Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சங்கானை வாள்வெட்டில் எட்டுப் பேர் படுகாயம்!

Featured Replies

சங்கானை வாள்வெட்டில் எட்டுப் பேர் படுகாயம்!
2017-01-06 09:53:05

ரி.விரூஷன்


21630_knife.blood_.jpgயாழ். சுழி­புரம் பகு­தியில் இடம்­பெற்ற வாள்­வெட்டு சம்­ப­வத்தில் எண்மர் காய­ம­டைந்து யாழ்.போதனா வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளனர்.

 

நேற்று முன்­தினம் மாலை இடம்­பெற்ற இந்தச் சம்­பவம் தொடர்பில் சந்­தே­கத்தின் பேரில் ஒரு­வரைக் கைது செய்­துள்­ள­துடன் ஏனை­ய­வர்­களைக் கைது செய்ய நட­வ­டிக்கை எடுத்­துள்­ள­தாக வட்­டுக்­கோட்டை பொலிஸார் தெரி­வித்­தனர்.


யாழ்.சுழி­புரம் காட்­டுப்­புரம் பகு­தியில்  இரு­கு­ழுக்­க­ளி­டையே இடம்­பெற்ற வாள்­வெட்டு மற்றும் தாக்­குதல் சம்­பவம் கார­ண­மா­கவே எண்மர் படு­கா­ய­ம­டைந்த நிலையில் சிகிச்­சை­க­ளுக்­காக யாழ். போதனா வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டனர்.

 

இந்தச் சம்­ப­வத்தில் 19 தொடக்கம் 57 வயது வரை­யான எண்­மரே காய­ம­டைந்­தனர். படு­கா­ய­ம­டைந்­த­வர்கள் சங்­கானை ஆதார வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டு பின்னர் மேல­திக சிகிச்­சைக்­காக நேற்று முன்­தினம் இரவு 8 மணி­ய­ளவில் யாழ்.போதனா வைத்­தி­ய­சா­லைக்கு மாற்­றப்­பட்­டுள்­ளனர்.

 

இது தொடர்பில் வட்­டுக்­கோட்டை பொலிஸில் முறை­யிட்­ட­தனை தொடர்ந்து பொலிஸார் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். இந்­நி­லை­யிலே நேற்றுக் காலை சந்­தே­கத்தின் பேரில் ஒரு­வரை கைது செய்­துள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

 

இந்த நப­ரிடம் மேல­திக விசா­ரணை மேற்­கொண்டு ஏனை­ய­வர்­களை கைது செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வரு­வ­தா­கவும் பொலிஸார் தெரிவித்தனர்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=news&news=21630#sthash.h5TVWz1D.dpuf

புத்தனை தினமும் கொல்லுபவ்ர்களுக்கு இந்த செய்தி சாதாரணம் தமிழர்களாகிய எங்களுக்கு பாரதூரமான விடயம் காசாப்புகடைகாரனிடம் சட்டம் ஒழுங்கை பாதுக்காக்க சொல்லி வடகிழக்கு எங்கும் விட்டுள்ளார்கள் எப்படி அவர்களால் அடக்கமுடியும் ?

இந்த செய்தியைப் பாத்தவுடனேயே யோசிச்சன் - நாலுபேர் சந்தோசத்தில் துள்ளிக் குதிப்பினம் எண்டு.

எதோ தாங்கள் எல்லாம் புத்தனின் வாரிசு போல நல்லவர்கள் என்றும் கதை அளப்பார்கள் + எதோ இங்கு மட்டுமே கலாச்சாரம் சீர்கெடுகுது, கொலை, கொள்ளை எல்லாம் நடக்குது எண்டு குளறுவார்கள் என்றும் நினைச்சேன் - எனது நினைப்பில் தப்பே இல்லை.
 

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, ஜீவன் சிவா said:

இந்த செய்தியைப் பாத்தவுடனேயே யோசிச்சன் - நாலுபேர் சந்தோசத்தில் துள்ளிக் குதிப்பினம் எண்டு.

எதோ தாங்கள் எல்லாம் புத்தனின் வாரிசு போல நல்லவர்கள் என்றும் கதை அளப்பார்கள் + எதோ இங்கு மட்டுமே கலாச்சாரம் சீர்கெடுகுது, கொலை, கொள்ளை எல்லாம் நடக்குது எண்டு குளறுவார்கள் என்றும் நினைச்சேன் - எனது நினைப்பில் தப்பே இல்லை.
 

சிறிலங்கா அரச பாதுகாப்பு பிரிவால் இவற்றை அடக்க முடியாது என்று எண்ணுகிறீர்களா?

6 minutes ago, MEERA said:

சிறிலங்கா அரச பாதுகாப்பு பிரிவால் இவற்றை அடக்க முடியாது என்று எண்ணுகிறீர்களா?

பாரிஸில் இருந்து ஒஸ்லோவுக்கு வந்து வாள்வெட்டு நடத்தியவர்களை பிரான்சும் அடக்கவில்லை, நோர்வேயும் அடக்கவில்லை. நடந்த பின்னர்தான் முழித்தார்கள். அப்படித்தான் இங்கேயும். கள்ளர்கள் எங்கேயும் இருப்பார்கள், கொலைஞர்களும் அப்படித்தான் - அதற்கு இலங்கை ஒன்றும் விதி விலக்கில்லை.

முன்னொரு காலத்தில் இருந்தது போல சந்தேகம் வந்தால் போஸ்டில் கட்ட முடியாது இப்போது - எத்தனை அப்பாவிகள் இறந்திருப்பார்கள். இப்போது சட்டம் ஒழுங்கு இங்கு உள்ளது. அதற்கு என்று ஒரு வழிமுறையும் இருக்கு. வெட்டினோம் கவிழ்த்தோம் என்று இருக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ஜீவன் சிவா said:

பாரிஸில் இருந்து ஒஸ்லோவுக்கு வந்து வாள்வெட்டு நடத்தியவர்களை பிரான்சும் அடக்கவில்லை, நோர்வேயும் அடக்கவில்லை. நடந்த பின்னர்தான் முழித்தார்கள். அப்படித்தான் இங்கேயும். கள்ளர்கள் எங்கேயும் இருப்பார்கள், கொலைஞர்களும் அப்படித்தான் - அதற்கு இலங்கை ஒன்றும் விதி விலக்கில்லை.

முன்னொரு காலத்தில் இருந்தது போல சந்தேகம் வந்தால் போஸ்டில் கட்ட முடியாது இப்போது - எத்தனை அப்பாவிகள் இறந்திருப்பார்கள். இப்போது சட்டம் ஒழுங்கு இங்கு உள்ளது. அதற்கு என்று ஒரு வழிமுறையும் இருக்கு. வெட்டினோம் கவிழ்த்தோம் என்று இருக்க முடியாது.

ஒஸ்லோவிற்கு மாதாந்தம் வந்து வெட்டினார்களா? 

நீங்கள் கூறும் சட்டமும் வழிமுறைகளும் இவர்களை லஞ்சம் வாங்கி ஊக்குவிக்கிறார்கள் என்று தெரியாதா? வாள் வெட்டு கோஸ்டிகளால் அப்பாவிகளை இறக்கவில்லையா?

இங்கு போஸ்டில் கட்ட வேண்டும் என்று யாருமே எழுதாத போது நீங்கள் எழுதியதில் இருந்து தெரிகிறது உங்கள் ஆழ்மனதில் உள்ளது. 

கள்ளர்கள் எங்கேயும் இருப்பார்கள், கொலைஞர்களும் அப்படித்தான் - அதற்கு இலங்கை ஒன்றும் விதி விலக்கில்லை.

2 hours ago, ஜீவன் சிவா said:

இந்த செய்தியைப் பாத்தவுடனேயே யோசிச்சன் - நாலுபேர் சந்தோசத்தில் துள்ளிக் குதிப்பினம் எண்டு.

எதோ தாங்கள் எல்லாம் புத்தனின் வாரிசு போல நல்லவர்கள் என்றும் கதை அளப்பார்கள் + எதோ இங்கு மட்டுமே கலாச்சாரம் சீர்கெடுகுது, கொலை, கொள்ளை எல்லாம் நடக்குது எண்டு குளறுவார்கள் என்றும் நினைச்சேன் - எனது நினைப்பில் தப்பே இல்லை.
 

திரு ஜீவன் இங்க எவரும் நீங்க சொன்ன மாதிரி துள்ளி குதிக்கவிலலையே. ஏன் இப்படி கள உறவுகள் மீது பழி போடுகிறீர்கள்?

Just now, tulpen said:

திரு ஜீவன் இங்க எவரும் நீங்க சொன்ன மாதிரி துள்ளி குதிக்கவிலலையே. ஏன் இப்படி கள உறவுகள் மீது பழி போடுகிறீர்கள்?

 

3 hours ago, TNT said:

புத்தனை தினமும் கொல்லுபவ்ர்களுக்கு இந்த செய்தி சாதாரணம் தமிழர்களாகிய எங்களுக்கு பாரதூரமான விடயம் காசாப்புகடைகாரனிடம் சட்டம் ஒழுங்கை பாதுக்காக்க சொல்லி வடகிழக்கு எங்கும் விட்டுள்ளார்கள் எப்படி அவர்களால் அடக்கமுடியும் ?

 

3 minutes ago, ஜீவன் சிவா said:

 

 

ஜீவன் நாட்டில் சட்டம் ஒழுங்கு கெடும்போது காவல் துறைமீது மக்களி்ன் கோபம் திரும்புவது உலகில் எந்த நாடடிலும் சாதாரணம் தானே. அதை தானே இங்கு சுடடிக்காடடினார்கள். அதற்கு ஏன் உங்களுக்கு கோபம் வருகிறது என்பது என்னால் புரிந்து கொள்ள் முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

வன்முறை என்ன வடிவில் வந்தாலும் ஆதரிக்க மாட்டோம் என்று கத்தும் கூட்டம் தான்

இவ்வாறான வன்முறையையும்

பழையவற்றை சொல்லி வரவேற்கிறது

அல்லது எங்கு தான் குற்றம் நடக்கவில்லை என்று 

தலையை உள்ளுக்குள் இழுத்துக்கொள்கிறது

ஆனால் தமிழரின் அதங்கம் என்னவென்றால்

ஏன் எம்மினம் இவ்வாறு மாற்றாந்தாயிடம் வளரவேண்டும்

எம்மை எம்மிடமே விட்டுவிடுங்களேன் என்பது தான்

அது தாயகமாக இருந்தாலும் புலமாக இருந்தாலும்...

அவர்களுக்கு ஒன்று குறைகிறது  என்பது பெரும் இலாபம்

எமக்கு........?????

 

2 hours ago, விசுகு said:

வன்முறை என்ன வடிவில் வந்தாலும் ஆதரிக்க மாட்டோம் என்று கத்தும் கூட்டம் தான்

இவ்வாறான வன்முறையையும்

பழையவற்றை சொல்லி வரவேற்கிறது

அல்லது எங்கு தான் குற்றம் நடக்கவில்லை என்று 

தலையை உள்ளுக்குள் இழுத்துக்கொள்கிறது

ஆனால் தமிழரின் அதங்கம் என்னவென்றால்

ஏன் எம்மினம் இவ்வாறு மாற்றாந்தாயிடம் வளரவேண்டும்

எம்மை எம்மிடமே விட்டுவிடுங்களேன் என்பது தான்

அது தாயகமாக இருந்தாலும் புலமாக இருந்தாலும்...

அவர்களுக்கு ஒன்று குறைகிறது  என்பது பெரும் இலாபம்

எமக்கு........?????

இதைத்தான் வளர்த்த கிடாய் மார்பிலே பாய்கிறதென்பது. வளர்த்த விதம் அப்படி - இனி குய்யோ முறையோ என்று கூப்பாடு போடாமல் இதுக்கு என்ன பண்ணலாம் என்று யோசியுங்கள்.

Edited by நியானி
மேற்கோள் ஒன்றும் அதற்கான பதிலும் நீக்கப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Surveyor said:

நீதிமன்றம் மூலம் தீர்ப்பு வழங்கும் முதல், அவர்களை கொலைகாரர்கள் என முடிவு செய்ய முடியாது.

நீதிமன்றமா?

சிறீலங்காவிலா?

ஒரு பாராளுமன்ற எம்பியை கொன்றவர்களையே 

அவர்களால் தண்டிக்கமுடியவில்லை.....

2 minutes ago, விசுகு said:

எந்த ஆதாரத்தில்

எந்த நம்பிக்கையில்

சிறீலங்காவின்  எந்தவிதமான நீதித்துறை மற்றும் காவல்த்துறை சார்ந்த தீர்ப்பினூடாக 

மாற்றத்தை கண்டதினூடாக

இவ்வாறு நம்பிக்கையுடன் எழுதுகிறீர்கள்???

இவற்றை மாற்றுவதை தவிர வேறு வழி இல்லை என்பதை புரிந்த உண்மையில்தான் இதனை எழுதினேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஜீவன் சிவா said:

இவற்றை மாற்றுவதை தவிர வேறு வழி இல்லை என்பதை புரிந்த உண்மையில்தான் இதனை எழுதினேன்.

யார் தமிழர்கள் மாறணுமா?

 

49 minutes ago, விசுகு said:

யார் தமிழர்கள் மாறணுமா?

 

இல்லை நாம்தான் மாற்றனும்

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ஜீவன் சிவா said:

இல்லை நாம்தான் மாற்றனும்

ஏதாவது ஒருவர் 

தமிழரது சுயநிர்ணய உரிமைப்போராட்டம் பற்றி பேசிவிட்டால்

உடனேயே கைது செய்யப்படுகிறார்

மாதக்கணக்கில் நீதி விசாரணையின்றி சிறையிலடைக்கப்படுகிறார்

ஏன் கொன்று தாட்டுவிட்டு காணாமல் போனவராக்கப்படுகிறார்

அந்தளவுக்கு இராணுவமும் காவல்த்துறையும் நுண்ணியமாக இயங்கும் ஒரு குடாவுக்குள்

இவ்வாறான சம்பவங்கள் எப்படி நடக்கின்றன?

எந்த துணிவில் வாளை கையிலெடுக்கிறார்கள் என்பதே இங்கே பலரதும் கேள்வி.

18 minutes ago, விசுகு said:

தமிழரது சுயநிர்ணய உரிமைப்போராட்டம் பற்றி பேசிவிட்டால்

உடனேயே கைது செய்யப்படுகிறார்

மாதக்கணக்கில் நீதி விசாரணையின்றி சிறையிலடைக்கப்படுகிறார்

ஏன் கொன்று தாட்டுவிட்டு காணாமல் போனவராக்கப்படுகிறார்

இது தப்பான கண்ணோட்டம் - நடந்த சம்பவத்தை குறிப்பிடுங்கள்.

20 minutes ago, விசுகு said:

அந்தளவுக்கு இராணுவமும் காவல்த்துறையும் நுண்ணியமாக இயங்கும் ஒரு குடாவுக்குள்

இவ்வாறான சம்பவங்கள் எப்படி நடக்கின்றன?

இதுவும் தப்பான கண்ணோட்டம் 

21 minutes ago, விசுகு said:

எந்த துணிவில் வாளை கையிலெடுக்கிறார்கள் என்பதே இங்கே பலரதும் கேள்வி.

காசினால் தப்பலாம் என்பதை தவிர வேறு எதுவுமில்லை.

(இவர்கள் ஒன்றும் தமிழருக்காக போராடுபவர்கள் இல்லை. வெறுமனே பணத்துக்கான போராட்டம் மட்டுமே).

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ஜீவன் சிவா said:

இது தப்பான கண்ணோட்டம் - நடந்த சம்பவத்தை குறிப்பிடுங்கள்.

போன கிழடமையும் காந்திசிலையை உடைத்தவர்கள்கைது செய்யப்பட்டார்களே?

 

இதுவும் தப்பான கண்ணோட்டம் 

அப்படியாயின்இத்தனை லட்சம்இராணுவத்தினர்எதற்கு யாழ்குடாவுக்குள்??

என்ன செய்கிறார்கள்???

 

காசினால் தப்பலாம் என்பதை தவிர வேறு எதுவுமில்லை.

(இவர்கள் ஒன்றும் தமிழருக்காக போராடுபவர்கள் இல்லை. வெறுமனே பணத்துக்கான போராட்டம் மட்டுமே).

காசினால்தப்பலாம்என்றால்

அரசு

அரச நிர்வாகம் சரியில்லை என்று தானே அர்த்தம்

 

19 minutes ago, ஜீவன் சிவா said:
44 minutes ago, விசுகு said:

தமிழரது சுயநிர்ணய உரிமைப்போராட்டம் பற்றி பேசிவிட்டால்

உடனேயே கைது செய்யப்படுகிறார்

மாதக்கணக்கில் நீதி விசாரணையின்றி சிறையிலடைக்கப்படுகிறார்

ஏன் கொன்று தாட்டுவிட்டு காணாமல் போனவராக்கப்படுகிறார்

இது தப்பான கண்ணோட்டம் - நடந்த சம்பவத்தை குறிப்பிடுங்கள்.

 

3 minutes ago, விசுகு said:

போன கிழடமையும் காந்திசிலையை உடைத்தவர்கள்கைது செய்யப்பட்டார்களே?

இவர்கள் தமிழரது சுயநிர்ணய போராட்டத்துக்காகவே காந்தி சிலையை உடைத்தார்கள்.

 

50 minutes ago, விசுகு said:

அந்தளவுக்கு இராணுவமும் காவல்த்துறையும் நுண்ணியமாக இயங்கும் ஒரு குடாவுக்குள்

இவ்வாறான சம்பவங்கள் எப்படி நடக்கின்றன?

5 minutes ago, விசுகு said:

இதுவும் தப்பான கண்ணோட்டம் 

அப்படியாயின்இத்தனை லட்சம்இராணுவத்தினர்எதற்கு யாழ்குடாவுக்குள்??

என்ன செய்கிறார்கள்???

இது நியாயமான கேள்வி - ஆனால் முன்னர் போல் அவர்கள் வீதிகளில் இல்லை இப்போது. வெறுமனே வெட்டிப் பயலுகளுக்கு வக்காலத்து வாங்குவதை விட அவர்களையும் அகற்ற எதையாவது பண்ணலாமே என்பது எனது ஆசை. 

10 minutes ago, விசுகு said:

காசினால் தப்பலாம் என்பதை தவிர வேறு எதுவுமில்லை.

(இவர்கள் ஒன்றும் தமிழருக்காக போராடுபவர்கள் இல்லை. வெறுமனே பணத்துக்கான போராட்டம் மட்டுமே).

காசினால்தப்பலாம்என்றால்

அரசு

அரச நிர்வாகம் சரியில்லை என்று தானே அர்த்தம்

இதுவும் உண்மை

ஆனால்
பாரிஸில் நடைபெற்ற கொலைகள் எத்தனைக்கு தண்டனை வழங்கப் பட்டிருக்கு - அது போலவே இதுவும்.

 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஜீவன் சிவா said:

இவர்கள் தமிழரது சுயநிர்ணய போராட்டத்துக்காகவே காந்தி சிலையை உடைத்தார்கள்.

தேவையென்றால் 

உடனே இயங்குகிறார்கள்இல்லையா?

இது நியாயமான கேள்வி - ஆனால் முன்னர் போல் அவர்கள் வீதிகளில் இல்லை இப்போது. வெறுமனே வெட்டிப் பயலுகளுக்கு வக்காலத்து வாங்குவதை விட அவர்களையும் அகற்ற எதையாவது பண்ணலாமே என்பது எனது ஆசை. 

இதுவும் உண்மை

ஆனால்
பாரிஸில் நடைபெற்ற கொலைகள் எத்தனைக்கு தண்டனை வழங்கப் பட்டிருக்கு - அது போலவே இதுவும்.

அதைத்தான்  நானும்சொல்கின்றேன்

மாற்றாந்தாய் மனப்பான்மையுடன்நடாத்தப்படுகின்றோம்என.

 

1 minute ago, விசுகு said:

தேவையென்றால் 

உடனே இயங்குகிறார்கள்இல்லையா?

யாருடைய தேவைக்கு?

2 minutes ago, விசுகு said:

அதைத்தான்  நானும்சொல்கின்றேன்

மாற்றாந்தாய் மனப்பான்மையுடன்நடாத்தப்படுகின்றோம்என.

இல்லை என்று சொல்லவில்லை
ஆனாலும் மாற்றம் என்பது உடனே நடந்து விடாது

தொலைத்த சந்ததிகள் போதுமே அடுத்த சந்ததியாவது குறைந்தது நின்மதியாய் இருக்கட்டும்.

- அம்புட்டுத்தான் - 
 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஜீவன் சிவா said:

 

இதைத்தான் வளர்த்த கிடாய் மார்பிலே பாய்கிறதென்பது. வளர்த்த விதம் அப்படி - இனி குய்யோ முறையோ என்று கூப்பாடு போடாமல் இதுக்கு என்ன பண்ணலாம் என்று யோசியுங்கள்.

ஐயா எதை வளர்த்த விதம் அப்படி என்று சொல்லுகின்றீர்கள்?பொலிஸ் அதிகாரிகள் இதை அடக்க வேண்டும் என்று சொல்லுகின்றோம்.....அது தமிழ் பொலிஸ் அதிகாரிகள் என்றால் இன்னும் நல்லம் ஐக்கிய இலங்கை வேண்டுமென்றால் நல்ல தமிழ் அதிகாரிகளை உள்வாங்க வேண்டும் ....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.