Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சுவையான முட்டை கொத்து பரோட்டா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுவையான முட்டை கொத்து பரோட்டா செய்ய...!

 

 

 
 
தேவையான பொருட்கள்:
 
 
 
பரோட்டா - 2
முட்டை - 1
வெங்காயம் - 2
தக்காளி - 1
பச்சைமிளகாய் - 2
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 4 ஸ்பூன்
கெட்டிச்சால்னா - 1 1/2 குழிக்கரண்டி
பூண்டு - 8 பல்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கொத்தமல்லி - சிறிதளவு
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
தனி மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
சோம்பு தூள் - ஒரு தேக்கரண்டி
 
1509367589-5244.jpg
 
செய்முறை:
 
பரோட்டா செய்து கையால் சிறு சிறு துண்டுகளாக செய்து தனியாக வைத்துக்கொள்ளவும். கொத்தமல்லி, வெங்காயம், தக்காளி,  பூண்டு, மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
 
கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து தாளித்த பின் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். அடுத்து அதில் தக்காளியை மசியும் வரை வதக்கவும். அனைத்தும் நன்றாக  வதங்கியதும், சோம்பு தூள் சேர்த்து முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கிளறவேண்டும்.
 
முட்டை நன்றாக வதங்கியதும் அதில் சால்னா சேர்த்து ஒருசேர கிளறவும். தேவை அளவு உப்பும் சேர்த்துக்கொள்ளவும். சால்னா ஒருசேர சுருண்டதும் பிய்த்து வைத்துள்ள புரோட்டாவை சேர்த்து எல்லா இடங்களிலும் மசாலா சேரும் படி நன்றாக  பிரட்டவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து 5 நிமிடம் நன்றாக கிளறவும்.
 
கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். சுவையான சூப்பரான முட்டை கொத்து பரோட்டா தயார். இதில் சிக்கன்,  மட்டன் சேர்த்தும் செய்யலாம்.
 
  • கருத்துக்கள உறவுகள்

நல்லா இருக்கு ஆனால் முட்டை ரெண்டு போடடால் மிக நல்லது. ப்ரோட்டாவில் முட்டை சேர்ந்திருந்தால் அவசியமில்லை....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழரசு said:

இதில் சிக்கன்,  மட்டன் சேர்த்தும் செய்யலாம்.

37 minutes ago, suvy said:

நல்லா இருக்கு ஆனால் முட்டை ரெண்டு போடடால் மிக நல்லது. ப்ரோட்டாவில் முட்டை சேர்ந்திருந்தால் அவசியமில்லை....!  tw_blush:

சிக்கன் மட்டன் வீப்வ் இல்லையென்றால் அது கொத்தாகாது தளைtw_blush:

 

  • கருத்துக்கள உறவுகள்

1509367589-5244.jpg

கொத்து ரொட்டியை.... பார்க்க, வாயூறுது. 
எனக்கு பிடித்த உணவில் முதல் இடத்தில் இருப்பது கொத்து ரொட்டி.
ஆனால்....  அந்த ரொட்டியை பதமாக செய்ய எங்களுக்கு இன்னும், அனுபவம் காணாது.
பல முறை செய்ய வெளிக்கிட்டு, எல்லாம்  பிழைத்து விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

 

45 minutes ago, தமிழ் சிறி said:

1509367589-5244.jpg

கொத்து ரொட்டியை.... பார்க்க, வாயூறுது. 
எனக்கு பிடித்த உணவில் முதல் இடத்தில் இருப்பது கொத்து ரொட்டி.
ஆனால்....  அந்த ரொட்டியை பதமாக செய்ய எங்களுக்கு இன்னும், அனுபவம் காணாது.
பல முறை செய்ய வெளிக்கிட்டு, எல்லாம்  பிழைத்து விட்டது.

டின்பாலும் சிறிது சேர்க்க சொல்லுறா..... செய்து பார்த்து விட்டு சொல்லவும், சரியாய் வந்தால் நாங்களும் செய்வம்.....!  tw_blush:

"தன் அனுபவத்தில் இருந்து கற்றுக்கொள்பவன் அறிவாளி, பிறர் அனுபவத்தில் இருந்து கற்று கொள்பவன் மேதாவி.....!  tw_blush:  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, suvy said:

 

டின்பாலும் சிறிது சேர்க்க சொல்லுறா..... செய்து பார்த்து விட்டு சொல்லவும், சரியாய் வந்தால் நாங்களும் செய்வம்.....!  tw_blush:

"தன் அனுபவத்தில் இருந்து கற்றுக்கொள்பவன் அறிவாளி, பிறர் அனுபவத்தில் இருந்து கற்று கொள்பவன் மேதாவி.....!  tw_blush:  tw_blush:

இந்த, விளையாட்டு தானே.... வேண்டாம் எண்டுறது சுவியர். :grin:
முதலில்.... நீங்கள், கொத்து ரொட்டிக்கு... ரின் பாலை விட்டு, செய்து பார்த்து விட்டு, 
சரியாய்... வந்தால்,  எங்களுக்கு  சொல்லவும்.
ஏற்கெனவே... ரொட்டி செய்யும் விசயத்தில், வீட்டில்.... நம்ம பேர் ரிப்பேராகி கிடக்கு,   :D:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

இந்த, விளையாட்டு தானே.... வேண்டாம் எண்டுறது சுவியர். :grin:
முதலில்.... நீங்கள், கொத்து ரொட்டிக்கு... ரின் பாலை விட்டு, செய்து பார்த்து விட்டு, 
சரியாய்... வந்தால்,  எங்களுக்கு  சொல்லவும்.
ஏற்கெனவே... ரொட்டி செய்யும் விசயத்தில், வீட்டில்.... நம்ம பேர் ரிப்பேராகி கிடக்கு,   :D:

இது ஒன்றும் பெரிய சூத்திரமல்ல சிறியர்....!  மாவுடன் தண்ணியை சிறிது சிறிதாக விட்டு கொஞ்சம் எண்ணெய் , முட்டை, சிறிது உப்பு சேர்த்து மிக நன்றாக உருட்டி உருட்டி பிசைய வேண்டும். முஷ்டியை இறுக்கி பிடித்து நன்றாக குத்த வேண்டும். பின்பு சிறிது பட்டர் பூசி நல்ல துணியால் அரை மணித்தியாலம் மூடி வைக்கவும். பின்பு கையில் எண்ணை பூசிக்கொண்டு ஒரு தேசிக்காய் அளவு உருண்டைகளாக நல்லா அமுக்கி எடுத்து ஒரு பத்து நிமிடம் வைக்கவும். பின் அதை உங்களால் சுழட்டி  முடியுமென்றால் சரி அல்லது கட்டையில்  வைத்து உருளையால் நன்றாக தேய்த்து ஒரு பொல்லு போல உருட்டி உள்ளங்கையில் வைத்து அட்டை  போல சுருட்டி வைத்து விட்டு ஒவ்வொன்றாய் எடுத்தது பலகையில் வைத்து வட்டமாக கையாலோ அல்லது உருளையாலோ மெதுவாக பிதுக்கி விட்டு (இது முக்கியம்) தோசைக்கல்லை அடுப்பில் வைத்து அளவான சூட்டில் வைத்து ஒவ்வொன்றாக போட்டு பிரட்டி பிரட்டி போட்டு எடுக்கவும்.நாலு ப்ரோட்டா எடுத்ததும் ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி பக்கவாட்டில் இரு கைகளாலும் பொத்தி பிடித்து செல்லமாக அடிக்கவும். அப்பொழுது அது வரி வாரியாக பிரிந்து வரும். டின்பாலில் ஒரு டீ யும் போட்டு குடுத்து வீட்டுக்காரியை அசத்தவும்.....!  tw_blush:

21 minutes ago, suvy said:

இது ஒன்றும் பெரிய சூத்திரமல்ல சிறியர்....!  மாவுடன் தண்ணியை சிறிது சிறிதாக விட்டு கொஞ்சம் எண்ணெய் , முட்டை, சிறிது உப்பு சேர்த்து மிக நன்றாக உருட்டி உருட்டி பிசைய வேண்டும். முஷ்டியை இறுக்கி பிடித்து நன்றாக குத்த வேண்டும். பின்பு சிறிது பட்டர் பூசி நல்ல துணியால் அரை மணித்தியாலம் மூடி வைக்கவும். பின்பு கையில் எண்ணை பூசிக்கொண்டு ஒரு தேசிக்காய் அளவு உருண்டைகளாக நல்லா அமுக்கி எடுத்து ஒரு பத்து நிமிடம் வைக்கவும். பின் அதை உங்களால் சுழட்டி  முடியுமென்றால் சரி அல்லது கட்டையில்  வைத்து உருளையால் நன்றாக தேய்த்து ஒரு பொல்லு போல உருட்டி உள்ளங்கையில் வைத்து அட்டை  போல சுருட்டி வைத்து விட்டு ஒவ்வொன்றாய் எடுத்தது பலகையில் வைத்து வட்டமாக கையாலோ அல்லது உருளையாலோ மெதுவாக பிதுக்கி விட்டு (இது முக்கியம்) தோசைக்கல்லை அடுப்பில் வைத்து அளவான சூட்டில் வைத்து ஒவ்வொன்றாக போட்டு பிரட்டி பிரட்டி போட்டு எடுக்கவும்.நாலு ப்ரோட்டா எடுத்ததும் ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி பக்கவாட்டில் இரு கைகளாலும் பொத்தி பிடித்து செல்லமாக அடிக்கவும். அப்பொழுது அது வரி வாரியாக பிரிந்து வரும். டின்பாலில் ஒரு டீ யும் போட்டு குடுத்து வீட்டுக்காரியை அசத்தவும்.....!  tw_blush:

செய்முறையை வாசிச்சுக் கொண்டு வரும் போது இடையில இது பரோட்டாவுக்கான செய்முறை மட்டுமல்ல வேற ஒன்றுக்கான செயல்முறை போன்றும் எனக்கு தோன்றிச்சு

Quote

நாலு ப்ரோட்டா எடுத்ததும் ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி பக்கவாட்டில் இரு கைகளாலும் பொத்தி பிடித்து செல்லமாக அடிக்கவும்.

ஒரே ஒரு டவிட்டு. பக்கவாட்டில் இரு கைகளாலும் பொத்திப் பிடிச்ச பிறகு எந்த கையால செல்லாமக அடிப்பது?

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, நிழலி said:

செய்முறையை வாசிச்சுக் கொண்டு வரும் போது இடையில இது பரோட்டாவுக்கான செய்முறை மட்டுமல்ல வேற ஒன்றுக்கான செயல்முறை போன்றும் எனக்கு தோன்றிச்சு

ஒரே ஒரு டவிட்டு. பக்கவாட்டில் இரு கைகளாலும் பொத்திப் பிடிச்ச பிறகு எந்த கையால செல்லாமக அடிப்பது?

இது நல்ல கேள்வி....நானும் யோசித்து பார்த்தன் பிடிபடேல்ல ..... கு.சா., மருதர் போன்றவர்களுக்கு சிலநேரம் தெரிந்திருக்கலாம்....!  tw_blush:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, suvy said:

இது நல்ல கேள்வி....நானும் யோசித்து பார்த்தன் பிடிபடேல்ல ..... கு.சா., மருதர் போன்றவர்களுக்கு சிலநேரம் தெரிந்திருக்கலாம்....!  tw_blush:

யானைக்கு நாலு காலிருந்தும்(நாங்களும்தான்) தும்பிக்கைதான் நம்பிக்கை எண்டு அஞ்சாம் வகுப்பிலையே எனக்கு ஒரு ரீச்சர் படிப்பிச்சவ....

இதை நான் அந்த தம்பிக்கு என்னெண்டு விளங்கப்படுத்துவன்? 

அவாள சத்வாரி ஆசனம் செய்யச்சொல்லுங்கோ.....நன்னா ஒறைக்க சொல்லுங்கோ.. அப்பவாவது மூணாவது கை எங்க இருக்குன்னு தெரியட்டும்.tw_blush:

Bildergebnis für சத்வாரி ஆசனம்

Ähnliches Foto

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்
On 31/10/2017 at 12:37 AM, குமாரசாமி said:

யானைக்கு நாலு காலிருந்தும்(நாங்களும்தான்) தும்பிக்கைதான் நம்பிக்கை எண்டு அஞ்சாம் வகுப்பிலையே எனக்கு ஒரு ரீச்சர் படிப்பிச்சவ....

இதை நான் அந்த தம்பிக்கு என்னெண்டு விளங்கப்படுத்துவன்? 

அவாள சத்வாரி ஆசனம் செய்யச்சொல்லுங்கோ.....நன்னா ஒறைக்க சொல்லுங்கோ.. அப்பவாவது மூணாவது கை எங்க இருக்குன்னு தெரியட்டும்.tw_blush:

Bildergebnis für சத்வாரி ஆசனம்

Ähnliches Foto

உந்த ஆசனங்களை கோவணம் போடாமல் செய்ய முடியாதோ, சாமியார்?

இல்லை... காத்தோட்டமான இடத்தில செய்தால்.... எல்லா இடமும் காத்துப் படுமே எண்டு தான்..... :grin: 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 hours ago, Nathamuni said:

உந்த ஆசனங்களை கோவணம் போடாமல் செய்ய முடியாதோ, சாமியார்?

இல்லை... காத்தோட்டமான இடத்தில செய்தால்.... எல்லா இடமும் காத்துப் படுமே எண்டு தான்..... :grin: 

காத்தோட்டமான இடமெண்டால் காடு கரம்பையளுக்கை தானே போகோணும். அதைத்தானே வெஸ்ரேன் ஸ்ரைலிலை எங்கடை ஆக்களும் பாய் படுக்கையளை கட்டிக்கொண்டு ஆத்தோரம் காட்டோரமாய் அலையினம். :grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.