Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை பிரச்னை குறித்து முதல்வர் கருணாநிதி எழுதிய கடிதத்திற்குபதிலளித்து பிரதமர் மன்மோகன் சிங் கடிதம்

Featured Replies

இலங்கை பிரச்னை குறித்து முதல்வர் கருணாநிதி எழுதிய கடிதத்திற்குபதிலளித்து பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் அனுப்பினார்.இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய அதிக ஆதிகாரங்களுடன் கூடிய அதிகாரப் பகிர்வுள்ள தீர்வு திட்டமே இனப் பிரச்னையை தீர்ப்பதற்கு தேவையானது. அதை அமல்படுத்த வேண்டிய தருணமும் இதுதான்' என இலங்கையிடம் இந்தியா தெரிவித்துள்ளது. மேலும், "இலங்கை அரசு படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடக்கும் தாக்குதல்கள், எதிர் தாக்குதல்கள் தொடர்பாக இந்திய கவனித்து வருகிறது. இந்த மோதலில் அதிகளவில் தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதிகாரப் பகிர்வு தொடர்பான தீர்வு இலங்கையில் தோன்றியுள்ள எதிர்ப்பு தொடர்பாக இந்தியா கவலை கொண்டுள்ளது,' என்று இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக தமிழக முதல்வர் கருணாநிதி, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதினார். அதற்கு பிரதமர் மன்மோகன் சிங் பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 7 ம் தேதி தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எனக்கு அனுப்பி வைத்திருந்தீர்கள். அதன் மூலம் தமிழக சட்டசபையின் உணர்வுகளை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. இலங்கையில் பெருகிவரும் வன்முறை குறித்து தமிழ்நாடு சட்டசபை கொண்டுள்ள கவலையில் மத்திய அரசு பங்கு கொள்கிறது என்பதை நான் ஏற்கனவே அனுப்பிய கடிதத்தின் மூலம் அறிவீர்கள். பிரனாப் முகர்ஜி இலங்கை சென்றிருந்தபோது, இலங்கை குடியரசு தலைவர் மகிந்தா ராஜபக்சேயிடம் இந்த உணர்வுகளையும், கவலைகளையும் கூறியுள்ளார். இலங்கையில் வாழும் தமிழ்குடி மக்களின் சட்டப் பூர்வமான உரிமைகளை உள்ளடக்கிய அரசியல் தீர்வு அமைதியான சூழலில் பேச்சு வார்த்தைகள் மூலம் உருவாக்கப்படுவதற்கு நாம் தொடர்ந்து துணை நிற்போம்.

இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் தமது பதில் கடித்தத்தில் கூறியுள்ளார்

தமிழீழம் கிடைத்தபின்பும் இப்படியே தமிழக முதல்வரும், இந்தியப் பிரதமரும் ஆளுக்காள் லவ் லெட்டர் (காதல் கடிதம்) அனுப்பிக்கொண்டு இருப்பார்கள். உருப்படியான விடயம் ஒன்றும் நடக்காது. இந்தச்செய்திகளால் தமிழருக்கு நன்மை எதுவும் இல்லை. நம்மட பாட்ட நாமே பார்ப்பதுதான் நமக்கு புத்திசாலித்தனமானது! உந்த ல்வ் லெட்டர்களால் பிரயோசனம் எதுவும் இல்லை.

அவர என்ன எழுதினாரோ தெரியாது. அனால் மத்திய அரசு அடிக்கடி ஒன்று பட்ட இலங்கைகுள் என்று சொல்வதை முதல் நிறுத்த வேண்டும். அதை தமிழக கட்சிகள் கண்டிக்க வேண்டும்

quote name='மாப்பிளை' date='Feb 2 2007, 11:50 PM' post='255636']

தமிழீழம் கிடைத்தபின்பும் இப்படியே தமிழக முதல்வரும், இந்தியப் பிரதமரும் ஆளுக்காள் லவ் லெட்டர் (காதல் கடிதம்) அனுப்பிக்கொண்டு இருப்பார்கள். உருப்படியான விடயம் ஒன்றும் நடக்காது. இந்தச்செய்திகளால் தமிழருக்கு நன்மை எதுவும் இல்லை. நம்மட பாட்ட நாமே பார்ப்பதுதான் நமக்கு புத்திசாலித்தனமானது! உந்த ல்வ் லெட்டர்களால் பிரயோசனம் எதுவும் இல்லை.

சுதந்திர தமிழீழம் தான் தீர்வு என்று ஒரு தீர்மானம் தமிழக சட்டசபையில் நிறைவேறும் காலம் வரவேண்டும். அதை செய்யக் கூடிய துணிவும் எழுச்சியும் தமிழ்நாட்டில் இன்னமும் வரவில்லை.

அப்படிப்பட்ட தீர்மானத்திற்கு மத்திய அரசு ஆரம்பத்தில் எதிர்ப்புக் காட்டும் என்பதில் சந்தேகம் இல்லை. பின்னர் படிப்படியாக அந்த நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்ளும் நிலை மத்திய அரசிற்கு வரவேண்டும். அதாவது சுதந்திர தமிழீழம் கிடைத்தால் எங்களுக்கு ஆட்சேபனையில்லை என்ற ஒரு நிலைப்பாட்டை மத்திய அரசு எடுக்கும் நிலைக்கு வரும் பொழுது எமது வெளியக சுயநிர்ணய உரிமைப் போராட்டத்திற்கான சர்வதேச அங்கீகாரத்தின் முதலாவது படியைக் கடந்திருப்போம்.

ஆனால் இன்றுள்ள நிலை? ஒரே ஒரு முறை கருணாநிதி தமிழீழம் கிடைத்தால் ஆட்சேபனையில்லை மகிழ்வடைவோம் என்றதோடு இருக்கிறது. தமிழகத்தின் எழுச்சிக்கு வேகத்தடை போட பல முயற்சிகள் அரங்கேறுவதை அண்மைக் காலங்களில் இந்தியாவில் இருந்து வரும் செய்திகள் சொல்கிறது. இதில் இருந்து நாம் தெளிவாகப் புரிய வேண்டியது ஒன்றே. பயணிக்க வெகுதூரம் இருக்கிறது. இந்த நீண்ட நெருக்கடி மிக்க பயணத்திற்கு நாம் தயாராக வேண்டும்.

''இந்தியா என்பது பல்வேறு தேசிய இனங்களின் சிறைச்சாலை'' என்பதை நான் ஏற்றுகொள்ளவில்லையாயினும் தமிழீழம் என்பது இந்தியாவின் சொந்த அரசியல் கட்டுமாணத்தை தகர்த்து எறிந்துவிடக்கூடியது. எனவே எமது தனிநாட்டுக் கோரிக்கைக்கு தமிழ் நாட்டிலோ இந்தியாவிலோ அரச மட்டத்தில் ஆதரவு இருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

''இந்தியா என்பது பல்வேறு தேசிய இனங்களின் சிறைச்சாலை'' என்பதை நான் ஏற்றுகொள்ளவில்லையாயினும் தமிழீழம் என்பது இந்தியாவின் சொந்த அரசியல் கட்டுமாணத்தை தகர்த்து எறிந்துவிடக்கூடியது. எனவே எமது தனிநாட்டுக் கோரிக்கைக்கு தமிழ் நாட்டிலோ இந்தியாவிலோ அரச மட்டத்தில் ஆதரவு இருக்காது.

உம்மிடமும் இல்லை என்று தெளிவாகச் சொல்லிக் கருத்தை வையும்!

சும்மா இருந்தாலும் திட்டுரீங்க சரி உதவலாமே என்று நினைத்தாலும் நீ யாருய்யா எங்கள் விசயத்தில் தலையிட என்று அடிக்க வருகிறீர்கள் என்ன செய்வது என்று குழம்போய் உள்ளனர் தமிழ் நாட்டினர்.

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா இருந்தாலும் திட்டுரீங்க சரி உதவலாமே என்று நினைத்தாலும் நீ யாருய்யா எங்கள் விசயத்தில் தலையிட என்று அடிக்க வருகிறீர்கள் என்ன செய்வது என்று குழம்போய் உள்ளனர் தமிழ் நாட்டினர்.

உதவி செய்யிறதெண்டால் வந்து உதவி செய்ய வேணும். வந்து உதவி கேட்டவனிண்ட களுத்தை நெரிக்கக் கூடாது..

இந்தியத்தமிழர் இப்போது செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான். தங்களுக்கு ஈழத்தமிழரின் மேலுள்ள பற்றுதலை பெரிய அளவில் கவன ஈர்ப்புப் போராட்டங்கள் மற்றும் ஊடகங்களின் மூலம் வெளிப்படுத்த வேண்டும். அடுத்த தேர்தலில் ஈழத்தமிழரைக் காக்கும் கட்சியே வெல்லும் என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும். மீதியெல்லாம் தானாக நடக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் கிடைத்தபின்பும் இப்படியே தமிழக முதல்வரும், இந்தியப் பிரதமரும் ஆளுக்காள் லவ் லெட்டர் (காதல் கடிதம்) அனுப்பிக்கொண்டு இருப்பார்கள். உருப்படியான விடயம் ஒன்றும் நடக்காது. இந்தச்செய்திகளால் தமிழருக்கு நன்மை எதுவும் இல்லை. நம்மட பாட்ட நாமே பார்ப்பதுதான் நமக்கு புத்திசாலித்தனமானது! உந்த ல்வ் லெட்டர்களால் பிரயோசனம் எதுவும் இல்லை.

சுதந்திர தமிழீழம் தான் தீர்வு என்று ஒரு தீர்மானம் தமிழக சட்டசபையில் நிறைவேறும் காலம் வரவேண்டும். அதை செய்யக் கூடிய துணிவும் எழுச்சியும் தமிழ்நாட்டில் இன்னமும் வரவில்லை.

அப்படிப்பட்ட தீர்மானத்திற்கு மத்திய அரசு ஆரம்பத்தில் எதிர்ப்புக் காட்டும் என்பதில் சந்தேகம் இல்லை. பின்னர் படிப்படியாக அந்த நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்ளும் நிலை மத்திய அரசிற்கு வரவேண்டும். அதாவது சுதந்திர தமிழீழம் கிடைத்தால் எங்களுக்கு ஆட்சேபனையில்லை என்ற ஒரு நிலைப்பாட்டை மத்திய அரசு எடுக்கும் நிலைக்கு வரும் பொழுது எமது வெளியக சுயநிர்ணய உரிமைப் போராட்டத்திற்கான சர்வதேச அங்கீகாரத்தின் முதலாவது படியைக் கடந்திருப்போம்.

ஆனால் இன்றுள்ள நிலை? ஒரே ஒரு முறை கருணாநிதி தமிழீழம் கிடைத்தால் ஆட்சேபனையில்லை மகிழ்வடைவோம் என்றதோடு இருக்கிறது. தமிழகத்தின் எழுச்சிக்கு வேகத்தடை போட பல முயற்சிகள் அரங்கேறுவதை அண்மைக் காலங்களில் இந்தியாவில் இருந்து வரும் செய்திகள் சொல்கிறது. இதில் இருந்து நாம் தெளிவாகப் புரிய வேண்டியது ஒன்றே. பயணிக்க வெகுதூரம் இருக்கிறது. இந்த நீண்ட நெருக்கடி மிக்க பயணத்திற்கு நாம் தயாராக வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா இருந்தாலும் திட்டுரீங்க சரி உதவலாமே என்று நினைத்தாலும் நீ யாருய்யா எங்கள் விசயத்தில் தலையிட என்று அடிக்க வருகிறீர்கள் என்ன செய்வது என்று குழம்போய் உள்ளனர் தமிழ் நாட்டினர்.

தமிழக மக்களுக்கு ஈழத்தமிழரின் விடயங்கள் முன்பு மூடிமறைக்கபட்டன

இன்ரர்நெட்டின் ஆதிக்கம் அதை தகர்த்துள்ளதை காணமுடிகின்றது.

சரியான தகவல் தட்டுப்பாட்டினால்தான் தமிழகமக்கள் குழம்பிப்போய் உள்ளனர்.

ஆனால் எல்லாம் அறிந்த நீர் குழம்பமடையாதீர்.

அதனால் ஒட்டு மொத்த இனப்பிரச்சனையும் குழம்ப வாய்ப்புள்ளது!

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா இருந்தாலும் திட்டுரீங்க சரி உதவலாமே என்று நினைத்தாலும் நீ யாருய்யா எங்கள் விசயத்தில் தலையிட என்று அடிக்க வருகிறீர்கள் என்ன செய்வது என்று குழம்போய் உள்ளனர் தமிழ் நாட்டினர்.

இப்போது அதிக அளவில் அங்கே மழை பெய்து எல்லா குளங்களும்

நீர் நிறைந்து இருக்கும் போது. சற்றறும் சிந்திக்காமல் ஏன் தமிழக மக்கள் குளம்போகிறார்கள்???

அப்படி அவர்கள் குளம் போவதை தடுக்க முடியாதா???

ஈழத்தமிழ் மக்கள் இன்று படும் கஷ்டங்களுக்கு இந்திய அரசும் பல வழிகளில் காரணமாயிருந்திருக்கிறது என்பதை எவரும் மறுக்கமுடியாது. ஈழத்தமிழர் தன்மானத்தோடும் நியாயமான உரிமைகளுடனும் வாழவேண்டும் என்று இந்தியா எண்ணிச் செயற்படுவதிலும் பார்க்க ஈழத் தமிழருக்குக் கிடைக்கப்போகும்(?) தீர்வுத் திட்டமெதுவும் எதிர்காலத்தில் இந்திய தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் ஏற்படுத்துவதாக இருந்துவிடக்கூடாது என்பதிலேயே இந்தியர்கள் கூடிய கவனம் செலுத்துகிறார்கள்.

"அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய அதிக ஆதிகாரங்களுடன் கூடிய அதிகாரப் பகிர்வுள்ள தீர்வு திட்டமே இனப் பிரச்னையை தீர்ப்பதற்கு தேவையானது"

மேற்குறிப்பிட்ட கூற்றில் உள்ள "அனைவராலும்" என்ற பதத்தில் கூறப்பட்ட அனைவரும் என்பது எவரெவர், "அதிக அதிகாரங்கள்" என்று கூறப்படுவதில் உள்ளபடி அதிகம் என்பது எவ்வளவு? இதற்கு நிச்சயமாக ஒவ்வொருவரிடமும் தனித்தனியான வேறுபட்ட வரைவிலக்கணங்களுண்டு. இதுபோன்ற அறிக்கையொன்றின் முக்கியத்துவத்தை அரசியல் நுணுக்கங்களுடன் நோக்கிடின் இது உண்மையில் முக்கியமற்ற கீழ்மட்ட அறிக்கை மட்டுமே. இதுபோன்ற அறிக்கையை ஒரு 10 வயது குழந்தையும் கூட மிக இலாவகமாச் சொல்லும். இவ்வாறான அறிக்கைகளின் நோக்கம் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு இந்தியரின் விருப்பத்துக்கான வெளிப்பாடு எனக் கருதமுடியாது. இது உண்மையில் பிரச்சினை தீர்க்கப்படும்போது இந்தியாவையும் அனுசரித்து நடக்கவேண்டும் என அனைத்துத் தரப்பினருக்கும் நினைவூட்டுவதற்காக வெளியிடப்படும் அறிக்கை.

அதுவும் தமிழ்நாடு முதல்வர் கருணாநிதியின் கடிதத்துக்கு இந்தியப்பிரதமரால் எழுதப்பட்ட பதிலாக இருப்பதால் இதுபோன்ற விளக்கங்களை கருணாநிதி கடிதம் எழுதித்தான் பெறவேண்டும் என்பதில்லை. ஆனால் அதைக் கடிதத்தில் சொல்ல வேண்டிய தேவையொன்று இருந்திருக்கிறது. கருணாநிதி ஏற்கனவே ஈழத்தமிழர் பிரச்சினைபற்றி மன்மோகன் சிங்குடன் பலதடவைகள் நேரடியாகவும் தொலைபேசியிலும் கதைத்துள்ளார் என்பதையும் நாம் இங்கு நினைவு கூருதல் பொருந்தும்.

ஈழத்தமிழருக்காக அமையக்கூடிய ஒரு தீர்வுத்திட்டம் நிச்சயமாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்குமா?

அதை சிங்கள இனவாதக்கட்சிகளும் அரச அடிவருடித் தமிழ்குழுக்களும் முஸ்லிம் கட்சிகளும் ஏற்றுக்கொள்ளுமா?

விடுதலைப் புலிகள் ஏற்பார்களா? தீர்வுக்கோடுகள் சந்திக்கும் புள்ளி எங்கே இருக்கிறது?

நடைமுறைக்குச் சாத்தியமில்லாத ஒன்றைச் சொல்வதில் தங்களைத்தாங்களே திருப்திப்படுத்திக் கொள்கிறார்கள் போலும்!

Edited by Norwegian

. இலங்கையில் வாழும் தமிழ்குடி மக்களின் சட்டப் பூர்வமான உரிமைகளை உள்ளடக்கிய அரசியல் தீர்வு அமைதியான சூழலில் பேச்சு வார்த்தைகள் மூலம் உருவாக்கப்படுவதற்கு நாம் தொடர்ந்து துணை நிற்போம்.

இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் தமது பதில் கடித்தத்தில் கூறியுள்ளார்

அப்படி எண்டால் தமிழர்கள் தனிநாடு பெற்றுக்கொண்டால் அதுவும் சட்டபூர்வமான உரிமை எண்று எடுத்து கொள்ளலாமா..? அதுவும் அரசியல் தீர்வுதானே..??

''இந்தியா என்பது பல்வேறு தேசிய இனங்களின் சிறைச்சாலை'' என்பதை நான் ஏற்றுகொள்ளவில்லையாயினும் தமிழீழம் என்பது இந்தியாவின் சொந்த அரசியல் கட்டுமாணத்தை தகர்த்து எறிந்துவிடக்கூடியது. எனவே எமது தனிநாட்டுக் கோரிக்கைக்கு தமிழ் நாட்டிலோ இந்தியாவிலோ அரச மட்டத்தில் ஆதரவு இருக்காது.

அப்படியானால் எந்த விதிமுறையில் மேற்க்கு வங்காளைத்தை வைத்துக்கொண்ட இந்தியா, வங்காளதேசத்துக்கு பாக்கிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் வாங்கிக்கொடுத்தது..?? இல்லை சீனாவின் துன்புறுதலுக்குள் இருக்கும் திபத்தை எப்படி ஆதரிக்கிறது அதுவும் அருணாச்சல் பிரதேசத்தை தானும் வைத்துக்கொண்டு....??

இந்தியா மட்டும் அல்ல எவருக்கும் தங்களின் நலன்களுக்கு தீங்கு வராது எண்டால் அவர்களின் நலன்களுக்கு வரும்படி எண்றால் நண்றாகவே உதவி செய்வார்கள்..

அப்படித்தான் வரதராசபெருமாள் தமிழீழ இராணுவத்தை உருவாக்க இந்தியா உதவியது....!

ஈழத் தமிழர் விடயத்தில் நடக்கச் சாத்தியமில்லை என்று பார்த்தாலும், ஒருவேளை தமிழீழத்தைச் சிங்களவனே முன்வந்து தமிழனுக்குக் கொடுக்க சம்மதித்தாலும் அண்டை நாடான இந்தியா அதை வெறுமனே பார்த்துக்கொண்டிராது. வங்காளிகளுக்குத் தனிநாடு, தலை லாமாவை திபெத் நாட்டின் தலைவராக அங்கிகாரம் செய்தது இவை யாவும் எதிரி நாடுகளான பாகிஸ்த்தானையும் சீனாவையும் பலவீனப்படுத்துவதற்காக செய்யப்பட்ட தந்திரோபாயங்களேயன்றி வேறொன்றுமில்லை. அயல் நாடுகளின் பிரச்சினைகளையும் சிக்கல்களையும் தனக்கு இலாபம் தேடும் நோக்கில் கையாழும் உத்திதான் இது. முன்னர் இலங்கைக்குச் சென்ற இந்தியச் சமாதானப் படையின் நோக்கமும் அதுவே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.