Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நீச்சல் குளத்துடன் இலங்கையில் அதிக நவீன சிறைச்சாலை : புகைப்படங்கள் வெளியாகின

Featured Replies

நீச்சல் குளத்துடன் இலங்கையில் அதிக நவீன சிறைச்சாலை : புகைப்படங்கள் வெளியாகின

 

 

3CE6F9DB00000578-4170840-image-a-49_1486

அம்பாந்தோட்டை அகுனுகொலபெலச என்ற பகுதியில் 58 ஏக்கர் நிலப்பரப்பில் 4 ஆயிரத்து 996 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற சிறைச்சாலையின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.unnamed__1_.jpg

கடந்த 2014 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் திகதி குறித்த சிறைச்சாலையின் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இச் சிறைச்சாலையில் இரண்டாயிரம் கைதிகளை சிறை வைக்கும் வசதி கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.unnamed__2_.jpg

இப் புதிய சிறைச்சாலையில் ஒரு வைத்தியசாலையில்,தொழிற்கல்வி பயிற்சி மையம், கைத்தொழிற்காக தனியொரு கட்டிடம், அதிகாரிகளுக்காக 140 தங்குமிடங்கள் மேலும் நான்கு ஆயிரம் மீற்றர் நீளமான ஓடுபாதை , 25 மீற்றர் நீளமுடைய உள்ளகரங்க நீச்சல் குளம்  மற்றும் சிறை கைதிகளால் வடிவமைக்கபட்ட பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையமும் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.unnamed__3_.jpgunnamed__4_.jpgunnamed__6_.jpgunnamed__5_.jpgunnamed__7_.jpgunnamed__8_.jpgunnamed__10_.jpgunnamed__9_.jpgunnamed.jpgunnamed__11_.jpg

http://www.virakesari.lk/

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இடம் அமைக்கப்பட்டுள்ளதா அல்லது இனிமேல்தான் அமைக்கப்பட போகிறதா? படங்கள் நிஜமான புகைப்படங்களாக தெரியவில்லை. இது கட்டிட நிறுவனங்கள் 3D ல் வரைந்த Model படங்கள் போலல்லவா இருக்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

சிறைச்சாலை.. நல்ல வடிவாக உள்ளது. 
இதற்காகத் தன்னும்,  ஆற்ரையன் தாலிக் கொடியை... அறுத்துப் போட்டு, :unsure:
உள்ளுக்கு போய் இருக்கலாம் போலை கிடக்கு.  :grin:

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, vanangaamudi said:

இந்த இடம் அமைக்கப்பட்டுள்ளதா அல்லது இனிமேல்தான் அமைக்கப்பட போகிறதா? படங்கள் நிஜமான புகைப்படங்களாக தெரியவில்லை. இது கட்டிட நிறுவனங்கள் 3D ல் வரைந்த Model படங்கள் போலல்லவா இருக்கின்றன.

இது புதிதாக கட்டியது என நினைக்கிறேன் இன்னும் சில சிறைச்சாலைகள் கட்ட இருப்பதாக செய்திகளில் படித்தேன் நவீன மயப்படுத்தட இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெளியிலை இருக்கிற ஒரு சில அரசியல்வாதிகள் தாங்களும் தங்கடை கூட்டுவளும் உள்ளுக்கு போய் காலம் கழிக்கப்போறதை நினைச்சு இப்பவே ரெடி பண்ணீனமோ ஆருக்குத்தெரியும்...tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

ஏன்...சிறைச்சாலைகளையும்  'பொருத்து' வீடுகளாய் ....அமைக்க முடியாதா?

 

ஓ....நாட்டுக்குச் சேவையாற்றிய...போர்க் குற்றவாளிகளுக்கான சிறைச்சாலை போல உள்ளது!

 

சிங்களவன்... இருபதாண்டு காலமாவது...எம்மை விடவும் முன்னோக்கிச் சிந்திக்கிறான்.!:mellow:

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புங்கையூரன் said:

ஏன்...சிறைச்சாலைகளையும்  'பொருத்து' வீடுகளாய் ....அமைக்க முடியாதா?

ஓ....நாட்டுக்குச் சேவையாற்றிய...போர்க் குற்றவாளிகளுக்கான சிறைச்சாலை போல உள்ளது!

சிங்களவன்... இருபதாண்டு காலமாவது...எம்மை விடவும் முன்னோக்கிச் சிந்திக்கிறான்.!:mellow:

அருமை புங்கையூரான். 
உங்களது... அப்பாவித்தனமான கேள்வியை பார்த்து, "க்ளுக்" என்று.... சிரித்து விட்டேன்.  :grin:

இலங்கையில் அதி நவீன வசதிகளுடன் சிறைச்சாலை ஒன்று அமைக்கப்பட்டு வருவதாக நாங்கள் முன்னர் தெரிவித்திருந்தோம்.

அவ்வாறு, ஹம்பாந்தோட்டை அகுனுகொலபெலஸ்ஸ பகுதியில் குறித்த ஆடம்பரமான சிறைச்சாலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறைச்சாலையினை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ காலத்தில் அமைக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, மஹிந்த ராஜபக்ஸ 2009 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளை தோற்கடித்த பின்னர், பல்வேறு சொகுசு கட்டடங்களை அமைத்திருந்தார் என்றும், அதில் ஒன்றே குறித்த சிறைச்சாலை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு மஹிந்த ராஜபக்ஸ காலத்தில் அமைக்கப்பட்ட பல சொகுசு மாளிகைகள் தொடர்பில் செய்திகள் வெளியாகும் நிலையில், தற்போது குறித்த சிறைச்சாலை தொடர்பிலும் மக்கள் மத்தியில் விமர்சணங்களை எழச் செய்துள்ளது.

குறிப்பாக, 58 ஏக்கர் நிலப்பரப்பில், 500 கோடி ரூபா செலவில் கடந்த 2014 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் திகதி இந்த கட்டட பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.

இவ்வாறு பல கோடி மதிப்பில் குறித்த சிறைச்சாலையை மஹிந்த அமைக்க கரணம், "ஊழல் மோசடிகள் தொடர்பில் பிற்காலத்தில் கைது செய்யப்பட்டால் சொகுசாக வாழலாம் என்பதற்காகவா ? " என சமூக வலைத்தளங்களில் மக்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றார்கள்

"இவ்வாறு சிறையில் பல குற்றச்செயல்களை செய்து இருக்கும் குற்றவாளிகளுக்கு எதற்காக இந்த ஆடம்பரம் " என்றும் " "கோடிகளை இவ்வாறு செலவழித்து விட்டு தற்போது வெளிநாடுகளிடம் வளங்களை கொடுப்பதாக மஹிந்த கூறுவது எந்த விதத்தில் நிஜாயம் " என சமூக ஆர்வலர்கள் அதிருப்தியை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg
.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

http://www.tamilwin.com/politics/01/135254?ref=home

  • தொடங்கியவர்
மகிந்த கட்டிய ஆடம்பர சிறைச்சாலை
 
 
மகிந்த கட்டிய ஆடம்பர சிறைச்சாலை
சிறைச்சாலை ஒன்றை ஆடம்பர மாளிகையை போல அம்பாந்தோட்டையில் மகிந்த ராஜபக்ஷ கட்டியிருப்பது இப்போது புகைப்பட ங்கள் மூலம் வெளியில் தெரிய வந்து உள்ளது.
 
வெளிநாடுகளில் உள்ள சிறைச்சாலைகள் பலவற்றையும் அங்குணகொளபெலஸ்ஸ சிறைச்சாலையின் தோற்றப்பாடு தோற்கடி க்கின்றது.
 
58 ஏக்கர் காணியில் இது கட்டப்பட்டுள்ளது. சிறைச்சாலை வைத்தியசாலை, கைத்தொழில் கூடங்கள், அலுவலர்களுக்கான தங்குமிட கட்டட தொகுதிகள் ஆகியவற்றோடு பிரமாண்ட விளையாட்டு மைதானம், விசாலமான நீச்சல் தடாகம் ஆகியவற்றை இது கொண்டு ள்ளது. இதை கட்டி முடிக்க 4996 மில்லியன் ரூபாய் செலவாகி உள்ளது.
sirai_2.jpgsirai_4.jpgsirai_6.jpgsirai_1.jpgsirai_3.jpg

http://www.onlineuthayan.com/news/23772

  • தொடங்கியவர்
ஆடம்பர சிறை வியாழன் திறப்பு
 
14-02-2017 08:38 AM
Comments - 0       Views - 26

article_1487045458-prison-10.jpgதங்காலை சிறைச்சாலைக்குப் பதிலாக, ஹம்பாந்தோட்டை அங்னுகுகொலபெலஸ்ஸவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய வசதிகளை கொண்டுள்ள ஆடம்பர சிறைச்சாலை, எதிர்வரும் 16ஆம் திகதியன்று திறந்துவைக்கப்படவுள்ளது.  

இந்த சிறைச்சாலையை சிறிசேனவே திறந்துவைக்க உள்ளதாக அறியமுடிகின்றது.  

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிகாலத்தின் போது,

 சுமார் 40 ஏக்கர் விசாலமான நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்ட இந்த சிறைச்சாலைத் தொகுதியின் நிர்மாணப்பணிகளுக்காக 4,500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த சிறையில் மட்டும் 1,500க்கு மேற்பட்ட கைதிகளைத் தடுத்துவைக்கலாம்.  

சர்வதேச தரம் மற்றும் மனித உரிமைகளை மதிக்கும் வகையில், இலங்கையில் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது சிறைச்சாலை இதுவாகும். இந்த சிறைச்சாலைக்குள் நீச்சல் தடாகம், முழுமையான விளையாட்டு ஆய்வரங்கம் மற்றும் விளையாட்டு மைதானம் ஆகியனவும் உள்ளன.  

தமிழீழ விடுதலைப் புலிகள், 2009ஆம் ஆண்டு தோற்கடிக்கப்பட்டதன் பின்னர், கடந்த அரசாங்கத்தினால் பல்வேறான சொகுசு மாளிகைகள் கட்டப்பட்டன. அதிலொன்றாகவே இது அமைந்துள்ளது என்று சமூக வலைதளங்களில், விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.  

இந்த சிறைச்சாலையின் நிர்மாணப்பணிகள், 2014ஆம் ஆண்டு மே மாதம் 16ஆம் திகதியன்று ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.  

- See more at: http://www.tamilmirror.lk/191490/ஆடம-பர-ச-ற-வ-ய-ழன-த-றப-ப-#sthash.QDdPRrlC.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.