Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என் உயிர்ப்பினை, உன்னிடமே விட்டுவிடுகிறேன்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: Personen, die stehen, Baum, Himmel, Pflanze, im Freien und Natur

 

என் உயிர்ப்பினை, உன்னிடமே....  விட்டு  விடுகிறேன்.

நிச்சயமாய் சொல்கிறேன் 
நிச்சலனமான நேசங்களையும் 
நிதானமாய் கிழித்துப்போடும் வரமொன்றை சாபமெனப் பெற்றவன் நான்.

என் ஏகத்துவங்களின் 
எரிதணலுக்குள் சிதையாகிப் போகும் 
நேசங்கள் குறித்து நீண்ட விவாதங்களையெப்போதும் நிகழ்த்தியதேயில்லை நான்.

பொக்கிஷமென போன்றவேண்டிய
புனிதமிகு நேசங்களை 
புழுதிக்குள் விட்டெரிந்துவிட்டு
தனித்தவன் நானென சங்கற்பம்
கொள்கிறேன்.

அசத்தியங்களின் மாயையில்
சத்தியங்களை புதைத்துக்கொண்டு
உண்மையில் பொய்மையும் 
பொய்மையில் உண்மையுமென
புலப்படா நிஜங்களில் போதிஞானம் தேடும்
சாமன்யனின் நாட்குறிப்பாய்
நகர்கிறது வாழ்வெனும் நிர்ப்பந்தம்.

என் ஏகத்துவங்கள்
ஏற்றிய சிதையில் என்னை நானே 
எரித்துக்கொண்டு 
மரணத்தின் சுவடுகளில்
உயிர்ப்பினை தூவும் உன்னிடமே
என் அஸ்த்தியைத் தருகிறேன்
கரைத்துவிடு இல்லையெனில்
உயிர்ப்பித்துவிடு உன் இஸ்டப்படியே...

 -  சுப்ரமணிய பிரபா. -

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக எழுதி இருக்கிறார்  இவரெல்லாம் இப்ப எங்க யாழில் இருந்தவர் தானே சிறியண்ண?

  • கருத்துக்கள உறவுகள்

என் ஏகத்துவங்கள்
ஏற்றிய சிதையில் என்னை நானே 
எரித்துக்கொண்டு 
மரணத்தின் சுவடுகளில்
உயிர்ப்பினை தூவும் உன்னிடமே
என் அஸ்த்தியைத் தருகிறேன்
கரைத்துவிடு இல்லையெனில்
உயிர்ப்பித்துவிடு உன் இஸ்டப்படியே...

 

சிறப்பான வரிகள், நல்ல கவிதை....!  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நன்றாக எழுதி இருக்கிறார்  இவரெல்லாம் இப்ப எங்க யாழில் இருந்தவர் தானே சிறியண்ண?

சுப்ரமணிய பிரபா.... யாழ் களத்தில்  இருந்தவாரா  ராஜா.
எந்த  ஆண்டுகளில், என்ன பெயரில் இருந்தவர் என்று தெரிந்தால், கூறுங்களேன்.

16 hours ago, suvy said:

என் ஏகத்துவங்கள்
ஏற்றிய சிதையில் என்னை நானே 
எரித்துக்கொண்டு 
மரணத்தின் சுவடுகளில்
உயிர்ப்பினை தூவும் உன்னிடமே
என் அஸ்த்தியைத் தருகிறேன்
கரைத்துவிடு இல்லையெனில்
உயிர்ப்பித்துவிடு உன் இஸ்டப்படியே...

 

சிறப்பான வரிகள், நல்ல கவிதை....!  

சில கவிதைகளை வாசிக்கும் போது... மனதை  பிழிகின்ற மாதிரி, ஒரு உணர்வு ஏற்படும். சுவி
இந்தக் கவிதையை வாசித்தவுடன் அந்த உணர்வுதான்... எனக்கும் ஏற்பட்டது.
கருத்திற்கு.... நன்றி.  

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

சுப்ரமணிய பிரபா.... யாழ் களத்தில்  இருந்தவாரா  ராஜா.
எந்த  ஆண்டுகளில், என்ன பெயரில் இருந்தவர் என்று தெரிந்தால், கூறுங்களேன்.

ஒரு  ஊகத்தில் சொன்னது ஆனால் உன்மையான தெரியாது சிறி அண்ண   இப்ப கன பேர் வருவதில்லையே 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ஒரு  ஊகத்தில் சொன்னது ஆனால் உன்மையான தெரியாது சிறி அண்ண   இப்ப கன பேர் வருவதில்லையே 

உண்மைதான்....ராஜா....
விசுகரையும்  இந்தப் பக்கம் கன நாள் காணவில்லை, 
முகப் புத்தகத்தில் நிற்கிறார். நீங்கள் சொன்னால் வருவார்.
ஆளை... ஒருக்கா.. இங்காலைப்  பக்கம் அனுப்பி விடுங்கோ..... :grin:

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, தமிழ் சிறி said:

உண்மைதான்....ராஜா....
விசுகரையும்  இந்தப் பக்கம் கன நாள் காணவில்லை, 
முகப் புத்தகத்தில் நிற்கிறார். நீங்கள் சொன்னால் வருவார்.
ஆளை... ஒருக்கா.. இங்காலைப்  பக்கம் அனுப்பி விடுங்கோ..... :grin:

நம்ம கவிதை மழையில நனைகிறார் விட்டு பிடிப்பம்  எல்லாம் தெரிந்த  முகங்கள் என்றதும் மீண்டும் திரும்ப வந்து விடுவார்  என நினைக்கிறன் 

  • கருத்துக்கள உறவுகள்
On ‎10‎/‎11‎/‎2017 at 3:26 PM, தமிழ் சிறி said:

Bild könnte enthalten: Personen, die stehen, Baum, Himmel, Pflanze, im Freien und Natur

 

என் உயிர்ப்பினை, உன்னிடமே....  விட்டு  விடுகிறேன்.

நிச்சயமாய் சொல்கிறேன் 
நிச்சலனமான நேசங்களையும் 
நிதானமாய் கிழித்துப்போடும் வரமொன்றை சாபமெனப் பெற்றவன் நான்.

என் ஏகத்துவங்களின் 
எரிதணலுக்குள் சிதையாகிப் போகும் 
நேசங்கள் குறித்து நீண்ட விவாதங்களையெப்போதும் நிகழ்த்தியதேயில்லை நான்.

பொக்கிஷமென போன்றவேண்டிய
புனிதமிகு நேசங்களை 
புழுதிக்குள் விட்டெரிந்துவிட்டு
தனித்தவன் நானென சங்கற்பம்
கொள்கிறேன்.

அசத்தியங்களின் மாயையில்
சத்தியங்களை புதைத்துக்கொண்டு
உண்மையில் பொய்மையும் 
பொய்மையில் உண்மையுமென
புலப்படா நிஜங்களில் போதிஞானம் தேடும்
சாமன்யனின் நாட்குறிப்பாய்
நகர்கிறது வாழ்வெனும் நிர்ப்பந்தம்.

என் ஏகத்துவங்கள்
ஏற்றிய சிதையில் என்னை நானே 
எரித்துக்கொண்டு 
மரணத்தின் சுவடுகளில்
உயிர்ப்பினை தூவும் உன்னிடமே
என் அஸ்த்தியைத் தருகிறேன்
கரைத்துவிடு இல்லையெனில்
உயிர்ப்பித்துவிடு உன் இஸ்டப்படியே...

 -  சுப்ரமணிய பிரபா. -

செருக்கழிந்துபோன ஒரு சாமான்ய மானுடனின் வேண்டுகோள். ஆழமான நேசிப்பைகொண்டிருந்தும் உறவை ஆணவம் பாழ் செய்திருக்கிறது. மாயைகள் விலகிய பின்னர் நேசத்தின் தேடல் என்பது கருப்பொருளின் உச்சத்தை கவிதைக்குள் செறிந்து இருக்கிறது. அருமையான கவிதை கற்பனைக்குள் திணிக்கப்படாத அனுபவம் கவியூடாக பேசுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

சிறிக்கு தான் கவிதை வராதே எப்படின்னு பார்த்தா சுட்டது.

வாலிபத்தில் இருந்து முப்பதுகளின் இடைவரைக்கும் இப்படித்தான் அனேகம் பேர் இருக்கின்றோம். பொய்யான நேசங்களை உண்மை என்று நினைத்து அதற்காக உருகிக் கொண்டும் மறுகிக் கொண்டும், கிடைக்கும் உண்மையான நேசங்களை  எமக்குள் இருக்கும் ஏகத்துவங்கள் தரும் திமிரினால் நிராகரித்துக் கொண்டும் செல்கின்றோம்.

முப்பதுகளின் முடிவிலும் நாற்பதுகளின் தொடக்கத்திலும் ஏகத்துவங்களில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி உண்மையான நேசங்களையும் உறவுகளையும் புரியத் தொடங்குகின்றோம்.

நல்ல கவிதை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, வல்வை சகாறா said:

செருக்கழிந்துபோன ஒரு சாமான்ய மானுடனின் வேண்டுகோள். ஆழமான நேசிப்பைகொண்டிருந்தும் உறவை ஆணவம் பாழ் செய்திருக்கிறது. மாயைகள் விலகிய பின்னர் நேசத்தின் தேடல் என்பது கருப்பொருளின் உச்சத்தை கவிதைக்குள் செறிந்து இருக்கிறது. அருமையான கவிதை கற்பனைக்குள் திணிக்கப்படாத அனுபவம் கவியூடாக பேசுகிறது.

கவிதாயினி... வல்வை சகாறாவே, நான் நான் ரசித்த கவிதையை... பாராட்டும் போது,
எனக்கு... இரட்டிப்பு மகிழ்ச்சி. நன்றி... சகோதரி. 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

வராது என்று ஒன்று இருக்கா சிறியண்ணா.முயற்சித்துப்பாருங்கள் கவிதை எழுத வரும்..இந்தக் கவிதையாளருக்கு நன்றிகள் பல.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

சிறிக்கு தான் கவிதை வராதே எப்படின்னு பார்த்தா சுட்டது.

ஈழப் பிரியன்ஸ்....  உங்களின், கருத்தைப் பார்த்து சிரித்து விட்டே ன். :grin:
கதை  கூட, எழுதலாம்.  கவிதையை... அழகிய நடையில் எழுதுவதற்கு... தனித்  திறமை, 
ஆண்டவனின் வரம் எல்லாம் தேவை என்றே கருதுகிறேன். 
எனக்கு அது.... இன்னும்  கிடைக்காமல் இருப்பது சோகம் தான். 
பலமுறை.... முயற்சித்து... பார்த்து, கன  பேப்பர்  குப்பைத் தொட்டிக்குள் போனது தான் நடந்தது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

வாலிபத்தில் இருந்து முப்பதுகளின் இடைவரைக்கும் இப்படித்தான் அனேகம் பேர் இருக்கின்றோம். பொய்யான நேசங்களை உண்மை என்று நினைத்து அதற்காக உருகிக் கொண்டும் மறுகிக் கொண்டும், கிடைக்கும் உண்மையான நேசங்களை  எமக்குள் இருக்கும் ஏகத்துவங்கள் தரும் திமிரினால் நிராகரித்துக் கொண்டும் செல்கின்றோம்.

முப்பதுகளின் முடிவிலும் நாற்பதுகளின் தொடக்கத்திலும் ஏகத்துவங்களில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி உண்மையான நேசங்களையும் உறவுகளையும் புரியத் தொடங்குகின்றோம்.

நல்ல கவிதை

நிழலி....   கவிதைக்கு அழகு,  வசன நடை...என்பது மாறி.... 
பலரும், விமர்சிப்பது... அழகு  என்பது, இணைய உலகில்...  உள்ள உண்மை. 
அதனை... அழகாக... விமர்சித்தமை, உங்களின்.... ரசிப்புத் தன்மைக்கு, சான்று. 
நீல நிறம் அடித்த, உங்கள் கருத்துகள், நன்றாக இருந்தது. :)

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, யாயினி said:

வராது என்று ஒன்று இருக்கா சிறியண்ணா.முயற்சித்துப்பாருங்கள் கவிதை எழுத வரும்..இந்தக் கவிதையாளருக்கு நன்றிகள் பல.

யாயினி... உங்கள் விருப்பம், நிறைவேற வேண்டும் என்றே... ஆசைப் படுகின்றேன்றேன்.
எப்படியும்... யாழ். களத்தில்  ஒரு கவிதையை.....
கங்காரு தேசத்தின்,  கவிஞர்  புங்கையூரான்...   மாதிரி,  பெரிய  கவிதை  எழுத முடியாவிட்டாலும்,
குமாரசாமி அண்ணா மாதிரி.... "காவோலை... காலில்,   கிழிக்க... வேலி,   பாய்ந்து ஓடினேன்" 
என்ற கவிதையாவது... எழுத வேண்டும், என்ற ஆசை நிறைய உள்ளது.
 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

ஈழப் பிரியன்ஸ்....  உங்களின், கருத்தைப் பார்த்து சிரித்து விட்டே ன். :grin:
கதை  கூட, எழுதலாம்.  கவிதையை... அழகிய நடையில் எழுதுவதற்கு... தனித்  திறமை, 
ஆண்டவனின் வரம் எல்லாம் தேவை என்றே கருதுகிறேன். 
எனக்கு அது.... இன்னும்  கிடைக்காமல் இருப்பது சோகம் தான். 
பலமுறை.... முயற்சித்து... பார்த்து, கன  பேப்பர்  குப்பைத் தொட்டிக்குள் போனது தான் நடந்தது.

அதே பல்லவி தான் நானும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.