Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இரண்டு பிள்ளையார் சிலைகள் உடைப்பு : மூன்று பிள்ளையார் சிலைகள் திருடல் : மன்னாரில் சம்பவம்

Featured Replies

இரண்டு பிள்ளையார் சிலைகள் உடைப்பு : மூன்று பிள்ளையார் சிலைகள் திருடல் : மன்னாரில் சம்பவம்

 

 

மன்னாரில் பல்வேறு இடங்களில் பிள்ளையார் சிலைகள் திருடப்பட்டுள்ளதோடு, பிள்ளையார் சிலைகள் மற்றும் தேவாலயத்தின் உண்டியல் என்பன உடைக்கப்பட்ட சம்பவம் இன்று  அதிகாலை இடம் பெற்றுள்ளதாக தெரிய வருகின்றது.

Local_News.jpg

மன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதி, தள்ளாடி விமான ஓடு பாதைக்கு முன்பாக வீதியோரத்தில் அமைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலை நான்காவது தடவையாக இன்று  அதிகாலை இனம் தெரியாத நபர்களினால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த பிள்ளையார் சிலை மூன்றாவது தடவையாக கடந்த மாதம் 17ஆம் திகதி அதிகாலை இனம் தெரியாத நபர்களினால் உடைத்து சேதப்படுத்தப்பட்ட நிலையில் உடனடியாக குறித்த பிள்ளையார் சிலை புனரமைப்பு செய்யப்பட்டு இந்து மக்களினால் மீண்டும் குறித்த இடத்தில் வைக்கப்பட்டிருந்தது.

இந் நிலையில் சுமார் ஒரு மாத காலத்தில் மீண்டும் குறித்த பிள்ளையார் சிலை நான்காவது தடவையாக இன்று அதிகாலை இனம் தெரியாத நபர்களினால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.

இதே வேளை மன்னார்-யாழ் பிரதான வீதிஇநாயாற்று வழி சந்தியில் அமைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலையும் மூன்றாவது தடவையாக உடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் உயிலங்குளம்-பள்ளமடு பிரதான வீதியில் வைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலை, ஆண்டாங்குளம் சந்தியில் வைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலை மற்றும் மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்திற்கு அருகாமையில் வைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலை என மூன்று பிள்ளையார் சிலைகள் இனம் தெரியாத நபர்களினால் திருடிச் செல்லப்பட்டுள்ளது.

இதே வேளை மாந்தை தேவாலயத்தின் உண்டியல் கதவு திறக்கப்பட்டு பணம் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிள்ளையார் சிலைகள் உடைப்பு, தேவாலயத்தின் உண்டியல் உடைப்பு மற்றும் மூன்று இடங்களில் காணப்பட்ட பிள்ளையார் சிலைகள் திருடப்பட்டமை தொடர்பில் மன்னார் மற்றும் அடம்பன் பொலிஸார் தீவிர விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

MANNAR_18-11-2017__12_.jpg

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக இவ்வாறான சம்பவங்கள் இடம் பெற்று வருகின்ற நிலையில் பொலிஸார் துரித விசாரனைகளை மேற்கொண்டு வருகின்ற போதும் சிலைகள் உடைப்பு சம்பவத்துடன் தொடர்புபட்ட எவரும் இது வரை கைது செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

http://www.virakesari.lk/article/27200

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நவீனன் said:

பொலிஸார் துரித விசாரனைகளை மேற்கொண்டு வருகின்ற போதும் சிலைகள் உடைப்பு சம்பவத்துடன் தொடர்புபட்ட எவரும் இது வரை கைது செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 சிலை உடைத்தவர்களே தேடினால் யார் யாரைப்  பிடிப்பது? தமிழர்களுக்குள் ஒரு கலகத்தை உருவாக்கி குளிர் காய முயற்சிக்கப்படுகிறது. குழப்பிகளுக்கு தொடர்ந்து எங்கேயாவது குழப்பங்களை உருவாக்கிக் கொண்டேஇருக்கவேணும்.

அரேபிய வந்த்தேறிகளுக்கு தமிழர்கள் அடிமையாக வாழ வேண்டிய காலம் வெகு தூரத்தில் இல்லை.

இதற்கு ஒரே வழி தான் உண்டு, வெளினாடுகளில் அகதி முகாம்களில் வாழும் மக்களை மன்னாரில் குடியேற்ற வேண்டியது தான். அப்படியாயின் 300,000ல் மக்களின் தொகையை அதிகரிக்கலாம்.

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

விரைவில் நல்லூர் முருகனும்.....வல்வெட்டித்துறை அம்மனும்......பருத்திதுறை சிவனும் காணாமல் போவினம்...

சைவர்கள் இதுவரை மற்றவர்கள் மீது தாக்குதல் நடத்தியதில்லை. அவர்கள் வெகுண்டு எழுத்தால் தவிர இதுபோன்ற மதவெறிச் செயல்களை கட்டுப்படுத்துவது சிரமம்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, போல் said:

சைவர்கள் இதுவரை மற்றவர்கள் மீது தாக்குதல் நடத்தியதில்லை. அவர்கள் வெகுண்டு எழுத்தால் தவிர இதுபோன்ற மதவெறிச் செயல்களை கட்டுப்படுத்துவது சிரமம்.

வெகுண்டு எழுத்தால்  இங்கு தாராளமாக தருகிறீர்களே?

 

On 11/18/2017 at 4:50 AM, Dash said:

அரேபிய வந்த்தேறிகளுக்கு தமிழர்கள் அடிமையாக வாழ வேண்டிய காலம் வெகு தூரத்தில் இல்லை.

இதற்கு ஒரே வழி தான் உண்டு, வெளினாடுகளில் அகதி முகாம்களில் வாழும் மக்களை மன்னாரில் குடியேற்ற வேண்டியது தான். அப்படியாயின் 300,000ல் மக்களின் தொகையை அதிகரிக்கலாம்.

 

 

 

செய்ய வேண்டியது தானே? ஏனோ இன்னும் தாமதம்?

3 hours ago, Jude said:

வெகுண்டு எழுத்தால்  இங்கு தாராளமாக தருகிறீர்களே?

இன்னும் கொஞ்சம் தெளிவா விளக்கிறதுக்கு ஓடிப்போன இடத்தில நல்ல வைத்தியர் இருந்தால் காட்டுவது நலம்!

On 11/18/2017 at 3:20 PM, Dash said:

அரேபிய வந்த்தேறிகளுக்கு தமிழர்கள் அடிமையாக வாழ வேண்டிய காலம் வெகு தூரத்தில் இல்லை.

கவலைப்படாதீர்கள்!

அப்பிடி நடக்காது என நம்புவோம்.

 

On 11/18/2017 at 3:20 PM, Dash said:

இதற்கு ஒரே வழி தான் உண்டு, வெளினாடுகளில் அகதி முகாம்களில் வாழும் மக்களை மன்னாரில் குடியேற்ற வேண்டியது தான். அப்படியாயின் 300,000ல் மக்களின் தொகையை அதிகரிக்கலாம்.

அது எப்பிடி 300,000 ஆகும்?
கிட்டத்தட்ட 1,500,000 மக்கள் புலம்பெயர்ந்ததாக கூறுகிறார்களே!

 

  • கருத்துக்கள உறவுகள்
On 11/19/2017 at 9:55 PM, போல் said:

இன்னும் கொஞ்சம் தெளிவா விளக்கிறதுக்கு ஓடிப்போன இடத்தில நல்ல வைத்தியர் இருந்தால் காட்டுவது நலம்!

ஓடிப்போனவர்களுக்கு சொல்கிறீர்கள்.தேவைப்பட்டால் செய்வார்கள்.  உங்களுக்கு உள்ளுரில இலவச வைத்தியம் கிடைக்கிறதே? காட்டலாமே?

19 hours ago, Jude said:

ஓடிப்போனவர்களுக்கு சொல்கிறீர்கள்.தேவைப்பட்டால் செய்வார்கள்.  உங்களுக்கு உள்ளுரில இலவச வைத்தியம் கிடைக்கிறதே? காட்டலாமே?

நீங்கள் நல்ல வைத்தியரிடம் காட்டினால் உங்களிடம் இப்படிப்பட்ட உளறல்கள் வராது. 

4 minutes ago, போல் said:

நீங்கள் நல்ல வைத்தியரிடம் காட்டினால் உங்களிடம் இப்படிப்பட்ட உளறல்கள் வராது. 

தயவு செய்து இவர் போன்றவர்களுக்கு பதில் அளிக்க வேண்டாம், தமக்குள் இருக்கும் ஒரு சில குரோதங்களை மனதில் வைத்து கொண்டு இப்படி எழுதுபவர்கள்.

தூங்கிரவனை எழுப்பலாம் ஆனால் நடிப்பவனை !!!!!!

1 minute ago, Dash said:

தயவு செய்து இவர் போன்றவர்களுக்கு பதில் அளிக்க வேண்டாம், தமக்குள் இருக்கும் ஒரு சில குரோதங்களை மனதில் வைத்து கொண்டு இப்படி எழுதுபவர்கள்.

தூங்கிரவனை எழுப்பலாம் ஆனால் நடிப்பவனை !!!!!!

உண்மை தான்!
உங்கள் நல்ல அறிவுரைக்கு நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.