Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களை, முஸ்லிம்களிடம் இருந்து மீட்க போராட்டம் – கருணா கொக்கரிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகா­ணத்தில் முஸ்­லிம்­களின் ஆதிக்கம் மேலோங்­கிச்­செல்­வதால் அதனை மீட்கும் போராட்­டத்தில் இணை­யு­மாறு முன்னாள் பிர­தி­ய­மைச்­சரும் தமிழர் ஐக்­கிய சுதந்­திர முன்­ன­ணியின் தலை­வ­ரு­மான விநா­ய­க­மூர்த்தி முர­ளி­தரன் (கருணா அம்மான்) தமி­ழர்­க­ளுக்கு அழைப்பு விடுத்­துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் ரணில் அரசும் கிழக்கை முஸ்­லிம்­க­ளுக்கு தாரை­வார்ப்­பதில் உறு­தி­யாக உள்­ளன. இதற்­கெல்லாம் ஒரு முடிவு கட்ட வேண்­டு­மென்றால் தமி­ழர்­க­ளா­கிய நாங்கள் வேறு­பா­டின்றி ஒற்­று­மைப்­பட வேண்டும். குறிப்­பாக வரு­கின்ற கிழக்கு மாகாண தேர்­தலில் தேசியம் என்று பேசி ஏமாற்­று­கின்ற தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பை தூக்கி எறிந்துவிட்டு ஒரு தமிழ் முத­ல­மைச்­சரை உரு­வாக்­கு­வ­தற்கு கிழக்கு தமிழ் சமூகம் முன்­வ­ர­வேண்டும் என்றும் அவர் கூறி­யுள்ளார்.

நேற்­றைய தினம் அவர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் தெரி­விக்­கையில், நல்­லாட்சி என்று கூறிக்­கொண்டு பொய் ஆட்­சியும் அடா­வடி ஆட்­சியும் நடத்தும் இந்த அர­சாங்­கத்தின் அடா­வ­டித்­தனம் நாளுக்கு நாள் கூடிக்­கொண்டே போகின்­றது. இந்த ஒரு மாத காலப்­ப­கு­திக்குள் மூன்று சூட்டுச் சம்­ப­வங்கள் இடம்­பெற்­றுள்­ளன. வடக்­கிலே இரு­வரும், மட்­டக்­க­ளப்பில் ஆற்று மணல் ஏற்­றிய ஒரு இளை­ஞனும் சுட்­டுக்­கொல்­லப்­பட்­டுள்­ளனர். தமிழ்­மக்கள் வர­லாற்றில் ஒரு­க­றை­ப­டிந்த நாள் 1983 யூலை இன்­றைய தின­மாகும். அன்­றைய ஜே.ஆர்.ஜய­வர்­த­னவின் ஐக்­கிய தேசியக் கட்சி அர­சாங்கம் தமிழ் மக்கள் மீது இனப்­ப­டு­கொ­லையை நடத்தி மூவா­யிரம் அப்­பாவி தமிழ்­மக்­களை படு­கொலை செய்த நாள் இது­வாகும். தற்­போ­தைய ஐக்­கிய தேசியக் கட்­சியின் அர­சாங்­கமும் இதை மீண்டும் ஆரம்­பித்து விடுமோ என்ற அச்சம் வட­கி­ழக்கில் ஏற்­பட்­டுள்­ளது.

நீதி­பதி இளஞ்­செ­ழியன் மீது மேற்­கொள்­ளப்­பட்ட கொலை முயற்சி பாரிய சந்­தே­கத்தை உரு­வாக்­கி­யுள்­ளது. அர­சுக்கு வக்­கா­லத்து வாங்கும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இதை கண்டும் காணாமல் இருந்து வரு­கின்­றது. இன்­றைய நாள்தான் கடந்த 1983 ஆம் ஆண்டு பல இளை­ஞர்­களின் தலை­வி­தியை மாற்­றி­ய­மைத்த நாள். நானும் அதற்கு விதி விலக்­கல்ல. பல கற்­ப­னை­க­ளுடன் கல்­வியும் வீடும் என்­றி­ருந்த எங்­களை புத்­த­கங்­களை வீசி எறிந்து விட்டு அரச பயங்­க­ர­வா­தி­க­ளுக்கு எதி­ராக ஆயுதம் ஏந்­தச்­செய்த நாள். அன்­றி­ருந்த இளை­ஞர்கள் இயக்க வேறு­பா­டின்றி தமிழ் மக்­க­ளுக்கு ஆயுதப் போராட்­டம்தான் விடிவைத் தரும் என்று நம்பிப் புறப்­பட்­டார்கள்.பின்பு பல இழப்­புக்கள், சூழ்ச்­சிகள், தலைமைப் போட்­டிகள், சகோ­தரப் படு­கொ­லைகள் என்­றெல்லாம் எமது போராட்டம் சிக்­குண்டு முள்­ளி­வாய்க்­கா­லுடன் முடி­விற்கு வந்து நிற்­கின்­றது. வேட்டி கேட்­டுப்போய் கோவ­ணமும் இல்­லாமல் வந்த கதை­யா­கவே தமி­ழர்­களின் தலை விதி மாறி­யுள்­ளது. இன்றும் போட்­டியும் பொறா­மையும் பிர­தேச வாதமும் தமிழ் தல­மை­க­ளிடம் மாற­வில்லை.

அதேபோல், கிழக்கில் முஸ்லிம் ஆதிக்கம் மேலோங்­கி­யி­ருக்­கி­றது. அத்­துடன், வடக்கில் தலைமைப் போட்­டிகள் என தமிழ் சமூகம் சிக்கித் தவிக்­கின்­றது. இதிலிருந்து எமது சமூ­கத்தை விடு­விக்க வேண்­டு­மானால் பழ­மை­வாத சுய­நல அர­சி­யல்­வா­தி­களை தூக்கி எறிந்து விட்டு துணிச்சல் மிக்க புது­மை­யான அர­சியல் தல­மை­களை எமது இளைஞர் சமூகம் உரு­வாக்க வேண்டும். இன்னும் சம்­பந்தர், மாவை போன்ற சுய­நல அர­சி­யல்­வா­தி­க­ளுக்குப் பின்னால் சென்றால் எஞ்சி இருக்கும் எமது தமிழினத்தை நாம் அக­ரா­தி­யில்தான் தேடிப் பார்க்க வேண்­டி­வரும். அவர்­களும் தீர்வை பெற்றுத் தருவோம் என்று கூறிக் கூறி இந்த காட்­டு­மி­ராண்டி அர­சுடன் துணை போய்க்­கொண்டு சுக­போ­கங்­களை அனு­ப­வித்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் ரணில் அரசும் கிழக்கை முஸ்­லிம்­க­ளுக்கு தாரை­வார்ப்­பதில் உறு­தி­யாக உள்­ளார்கள். இதற்­கெல்லாம் ஒரு முடிவு கட்ட வேண்­டு­மென்றால் தமி­ழர்­க­ளா­கிய நாங்கள் வேறு­பா­டின்றி ஒற்­று­மைப்­பட வேண்டும். குறிப்­பாக வரு­கின்ற கிழக்கு மாகாண தேர்­தலில் தேசியம் என்று பேசி ஏமாற்­று­கின்ற தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பை தூக்கி எறிந்து விட்டு ஒரு தமிழ் முத­ல­மைச்­சரை உரு­வாக்­கு­வ­தற்கு கிழக்கு தமிழ் சமூகம் முன்­வ­ர­வேண்டும். இதற்­கான பாதையை நாம் வடி­வ­மைத்­துள்ளோம். தனி­யொரு மாற்று தமிழ் சக்­தி­யாக தனித்து போட்­டி­யி­ட­வுள்ளோம். இதில் வேறு­பா­டில்­லாமல் கிழக்கு வாழ் தமிழ் மக்களை எங்களின் பின்னால் அணிதிரளும்படி அன்பாக வேண்டிக்கோள்கின்றேன். இது வெறும் பதவிக்கோ புகழுக்கான போராட்டம் அல்ல தமிழர்களை முஸ்லிம்களிடம் இருந்து மீட்பதற்கான போராட்டம். இந்தப் போராட்டத்திற்கு வடக்கு வாழ் தமிழ் மக்களும் குறிப்பாக புலம்பெயர்ந்து வாழும் எங்கள் உறவுகளும் எங்களுக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்கும்படி பணிவாக வேண்டிக்கொள்கின்றேன் என்றார்.

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

முழு விபரம்: http://www.akuranatoday.com/news/?p=150948 .

Edited by colomban

வட கிழக்கில் முஸ்லிம்களின் திட்டமிட்ட கபளீகர செயல்கள் நிறுத்தப் படா விட்டால் தமிழர்கள் கருணா போன்ற குழுக்களின் பின்னால் கூட அணிதிரள்வார்கள். இது இரு தரப்பிற்கும் நல்லதல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, colomban said:

. இந்தப் போராட்டத்திற்கு

 1- வடக்கு வாழ் தமிழ் மக்களும்

குறிப்பாக

2- புலம்பெயர்ந்து வாழும் எங்கள் உறவுகளும் எங்களுக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்கும்படி பணிவாக வேண்டிக்கொள்கின்றேன் என்றார்.

என்ன  

 1- தானே  துரத்தியவர்களிடமும்

2 - வந்து  வாங்கிக்கட்டிக்கொண்டு வாழமுடியாது  என அடித்து துரத்தியவர்களிடமும் வேண்டுகிறார்??

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Alternative said:

வட கிழக்கில் முஸ்லிம்களின் திட்டமிட்ட கபளீகர செயல்கள் நிறுத்தப் படா விட்டால் தமிழர்கள் கருணா போன்ற குழுக்களின் பின்னால் கூட அணிதிரள்வார்கள். இது இரு தரப்பிற்கும் நல்லதல்ல.

ஹிஸ்புல்லாவின் வீடியோ தம்பட்டம். றிசாடின் அடாவடி... தூசனப் பிக்கரின் அனுதாபம்.... கருணாவை எழும்பி உக்கார வைத்ததில் ஆச்சரியம் இல்லை.... 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Alternative said:

வட கிழக்கில் முஸ்லிம்களின் திட்டமிட்ட கபளீகர செயல்கள் நிறுத்தப் படா விட்டால் தமிழர்கள் கருணா போன்ற குழுக்களின் பின்னால் கூட அணிதிரள்வார்கள். இது இரு தரப்பிற்கும் நல்லதல்ல.

தமிழர்கள் நீதி, நியாயம் தவறிச் செயற்படமாட்டார்கள். அப்படிச் செயற்பட்டிருந்தால் இன்று தமிழீழத்தில் சுதந்திரமாக வாழ்ந்திருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விடயத்தில் கருணாவை
நான் ஆதரிக்கின்றேன்.
கருணா புலிகளில் பலமாக இருந்த காலத்தில்
முஸ்லிம்கள் எப்படி இருந்தனர் என்பது
அனைவருக்கும் நினைவிருக்கும்

பல ஆயிரம் இராணுவத்தினரை கொன்ற
கருணாவை சிங்கள அரசு
தன் நண்பனாக்கியது அரசியல்

அதே அரசியலை நாம் இங்கு
கடைப்பிடிப்போம்
அது தான் சமயோசிதமும் ஆகும்

  • கருத்துக்கள உறவுகள்

கருணா ஒரு ஆணியும் புடுங்க வேணாம்...
எனி வெய்ஸ் .. ஆணிய புடுங்கும் அளவுக்கும் கூட உங்களுக்கு சக்தி, தெம்பு, முதுகெலும்பு  இருக்கா என்ன !!

அது சரி.. கோழி தானே கொக்கரிக்கும் ..கருணா எதுக்கு 

Edited by Sasi_varnam

  • கருத்துக்கள உறவுகள்

அம்மான் தமிழர்களின் உரிமைகளை நிலைநாட்ட போராட வெளிக்கிட்டு எல்லாவற்றையும் இழக்க வைத்துவிட்டார். அவரும் தன்மானத்தையும் வீரத்தையும் இழந்து பல வருடங்களாகின்றது. இனி அவரால் வெறும் வாயால் வடைகூடச் சுடமுடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

அம்மான் தமிழர்களின் உரிமைகளை நிலைநாட்ட போராட வெளிக்கிட்டு எல்லாவற்றையும் இழக்க வைத்துவிட்டார். அவரும் தன்மானத்தையும் வீரத்தையும் இழந்து பல வருடங்களாகின்றது. இனி அவரால் வெறும் வாயால் வடைகூடச் சுடமுடியாது.

வடை சுடுராரோ இல்லையோ... சவுண்டு குடுக்குறது நல்லது.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
36 minutes ago, Nathamuni said:

வடை சுடுராரோ இல்லையோ... சவுண்டு குடுக்குறது நல்லது.

 

சவுண்டு குடுக்கிற மாதிரி குடுத்து உசுப்பேத்திப்போட்டு......

இடையிலை விட்டுட்டு ஓடிப்போய் அவங்கடை பக்கம் நிண்டுட்டால்????????:cool:

Edited by குமாரசாமி
ப்

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

சவுண்டு குடுக்கிற மாதிரி குடுத்து உசுப்பேத்திப்போட்டு......

இடையிலை விட்டுட்டு ஓடி அவங்கடை பக்கம் போய் நிண்டுட்டால்????????:cool:

அவர் நிற்பார்.... அவரை கொழும்பு கொண்டோடினது அவையளின்ட ஆக்கள் தானே.

ஆனா, இந்த சவுண்டு கொடுக்கிறதால, படுத்துக் கிடந்த அம்மான் என்ன எழும்பி நின்று பொங்கிறார், என்ற விளம்பரத்தால்.  அடாவடிக் கோஸ்ட்டிகள் வெளையாட்டுக்கள் வெளியால தெரியுமெல்லோ. :cool:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 minutes ago, Nathamuni said:

அவர் நிற்பார்.... அவரை கொழும்பு கொண்டோடினது அவையளின்ட ஆக்கள் தானே.

ஆனா, இந்த சவுண்டு கொடுக்கிறதால, படுத்துக் கிடந்த அம்மான் என்ன எழும்பி நின்று பொங்கிறார், என்ற விளம்பரத்தால்.  அடாவடிக் கோஸ்ட்டிகள் வெளையாட்டுக்கள் வெளியால தெரியுமெல்லோ. :cool:

பெண்ணுக்கும்   பொன்னுக்கும் அடங்குபவர் என்பது கருணா என்ற பெயர் கொண்டோரின் சுபாவம்....
அடிப்படலையிலும் நடந்தது...அயல் நாட்டிலும் அஃதே.tw_blush:

Edited by குமாரசாமி
பொண்ணுக்கும்-பொன்னுக்கும்

கள்ளக் காணிகளில் இருந்து அனைத்து முஸ்லிம்களையும் விரட்ட யார் முயன்றாலும் பார்த்து ரசிப்பதில் தவறில்லை!

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாத்தையும் கெடுத்து நாசமாக்கிட்டு.. இப்படி வெறுமனையா நின்று கொக்கரிக்க மட்டும் தான் சிலரால் எனி முடியும். எதனையும் எனி சாதிக்க முடியாது.

இவர்களின் வேடம் இப்ப எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சு. எனி என்ன வேடம் போட்டாலும்.. பழைய மரியாதை கிடைக்காது. நடையக் கட்டுங்க.

இவருக்கு ஒரு நப்பாசை.. சனம் பழைய மாதிரி தன்னை தலையில தூக்கி வைச்சு கொண்டாடும் என்று. அது தலைவருக்கு பக்கத்தில இருந்த காலத்தோடு முடிஞ்சு போச்சு. இப்ப இவரை தெருவில போற நாயும் மதிக்கிறதில்லை. இவர் எனி கொக்கரிச்சென்ன.. சொறிஞ்சென்ன. தானே தன்னைக் காட்டிக்கொடுத்து கெடுத்துக் கொண்டோருக்கான உதாரணமாகிவிட்டார்.. அவ்வளவும் தான். நம்பி வந்த போராளிகளுக்கும்.. நம்பி நின்ற மக்களுக்கு செய்த துரோகங்களுக்கு.. இவர்களை அவர்களின் மனச்சாட்சியே கொன்றழிக்கும்.  :rolleyes:tw_angry:

 

சொந்த தாய்க்கு சொந்த இனத்துக்கு விசுவாசம் இல்லாதவன்.. கூட்டிக் கொண்டு போய் சிங்களவனிடம் விட்ட முஸ்லீம்களுக்கு எப்படி விசுவாசமாக இருப்பான். கூட்டிக் கொண்டு போய் விட்டவை நினைச்சுப் பாருங்க. tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.