Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் பயங்கரவாதம் அழிக்கப்படவில்லை ; பொலிஸ்மா அதிபர் யாழில் தெரிவிப்பு

Featured Replies

இலங்கையில் பயங்கரவாதம் அழிக்கப்படவில்லை ; பொலிஸ்மா அதிபர் யாழில் தெரிவிப்பு

 

 

இலங்கையில் முப்பதாண்டுகளாக காணப்பட்ட பயங்கரவாதமானது முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டது எனக் கூறினாலும் அதனை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என இலங்கை பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர தெரிவித்தார்.

pujitha-jayasundara-jaffna.jpg

இன்றைய தினம் யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றுவரும் சிவில் பாதுகாப்பு குழுக்கள் உடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அவ்வாறு முடிவுக்கு கொண்டுவரப்படாத பயங்கரவாதம் எங்கோ ஒரு மூலையில் முளைத்துக்கொண்டு தான் இருக்கின்றது எனவும் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/22597

8 minutes ago, நவீனன் said:

இலங்கையில் பயங்கரவாதம் அழிக்கப்படவில்லை ; பொலிஸ்மா அதிபர் யாழில் தெரிவிப்பு

சொறிலங்காவில் சிங்கள அரச பயங்கரவாதம் இன்னும் அழிக்கப்படவில்லை என்பதே உண்மை.

நெடுக்காலபோவான் கூறியபடி இந்த அரச பயங்கரவாதத்தை அழிக்க வேண்டிய பொறுப்பு சர்வதேசத்தின் கைகளில் உள்ளது.

இதை சர்வதேசம் செய்யும்படி தூண்ட வேண்டியது புலம்பெயர் தழிழர்களின் கைகளில் தான் தங்கியுள்ளது. அத்துடன் இவர்கள், சர்வதேசத்தின் பொறுப்பை சுட்டிக்காட்டும் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் முயற்சிகளை பலப்படுத்துவதும் அவசியமாகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

30 ஆண்டுகளுக்கு முன் இலங்கையில் பயங்கரவாதமே இல்லாது பாலும் தேனும் ஓடியதா....? ஆம் பாலும் தேனும் ஓடியது.! அது வட கிழக்கில் மட்டுமே.!! அன்று இலங்கைக் காவல்துறையில் இருந்த தமிழர்களால் வடகிழக்கு கட்டுப்பட்டிருந்தது.

  • தொடங்கியவர்

வடக்கில் பயங்கரவாதம் மீண்டும் விதைகளில் இருந்து முளைக்கின்றது – காவற்துறைமா அதிபர்.

01-3.jpg

 

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

வடக்கில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க நினைப்பவர்களின் எண்ணம் ஒரு போதும் ஈடேற அனுமதிக்க மாட்டேன் என காவற்துறைமா அதிபர் பூஜித ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

 
யாழ் மாவட்டத்தில் அண்மைக்காலமாக அதிகரித்துள்ள குற்றச்செயல்கள், காவற்துறையினர் மீதான தாக்குதல்களை கட்டுப்படுத்தும் நோக்குடன் காவற்துறையினர் , இராணுவத்தினர் மற்றும் யாழ் மாவட்ட சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்களுக்கிடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர தலைமையில் யாழ் தலைமை காவல்  நிலையத்தில் இன்று காலை இடம்பெற்றது.
 
 
அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,
 
நாட்டில் அமைதி இல்லை, சமாதானம் இல்லை, சட்டம் ஒழுங்கு சீராகஇல்லை என வெளி உலகிற்கு காட்டுவதை இலக்காக கொண்டு சில சிறிய குழுக்கள் இயங்கி சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து வருகின்றது.
 
 
அதனை கட்டுப்படுத்த முதல் கட்டமாக ரோந்துப்பணிகளை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தேவை ஏற்படும் பட்சத்தில் இராணுவத்தினர் கடற்படையினர் வான்படையினர் மற்றும் விசேட அதிரப்படையினரையும் இணைத்து செயற்படுவோம்.
 
சிவில் பாதுகாப்பு குழு மற்றும் பொது மக்களின் பூரண ஒத்துழைப்பை தாம் இவ்விடயத்தில் எதிர் பார்கின்றோம்.  குற்றச்செயல்கள் மற்றும்  சட்டவிரோத செயற்பாடுகள் குறித்த தாம் அறிந்த தகவல்களை காவற்துறையினருக்கு வழங்க பொதுமக்கள் சிவில் பாதுகாப்பு குழுவினர் முன் வர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
 
 
பயங்கரவாதம் முளைக்கின்றது. 
 
உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு, இலட்சக்கணக்கான ஆயுதங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன. ஆனாலும் ஆயுதப் பயிற்சி பெற்றவர்கள் சமூகத்தில் இன்னமும் இருக்கின்றனர். அவர்களது மனப்பாங்கு இன்னமும் மாறவில்லை. அதனால், நாட்டில் பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. என கூறமுடியாது. பயங்கரவாதம் தற்போது விதைகளில் இருந்து  முளைத்துக்கொண்டு தான் இருக்கின்றது.
 
இவ்வாறு தான் ஆரம்ப காலத்தில் ஆயுதப் போராட்டம் வளர்ந்தது. இதனைத் தொடர்ந்து அனுமதிக்க முடியாது. என தெரிவித்தார்.
 
01-1-1.jpg
 
 
01-2.jpg
 
01-4.jpg
 

http://globaltamilnews.net/archives/35097

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள அரச இயந்திரம் தான் நினைத்தவாறே எல்லாவற்றையும் சரியாகச் செய்கின்றது.
நாங்கள் தமிழர்கள் தான் இன்றும் இழித்தவாயர்களாக நிற்கின்றோம்

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாத உச்சரிப்பு பல பேருக்கு பல வருடங்களாக பிழைப்புக் கொடுத்தது. அதை அவ்வளவு இலகுவில் இவர்கள் அழிய விடமாட்டார்கள். முளையில இருந்தில்ல.. புத்தருக்குள்ள இருந்தும்.. பயங்கரவாதத்தை முளைப்பிப்பான் சிங்களவன். அவ்வளத்துக்கு தமிழர்கள் மீது அடக்குமுறையை வன்முறையை ஆக்கிரமிப்பை பிரயோகிக்க.. அதன் வழி சொந்தப் பிழைப்புக்களை பார்த்துக்க.. என்று பல வழிகளில்.. அது ருசி காட்டிவிட்டது.. சும்மாவா.. 35.. 40 வருடங்கள்... உதே உச்சரிப்புத்தானே.

இதை உச்சரிச்சுக் காட்டி.. உதவிகள் வழங்கி  சிங்களவனை இன்னும் இன்னும் சுகபோகிப்புக்கு உசுப்பேத்தின.. அமெரிக்கா தலைமையிலான மேற்குலக சர்வதேசம் தான்.. தமிழ் மக்களுக்கு இப்போ.. பரிகாரம் காண வேண்டிய கடப்பாட்டைக் கொண்டுள்ளார்கள். :rolleyes:tw_angry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Quote

இலங்கையில் பயங்கரவாதம் அழிக்கப்படவில்லை ; பொலிஸ்மா அதிபர் யாழில் தெரிவிப்பு

ஒட்டுக்குழுக்களின்ரை மோட்டச்சையிக்கிள் வீச்சருவாள் விளையாட்டு.....பொம்பிளைப்பிரச்சனையிலை வாற கத்திக்குத்து எல்லாத்தையும் இவர் பயங்கரவாதம் எண்டு சொல்லுறாரோ தெரியேல்லை...

  • கருத்துக்கள உறவுகள்

 எல்லாப்புகழும் மஹிந்தவையே  சாரும். அழித்தவரும், வளப்பவரும், காப்பவரும், இயற்றுபவரும் அவரே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.