Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு முதலமைச்சரின் தாளங்களுக்கு இராணுவத்தினர் ஆடத் தயாரில்லை: மகேஸ் சேனாநாயக்க

Featured Replies

இந்திய மீனவர்கள் அத்து மீறுவதற்கு வடக்கு மீனவர்களே காரணம் – இராணுவத் தளபதி

இந்திய மீனவர்கள் அத்து மீறுவதற்கு வடக்கு மீனவர்களே காரணம் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

வடக்கு மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடுவதனை அநேகமாக நிறுத்திக் கொண்டுள்ளதனால்தான் இந்திய மீனவர்கள் வடக்கு கடற்பரப்பினை ஆக்கிரமிப்பு செய்கின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் தற்பொழுது  மிகவும் குறைந்தளவான நபர்களே மீன்பிடித் தொழிலில் ஈடுபடுகின்றனர் எனவும் அவர்களும் வலைவீசி மீன்பிடியில் ஈடுபடுவோர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் அதிகளவான மீன் லொறிகள் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கு வந்ததாகவும் தற்போது அவ்வாறான ஓர் நிலையை காண முடியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தெற்கில் பலநாள் மீன்பிடிப் படகுகள் மூலம் மீன்பிடியில் ஈடுபடுகின்ற போதிலும், வடக்கில் அவ்வாறு மீன்பிடியில் ஈடுபடுவதில்லை என இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/archives/32573

  • கருத்துக்கள உறவுகள்

இந்தாளின்ர மூளை...வெறும் மண்டையோட்டுக்குள் இருப்பது....மிகப் பெரிய அவமானம்!

ஐன்ஸ்டீன்எ போன்றவர்களது மூளைகளோடு .... ஒரு ஆய்வு மையத்தில்...வைத்துப் பாதுகாக்கப் பட வேண்டிய ஒன்று!

இவரது...அண்மைய கருத்துக்களைப் பார்த்த பின்னர்...எனது அவதானம் இதுவாகும்!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புங்கையூரன் said:

இந்தாளின்ர மூளை...வெறும் மண்டையோட்டுக்குள் இருப்பது....மிகப் பெரிய அவமானம்!

ஐன்ஸ்டீன்எ போன்றவர்களது மூளைகளோடு .... ஒரு ஆய்வு மையத்தில்...வைத்துப் பாதுகாக்கப் பட வேண்டிய ஒன்று!

இவரது...அண்மைய கருத்துக்களைப் பார்த்த பின்னர்...எனது அவதானம் இதுவாகும்!

வடக்கு மீனவர்கள் பிடிக்காத படியால் தெற்கு மீனவர்கள் வந்து பிடியுங்கோ என்று சொல்லாமல் சொல்லுகிறார் போலும்

வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் போடும் அனைத்து தாளங்களுக்கும் இராணுவத்தினர் ஆடத் தயாரில்லை என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் வடக்கு மீனவர்கள் அநேகமாக மீன்பிடி நடவடிக்கைகளை கைவிட்டிருப்பதனால், இந்திய மீனவர்கள் வடக்கு கடல் பரப்பை ஆக்கிரமிக்கின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயம் தொடர்பில் கூறியுள்ளார்.

மேலும் அவர் இது தொடர்பில் தெரிவிக்கையில்,

வடக்கு மீனவர்கள் அநேகமாக மீன்பிடி நடவடிக்கைகளை கைவிட்டிருப்பதனால் இந்திய மீனவர்கள் வடக்கு கடல் பரப்பை ஆக்கிரமிக்கின்றனர்.

வடக்கில் மிகவும் சொற்ப அளவிலான மீனவர்களே மீன்பிடியில் ஈடுபடுகின்றனர். அநேகமானவர்கள் வலைகளைப் பயன்படுத்தி சொற்ப அளவு மீன்களைப் பிடித்து அன்றாடம் வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.

கடந்த காலங்களில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கு மீன்கள் கொண்டு வரப்படும் போதும், தற்போது அந்த எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. தெற்கு கடற்பரப்பில் பல நாட்கள் ட்ரோலர்களில் மீன்பிடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

எனினும் வடக்கில் இவ்வாறான நிலையை அவதானிக்க முடியவில்லை என தெரிவித்துள்ளார்.

அத்துடன், வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் போடும் அனைத்து தாளங்களுக்கும் இராணுவத்தினர் ஆடத் தயாரில்லை. அவரது அனைத்து எதிர்பார்ப்புக்களும் வெறும் கற்பனையேயாகும்.

யாழ்ப்பாணத்தில் ஆவா குழுவின் செயற்பாடுகள் இல்லாவிட்டாலும் சட்டவிரோத மணல் அகழ்வாளர்கள் மக்களை பீதிக்கு உள்ளாக்கி வருகின்றனர்.

மேலும், டெங்குவை கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினரின் பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

http://www.tamilwin.com/politics/01/151726?ref=home-feed

21 hours ago, புங்கையூரன் said:

இந்தாளின்ர மூளை...வெறும் மண்டையோட்டுக்குள் இருப்பது....மிகப் பெரிய அவமானம்!

ஐன்ஸ்டீன்எ போன்றவர்களது மூளைகளோடு .... ஒரு ஆய்வு மையத்தில்...வைத்துப் பாதுகாக்கப் பட வேண்டிய ஒன்று!

இவரது...அண்மைய கருத்துக்களைப் பார்த்த பின்னர்...எனது அவதானம் இதுவாகும்!

ஐன்ஸ்டீனுடன் ஒப்பீடு செய்து அவரை இழிவுபடுத்தியது கடும் கண்டனத்துக்கு உரியது!

வஞ்சப் புகழ்ச்சிகள் மற்றவர்களை இழிவுபடுத்தாமல் அமையவேண்டும்!
தமிழினம் நீதியைப் பெற தற்காலத்தில் நேரடியான கருத்துக்களே பெரிதும் உதவும்.

தமிழின அழிப்பில் ஈடுபடும் சிங்கள-பௌத்த இராணுவப் பயங்கரவாதக் கும்பலை தமிழ் மண்ணில் அனுமதிக்க தமிழர்கள் தயாரில்லை!

15 hours ago, போல் said:

வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் போடும் அனைத்து தாளங்களுக்கும் இராணுவத்தினர் ஆடத் தயாரில்லை என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

வடக்கு முதல்வரின் தாளத்துக்கு மகேஷ் சேனநாயக்க போன்ற போர்க்குற்றவாளிகள் குடிபோதையிலும் கூட பைலா ஆடமுடியாது! ஒன்றில் அவர் சிறைக்கம்பிகளை எண்ணவேண்டும் அல்லது மின்சார நாற்காலியில் அமரவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.