Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அதிகாலை ஆஸ்பத்திரி கூச்சலும் குக்குரலுமாக பதறிக்கொண்டிருந்தது பிறப்பு , இறப்பை தீர்மானிப்பதல்லவா இந்த ஆஸ்பத்திரி பிரசவத்திற்காக சர்மிதாவும் தனது முதல் பிரசவத்திற்காக அலறியே துடிதுடித்துக்கொண்டிருந்தாள் அவளுடனும் பல பெண்கள் அன்றைய‌ நாள் பிரசவத்திற்க்காக கையில் கட்டப்பட்ட இலக்க மட்டைகளை அணிந்து படுத்திருந்தனர் அவளின் முதல் பிரசவம் அவளை கட்டிலில் உளத்த செய்தது அவளோ ஐயோ ஐயோ அம்மா என துடிதுடித்துக்கொண்டிருந்தாள்.

 அவள் கணவனோ ஆறுதல் சொல்ல முடியாமல் அவள் கைகளை இறுக்கி பிடித்துக்கொண்டிருந்தான் வலி அதிகரிக்கும் போது அவளோ அவன் கைகளை கடிக்க தொடங்கினாள் வலியின் வேதனையால் பிரசவ விடுதியின்  முன்பு  அவளை அழைத்து செல்ல ஆயத்தமாக அவனோ ஆயிரம் கடவுள்களை வேண்டி நின்றான் அவளுக்காகவும் அவள் குழந்தைக்காகவும் .சர்மிதாவை உள்ளே எடுத்த நேரம் முதல்  அவளுக்கான் பிரசவ நேரம் மட்டும் அதிகரித்து கொண்டு போக இவன் மனது அங்கே துடி துடித்து கொண்டிருந்தது  வெளியில் .

பிரசவம் முடிகிறது பிறந்த குழந்தை இறந்தே பிறக்கிறது  அவளோ அந்த நிலையை தாங்காது அழுது புலம்பி துடிதுடித்து போகிறாள் அந்த குழந்தைக்காக தவமாய் தவம்  கிடந்து தான்  கிடைத்த குழந்தை அந்த குழந்தை கைகெட்டும் நேரத்தில் என்னை விட்டு போய்விட்டதே என அழுதே மயங்கிவிட்டாள் இந்த உலகத்தில் திருமணமான பெண்ணுக்கு குழந்தை இல்லையென்றால் எப்படியெல்லாம் இந்த சமுதாயத்தில் தூற்றுவார்கள் என்பதை அந்த 5 வருட இல்லற வாழ்க்கையில் அறிந்துகொண்டாள் அவள் . போகாத  கோவில் குளம் இல்லை செக்கிங் இல்லை ஆஸ்பத்திரி இல்லை ஆயிரம் பல லட்சங்களை ஒரு குழந்தைக்காக‌ அவள் தொலைத்து விட்டிருந்தாள் சர்மி.

 குழந்தை இறந்த செய்தி வெளியில் சொல்லாமல் வைத்தியர்கள் என்ன செய்வதென்று அறியாமல் அவளுக்கு இழந்த இரத்தை மீள் ஏற்றிக்கொண்டிருந்தனர் அந்த நேரத்தில் அடுத்த பிரசவத்திற்க்காக அடுத்த இலக்கத்தை அழைத்து சென்றனர் அவர் சாரதாதேவி  கட்டிலில் வைத்து தள்ளிக்கொண்டு போனார்கள் சாரதாவுக்கு பிறக்க போகும் குழந்தை அவளுக்கு ஐந்தாவது.

  போகும் போது பார்க்கிறாள் சர்மியை ஒரு ஓரத்தில் வைத்திருந்தார்கள் உயிருடன் இருந்து  இறந்து கிடக்கும்  அந்த உருவத்தை பார்த்து கேட்கிறாள்  அவவுக்கு என்ன நடந்தது என அதற்கு அங்குள்ள தாதியர்கள் அவரின் முதல் குழந்தை இறந்து பிறந்து விட்டது அவர் அந்த குழந்தை செயற்கையான கருக்கட்டிலின் மூலமே பெற்றுக்கொள்ள இருந்தார் எவ்வளவு போராடியும் காப்பாற்ற  முடியவில்லை  எங்களால் என சொல்லி அதை தாங்காது அழுதுவிட்டு மயங்கிவிட்டாள் என சொல்ல  சாரதாவோ அவளை பிள்ளைப்பேறுக்காக அவளை அனுமதித்திருந்த போது அவள் அடைந்த சந்தோஷம் அவர்கள் குடும்பம் அடைந்த ச‌ந்தோஷம் , அவள் கணவன் அடைந்த சந்தோஷம் எல்லாவற்றையும் நினைத்தும் அவள் கணவன் அவளைப்பார்த்துக்கொண்ட விதம் என்பதை  எண்ணிக்கொண்டு  எண்னைத்தை தொலைக்கிறாள்.

 அவளுக்கு பிரசவம் நல்லபடியாக நடந்து முடிகிறது அழகிய பெண்குழந்தை அவளும் அந்த குழந்தையை அள்ளி அணைத்து கொஞ்சி விட்டு இந்த குழந்தையை அவள் குழந்தையாக மாற்றிவிடுங்கள் என அந்த வைத்திய குழாமை கெஞ்சுகிறாள் அழுதுகொண்டே. அதற்கு வைத்தியரோ அப்படியெல்லாம் செய்ய முடியாது சட்ட சிக்கல் நிறைய இருக்கிறது  இது எங்கள் தொழிலுக்கு முரணானது என சொல்லி சம்மதிக்க மறுக்கிறார் அப்போது வைத்தியரிடம் சாரதா கேட்கிறாள் இந்த உலகத்தில் சந்தோஷம் என்று எதை சொல்வீர்கள் வைத்தியரே? அதற்கு வைத்தியர் நாமும் நம்மளை சுற்றியுள்ளவர்களும்  சந்தோஷமாக இருந்தால் அது சந்தோஷம் என்றார்.

 அவளும் அதை கேட்டு சிரித்து விட்டு அதே தான் இந்த குழந்தையால் அந்த ஒட்டு மொத்த குடும்பமும் சந்தோஷ்மாக இருக்க போகிறது ஐயா என்னால் இன்னும் ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள முடியும் ஆனால் அந்த பெண்ணால் முடியாது  என் சுய விருப்பத்திலே சொல்கிறேன் என சொல்கிறாள் வைத்தியரும்  அந்த குழுவினரும் யோசித்து விட்டு இதையாரிடமும் சொல்ல வேண்டாம் அப்படி சொன்னால் எங்கள் எல்லோருக்கும் பிரச்சினையாகிவிடும். என சொல்ல அவளும் என் உயிரை கொடுக்கிறேன் இதை நான் யாரிடமும் சொல்ல மாட்டேன் என  அவள் குழந்தை கொடுத்துவிட்டு அந்த இறந்த குழதையை தன் மார்பில் அணைத்துக்கொண்டு  வெளியே மயங்கிய நிலையில்  செல்கிறாள் .

 வெளியில் சர்மியின் கணவன் இந்த அக்காவுக்கு என்ன நடந்தது என கேட்க தாதியோ பிறந்த குழந்தை இற‌ந்து பிறந்து விட்டது என சொல்ல அவளுடன் அந்த இரு நாட்கள் ஆஸ்பத்திரி சந்திப்பால் பழகியதற்க்காக அந்த குழந்தையை தொட்டு  வருடி அழுகிறான் ( அவன் குழந்தை என தெரியாமல்) அவளின் அந்த நிலையை எண்ணி.  என் மனைவி எங்கே என அவளிடம் கேட்க ரத்தம் அதிகமாக போய்விட்டது மயக்கமாகவும் இருக்கிரார் கொஞ்ச நேரமாகும்  பொறுங்கள்  குழ்ந்தையை பார்க்கலாம் என்று சொன்னதும் அழுத அவன் கண்களில் மீண்டும் ஆனந்த கண்ணீர் பொழிந்தது.

 சர்மி அழுத கண்களை துடைத்து எழும்பும் போது அவள் மார்பை கவ்விக்கொள்ள அந்த பிஞ்சு விரல்கள் அவளை மெதுவாக எழுப்பியது அவளுக்கு வியப்பாக யார்  குழந்தை இந்த குழந்தை என பலமுறை வினவுகிறாள் வைத்திய குழாம் உங்கள் குழந்தைதான் என சொல்ல அவள் நம்ப‌வில்லை மீண்டும் மீண்டும் அழுது உன்மையை சொல்லுங்கள் என கேட்க வைத்தியர்கள் உன்மையை சொல்கிறார்கள்  அள்ளி அணைத்து முத்தங்களை கொட்டுகிறாள் அந்த பிஞ்சின் கன்னங்களில் சர்மியை வெளியே கொண்டு போனதும் ஒட்டு மொத்த குடும்பமும் ஏன் அந்த ஆஸ்பத்திரி சமூகமும்  மொத்த சந்தோஷத்தில் திளைத்திருக்க வைத்தியகுழாமுக்கு அங்கே கணவன் பாராட்டுக்களையும் சிற்றுண்டிகளையும் சந்தோஷத்தில் பகிர்ந்தளித்துகொண்டிருந்தான் ஆனால் சர்மிதாவோ அந்த குழந்தை என்ற‌ செல்வத்தை கொடையாக வழங்கிய  இரு நாள் மட்டுமே ஆஸ்பத்தியில் பழகிய அந்த சாரதா என்ற தெய்வத்தை தேடிக்கொண்டிருக்கிறாள் நன்றி என்ற ஒரு வார்த்தை சொல்ல .  

முற்றும் 

Edited by தனிக்காட்டு ராஜா

  • கருத்துக்கள உறவுகள்

சாரதா போன்ற தெய்வங்களை சாதாரணமாகப் பார்க்க முடியாது.....,தியாகத்தை எடுத்தியம்பும் அழகான கதை.....!

தொடர்ந்து எழுதுங்கள் தனி.....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

அழகான கதை. எடுத்துசென்ற விதம் அருமை.

தொடருங்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

தனி நல்ல கதை இடக்கிட கதை எழுதுங்கோ நாங்கள் வாசிக்கிறோம்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 10/20/2017 at 8:05 PM, suvy said:

சாரதா போன்ற தெய்வங்களை சாதாரணமாகப் பார்க்க முடியாது.....,தியாகத்தை எடுத்தியம்பும் அழகான கதை.....!

தொடர்ந்து எழுதுங்கள் தனி.....!  tw_blush:

ம் ம் நன்றி அண்ணை அண்மையில் சில  பெண்கள் இந்தியா சென்று குழந்தையை பெற்றுக்கொண்டனர் அதில் சில குழந்தைகள் இறந்து விட்டன சில குழந்தைகள் வீரியமற்ற குழந்தைகளாக இருக்கின்றன  ஆனால் இன்று எத்தனையோ குழந்தைகள் காப்பகங்களில்  தந்தை  தாய்  பெயர் தெரியாமல் வளர்ந்து வருகின்றன அவர்களும் அன்பான குழந்தைகளே  எடுத்து வளர்க்கலாம் 

இப்ப உள்ள சின்ன பிரச்சினை பல பேருக்கு குழந்தை இல்லையென்பது இது போல பல கதைகள் இருந்தாலும் என் மனதுக்கு பட்டது எழ்ய்த சொல்லி அதுதான் எழுதினேன் உங்கள் ஊக்கத்திற்கு நன்றி 

சில தெய்வங்களை மனித ரூபத்தில் மட்டுமே காணலாம் 

9 hours ago, கறுப்பி said:

அழகான கதை. எடுத்துசென்ற விதம் அருமை.

தொடருங்கள்...

நன்றி கறுப்பி உங்கள்  கருத்துக்கும் ஊக்கத்திற்கும் 

8 hours ago, putthan said:

தனி நல்ல கதை இடக்கிட கதை எழுதுங்கோ நாங்கள் வாசிக்கிறோம்...

நன்றி புத்து உங்கள் ஊக்கம் கொடுத்தலுக்கு 

அடுத்த கதை லண்டனை நோக்கி பாய இருக்கிறது  வரும் வெள்ளிக்கிழமை  இங்கே இணையும் tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

தாய்மை உணர்வை மிகச் சிறப்பாக நல்லதொரு கதை படைத்த  தம்பி தனிக்கு பாராட்டுக்கள். தொடர்ந்து; எழுதுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, தனிக்காட்டு ராஜா said:

 

அடுத்த கதை லண்டனை நோக்கி பாய இருக்கிறது  வரும் வெள்ளிக்கிழமை  இங்கே இணையும் tw_blush:

வாருமன் பாப்பம். :cool:

  • கருத்துக்கள உறவுகள்

 நல்லதொரு கதை படைத்த  தனிக்கு பாராட்டுக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 10/23/2017 at 8:50 PM, Kavallur Kanmani said:

தாய்மை உணர்வை மிகச் சிறப்பாக நல்லதொரு கதை படைத்த  தம்பி தனிக்கு பாராட்டுக்கள். தொடர்ந்து; எழுதுங்கள்.

நன்றி அக்கா இப்ப எல்லாம் இந்த யுகத்தில் கதை படிக்கிறார்கள் வாசிப்பு அற்று போகிறது  உங்கள் கருத்துக்கு நன்றி 

வாசிப்பு மூன்று வகைகள் என்று சொல்வார்கள் தற்பொழுது நுனிப்புல்  மேய்ந்து விட்டு செல்கிறார்கள் 

 

On 10/24/2017 at 5:13 AM, குமாரசாமி said:

வாருமன் பாப்பம். :cool:

கொஞ்சம் காத்திருங்கள் வேலைப்பழு வரும்  வரும் வரும் tw_blush:

 

On 10/24/2017 at 7:17 AM, நிலாமதி said:

 நல்லதொரு கதை படைத்த  தனிக்கு பாராட்டுக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

நன்றி நிலாமதி அக்கா   ம்ம் நம்ம களத்தில் எழுதாமல் எங்கே எழுதுவது எதையெழுதினாலும்  பாராட்டி எழுதி  செல்லும் யாழ் உள்ளங்களை விட்டு எங்கே  போவது tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.