Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காதலருடன்  ஓடப் போகிறேன்: தாலி கட்டிய கையோடு... மணமகனிடம், கூறிய மணமகள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

A wedding that ends in violence

காதலருடன்  ஓடப் போகிறேன்: தாலி கட்டிய கையோடு.... மணமகனிடம், கூறிய மணமகள்.

கேரளாவில் திருமணம் முடிந்த கையோடு காதலனுடன் செல்லப் போவதாக மணமகள் மணமகனிடம் தெரிவித்ததை அடுத்து கைகலப்பு ஏற்பட்டது.

கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள கொடுங்கல்லூரை சேர்ந்த சதீசன் மகன் ஷிஜில் என்பவருக்கும், முல்லசேரியை சேர்ந்த ஹரிதாஸ் மகள் மாயாவுக்கும் குருவாயூர் கோவிலில் திருமணம் நடந்தது.

மாப்பிள்ளை தாலி கட்டிய பிறகு அனைவரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். அப்போது மணமகளோ தனது கணவரிடம் தூரத்தில் நிற்கும் வாலிபரை காட்டி அவர் தான் தனது காதலர் என்றும், அவருடன் செல்லப் போவதாகவும் கூறினார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைய ஷிஜில் தனது பெற்றோரிடம் விஷயத்தை தெரிவித்தார். இரு வீட்டாருக்கும் இடையே இது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இரு வீட்டாரையும் சமாதானம் செய்து வைத்தனர். திருமணத்திற்கான செலவு ரூ.15 லட்சத்தை திருப்பித் தருமாறு மாப்பிள்ளை வீட்டார் கேட்டனர்.

ஒரு மாதத்தில் ரூ. 8 லட்சம் தருவதாக பெண் வீட்டார் கூறினர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

நன்றி தற்ஸ்  தமிழ்.

  • கருத்துக்கள உறவுகள்

கட்டிட்டு.. கள்ளமாக காதலனுடன் குடும்பம் நடத்துவதிலும்.... இது பறுவாயில்லை தானே. இந்த உலகம் போற போக்கைப் பார்த்தா..??!  சிரிக்கிறதா.. அழுவுறதான்னே புரியல்ல. tw_blush::rolleyes:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nedukkalapoovan said:

கட்டிட்டு.. கள்ளமாக காதலனுடன் குடும்பம் நடத்துவதிலும்.... இது பறுவாயில்லை தானே. இந்த உலகம் போற போக்கைப் பார்த்தா..??!  சிரிக்கிறதா.. அழுவுறதான்னே புரியல்ல. tw_blush::rolleyes:

காதலுடன் ஓடப்  போகின்றேன் என்பதை....
தாலியை... கட்ட  முதல் சொல்லியிருக்கலாம் தானே.... :shocked:
மாப்பிள்ளைக்கு... அந்த மணவறையில் வைத்தே,
வேறு ஒரு பெண்ணுக்கு, திடீ ர் கலியாணம் செய்து வைத்திருப்பார்கள். tw_heartbreak:

இப்ப,  தாலியும் போய்....  கலியாண வீட்டு செலவு  15 லட்சமும்  போயிட்டுது. tw_tired:
பொம்பிளை பகுதி, அந்தக் காசை திருப்பிக் கொடுப்பார்கள் என்று நான் நம்பவில்லை. tw_glasses:

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, nedukkalapoovan said:

கட்டிட்டு.. கள்ளமாக காதலனுடன் குடும்பம் நடத்துவதிலும்.... இது பறுவாயில்லை தானே. இந்த உலகம் போற போக்கைப் பார்த்தா..??!  சிரிக்கிறதா.. அழுவுறதான்னே புரியல்ல. tw_blush::rolleyes:

கரையேறிய பின் இதுவும் கதைப்பியள் இன்னமும் கதைப்பியள்:10_wink:

  • கருத்துக்கள உறவுகள்

தாலிகட்டியவரின் காதில் கொஞ்சம் உரிமையோடு சொல்லி இருக்கிறார் என்றால் 
காலியான வீட்டுக்கு முன்பு தாலி கட்டியவருக்கும் ஒரு சந்தர்ப்பம் வாழ்வதட்காக 
வழங்கப்பட்டு இருக்கிறது என்றுதான் நான் நினைக்கிறேன்.

இதில் (முன்னாள்) இந்நாள் காதலன் தாலி கட்டிய இருவரும் ஏமாந்து இருப்பதாகவே 
எனக்கு தெரிகிறது.
இவ்வளவு துணிவு உள்ள பெண் வேண்டுமானால் எப்போதோ ஓடியிருக்கலாம்.
அப்படி ஓடாது .......... தாலி கட்டும்வரை இருந்ததில் இருக்கும் மர்மம் 
மர்மமாகவே இருக்கிறது.

காலியான வீட்டுக்கு போனவர்களுக்கு உணவு கிடைத்ததா ?
எப்படியோ சமையல் முடிந்து இருக்கும் ... வீணாக கொட்டாமல் 
அதை விருந்துணருக்கு அளித்துஇருக்கலாம் என்பது எனது எண்ணம். 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரேயடியா அந்தப் பெண்ணில் பிழை சொல்லக்கூடாது. காரணம், கலியாணத்துக்கு காதலனும் துணிவாக வந்திருக்கிறார். அவர் அந்தப் பெண்ணை பிளாக்மெயில் கூடப் பண்ணியிருக்கலாம்.( நெருக்கமாய் இருந்தபடங்கள், கடிதங்கள் வைத்து). ஆனாலும் பெண் கடைசிவரை நினைத்திருக்கலாம் அவன் இங்கு வரமாட்டான் என்று.தாலி கட்டியபின் நிமிர்ந்தால் எதிரே நிக்கிறான் பாவி. அந்தப் பிள்ளைதான் என்ன செய்யும்.எல்லோர் முன்னாலும் நிர்வாணமாய் நிற்பதைவிட அவமானம் பரவாயில்லை என்று நினைத்திருக்கலாம்....!

லாஜிக்கா பார்த்தாலும்: அவாவை பாருங்கள் சுமார் 70 kg இருப்பா, நகை நட்டு 30 kg மேல் கிடக்குது, கூறை 15 kg மல்லிகை 5 kg தூக்கிட்டு ஓட முடியுமா, கற்பனைக்கும் ஒரு அளவு வேண்டாம்....! tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, suvy said:

ஒரேயடியா அந்தப் பெண்ணில் பிழை சொல்லக்கூடாது. காரணம், கலியாணத்துக்கு காதலனும் துணிவாக வந்திருக்கிறார். அவர் அந்தப் பெண்ணை பிளாக்மெயில் கூடப் பண்ணியிருக்கலாம்.( நெருக்கமாய் இருந்தபடங்கள், கடிதங்கள் வைத்து). ஆனாலும் பெண் கடைசிவரை நினைத்திருக்கலாம் அவன் இங்கு வரமாட்டான் என்று.தாலி கட்டியபின் நிமிர்ந்தால் எதிரே நிக்கிறான் பாவி. அந்தப் பிள்ளைதான் என்ன செய்யும்.எல்லோர் முன்னாலும் நிர்வாணமாய் நிற்பதைவிட அவமானம் பரவாயில்லை என்று நினைத்திருக்கலாம்....!

லாஜிக்கா பார்த்தாலும்: அவாவை பாருங்கள் சுமார் 70 kg இருப்பா, நகை நட்டு 30 kg மேல் கிடக்குது, கூறை 15 kg மல்லிகை 5 kg தூக்கிட்டு ஓட முடியுமா, கற்பனைக்கும் ஒரு அளவு வேண்டாம்....! tw_blush:

ஏன் பெற்றோர் கூட அந்தப்பெண்ணை வற்புறுத்தி அழைத்து வந்திருக்கலாம்.  எப்படியோ அந்தப்பெண் தான் விரும்பியவருடன் இணைந்ததில் மகிழ்ச்சி .

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனி ஒருவன் said:

கரையேறிய பின் இதுவும் கதைப்பியள் இன்னமும் கதைப்பியள்:10_wink:

தனி ஒருவனாக இருக்கும் போது தான் கரை சேர்ந்திருந்தம். இப்ப தத்தளிக்கிறம். 

எல்லாரும்.. கடலுக்குள் இறங்கும் வரை தான் கரையில்.. இறங்கினாப் பிறகு.. தத்தளிப்புத் தான். நாங்க பறுவாயில்லை.. நீச்சலாவது அடிச்சுக்குவம். tw_blush:

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, Maruthankerny said:

தாலிகட்டியவரின் காதில் கொஞ்சம் உரிமையோடு சொல்லி இருக்கிறார் என்றால் 
காலியான வீட்டுக்கு முன்பு தாலி கட்டியவருக்கும் ஒரு சந்தர்ப்பம் வாழ்வதட்காக 
வழங்கப்பட்டு இருக்கிறது என்றுதான் நான் நினைக்கிறேன்.

இதில் (முன்னாள்) இந்நாள் காதலன் தாலி கட்டிய இருவரும் ஏமாந்து இருப்பதாகவே 
எனக்கு தெரிகிறது.
இவ்வளவு துணிவு உள்ள பெண் வேண்டுமானால் எப்போதோ ஓடியிருக்கலாம்.
அப்படி ஓடாது .......... தாலி கட்டும்வரை இருந்ததில் இருக்கும் மர்மம் 
மர்மமாகவே இருக்கிறது.

காலியான வீட்டுக்கு போனவர்களுக்கு உணவு கிடைத்ததா ?
எப்படியோ சமையல் முடிந்து இருக்கும் ... வீணாக கொட்டாமல் 
அதை விருந்துணருக்கு அளித்துஇருக்கலாம் என்பது எனது எண்ணம். 

பந்தி முடியும் மட்டுமாவது கிறுக்குபுடிச்சவள் அமசடக்காய் இருந்திருக்கலாம் எண்டு ஐயா சொல்ல வாறார். :grin:

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, nedukkalapoovan said:

தனி ஒருவனாக இருக்கும் போது தான் கரை சேர்ந்திருந்தம். இப்ப தத்தளிக்கிறம். 

எல்லாரும்.. கடலுக்குள் இறங்கும் வரை தான் கரையில்.. இறங்கினாப் பிறகு.. தத்தளிப்புத் தான். நாங்க பறுவாயில்லை.. நீச்சலாவது அடிச்சுக்குவம். tw_blush:

 

நாங்கள் அந்த கரயின் நுரையில் கிடந்தாவது தத்தளிப்பம் என்ன செய்றது விதி வலியது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.