அவரோ, அதிலிருந்து தப்பிக்க, எந்த டீலுக்கும் போகாத தயாராக இருப்பார்.

ஆக... தீர்வு ஒன்றுக்கான வெளி அழுத்தம் தீவிரமாக உள்ளது என கூற முடியும். 

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Nathamuni said:

இங்கே முக்கியமான விடயம் என்னவெனில், அமெரிக்காவோ, சீனாவோ, இந்தியாவோ அல்லது கொழும்போ, அனைவருக்கும் அமைதியான தீவே தேவை.


தோழர் ..மற்ற நாடுகள் கூட ஒக்கெ.. ஏதோ குறைந்த பட்ச மனித நேயத்தோடு செயல்படுவார்கள் என்று நம்புவம்..  இந்த கிந்திய திருட்டு பயல்களை மட்டும் நம்மவே கூடாது ... எரியற வீட்டில் கிடைத்தவரை லாபம் என்று போக கூடிய பயல்கள் ..!!

  • கருத்துக்கள உறவுகள்
Just now, புரட்சிகர தமிழ்தேசியன் said:


தோழர் ..மற்ற நாடுகள் கூட ஒக்கெ.. ஏதோ குறைந்த பட்ச மனித நேயத்தோடு செயல்படுவார்கள் என்று நம்புவம்..  இந்த கிந்திய திருட்டு பயல்களை மட்டும் நம்மவே கூடாது ... எரியற வீட்டில் கிடைத்தவரை லாபம் என்று போக கூடிய பயல்கள் ..!!

எரியிற வீட்டில்....

அனுமார் காலத்திலிருந்தே அதுதானே கதை.. :grin: 

  • கருத்துக்கள உறவுகள்

 சர்வதேசத்துக்கு தாங்கள் நல்லவர்கள், இதேபோல் சகல பிரச்சனைகளையும் படிப்படியாக தீர்ப்போம், நீதி விசாரணையையும் நாமே நடத்தி தண்டனை கொடுப்போம், எங்களிடமே எல்லாவற்றயும் கையளியுங்கள் என்ற நிருபிப்பு. அதுவும் நடந்து விட்டால் பழைய குருடி கதைதான். உண்மையிலேயே இவர்கள் தமிழர் பிரச்னையை தீர்க்க எண்ணினால் முதலில் செய்ய வேண்டியது அரசியல் கைதிகள் யாவரையும் விடுதலை செய்வதே. எதையும் செய்யாமல் தாம் மட்டும் தப்பிக்க முயற்சி செய்வது, எமை மீண்டும்  அடக்கி ஆள்வதற்கும், சர்வதேசத்தை ஏமாற்றுவதற்குமே. இருந்தாலும் இந்த அரசியல் கைதிகள் விவகாரத்திற்கு பின்னால் ஏதோ ஒரு பெரிய தந்திரம் வைத்திருக்கிறான் சிங்களவன். இவர்களின் விடுதலையை  காட்டி போர்க்குற்ற விசாரணையை கைவிட மக்களை தூண்டவும் கூடும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, முனிவர் ஜீ said:

என்ன தான் சொன்னாலும்  அரசாங்கத்துக்கு நன்றி சொல்லத்தான் வேணும் 
மகிந்தா அரசு என்றால் இறுக்கமாகதான் இருந்து இருக்கும்  உள்ளூரில் இருந்து செய்தியாளர் சாமி ஜீ

சிங்களவர்களுக்குள் இருக்கும் அனுபவங்கள் தான் இன்று நடைமுறையில் இருக்கின்றது.
இறுக்கினால் வெடிக்கும் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.
வெடித்தால் கூத்தமைப்பாலேயே சிங்களத்தை காப்பாற்ற முடியாது என்பதும் தெட்டத்தெளிவாக சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியும்.

ஈழத்தில் நடந்து முடிந்த மாவீரர் தினம் உலகிற்கு ஒரு செய்தியை தெரிவித்திருக்கின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.