Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதிர்க்கட்சி தலைவர் எந்த பக்கம்?

Featured Replies

எதிர்க்கட்சி தலைவர் எந்த பக்கம்?

 
thavarasa.jpg
வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசாவின் நிலைப்பாடு தொடர்பில் அறியமுடியவில்லை. வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிர்கட்சி உறுப்பினர்கள், ஆளும் கட்சி உறுப்பினர்கள் உள்ளடங்கலாக 22 உறுப்பினர்கள் ஆதரவாக உள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
அந்நிலையில் புதன்கிழமை இரவு அவைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தலைமையில் வடமாகாண ஆளுனரை அவரது வாசஸ்தலத்தில் சந்தித்த மாகாண சபை உறுப்பினர்கள் 16 பேர் முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை கையளித்தனர்.
 
குறித்த உறுப்பினர்கள் ஆளுனரின் வாசஸ்தலத்தை விட்டு வெளியேறிய சில நொடிகளில் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா ஆளுனரை சந்திக்க சென்றார். அதன் போது ஊடகவியலாளர்கள் எதிர்க்கட்சி தலைவரிடம் அங்கு வருகை தந்தமை தொடர்பில் கேட்ட போது , ஆளுனர் சந்திக்க வேண்டும் என கோரியமையால் தான் இங்கே வந்தேன் என தெரிவித்து ஆளுனரை சந்திக்க சென்றார். அதனால் எதிர்கட்சி தலைவரின் நிலைப்பாட்டினை அறிய முடியவில்லை.

https://globaltamilnews.net/archives/29775

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für idea smiley

ஸ்ரீலங்காவின்... எதிர்க்  கட்சி, தலைவர்... ஆளும் கட் சியின்,  பின் பக்கம் என்று....  வடிவாக தெரியும். :grin:
ஆனால்,   தவராசா..... முன் பக்கமா....  பின் பக்கமா... என்று, தெரியவில்லை. :D:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

உள்ள ஒரு நூலிழை நம்பிக்கையும் சுமந்து -சம்பந்து கூட்டால் முடிவுக்கு வந்துவிட்டது......

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, alvayan said:

உள்ள ஒரு நூலிழை நம்பிக்கையும் சுமந்து -சம்பந்து கூட்டால் முடிவுக்கு வந்துவிட்டது......

அல்வாயன்,
சம்பந்து  -  சுமந்து, குருட்டணியை.... இன்னும், நம்பு கின்றீ ர்களா? 
இவர்கள்.... எமக்கு, "ஆப்பு"  வைக்க வந்தவர்கள்.  ஐயா.

இவர்களுக்கு... ஓட்டு போடாதீர்கள்..... 
சைக்கிள் கட்சிகாரனுக்கு ஓட்டுப்  போடுங்கள் என்று, 
தொண்டை கிழிய... கத்திச் , சொன்னோம்.
ஒரு பயலும்... கேட்கவில்லை,  இப்ப... அனுபவிக்கிறாங்கள். ஹ்ம்ம்..............

  • கருத்துக்கள உறவுகள்

முகநூலில் இர்ந்து வைத்திய கலானிதி முரளி வல்லிபுரநாதனிடமிருந்து எடுத்தது....கடந்த பொதுத்த்ர்ர்தலில் சுமந்துவவை ஆதரித்து  அறிக்ககை விட்டவர்.....எனினும் இப்போஇஅரின் நியாயம் ஏற்கக்கூடியதே...

வரலாற்றுத் தவறு இழைக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சி

1949 ம் ஆண்டு நேர்மையாளராகக் கருதப்படும் தலைவர் செல்வநாயகத்தின் தலைமையில் ஒற்றையாட்சி முறை இலங்கையில் தமிழர் உரிமையுடன் வாழ்வதற்கு உகந்ததல்ல என்றுகூறி கூட்டாட்சிக் கோரிக்கையை முன்வைத்து தமிழ் மக்களின் பெரும்பான்மை ஆதரவுடன் பதவிக்கு வந்தது இலங்கைத் தமிழரசுக் கட்சி. தனது கூட்டணி ஆளும் கட்சி மாகாண சபை உறுப்பினர்களினால் நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட மாகாண சபை மந்திரிகள் அதிகார துஷ்ப்பிரயோகம் மற்றும் பல மில்லியன் நிதிமோசடியில் ஈடுபட்டதாக நீதியரசர்கள் குழு ஒன்றினால் நிருபிக்கப்பட்ட நிலையில் வேறு வழியின்றி மேலதிக விசாரணைக்கும் குற்றம் நிரூபிக்கப் பட்ட அமைச்சர்களை பதவி விலகுமாறும் கோரிய முதலமைச்சருக்கு எதிராக இன்று நம்பிக்கை இல்லாத தீர்மானத்தை பிரேரித்து ஆளுநரிடம் கையளித்துள்ளது. இதன் மூலம் தமிழ் மக்களுக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி சொல்ல வரும் செய்தி என்ன ? எமது கட்சி உறுப்பினர்கள் அதிகார துஷ்ப்பிரயோகம் மற்றும் நிதிமோசடியில் ஈடுபடுவார்கள்: ஆனால் அதை எவரும் தட்டிக் கேட்க முடியாது. வேண்டாம் ஐயா இந்த தவறான முடிவு! தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கமான உங்கள் மீது விடுதலை போராட்டத்தில் உயிரைக் கொடுத்தவர்களும் தமிழ் வாக்காளர்களும் வைத்திருக்கும் நம்பிக்கையை சிதைக்காதீர்கள் என்று மன்றாட்டமாக கேட்டுக் கொள்ளுகிறேன். உங்களுடைய இந்த தவறான முடிவு வரலாற்றில் மலையகத் தமிழரின் குடியுரிமையைப் பறித்த இலங்கை குடியுரிமைச் சட்டத்தை அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசு ஏற்றுக் கொண்டதற்கு ஒப்பானதாகும். எனது கவலையெல்லாம் இந்த தவறின் மூலமாக சிங்கள பேரினவாதத்துக்கு ஆதரவானவர்களும் இந்திய வல்லரசின் கைக்கூலிகளும் தமிழர் தலைவர்களாகும் நிலையை ஏற்படுத்தி தமிழரின் உரிமைப் போராட்டத்தில் மேலும் பாரிய பின்னடைவை உருவாக்கப் போகிறீர்கள் என்பது தான். ஊழலுக்கு எதிராக பதவியை தியாகம் செய்த முதலமைச்சர் என்ற நிலையை ஏற்படுத்திவிட்டு ஊழல் பெருச்சாளிகளின் தலைமையில் மாகாண அரசாங்கத்தை தொடர்ந்து இயக்க முடியுமா? இயங்கினாலும் அதை தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டு மீண்டும் உங்களுக்கு வாக்களிப்பார்களா ? உங்களுடைய முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

தாழுகின்ற... தமிழ்  கப்பலில்.... முன் நிற்பவர்களே...
இப்போதுள்ள... சம்சும்  கொம்பனி.
எங்களை....  நடுக் கடலில், தள்ளி விட்டுப் போக... இந்த, 
மானங் கெட் ட... அரசியல் வாதிகள், தயங்க மாட்டார்கள்.

செந்தமிழானின்...  ஒரு இணைப்பில்,  உள்ள இந்த... காணொளியையும் பாருங்கள்.

 

7 hours ago, alvayan said:

இந்த தவறின் மூலமாக சிங்கள பேரினவாதத்துக்கு ஆதரவானவர்களும் இந்திய வல்லரசின் கைக்கூலிகளும் தமிழர் தலைவர்களாகும் நிலையை ஏற்படுத்தி தமிழரின் உரிமைப் போராட்டத்தில் மேலும் பாரிய பின்னடைவை உருவாக்கப் போகிறீர்கள் என்பது தான். ஊழலுக்கு எதிராக பதவியை தியாகம் செய்த முதலமைச்சர் என்ற நிலையை ஏற்படுத்திவிட்டு ஊழல் பெருச்சாளிகளின் தலைமையில் மாகாண அரசாங்கத்தை தொடர்ந்து இயக்க முடியுமா?

தமிழின விரோதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள மாவை, சுமந்திரன், சரவணபவன், சிறீதரன் ஆகியோரின் கூட்டு சதிமுயற்சியில் தமிழர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகவுள்ள விக்னேஸ்வரன் ஐயாவை நீங்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவர்களை தமிழ் மண்ணிலிருந்து தமிழ் மக்கள் வீடும்காலம் தொலைவில் இல்லை!

பின்னணியில் இந்திய சகுனிகள் இருப்பதாகவும் தெரிகிறது!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசு கட்சி ஈபிடிபியுடன் சேர்ந்து வடமாகாணா  முதலமைச்சரை பதவி விலக்க முயற்சிக்கிறார்களாமே??

11 minutes ago, nunavilan said:

தமிழரசு கட்சி ஈபிடிபியுடன் சேர்ந்து வடமாகாணா  முதலமைச்சரை பதவி விலக்க முயற்சிக்கிறார்களாமே??

எதிர்க்கட்சி தலைவர் தவராசா ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான சத்தியலிங்கத்தின் நெருங்கிய நண்பராக இருப்பதன் விளைவாக தவராசா சுமந்திரனின் கைபொம்மையாக மாறியுள்ளதாக யாழ் பல்கலைக்கழக தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன!

  • கருத்துக்கள உறவுகள்

விசர் கதை, கதைத்த......
அமுதலின்ஹாம்   ஐயாவும் , பாதியில போனவர்.
மங்கஐ  இன்னும், இருக்கிறார்.

சுமந்திரன் சகலரிடமும் சத்தியக் கடதாசி வாங்கி ஆளுநரிடம் கொடுத்து மதியத்துக்கு முதல், மக்கள் எழுச்சியடைவதற்கு முதல்,  புது முதல்வரை தெரிவுசெய்ய சதி முயற்சிகளில் ஈடுபடுவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது!

 

முதலமைச்சர் ஊழல்வாதிகளை நீக்கியது போலவே நிமலன் கார்த்திகேயனையும் தூரத்தில் வைத்துக்கொள்ள வேண்டுமென்று அனைவரும் விரும்புகிறார்கள்.

நிமலன் கார்த்திகேயன் என்ற பெருச்சாளிக்கு  ஊழலில் பங்கிருப்பதுடன் முதலமைச்சருக்கும் ஏனையோருக்கும் இடையில் நந்திபோல இருந்து முதலமைச்சரின் சமூக தொடர்புகளை துண்டித்து வருவதாக குற்றம் சுமத்தப்படுகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, தமிழ் சிறி said:

அல்வாயன்,
சம்பந்து  -  சுமந்து, குருட்டணியை.... இன்னும், நம்பு கின்றீ ர்களா? 
இவர்கள்.... எமக்கு, "ஆப்பு"  வைக்க வந்தவர்கள்.  ஐயா.

இவர்களுக்கு... ஓட்டு போடாதீர்கள்..... 
சைக்கிள் கட்சிகாரனுக்கு ஓட்டுப்  போடுங்கள் என்று, 
தொண்டை கிழிய... கத்திச் , சொன்னோம்.
ஒரு பயலும்... கேட்கவில்லை,  இப்ப... அனுபவிக்கிறாங்கள். ஹ்ம்ம்..............

அவையள் இப்பவும் விடுதலைப்புலிகளை திட்டுறதிலையே காலத்தை கடத்தீனம். செய்யவேண்டிய அலுவலை செய்யாமல் பழைய ஓட்டையளை பெருப்பிக்கிறதிலையே கவனமெடுக்கினம்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா வினைக்கும் ........
ஓர் எதிர் வினை உண்டு . 

19 hours ago, Rajesh said:

முதலமைச்சர் ஊழல்வாதிகளை நீக்கியது போலவே நிமலன் கார்த்திகேயனையும் தூரத்தில் வைத்துக்கொள்ள வேண்டுமென்று அனைவரும் விரும்புகிறார்கள்.

நிமலன் கார்த்திகேயன் என்ற பெருச்சாளிக்கு  ஊழலில் பங்கிருப்பதுடன் முதலமைச்சருக்கும் ஏனையோருக்கும் இடையில் நந்திபோல இருந்து முதலமைச்சரின் சமூக தொடர்புகளை துண்டித்து வருவதாக குற்றம் சுமத்தப்படுகிறது.

முதலமைச்சரின் உறவினரான நிமலன் கார்த்திகேயனை முதலமைச்சர் தூரத்தில் வைத்துக்கொள்வதே அவருக்கு நல்லது என்பதை இதுவரை நடைபெற்ற அத்தனை சம்பவங்களும் உறுதிப்படுத்தியுள்ளன.

முதலமைச்சர் அவர்கள் ஊழல் முதலையான மன்மதராசாவை முன்னர் அகற்றியது போலவே நிமலன் கார்த்திகேயனையும் அகற்றவேண்டிய தேவை உள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.