Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையர் விக்ரமசிங்கவுக்கு இங்கிலாந்தில் இனவெறி ரீதியான தாக்குதல்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

18581823_1365142580238737_8030611278274899056_n-1495279003.jpg

பிரித்தானியாவில் இனவெறி ரீதியான வார்த்தை பிரயோகங்களுக்கு முகங்கொடுத்த இலங்கையர் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். Welwyn Garden City வீதியில் வைத்து இனவெறியை தூண்டும் வகையிலான வார்த்தை பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டதாக தனது முறைப்பாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 40 வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் பிறந்த எரந்த விக்ரமசிங்க என்பவரே இந்த முறைப்பாட்டினை செய்துள்ளார்.

1990 ஆம் ஆண்டு முதல் பிரித்தானியாவில் வாழ்ந்து வரும் அவர், 2000 ஆம் ஆண்டு பிரித்தானிய குடியுரிமை பெற்றுள்ளார். இந்நிலையில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் பிரித்தானிய பெண் ஒருவரை திருமணம் செய்து Welwyn Garden City பகுதியில் குடியேறியுள்ளார். கடந்த வாரம், லண்டனில் பணி புரியும் வழியில் ரயில் நிலைய பாதையிலுள்ள Hydeway முடிவில் பயணித்த போது, அங்கு ஒரு வெள்ளைகார நபரை அவர் எதிர் கொண்டுள்ளார். குறித்த நபர் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி “நீ இங்கு வர நிறைய இருக்கிறது” என அந்த நபர் குறிப்பிட்டுள்ளார். “நிறைய இருக்கிறது” என்ற வார்த்தையின் ஊடாக என்ன கூறுவதற்கு அந்த நபர் முற்பட்டார் என சந்தேகம் எழுந்துள்ளதாக விக்ரமசிங்க அந்த நாட்டு ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் கவலை மற்றும் புண்படுத்தும் வகையில் உள்ளது. நாங்கள் புதிய வாழ்க்கையை வாழ விரும்புகிறோம். எனினும் இந்தப் பகுதியில் எங்கள் குழந்தைகளை வளர்ப்பது பாதுகாப்பானதா என்பது குறித்து யோசித்து வருகிறோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். “நாங்கள் இருவரும் பிரித்தானியர்கள், மிகவும் திறமையான தொழிலை கொண்டுள்ளோம். வேலை தேடுவதற்காகவும் உலகில் வேறு இடத்தினை தேடுவதற்காகவும் போராட மாட்டோம். ஆனால் நாம் பிரித்தானியாவை நேசிக்கிறோம், இங்கு குறைபாடுகள் இருந்தாலும், வாழ்வதற்கு இங்கிலாந்து இன்னும் சிறந்த இடங்களில் ஒன்றாகவே நாங்கள் கருதுகிறோம். “ இந்த இனவாத செயற்பாடு தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்தவர், கடந்த வருடம் பிரெக்ச்சிட் வாக்கெடுப்புக்குப் பின்னர் இனவாத துஷ்பிரயோகம் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் வேர்களை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன் எனினும் நான் பிரித்தானியராக இருப்பது குறித்து பெருமையடைகின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். Welwyn Garden City என்ற பகுதியில் மனைவி ரூத்துடன் விக்ரமசிங்க வாழ்ந்து வருகின்றார்.

AkuranaToday.com | Read more http://www.akuranatoday.com/news/?p=138455 .

 

  • கருத்துக்கள உறவுகள்

உங்கண்ட ஆளை கட்டி இருக்கிறன், நீங்கள் எல்லோரும் எண்ட மச்சான்மார் என்றமாதிரி நடந்து வந்திருப்பார்....

அடியாமல் விட்டதே பெரிய விசயம்.

ஜாதி மாறிக் கட்டினால், அங்க கொலை செய்வினம்.... 

இங்க அவன் திட்டினது, அக்குறணை டுடே வரை போட்டுது...

ஊர்ல சாதி தடிப்பு கொண்டு சன்னதம் ஆடுற ஆக்கள், இங்க வந்து, அந்த வெள்ளை, நிற வெறியன், இந்த வெள்ளை தடிப்பு பிடிச்சவன் என்று சொல்லும் போது சிரிப்பு தான் வரும்.

இதே சிங்களவர் ஊரில், தமிழர், முஸ்லிகளை எவ்வாறு நடாத்தி மதித்திருப்பார் என்பதனையும் அக்குறணை டுடே எழுதட்டும். :unsure:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

இவர் இதுக்கு இந்தப் பொங்கு பொங்கிறாரே.. இவைட ஆக்கள் சொறீலங்காவில் தமிழர்கள் மீது செய்யும் இனவெறி.. இனப்படுகொலைக்கு.. தமிழர்கள் என்ன பொங்கு பொங்க வேண்டும். அதையேன் பயங்கரவாதம் என்றீனமோ..??! :rolleyes:tw_angry:

நன்றாகச் சொன்னீர்கள் நாதமுனி.

இனவாதம் பிரதேசவாதம் சாதியம் என்பன எல்லாமட்டத்திலும் வெளிக்காட்டப்படுதல் வேண்டும். வெளிநாடுகளில் இனவாதம்
தொடர்பாக நிறையவே முறைப்பாடு செய்பவர்கள் நமது தேசத்தில் நம்மால் வெளிக்காட்டப்படும் சாதிவெறி இனவெறி தொடர்பாக வசதியாகவே மறந்து விடுவது நகைப்புக்கிடமானது.

எமது தேசத்தில் ஒரு ஆபிரிக்க இனத்தவர் ஒருவர் வந்து வாழுவது சாத்தியமn என்பதை நினைத்தே பார்க்கமுடியாயது.

http://www.bbc.co.uk/news/av/world-asia-india-39426219/nigerian-student-beaten-in-india-in-alleged-racist-attack

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, manimaran said:

நன்றாகச் சொன்னீர்கள் நாதமுனி.

இனவாதம் பிரதேசவாதம் சாதியம் என்பன எல்லாமட்டத்திலும் வெளிக்காட்டப்படுதல் வேண்டும். வெளிநாடுகளில் இனவாதம்
தொடர்பாக நிறையவே முறைப்பாடு செய்பவர்கள் நமது தேசத்தில் நம்மால் வெளிக்காட்டப்படும் சாதிவெறி இனவெறி தொடர்பாக வசதியாகவே மறந்து விடுவது நகைப்புக்கிடமானது.

எமது தேசத்தில் ஒரு ஆபிரிக்க இனத்தவர் ஒருவர் வந்து வாழுவது சாத்தியமn என்பதை நினைத்தே பார்க்கமுடியாயது.

http://www.bbc.co.uk/news/av/world-asia-india-39426219/nigerian-student-beaten-in-india-in-alleged-racist-attack

இது வேற கதை மணி...

நைஜீரியர்கள் மிகவும் அழகாக செய்யும் ஒரே விஷயம் மோசடி.

இவர்கள் இலங்கையில், ஒரு பெண் இடம் 20 லட்ச்சம் வரை கூட மோசடி செய்து அண்மையில் பிடி பட்டு உள்ளனர்.

அநேகமாக டெல்லி இளைஞர்கள் அவரிடம் அல்லது அவரது நண்பர்களிடம் ஏமாந்து போய் இருக்க வேண்டும்.

எத்தனையோ ஆப்பிரிக்கர்கள் இந்தியாவில் கல்வி பெறுகிறார்கள், காரணம், ஆங்கிலம்.. குறைவான செலவு. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

இது வேற கதை மணி...

நைஜீரியர்கள் மிகவும் அழகாக செய்யும் ஒரே விஷயம் மோசடி.

இவர்கள் இலங்கையில், ஒரு பெண் இடம் 20 லட்ச்சம் வரை கூட மோசடி செய்து அண்மையில் பிடி பட்டு உள்ளனர்.

அநேகமாக டெல்லி இளைஞர்கள் அவரிடம் அல்லது அவரது நண்பர்களிடம் ஏமாந்து போய் இருக்க வேண்டும்.

எத்தனையோ ஆப்பிரிக்கர்கள் இந்தியாவில் கல்வி பெறுகிறார்கள், காரணம், ஆங்கிலம்.. குறைவான செலவு. 

நாதா 20 லட்சம் கிடையாது 40 லட்சம் அழகு சாதன  பொருட் களுக்காக ஏமாந்து போயிருக்கிறா ஒரு பொண்ணு

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, தனி ஒருவன் said:

நாதா 20 லட்சம் கிடையாது 40 லட்சம் அழகு சாதன  பொருட் களுக்காக ஏமாந்து போயிருக்கிறா ஒரு பொண்ணு

எமகாதகர்கள்.

ஏதோ சுத்துமாத்து விட்டு அடியை வாங்கிட்டு... உண்மையையா சொல்ல முடியும்?

இனவாதம் என்று கதை விட்டிருப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

எமகாதகர்கள்.

ஏதோ சுத்துமாத்து விட்டு அடியை வாங்கிட்டு... உண்மையையா சொல்ல முடியும்?

இனவாதம் என்று கதை விட்டிருப்பார்.

ம் இருக்கலாம் சிங்களவர்களில்  ஒரு சிலர் அப்படியே உதாரணம் கொழும்பில் கடை வைத்திருக்கும் சிங்களவர்கள் 

3 hours ago, Nathamuni said:

இது வேற கதை மணி...

நைஜீரியர்கள் மிகவும் அழகாக செய்யும் ஒரே விஷயம் மோசடி.

இவர்கள் இலங்கையில், ஒரு பெண் இடம் 20 லட்ச்சம் வரை கூட மோசடி செய்து அண்மையில் பிடி பட்டு உள்ளனர்.

அநேகமாக டெல்லி இளைஞர்கள் அவரிடம் அல்லது அவரது நண்பர்களிடம் ஏமாந்து போய் இருக்க வேண்டும்.

எத்தனையோ ஆப்பிரிக்கர்கள் இந்தியாவில் கல்வி பெறுகிறார்கள், காரணம், ஆங்கிலம்.. குறைவான செலவு. 

ஆம் அது உண்மையாக இருக்கலாம். ஆனால் இது எல்லா சமூகத்திலும் உள்ளதே. எம்மவர்கள் இங்கிலாந்தில் எத்தனை வகையான மோசடிகளில் ஈடுபட்டு எத்தனை 
மில்லியன் பெறுமதியான பணத்தை கொள்ளையடித்தோம். வங்கி அட்டை உட்பட. அதற்காக நானோ அல்லது நீங்களோ வீதியில் போகும் போது எம்மை குறிவைத்து தாக்கினால் எவ்வாறு உணருவோம். 

ஒரு சமூகத்தில் ஒரு சிலர் செய்வதை வைத்து ஒட்டு மொத்த இனத்தையும் அதே வில்லை கொண்டு பார்ப்பது பொருத்தமற்றது. 

https://itstopswithme.humanrights.gov.au/resources/what-you-say-matters/what-racism

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, manimaran said:

ஆம் அது உண்மையாக இருக்கலாம். ஆனால் இது எல்லா சமூகத்திலும் உள்ளதே. எம்மவர்கள் இங்கிலாந்தில் எத்தனை வகையான மோசடிகளில் ஈடுபட்டு எத்தனை 
மில்லியன் பெறுமதியான பணத்தை கொள்ளையடித்தோம். வங்கி அட்டை உட்பட. அதற்காக நானோ அல்லது நீங்களோ வீதியில் போகும் போது எம்மை குறிவைத்து தாக்கினால் எவ்வாறு உணருவோம். 

ஒரு சமூகத்தில் ஒரு சிலர் செய்வதை வைத்து ஒட்டு மொத்த இனத்தையும் அதே வில்லை கொண்டு பார்ப்பது பொருத்தமற்றது. 

https://itstopswithme.humanrights.gov.au/resources/what-you-say-matters/what-racism

அவர்கள் லெவெலுக்கு, யாராலும் முடியாது என்பது உண்மை.

youtube அல்லது google பக்கம் போய்... nigerian scam / scamers என்று போட்டுப் பாருங்கள். 

எங்கண்ட ஆக்கள் அப்பாவிகள்... என்று சொல்லுவியள். tw_dizzy:

  • கருத்துக்கள உறவுகள்
On 2017-5-21 at 0:35 AM, Nathamuni said:

 

இங்க அவன் திட்டினது, அக்குறணை டுடே வரை போட்டுது...

ஊர்ல சாதி தடிப்பு கொண்டு சன்னதம் ஆடுற ஆக்கள், இங்க வந்து, அந்த வெள்ளை, நிற வெறியன், இந்த வெள்ளை தடிப்பு பிடிச்சவன் என்று சொல்லும் போது சிரிப்பு தான் வரும்.

இதே சிங்களவர் ஊரில், தமிழர், முஸ்லிகளை எவ்வாறு நடாத்தி மதித்திருப்பார் என்பதனையும் அக்குறணை டுடே எழுதட்டும். :unsure:

:10_wink::10_wink::10_wink:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.