Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் ஹாவா குழு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது – காவல்துறை மா அதிபர்

Featured Replies

யாழில் ஹாவா குழு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது – காவல்துறை மா அதிபர்

யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்த ஹாவா குழு முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக  காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுதந்தர தெரிவித்துள்ளார்.

இந்தக் குழுவின் தலைவர் உள்ளிட்ட 12 உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர் இந்தக் குழுவுடன் தொடர்புடைய இரண்டு முக்கிய உறுப்பினர்கள் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

கைது செய்பய்பட்டவர்களில் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி போராளிகள் சிலர் உள்ளடங்குவதாகவும் இந்தக் குழுவினர் தமிழ் புலம்பெயர் சமூகத்துடன் பேணி வரும் உறவுகள் குறித்தும் விசாரணை நடத்தப்பட உள்ளதாகவும்  மா அதிபர் பூஜித் ஜயசுதந்தர தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/archives/36053

துன்னாலை வீரத்தமிழர் புண்ணியத்தில் சிங்கள அரச பயங்கரவாதிகள் தாங்கள் இயக்கிய சிலருடன் சம்பந்தமே இல்லாதவர்களையும் சேர்த்து  தாங்களே கைதுசெய்து நாடகமாடுகின்றனர்.

நடுநிலையான சர்வதேச விசாரணை நடைபெற்றால் மட்டுமே உண்மைகள் வெளிவரும் சாத்தியம் உண்டு.

 

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு யாழில் தடை செய்யபட்ட இணையத்தில் இந்த ஆவா குழு முக்கியஸ்தர்கள் உள்ள படம் போடபட்டுள்ளது அவர்கள் இன்னும் பிடிபடவில்லை அப்ப யாரை பிடிச்சிருக்கினம் ?

1 hour ago, நவீனன் said:

யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்த ஹாவா குழு முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக  காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுதந்தர தெரிவித்துள்ளார்.

இவர் எதோ தன்ர கைல இருக்கிற சுவிட்ச்சை ஓஃப் செய்துட்டன் என்ட மாதிரி தெளிவா சொல்றார்!

இனி எப்ப ஓன் செய்வார் என்டும் சொல்லிட்டா நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Rajesh said:

இவர் எதோ தன்ர கைல இருக்கிற சுவிட்ச்சை ஓஃப் செய்துட்டன் என்ட மாதிரி தெளிவா சொல்றார்!

இனி எப்ப ஓன் செய்வார் என்டும் சொல்லிட்டா நல்லது.

வடபகுதிக்கு பொலிஸ் அதிகாரங்கள் தேவை என் தமிழ் தலைவர்கள் தேர்தலில் வாக்கு கேட்கும்பொழுது மீண்டும் ஒன் செய்யப்படும்

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் வாள்வெட்டு கோஸ்டிகளின் அட்டகாசம் நீண்ட காலமாகவே பாரிய சமுகப்பிரச்சினையாகவும்  பொது நீதி நிர்வாகத்துக்கு இடைஞ்சலாகவும் இருந்ததை சிங்கள அரசு இதுவரை கண்டும் காணாமல் இருந்துவிட்டு இப்போது கட்டுக்கடங்காமல்  தறிகெட்டுப்போன கோஸ்ட்டிகள் வாளை எஜமான்பக்கம் திருப்பியபோதுதான் முப்படையையும் இறக்குவோம்  என்று சூளுரைத்து இந்த கைதுநாடகங்கள் இடம்பெறுகின்றன. இந்த கைது நடவடிக்கைகளில் ஒருகல்லில் இரண்டு மாங்காய் விழுத்தும் தைந்திரோபாயமும் கையாளப்படுகிறது. இதன் சூத்திரதாரிகள் வடமாகாண இனவெறிக் கவர்னர் கூரேயும் அவருடன் சேர்ந்தியங்கும் இராணுவ தலைமையும் ஆவர். மேலும் பற்றக்குறைக்கு தமிழ் அரச விசுவாசிகளின் அனுசரணையுடன் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த வாள்வெட்டு கோஸ்டிகளுக்கும் முன்னாள் விடுதலைப்புலி போராளிகளுக்கும் தொடர்பு உண்டு என்ற ரீதியில் கைதுகளை நடைபெறுவதால் தமிழருக்கான தீர்வு முயற்சிகளை தாமதமாக்கி சிங்கள அரசுக்கு மேலும் காலக்கெடுவை நீடிக்க வழிசமைப்பதும் ஒரு நோக்கமாகும். இந்த வாள்வெட்டுக்கோஸ்ட்டிகளை களத்தில் இறக்கியவர்களே சிங்கள இராணுவத்தலைமைகள் தான். அதற்கு தீனிபோட்டு தட்டிக்கொடுத்து வளர்த்தவர்களும் அவர்கள்தான்.

Edited by vanangaamudi

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.