Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்­கை தனி­நா­டாக பிரித்து தந்­து­வி­டுங்­கள்...புலம்­பெ­யர்ந்தோர் முத­லீடு செய்­வார்கள் என்­கிறார் கூட்­ட­மைப்பு எம்.பி.

Featured Replies

வடக்­கை தனி­நா­டாக பிரித்து தந்­து­வி­டுங்­கள்

 

புலம்­பெ­யர்ந்தோர் முத­லீடு செய்­வார்கள் என்­கிறார் கூட்­ட­மைப்பு எம்.பி.

(ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்)

வட­மா­கா­ணத்­திற்­கான முத­லீ­டு­களை புலம்­பெ­யர்ந்­த­வர்­க­ளி­டத்­தி­லி­ருந்து நாங்கள் பெற்­றுக்­கொள்­வ­தென்றால் வடக்­கை தனி­நா­டாக பிரித்து தந்­து­வி­டுங்கள். அதன் பின்னர் நாங்கள் இந்த அர­சாங்­கத்­திடம் எத­னையும் கேட்­க­மாட்டோம் என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் வன்னி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சார்ள்ஸ் நிர்­ம­ல­நாதன் சபையில் தெரிவித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வெள்ளிக்­கி­ழமை தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலு­வல்கள், சுற்­று­லாத்­துறை அபி­வி­ருத்தி மற்றும் கிறிஸ்­தவ சமய அலு­வல்கள், விசேட பணிப்­பொ­றுப்­புக்கள், தொலைத்­தொ­டர்­புகள் மற்றும் டிஜிட்டல் உட்­கட்­ட­மைப்பு வச­திகள், விஞ்­ஞான தொழில்­நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்­சுக­ளுக்­கான ஒதுக்­கீ­டுகள் தொடர்­பான விசேட தெரிவுக் குழு அறிக்­கைகள் மீதான குழு­நிலை விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­றிய சார்ள்ஸ் எம்.பி, இதனை வலி­யு­றுத்­தினார்.

வட­மா­கா­ணத்தில் தமி­ழர்­களின் கலா­சா­ரங்கள், பண்­பா­டு­க­ளுக்கு முரண்­பா­டற்ற வகையில் சுற்­று­லாத்­துறையை மேம்­ப­டுத்த வேண்டும். அது தொடர்­பான அமைச்சர் ஜோன் அம­ர­துங்க வட­மா­காண பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுடன் கலந்­தா­லோ­சித்து நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வ­தற்­கு­ரிய திட்­ட­மி­டலைச் செய்­ய­வேண்டும் என்றும் வலி­யு­றுத்­தினார்.

இச்­ச­ம­யத்தில் குறுக்­கீடு செய்த அமைச்சர் ஜோன் அம­ர­துங்க, உங்­க­ளு­டைய புலம்­பெ­யர்­ ச­மூ­கத்­தினர் வெளிநா­டு­களில் மிகவும் செல்வச் செழிப்­புடன் இருக்­கின்­றார்கள். அவர்­களை வடக்குக்கு அழை­யுங்கள். ஹோட்­டல்கள் மற்றும் சுற்­று­லாத்­துறை சார்ந்த ஏனைய விட­யங்­களில் முத­லீ­டு­களை செய்­யு­மாறு கோருங்கள். அதற்­கான முழு­மை­யான சக்­தியும் அவர்­க­ளி­டத்தில் உள்­ளது. நீங்கள் ஏன் அவ்­வாறு கோரிக்கை விடுக்­காது இருக்­கின்­றீர்கள் என்று கேள்வி எழுப்­பினார்.

இந்­நி­லையில் தனது உரை­யினை தொடர்ந்த சார்ள்ஸ் எம்.பி, இந்த அர­சாங்கம் வடக்­குக்கும் பொறுப்­பான அர­சாங்­க­மாக இருந்து கொண்டு இருக்­கையில் இவ்­வாறு கூறு­வது உகந்­த­தல்ல. அப்­ப­டி­யென்றால் எமது வடக்கை தனிநாடாக பிரித்து தாருங்கள். எமது அர­சாங்­கம் அமை த்து நாம் புலம்­பெ­யர்ந்­தோ­ரிடம் முத­லீ­டு­களை கேட்டுக்கொள்­கிறோம் என்றார்.

இச்­ச­ம­யத்தில் மீண்டும் குறுக்­கீடு செய்த அமைச்சர் ஜோன் அம­ர­துங்க, புலம்­பெ­யர்ந்­த­வர்­க­ளுக்கு வடக்கு மக்கள் மீது அன்பும் ஆத­ரவும் இருந்தால் அங்­கு­வந்து முத­லீ­டு­களை மேற்­கொள்ள வேண்டும் என்றார்.

இத­னை­ய­டுத்து தனது உரை­யினைத் தொடர்ந்த சார்ள்ஸ் நிர்­ம­ல­நாதன் எம்.பி, ஏனைய மாகா­ணங்­களில் சுற்­று­லாத்­து­றைக்கு செல­வி­டப்­ப­டு­வது போன்றே வடக்­குக்கும் சுற்­று­லாத்­து­றையில் நிதி செல­வி­டப்­பட வேண்டும். குறிப்­பாக வடக்கு மாகா­ணத்­திற்­காக ஐந்து வருட வேலைத்­திட்­ட­மொன்று உரு­வாக்­கப்­பட்டு செயற்­ப­டுத்­தப்­பட வேண்டும்.

அதே­நேரம் மன்னார், மடு­தே­வா­ல­யத்­துக்கு நிறைய பணி­களை செய்­தி­ருக்­கின்ற போதிலும், யுத்தம் கார­ண­மாக சேத­ம­டைந்த ஏனைய பல கிறிஸ்­தவ தேவா­ல­யங்கள் இருக்­கின்­றன. அவற்றை புன­ர­மைப்­ப­தற்கு எந்­த­வொரு திட்­டமும் இல்­லாமல் இருக்­கின்­றது. இந்து சமய அலு­வல்கள் அமைச்­ச­ராக இருக்கும் டி.எம். சுவா­மி­நாதன் வருடா வருடம் இந்து ஆல­யங்­க­ளுக்கு நிதி உத­வி­களை வழங்கி வரு­கின்ற போதிலும், கிறிஸ்­தவ தேவா­ல­யங்கள் தொடர்பில் இது­வரை அவ்­வா­றான நட­வ­டிக்­கை­ எ­துவும் முன்­னெ­டுக்­கப்­ப­ட வில்லை. ஆகக்­கு­றைந்­தது தலா இரண்டு இலட்­சங்­க­ளா­வது வழங்­கப்­பட வேண்டும் என்று சுட்­டிக்­காட்­டினார்.

இச்­ச­ம­யத்தில் அமைச்சர் ஜோன் அம­ர­துங்க, தனி­யார்­து­றை­யி­னரின் முத­லீ­டுகள் இல்­லாது சுற்­று­லாத்­து­றையை முன்­னேற்ற முடி­யாது என்­ப­த­னா­லேயே புலம்­பெ­யர்ந்­தோரை முத­லீ­டு ­செய்­­யு­மாறு கோரினேன். மேலும் வட­மா­கா­ணத்­தி­லுள்ள ஐந்து மாவட்­டங்­க­ளி­னதும் அதி­கா­ரி­களை எதிர்­வரும் ஜன­வரி மாதம் சந்­தித்து அங்கு நிறை வேற்­றப்­பட வேண்­டிய தேவைகள் பற்றி கலந்­து­ரை­யாடி நட­வ­டிக்கை எடுக்­க­வுள்ளேன் என்று பதி­ல­ளித்தார்.

இத­னை­ய­டுத்து சார்ள்ஸ் எம்.பி, திருக்கே ­தீஸ்­வர ஆல­யத்­திற்கு அருகில் பௌத்­த­வி­கா­ரை­யொன்று இரா­ணு­வத்தின் உத­வி­யுடன் கட்­டப்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்றது. தற்­போது அந்­தப்­ப­குதி தொல்­பொருள் திணை க்­க­ளத்தின் கீழா­னது என்று வர்த்த­மானி அறிவித்தல் விடுக்கப்பட்டு சுவீகரிக்கப்பட்டுள்ளது. எது எவ்வாறாயினும் அந்த விகாரை அமைக் கப்படும் காணிக்கு அருகாமையில் எட்டு ஏக்கர் காணிகள் இருக்கின்றன. அந்த காணி கள் அனைத்தும் பொதுமக்களுக்குச் சொந்த மான காணிகளாக இருக்கின்றன. ஆகவே அவற்றை அவர்களிடத்தில் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார். இதன்போது எழுந்த புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா, நாம் இந்த விடயம் சம்பந்தமாக கலந்துரையாடி நடவ டிக்கைகளை சுமுகமாக எடுப்போம் என்றார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-12-09#page-2

  • கருத்துக்கள உறவுகள்

அன்று நிராயுதபாணியாக இருந்த தமிழனை பார்த்து ஜெயவர்த்தனா போர் என்றால் போர் என்று விடுத்த அறைகூவல் இன்று சிங்கள தேசத்தை வட்டிகட்டுவதுக்கு கடன் வேண்டும் மீளமுடியாத கடன் சுமையில் வைத்துள்ளது. சாதாரண சிங்கள குடும்பத்தின் ஒரு நாளைய உணவுக்கு   ஒரு றாத்தல் பாண் மட்டுமே வேண்டும் வசதிக்கு  முடக்கி உள்ளது உங்களின் பணவீக்கம். சிம்பாவே போன்ற நாடுகளின் வரிசையில் இலங்கை சேருவதுக்கு அதிக காலம் இல்லை.

 

இப்பவே இணக்கப்பாட்டுக்கு வருவது நல்லது சார்ல்ஸ் எம்பி சொன்னது போல் . ஆனால் நீங்கள் தான் மதன முத்தா பரம்பரை ஆச்சே இனியும் திருந்த மாட்டீங்கள்  தமிழ் எதிர்ப்பு இனவாதம் எனும் வைரஸ் இருக்கும் மட்டும் உங்களுக்கு விடிவு கிடையாது .

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கை மட்டுமே தனிநாடாக பிரிக்கவேண்டும் என்றால் அது இத்தனை இழப்புகளின்றி என்றோ சனாதிபதி பிரேமதாசாவின் காலத்திலேயே நடைபெற்றிருக்கும். இந்தியப் படையை விரட்டிய கையோடு "வடக்கைமட்டும் உன் விருப்பம்போல் ஆட்சி செய்துகொள்" என்று தலைவர் பிரபாகரனுடன் ஒப்பந்தம்போட பிரேமதாசாவின் அரசு முன்வந்தபோது, "வடக்குத் தம்ழர்களுக்கு மட்டும் விடுதலைவேண்டி நாங்கள் போராடவில்லை. கிழக்குத் தமிழர்களுக்கும் விடுதலை வேண்டும். ஆகையினால், கிழக்கைவிட்டு வடக்கைமட்டும் ஏற்க முடியாது" என்று தலைவர் அன்றே மறுத்துவிட்டதைத் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் வன்னி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சார்ள்சு நிர்­ம­ல­நாதன் அவர்கள் வசதியாக மறந்துவிட்டார்போலும்.
 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நவீனன் said:

வடக்­கை தனி­நா­டாக பிரித்து தந்­து­வி­டுங்­கள்

புலம்­பெ­யர்ந்தோர் முத­லீடு செய்­வார்கள் என்­கிறார் கூட்­ட­மைப்பு எம்.பி.

தேவையற்ற  அலம்பறை

தலைவர்  ஒரு கதை

தொண்டர் ஒரு கதை

பாராளுமன்ற  உறுப்பினர் இப்படி அலம்பறை

 

  • கருத்துக்கள உறவுகள்
On 12/9/2017 at 9:28 PM, விசுகு said:

 

பாராளுமன்ற  உறுப்பினர் இப்படி அலம்பறை

 

 பாராளு மன்ற உறுப்பினர்ருக்கு ஏன் அங்குள்ள சில மக்கள் முதல் இளைஞ்சர் வரைக்கும்  கர்ணா பிரிந்து போன போது  குறிப்பாக மட்டக்களப்பு  தமிழர்களை ஓர் பிரிவினை வாதிகளாகவே பார்க்கின்றனர் இப்பவரைக்கும் இது பாராளுமன்ற உறுப்பினர் வரைக்கும் இருக்கலாம் இல்லாமல் போகலாம்

சிறிய உதாரணம்  என் இரு நண்பர்ளுக்கு 

ஒருவர் யாழ்பலைக்கழகம் சென்றவர் போன உடனே நீ யாருடைய ஆள் கார்ணாவின் ஆளா பிள்ளையானின் ஆளா  என கேட்டு கேட்டு தினம் தினம் கேவலாமான பார்வை அசிங்கமான திட்டுக்கள் இதுக்கு அவனுக்கு எதுவுமே தெரியாத ஒருத்தன் அப்பா அம்மா இல்லை இறந்து போய்விட்டனர் பின்னர் தொந்தரவு தாங்கி கொள்ளாமல் வந்து தற்போது பொலிஸில் வேலைபார்க்கிறான். ரகசிய பொலிசாராக ( சிஐடி)

இன்னொருத்தனுக்கு அதே நிலமை சீனியர்கள் இரவில் அதே கேள்வியை கேட்டு இரவில் 1 மணிக்கு ஒவ்வொரு நாளும் அடியாம் அடி பொறுக்க முடியாமால் ஒரு நாள் ஒரு சீனியர் தனியப் ப்டவே என்னையா யாருடைய ஆள் என கேட்கிறாய் என போட்டு வெழுத்திருக்கிறான் அதன் பின்னர் யாரும் கைவைப்பதில்லையாம் அவனை இன்னும் பல இருக்கு ஆயூர் வேத படிப்பு முடிக்க போன நண்பர்களும் சொன்னார்கள் இதையெல்லாம் நான் ஏன் சொல்கிறேன் இங்கே கருத்து எழுதுபவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்க்காக. இது பற்றி உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம் இதுவரைக்கும்  ஆனால் இது இப்பவரைக்கும் இருக்கிறது 

 

கர்ணா ஒரு துரோகி மாற்றுக்கருத்து இல்லை ( ஆனால் வடக்கில் அதை விட துரோகிகள் இப்பவரைக்கும் இருக்கிறார்கள் ) அதை விட்டு வெளியேறி பல்லாயிரம் போராளிகள் இப்பவும் இந்தவருடமும் மத்திய கிழக்கில் பெருமெடுப்பில்  மாவீரர் தினம் கொண்ட்டாடினார்கள்  ஒருவன் செய்ததற்காக  கிழக்கில் உள்ள அத்தனை பேரும் துரோகி அல்ல நீங்கள் கிழக்கை விட்டாலும் அரசாங்கம் எம்மையும் மக்களையும் காக்கும்  மங்குனி உறுப்பினரே   

வடக்கையும் கிழக்கையும் இணைக்க முடியாமல் இருப்பது இப்படி கையாலதனம் கொண்டவர்களாலேயே tw_angry:

Edited by தனிக்காட்டு ராஜா

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

 பாராளு மன்ற உறுப்பினர்ருக்கு ஏன் அங்குள்ள சில மக்கள் முதல் இளைஞ்சர் வரைக்கும்  கர்ணா பிரிந்து போன போது  குறிப்பாக மட்டக்களப்பு  தமிழர்களை ஓர் பிரிவினை வாதிகளாகவே பார்க்கின்றனர் இப்பவரைக்கும் இது பாராளுமன்ற உறுப்பினர் வரைக்கும் இருக்கலாம் இல்லாமல் போகலாம்

சிறிய உதாரணம்  என் இரு நண்பர்ளுக்கு 

ஒருவர் யாழ்பலைக்கழகம் சென்றவர் போன உடனே நீ யாருடைய ஆள் கார்ணாவின் ஆளா பிள்ளையானின் ஆளா  என கேட்டு கேட்டு தினம் தினம் கேவலாமான பார்வை அசிங்கமான திட்டுக்கள் இதுக்கு அவனுக்கு எதுவுமே தெரியாத ஒருத்தன் அப்பா அம்மா இல்லை இறந்து போய்விட்டனர் பின்னர் தொந்தரவு தாங்கி கொள்ளாமல் வந்து தற்போது பொலிஸில் வேலைபார்க்கிறான். ரகசிய பொலிசாராக ( சிஐடி)

இன்னொருத்தனுக்கு அதே நிலமை சீனியர்கள் இரவில் அதே கேள்வியை கேட்டு இரவில் 1 மணிக்கு ஒவ்வொரு நாளும் அடியாம் அடி பொறுக்க முடியாமால் ஒரு நாள் ஒரு சீனியர் தனியப் ப்டவே என்னையா யாருடைய ஆள் என கேட்கிறாய் என போட்டு வெழுத்திருக்கிறான் அதன் பின்னர் யாரும் கைவைப்பதில்லையாம் அவனை இன்னும் பல இருக்கு ஆயூர் வேத படிப்பு முடிக்க போன நண்பர்களும் சொன்னார்கள் இதையெல்லாம் நான் ஏன் சொல்கிறேன் இங்கே கருத்து எழுதுபவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்க்காக. இது பற்றி உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம் இதுவரைக்கும்  ஆனால் இது இப்பவரைக்கும் இருக்கிறது 

 

கர்ணா ஒரு துரோகி மாற்றுக்கருத்து இல்லை ( ஆனால் வடக்கில் அதை விட துரோகிகள் இப்பவரைக்கும் இருக்கிறார்கள் ) அதை விட்டு வெளியேறி பல்லாயிரம் போராளிகள் இப்பவும் இந்தவருடமும் மத்திய கிழக்கில் பெருமெடுப்பில்  மாவீரர் தினம் கொண்ட்டாடினார்கள்  ஒருவன் செய்ததற்காக  கிழக்கில் உள்ள அத்தனை பேரும் துரோகி அல்ல நீங்கள் கிழக்கை விட்டாலும் அரசாங்கம் எம்மையும் மக்களையும் காக்கும்  மங்குனி உறுப்பினரே   

வடக்கையும் கிழக்கையும் இணைக்க முடியாமல் இருப்பது இப்படி கையாலதனம் கொண்டவர்களாலேயே tw_angry:

பல்கலைக்கழக பகிடி வதையின் போது நடப்பவற்றை அரசியல் விமர்சனம் ஆக்க வேண்டாம்,

4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

 பாராளு மன்ற உறுப்பினர்ருக்கு ஏன் அங்குள்ள சில மக்கள் முதல் இளைஞ்சர் வரைக்கும்  கர்ணா பிரிந்து போன போது  குறிப்பாக மட்டக்களப்பு  தமிழர்களை ஓர் பிரிவினை வாதிகளாகவே பார்க்கின்றனர் இப்பவரைக்கும் இது பாராளுமன்ற உறுப்பினர் வரைக்கும் இருக்கலாம் இல்லாமல் போகலாம்

சிறிய உதாரணம்  என் இரு நண்பர்ளுக்கு 

ஒருவர் யாழ்பலைக்கழகம் சென்றவர் போன உடனே நீ யாருடைய ஆள் கார்ணாவின் ஆளா பிள்ளையானின் ஆளா  என கேட்டு கேட்டு தினம் தினம் கேவலாமான பார்வை அசிங்கமான திட்டுக்கள் இதுக்கு அவனுக்கு எதுவுமே தெரியாத ஒருத்தன் அப்பா அம்மா இல்லை இறந்து போய்விட்டனர் பின்னர் தொந்தரவு தாங்கி கொள்ளாமல் வந்து தற்போது பொலிஸில் வேலைபார்க்கிறான். ரகசிய பொலிசாராக ( சிஐடி)

இன்னொருத்தனுக்கு அதே நிலமை சீனியர்கள் இரவில் அதே கேள்வியை கேட்டு இரவில் 1 மணிக்கு ஒவ்வொரு நாளும் அடியாம் அடி பொறுக்க முடியாமால் ஒரு நாள் ஒரு சீனியர் தனியப் ப்டவே என்னையா யாருடைய ஆள் என கேட்கிறாய் என போட்டு வெழுத்திருக்கிறான் அதன் பின்னர் யாரும் கைவைப்பதில்லையாம் அவனை இன்னும் பல இருக்கு ஆயூர் வேத படிப்பு முடிக்க போன நண்பர்களும் சொன்னார்கள் இதையெல்லாம் நான் ஏன் சொல்கிறேன் இங்கே கருத்து எழுதுபவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்க்காக. இது பற்றி உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம் இதுவரைக்கும்  ஆனால் இது இப்பவரைக்கும் இருக்கிறது 

 

கர்ணா ஒரு துரோகி மாற்றுக்கருத்து இல்லை ( ஆனால் வடக்கில் அதை விட துரோகிகள் இப்பவரைக்கும் இருக்கிறார்கள் ) அதை விட்டு வெளியேறி பல்லாயிரம் போராளிகள் இப்பவும் இந்தவருடமும் மத்திய கிழக்கில் பெருமெடுப்பில்  மாவீரர் தினம் கொண்ட்டாடினார்கள்  ஒருவன் செய்ததற்காக  கிழக்கில் உள்ள அத்தனை பேரும் துரோகி அல்ல நீங்கள் கிழக்கை விட்டாலும் அரசாங்கம் எம்மையும் மக்களையும் காக்கும்  மங்குனி உறுப்பினரே   

வடக்கையும் கிழக்கையும் இணைக்க முடியாமல் இருப்பது இப்படி கையாலதனம் கொண்டவர்களாலேயே tw_angry:

 

உண்மை. அதைவிட, சுயனலத்தின் உச்சம்

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, MEERA said:

பல்கலைக்கழக பகிடி வதையின் போது நடப்பவற்றை அரசியல் விமர்சனம் ஆக்க வேண்டாம்,

ஒரு அரசியல் வாதியே சொல்லி இருக்கிறார் வடக்கை தனி நாடாக ஆக்க சொல்லி அதற்கு என்ன சொல்ல போறியள்  பல்கலைக்கழக பகிடி வதைக்கும் அப்பாலும் இன்னும் உள்ளது சொல்ல கூடாது அது பிரிவினையாக்குவதாக அமையும் அண்ண எல்லோரும் தமிழ் மக்கள் / ஈழ மக்கள்தான் 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஒரு அரசியல் வாதியே சொல்லி இருக்கிறார் வடக்கை தனி நாடாக ஆக்க சொல்லி அதற்கு என்ன சொல்ல போறியள்  பல்கலைக்கழக பகிடி வதைக்கும் அப்பாலும் இன்னும் உள்ளது சொல்ல கூடாது அது பிரிவினையாக்குவதாக அமையும் அண்ண எல்லோரும் தமிழ் மக்கள் / ஈழ மக்கள்தான் 

விசுகு வின் கருத்திற்கு நான் விருப்பு வாக்கு இட்டதில் இருந்தே எனது கருத்து புரிந்திருக்கும்.

கிழக்கின் சூழ்நிலை சற்று வித்தியாசமானது வடக்குடன் ஒப்பிடும் போது, அதனால் கிழக்கிற்கான விடிவு கிழக்கிலிருந்தே பிறக்க வேண்டும். ஆனால் இப்போது கிழக்கு எம்பி மாரும் வடக்கின் பின்னால் நிற்பதுதான் வேடிக்கை.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

விசுகு வின் கருத்திற்கு நான் விருப்பு வாக்கு இட்டதில் இருந்தே எனது கருத்து புரிந்திருக்கும்.

கிழக்கின் சூழ்நிலை சற்று வித்தியாசமானது வடக்குடன் ஒப்பிடும் போது, அதனால் கிழக்கிற்கான விடிவு கிழக்கிலிருந்தே பிறக்க வேண்டும். ஆனால் இப்போது கிழக்கு எம்பி மாரும் வடக்கின் பின்னால் நிற்பதுதான் வேடிக்கை.

இந்தநிலை இப்போது தோன்றியதல்ல. இலங்கை ஐரோப்பியரின் காலனியாக இருந்தபோதே, அவர்களின் ஆட்சியின்கீழ் கிழக்குமாகாணத்தில் அரசியல் செய்த தமிழர்கள் எவரும் கிழக்குமாகான வழித்தோன்றலில் வந்தவர்கள் அல்ல. மட்டக்களப்பில் இராசதுரை அவர்களைத் தோற்கடிப்பதற்கு தமிழரசுக்கட்சித் தலைவர் அமிர்தலிங்கம் செய்த சூழ்ச்சிப்பொறியில் கவிஞர் காசியானந்தன் அகப்பட்டார், காசியானந்தன் அவர்களைத் தவிர மற்றும் அனைத்து பேட்பாளர்களும் கிழக்குமாகாண வழித்தோன்றலில் வந்தவர்கள் அல்ல. கிழக்குமாகாண வழித்தோன்றலில் வந்த ஒரே ஒரு வேட்பாளர் கவிஞர் காசியானந்தன் அங்கு தோற்கடிக்கப்பட்டார்.
 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 10.12.2017 at 2:45 PM, தனிக்காட்டு ராஜா said:

 பாராளு மன்ற உறுப்பினர்ருக்கு ஏன் அங்குள்ள சில மக்கள் முதல் இளைஞ்சர் வரைக்கும்  கர்ணா பிரிந்து போன போது  குறிப்பாக மட்டக்களப்பு  தமிழர்களை ஓர் பிரிவினை வாதிகளாகவே பார்க்கின்றனர் இப்பவரைக்கும் இது பாராளுமன்ற உறுப்பினர் வரைக்கும் இருக்கலாம் இல்லாமல் போகலாம்

சிறிய உதாரணம்  என் இரு நண்பர்ளுக்கு 

ஒருவர் யாழ்பலைக்கழகம் சென்றவர் போன உடனே நீ யாருடைய ஆள் கார்ணாவின் ஆளா பிள்ளையானின் ஆளா  என கேட்டு கேட்டு தினம் தினம் கேவலாமான பார்வை அசிங்கமான திட்டுக்கள் இதுக்கு அவனுக்கு எதுவுமே தெரியாத ஒருத்தன் அப்பா அம்மா இல்லை இறந்து போய்விட்டனர் பின்னர் தொந்தரவு தாங்கி கொள்ளாமல் வந்து தற்போது பொலிஸில் வேலைபார்க்கிறான். ரகசிய பொலிசாராக ( சிஐடி)

இன்னொருத்தனுக்கு அதே நிலமை சீனியர்கள் இரவில் அதே கேள்வியை கேட்டு இரவில் 1 மணிக்கு ஒவ்வொரு நாளும் அடியாம் அடி பொறுக்க முடியாமால் ஒரு நாள் ஒரு சீனியர் தனியப் ப்டவே என்னையா யாருடைய ஆள் என கேட்கிறாய் என போட்டு வெழுத்திருக்கிறான் அதன் பின்னர் யாரும் கைவைப்பதில்லையாம் அவனை இன்னும் பல இருக்கு ஆயூர் வேத படிப்பு முடிக்க போன நண்பர்களும் சொன்னார்கள் இதையெல்லாம் நான் ஏன் சொல்கிறேன் இங்கே கருத்து எழுதுபவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்க்காக. இது பற்றி உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம் இதுவரைக்கும்  ஆனால் இது இப்பவரைக்கும் இருக்கிறது 

 

கர்ணா ஒரு துரோகி மாற்றுக்கருத்து இல்லை ( ஆனால் வடக்கில் அதை விட துரோகிகள் இப்பவரைக்கும் இருக்கிறார்கள் ) அதை விட்டு வெளியேறி பல்லாயிரம் போராளிகள் இப்பவும் இந்தவருடமும் மத்திய கிழக்கில் பெருமெடுப்பில்  மாவீரர் தினம் கொண்ட்டாடினார்கள்  ஒருவன் செய்ததற்காக  கிழக்கில் உள்ள அத்தனை பேரும் துரோகி அல்ல நீங்கள் கிழக்கை விட்டாலும் அரசாங்கம் எம்மையும் மக்களையும் காக்கும்  மங்குனி உறுப்பினரே   

வடக்கையும் கிழக்கையும் இணைக்க முடியாமல் இருப்பது இப்படி கையாலதனம் கொண்டவர்களாலேயே tw_angry:

நான் கலவரம்,கரைச்சல்கள் வர முன்பே  மட்டுநகரில் வசித்தவன். ஏற்ற இறக்க மக்களோடு அடிமட்டம் / மூலஸ்தானம் வரைக்கும் பழகியவன்.

ஆனால் சந்தர்ப்பம் சூழ்நிலை வரும்போது மண்வாசனை அந்தமாதிரி வீசும்.

பகிர்ந்து கொள்வோமா? :cool:

இரு பக்கமும் ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றன என்பது எனது கருத்து.

நான் திறமா நீங்கள் திறமா என்ற விவாதம் வருமாயின்??????

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, MEERA said:

விசுகு வின் கருத்திற்கு நான் விருப்பு வாக்கு இட்டதில் இருந்தே எனது கருத்து புரிந்திருக்கும்.

கிழக்கின் சூழ்நிலை சற்று வித்தியாசமானது வடக்குடன் ஒப்பிடும் போது, அதனால் கிழக்கிற்கான விடிவு கிழக்கிலிருந்தே பிறக்க வேண்டும். ஆனால் இப்போது கிழக்கு எம்பி மாரும் வடக்கின் பின்னால் நிற்பதுதான் வேடிக்கை.

ம் உன்மைதான் கிழக்கின் நீங்கள் அறிந்திருப்பிர்கள் காலம் காலமும் கடந்டுவிட்டது இவர்களை நம்பி இருந்ததுதான்மிச்சம் 

 

11 hours ago, Paanch said:

இந்தநிலை இப்போது தோன்றியதல்ல. இலங்கை ஐரோப்பியரின் காலனியாக இருந்தபோதே, அவர்களின் ஆட்சியின்கீழ் கிழக்குமாகாணத்தில் அரசியல் செய்த தமிழர்கள் எவரும் கிழக்குமாகான வழித்தோன்றலில் வந்தவர்கள் அல்ல. மட்டக்களப்பில் இராசதுரை அவர்களைத் தோற்கடிப்பதற்கு தமிழரசுக்கட்சித் தலைவர் அமிர்தலிங்கம் செய்த சூழ்ச்சிப்பொறியில் கவிஞர் காசியானந்தன் அகப்பட்டார், காசியானந்தன் அவர்களைத் தவிர மற்றும் அனைத்து பேட்பாளர்களும் கிழக்குமாகாண வழித்தோன்றலில் வந்தவர்கள் அல்ல. கிழக்குமாகாண வழித்தோன்றலில் வந்த ஒரே ஒரு வேட்பாளர் கவிஞர் காசியானந்தன் அங்கு தோற்கடிக்கப்பட்டார்.
 

 அண்மையில் மட்டக்களப்பு வந்த இராசதுரை பழைய தான் எழுதிய அரசியல் புத்தகங்கள் வாசிக்க கிடைத்தது கிழக்கில் அரசியலில் தான்நிறக் பாடு பட்டதையும் கூறினார் கிழக்கு இசைநடனக்கல்லூரியில் நடந்தது 

 

7 hours ago, குமாரசாமி said:

நான் கலவரம்,கரைச்சல்கள் வர முன்பே  மட்டுநகரில் வசித்தவன். ஏற்ற இறக்க மக்களோடு அடிமட்டம் / மூலஸ்தானம் வரைக்கும் பழகியவன்.

ஆனால் சந்தர்ப்பம் சூழ்நிலை வரும்போது மண்வாசனை அந்தமாதிரி வீசும்.

பகிர்ந்து கொள்வோமா? :cool:

இரு பக்கமும் ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றன என்பது எனது கருத்து.

நான் திறமா நீங்கள் திறமா என்ற விவாதம் வருமாயின்??????

நீங்கள் பழையதை சொல்லலாம் நான் புதியதை சொன்னேன் அவ்வளவுதான்  நான் யாரும் இங்கு திறம் என்று சொல்ல வரவில்லையே ஏற்ற தாழ்வு எங்கும் இருக்கு ஆனால்...............................................

  • கருத்துக்கள உறவுகள்

எதுக்கும் வீரகேசரி அடிக்கடி கிழக்கை எடுத்துவிடுவது உண்டு ஏன் அக்கப்போர்.

***

Edited by மோகன்
** நீக்கப்பட்டுள்ளது

  • கருத்துக்கள உறவுகள்
On 10/12/2017 at 2:45 PM, தனிக்காட்டு ராஜா said:

 பாராளு மன்ற உறுப்பினர்ருக்கு ஏன் அங்குள்ள சில மக்கள் முதல் இளைஞ்சர் வரைக்கும்  கர்ணா பிரிந்து போன போது  குறிப்பாக மட்டக்களப்பு  தமிழர்களை ஓர் பிரிவினை வாதிகளாகவே பார்க்கின்றனர் இப்பவரைக்கும் இது பாராளுமன்ற உறுப்பினர் வரைக்கும் இருக்கலாம் இல்லாமல் போகலாம்

சிறிய உதாரணம்  என் இரு நண்பர்ளுக்கு 

ஒருவர் யாழ்பலைக்கழகம் சென்றவர் போன உடனே நீ யாருடைய ஆள் கார்ணாவின் ஆளா பிள்ளையானின் ஆளா  என கேட்டு கேட்டு தினம் தினம் கேவலாமான பார்வை அசிங்கமான திட்டுக்கள் இதுக்கு அவனுக்கு எதுவுமே தெரியாத ஒருத்தன் அப்பா அம்மா இல்லை இறந்து போய்விட்டனர் பின்னர் தொந்தரவு தாங்கி கொள்ளாமல் வந்து தற்போது பொலிஸில் வேலைபார்க்கிறான். ரகசிய பொலிசாராக ( சிஐடி)

இன்னொருத்தனுக்கு அதே நிலமை சீனியர்கள் இரவில் அதே கேள்வியை கேட்டு இரவில் 1 மணிக்கு ஒவ்வொரு நாளும் அடியாம் அடி பொறுக்க முடியாமால் ஒரு நாள் ஒரு சீனியர் தனியப் ப்டவே என்னையா யாருடைய ஆள் என கேட்கிறாய் என போட்டு வெழுத்திருக்கிறான் அதன் பின்னர் யாரும் கைவைப்பதில்லையாம் அவனை இன்னும் பல இருக்கு ஆயூர் வேத படிப்பு முடிக்க போன நண்பர்களும் சொன்னார்கள் இதையெல்லாம் நான் ஏன் சொல்கிறேன் இங்கே கருத்து எழுதுபவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்க்காக. இது பற்றி உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம் இதுவரைக்கும்  ஆனால் இது இப்பவரைக்கும் இருக்கிறது 

 

கர்ணா ஒரு துரோகி மாற்றுக்கருத்து இல்லை ( ஆனால் வடக்கில் அதை விட துரோகிகள் இப்பவரைக்கும் இருக்கிறார்கள் ) அதை விட்டு வெளியேறி பல்லாயிரம் போராளிகள் இப்பவும் இந்தவருடமும் மத்திய கிழக்கில் பெருமெடுப்பில்  மாவீரர் தினம் கொண்ட்டாடினார்கள்  ஒருவன் செய்ததற்காக  கிழக்கில் உள்ள அத்தனை பேரும் துரோகி அல்ல நீங்கள் கிழக்கை விட்டாலும் அரசாங்கம் எம்மையும் மக்களையும் காக்கும்  மங்குனி உறுப்பினரே   

வடக்கையும் கிழக்கையும் இணைக்க முடியாமல் இருப்பது இப்படி கையாலதனம் கொண்டவர்களாலேயே tw_angry:

இன்று  தான் பார்த்தேன்

பலியாகி  விடாமல்   பாதுகாப்பது  உங்கள்  போன்ற  அடுத்த  தலைமுறையின் கைகளில்  தான்  உள்ளது

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, விசுகு said:

இன்று  தான் பார்த்தேன்

பலியாகி  விடாமல்   பாதுகாப்பது  உங்கள்  போன்ற  அடுத்த  தலைமுறையின் கைகளில்  தான்  உள்ளது

வடக்கு கிழக்கு இணைப்பு சாத்தியமே இல்லை நிட்சயமாக முஸ்லிம்கள் விடமாட்டார்கள் 

நன்றி எங்களுக்கு எந்த பிரிவினையின் வாதமும் இல்லை வடக்ில் ஏதாவது நடந்தால் கூட கிழக்கில் வலிக்கும் 

15 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

வடக்கு கிழக்கு இணைப்பு சாத்தியமே இல்லை நிட்சயமாக முஸ்லிம்கள் விடமாட்டார்கள் 

நன்றி எங்களுக்கு எந்த பிரிவினையின் வாதமும் இல்லை வடக்ில் ஏதாவது நடந்தால் கூட கிழக்கில் வலிக்கும் 

நீங்க வேற வடக்கில் ஏதாவது நடந்தால் வடக்காருக்கே வலிக்குது இல்லை, முஸ்லீம் கடையை புறக்கணிக்குமாறு  கூறினால் இனவாதி மதவாதி பட்டம் யாழ்பாண்த்தாரர் வழங்கீனம்.

வடக்கு கிழக்கை இணைக்க ஏன் கிழக்கு முஸ்லீமிடம் கேட்க வேணும் ???????

 

அதை விட போகிற போக்கில் வடக்கை கிழக்குடன் இணைத்தால் முஸ்லீம்களுக்கு தான் நன்மை, ஏன் என்றால் இஸ்லாமிய மயப்படுத்தலை துரித படுத்தி வடக்கு கிழக்கில் தனி முஸ்லிம் நாட்டை உருவாக்கலாம்.

அதுவரை புலம் பெயர் இழிச்ச பாய்கள் லண்டணில் மாவீரர் கல்லறை அமைத்து பிரான்சில் காசு சேர்த்து கனடாவில் கொத்து ரொட்டி வித்து  சுவிஸ்ஸில் பாட்டு பாட தான் லாயக்கு.

இலண்டனில் ஒரு கோவிலில் மட்டும் £ 2,000,000 இருப்பில் இருக்கு ஏன் ஏன் ?????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.