Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

களமிறங்குகிறாராம் கோத்தா! 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
களமிறங்குகிறாராம் கோத்தா! 
[Saturday 2017-12-30 19:00]
2020 ஆம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தலில்  முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ களமிறங்குவார் என மஹிந்த அணி தெரிவித்துள்ளது.பொலன்னறுவையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய மஹிந்த அணி நாடாளுமன்ற ரொஷான் ரணசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

2020 ஆம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ களமிறங்குவார் என மஹிந்த அணி தெரிவித்துள்ளது.பொலன்னறுவையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய மஹிந்த அணி நாடாளுமன்ற ரொஷான் ரணசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.   

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போட்டியிட முடியாது என்பதே இவர்களின் எண்ணமாக உள்ளது. அப்படியாயின், யுத்தத்தில் மஹிந்த ராஜபக்ஷவுககு பக்கபலமாக இருந்த தலைவர் இருக்கிறார். அவர் வேறு யாருமல்ல கோத்தபாய ராஜபக்ஷதான். 2019 அல்லது 2020 ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்க மக்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.கோத்தபாய ராஜபக்ஷ இந்த நாட்டின் ஜனாதிபதியாகும்போது, நிறைவேற்று அதிகாரம் மிக்க பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை அதிகாரத்துக்கு கொண்டுவருவோம். இதனூடாக மஹிந்த - கோத்தா யுகத்தை நாட்டில் உருவாக்குவோம் என நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.http://www.seithy.com/breifNews.php?newsID=196588&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

"பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்." :(

"கோத்தா அரசு செய்தால் பிணம் புணரும் காவற்படை." :shocked:

  • கருத்துக்கள உறவுகள்

இவர் தேர்தலில் போட்டியிடுவதாயின், அமரிக்க குடியுரிமையை விடவேண்டும்.

ஒரே மகன் அங்கே உள்ள நிலையில் அதனை செய்ய மாட்டார். 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தி, அமெரிக்காவின் கஸ்பி+ வரிச்சலுகை நீக்கம், அண்மையில் அமெரிக்காவின் சிங்களத்தை தங்கள் வலிக்கு கொண்டு வருவதற்கான, மிலெனியாம் கார்பொரேஷன் நன்கொடை, சொறி சிங்கள லங்காவிடற்கு (எலும்புத்துண்டான) தலைப்பு பதவி, உலக வங்கி திட்டமான விஷன் 2025 போன்றவை எதிர்பார்த்த  பலனிற்கு   மாற்றான பலனையே, அதாவது சீனாவின் பிடியும், இருப்பும் மீட்கமுடியாத அளவிற்கு,   நிரந்தரமாகிவிட்டது. அதாவது சொறி சொறி சிங்கள லங்காவின் வெளியாக இறைமை (அப்படி ஒன்று இருந்திருக்குமாயின்)  சீனாவிடம், கிந்தியாவையும் மீறி,  நிழலாக மாறி உள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த தேர்தலில் நிற்பவர் நாமல் ராஜபக்சே.

எனினும் மைத்திரி போட்டியில் இருப்பார். 

2 hours ago, Nathamuni said:

அடுத்த தேர்தலில் நிற்பவர் நாமல் ராஜபக்சே.

எனினும் மைத்திரி போட்டியில் இருப்பார். 

நாமல் கண்டிப்பாக தேர்தலில் நிற்பார்; ஆனால் கண்டிப்பாக சனாதிபதித் தேர்தலில் அல்ல. மகிந்த நாமலை இப்பவே சனாதிபதித் தேர்தலில் நிறுத்தும் அளவுக்கு அரசியல் தெரியாதவர் அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

நாமல் கண்டிப்பாக தேர்தலில் நிற்பார்; ஆனால் கண்டிப்பாக சனாதிபதித் தேர்தலில் அல்ல. மகிந்த நாமலை இப்பவே சனாதிபதித் தேர்தலில் நிறுத்தும் அளவுக்கு அரசியல் தெரியாதவர் அல்ல.

இலங்கையின் அரசியல் தந்திரங்களை புரிந்து கொள்ள வேண்டும்.

கொழும்பு மாநகர சபையின் உறுப்பினராக இருந்த பிரேமதாச, எம் பி ஆக அடுத்த நிலைக்கு போக பாவித்த தந்திரம்.....

மிகவும் புகழ் பூத்த தலைவரான என் எம் பெரேரா வை எதிர்த்து எட்டியான்தோட்டை தொகுதியில், நிற்பது அரசியல் தற்கொலைக்கு சமனானது. ஐ தே க யில் யாரும் முன் வரவில்லை.

பிரேமதாச முன்வந்தார். காரணம்..... அடுத்து வந்த தேர்தலில்... கொழும்பு மத்திய தொகுதியில் எம் பி ஆக நிற்கும் வகையில் தரத்தினை அது உயர்த்தியது. இதனை செய்திராவிடில், ஆகக் கூடியது கொழும்பு நகர மேஜர்.

வென்றார். பின்னர் பிரதமரானார்.... ஜனாதிபதி ஆனார்..

நாமலும் அதே தந்திரம் தான்..... இம்முறை வெல்வதல்ல. ஜனாதிபதி தேர்தலில் போட்டி இட்டு தரத்தினை உயர்திக் கொள்வது. 

பின்னர் வெல்வதற்கு போட்டி இடுவது. வயது இருக்கிறது....

  • கருத்துக்கள உறவுகள்
On 12/31/2017 at 9:45 AM, nochchi said:
களமிறங்குகிறாராம் கோத்தா! 
[Saturday 2017-12-30 19:00]

 

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போட்டியிட முடியாது என்பதே இவர்களின் எண்ணமாக உள்ளது. அப்படியாயின், யுத்தத்தில் மஹிந்த ராஜபக்ஷவுககு பக்கபலமாக இருந்த தலைவர் இருக்கிறார். அவர் வேறு யாருமல்ல கோத்தபாய ராஜபக்ஷதான். 

ஒரு தலைமை இல்லையென்றால் இன்னொரு தலைமையை கட்டியெழுப்ப அவர்களால் மட்டுமே முடியும்

ஒருவன் தலைவராய் இருந்துவிட்டால் அவனை அவனை தள்ளிவிழுத்தி நாம் எப்படி பெயர் வாங்கலாம் என்பது எங்களால் மட்டுமே முடியும்...

’மேலே உள்ளது அவர்களின் பலம் , கீழே இருப்பது எங்களின் பலவீனம்’...

கோத்தபாயாவின் உடலையும் முகத்தையும் பாருங்கள், ஒல்லி குச்சிபோல் இருந்த அவனுக்கு

 வயசும், உருவமும் ஒட்டு மொத்தமாய் மாறிவிட்டாலும் , நம்மை வஞ்சிக்கும் குணம் எப்போதும் அப்படியே இருக்கிறது, அதுவே பெரும்பான்மை இனத்தின் செய்தியிலும் அவன் சிரிப்பிலும் உள்ள செய்தி!

எல்லாமே கைவிட்டு போய்விட்டது, எம்மிடம் உள்ள ஒரே ஒரு ஒரு ஆறுதல், அப்பப்போ சிங்களவனை வெறுப்பேத்தும் விக்னேஸ்வரன் ஐயா மட்டுமே!

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, valavan said:

ஒரு தலைமை இல்லையென்றால் இன்னொரு தலைமையை கட்டியெழுப்ப அவர்களால் மட்டுமே முடியும்

ஒருவன் தலைவராய் இருந்துவிட்டால் அவனை அவனை தள்ளிவிழுத்தி நாம் எப்படி பெயர் வாங்கலாம் என்பது எங்களால் மட்டுமே முடியும்...

’மேலே உள்ளது அவர்களின் பலம் , கீழே இருப்பது எங்களின் பலவீனம்’...

கோத்தபாயாவின் உடலையும் முகத்தையும் பாருங்கள், ஒல்லி குச்சிபோல் இருந்த அவனுக்கு

 வயசும், உருவமும் ஒட்டு மொத்தமாய் மாறிவிட்டாலும் , நம்மை வஞ்சிக்கும் குணம் எப்போதும் அப்படியே இருக்கிறது, அதுவே பெரும்பான்மை இனத்தின் செய்தியிலும் அவன் சிரிப்பிலும் உள்ள செய்தி!

எல்லாமே கைவிட்டு போய்விட்டது, எம்மிடம் உள்ள ஒரே ஒரு ஒரு ஆறுதல், அப்பப்போ சிங்களவனை வெறுப்பேத்தும் விக்னேஸ்வரன் ஐயா மட்டுமே!

கொப்பிழக்கக் கூடாது....

மிகவும் வித்தியாசமாக சிந்தித்தீர்களானால்...... எமது பிரச்னை தீர்வதாயின்.... மகிந்த அல்லது கோத்தா மீண்டும் வரவேண்டும்....

ஞாயிறு சண்டே லீடர் பத்திரிகையில்.... இலங்கை தொடர்பான இந்திய ஆய்வாளர் எழுதுகிறார்.... இலங்கையின் சாபக்கேடு... அங்கே இலங்கையை ஒரே நாடாக வைத்திருக்கக் கூடிய  ஒரு நெல்சன் மண்டேலா போன்ற ஒரு சிறந்த தலைமை இல்லை...

அப்படி ஒரு தலைமை வந்தால்..... ஈழத்தினை மறந்து ஒற்றுமையாக இருக்கலாம். இல்லாவிடில் எதிர்மறை தான்.. அந்த வகையில்.... மகிந்த அல்லது கோத்தா மீண்டும் வரவேண்டும்....

முன்னர் சோழரும் பின்னர் போர்த்துக்கேயரும், ஒல்லாந்தரும், பிரிட்டிஷ்காரரும் தொடர்ந்து ஆழமுடியாத நிலையில்.... எத்தனை காலத்துக்கு தான் சிங்களம் ஆள முடியும்? 

ஒரு தொடக்கம் இருந்தால், முடிவும் இருக்கும்....

நாம் பிறப்பதற்கு சில ஆண்டுகள் முன்னர் தான்... சூரியன் மறையா சாம்ராஜ்ஜியத்தின் அசூர பிடியில் இருந்து தீவு விடுபட்டது... 

1 hour ago, Nathamuni said:

இலங்கையின் அரசியல் தந்திரங்களை புரிந்து கொள்ள வேண்டும்.

கொழும்பு மாநகர சபையின் உறுப்பினராக இருந்த பிரேமதாச, எம் பி ஆக அடுத்த நிலைக்கு போக பாவித்த தந்திரம்.....

மிகவும் புகழ் பூத்த தலைவரான என் எம் பெரேரா வை எதிர்த்து எட்டியான்தோட்டை தொகுதியில், நிற்பது அரசியல் தற்கொலைக்கு சமனானது. ஐ தே க யில் யாரும் முன் வரவில்லை.

பிரேமதாச முன்வந்தார். காரணம்..... அடுத்து வந்த தேர்தலில்... கொழும்பு மத்திய தொகுதியில் எம் பி ஆக நிற்கும் வகையில் தரத்தினை அது உயர்த்தியது. இதனை செய்திராவிடில், ஆகக் கூடியது கொழும்பு நகர மேஜர்.

வென்றார். பின்னர் பிரதமரானார்.... ஜனாதிபதி ஆனார்..

நாமலும் அதே தந்திரம் தான்..... இம்முறை வெல்வதல்ல. ஜனாதிபதி தேர்தலில் போட்டி இட்டு தரத்தினை உயர்திக் கொள்வது. 

பின்னர் வெல்வதற்கு போட்டி இடுவது. வயது இருக்கிறது....

நாதம், இலங்கை அரசியல் தந்திரங்களையும் வரலாற்றையும் மகிந்தவின் அரசியலையும் புரிந்தமையால் தான் நான் நாமல் அடுத்த சனாதிபதி தேர்தலில் கண்டிப்பாக போட்டியிட மாட்டார் என எழுதினேன்.

பிரேமதாசா சிங்களத்தின் செல்வாக்கு மிக்க கொவிகம சாதியில் பிறக்காமல் கடைநிலை சமூகம் ஒன்றில் பிறந்து படிப்படியாக முன்னேறி இலட்சக்கணக்கான சிங்களவர்களுக்கு வீடமைப்பு திட்டங்களின் மூலம் வீடுகள் வழங்கி பிரதமராகி இந்திய எதிர்ப்பு அரசியலை முன்னிறுத்தி ஈற்றில் சனாதிபதியானவர். செல்வாக்கு மிக்க குடும்ப சூழல் என்று எந்த அடையாளமும் இன்றி முன்னேறிய அவரது அரசியலும் நாமலின் அரசியலும் முற்றாக வேறு விதமானவை.

சனாதிபதி தேர்தலுக்கு இன்னும் அதிக காலம் இல்லை. இன்னும் இரண்டு வருடங்கள் தான் இருக்கு. இந்த திரியை bookmark பண்ணி வையுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Nathamuni said:

கொப்பிழக்கக் கூடாது....

மிகவும் வித்தியாசமாக சிந்தித்தீர்களானால்...... எமது பிரச்னை தீர்வதாயின்.... மகிந்த அல்லது கோத்தா மீண்டும் வரவேண்டும்....

ஞாயிறு சண்டே லீடர் பத்திரிகையில்.... இலங்கை தொடர்பான இந்திய ஆய்வாளர் எழுதுகிறார்.... இலங்கையின் சாபக்கேடு... அங்கே இலங்கையை ஒரே நாடாக வைத்திருக்கக் கூடிய  ஒரு நெல்சன் மண்டேலா போன்ற ஒரு சிறந்த தலைமை இல்லை...

அப்படி ஒரு தலைமை வந்தால்..... ஈழத்தினை மறந்து ஒற்றுமையாக இருக்கலாம். இல்லாவிடில் எதிர்மறை தான்.. அந்த வகையில்.... மகிந்த அல்லது கோத்தா மீண்டும் வரவேண்டும்....

முன்னர் சோழரும் பின்னர் போர்த்துக்கேயரும், ஒல்லாந்தரும், பிரிட்டிஷ்காரரும் தொடர்ந்து ஆழமுடியாத நிலையில்.... எத்தனை காலத்துக்கு தான் சிங்களம் ஆள முடியும்? 

ஒரு தொடக்கம் இருந்தால், முடிவும் இருக்கும்....

நாம் பிறப்பதற்கு சில ஆண்டுகள் முன்னர் தான்... சூரியன் மறையா சாம்ராஜ்ஜியத்தின் அசூர பிடியில் இருந்து தீவு விடுபட்டது... 

நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்றே புரியவில்லை, இலகு தமிழில் இரு வரியில் சொன்னால் புரிந்து கொள்வேன்! நெல்சன்மண்டேலாவே ஒரு நாட்டுக்குள் ஒடுக்கப்படும் இன்னொரு நிற இனத்துக்காய் போராடியதால் முழுதாய் ஆயுள் சிறை தண்டனை அனுபவித்த  மனிதர், அவர் எப்படி தென்னாபிரிக்காவை ஒற்றுமையாய் வைத்திருந்தார்? இந்திய ஊடகம் சொல்லியது அதனை, நான் அல்ல என்று நீங்கள் சொல்ல விழைந்தால் அதை எப்படி ஒரு ஆதாரமாக இங்கு சொல்கிறீர்கள் என்பதையும் சொன்னால் மகிழ்ச்சி!

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நிழலி said:

நாதம், இலங்கை அரசியல் தந்திரங்களையும் வரலாற்றையும் மகிந்தவின் அரசியலையும் புரிந்தமையால் தான் நான் நாமல் அடுத்த சனாதிபதி தேர்தலில் கண்டிப்பாக போட்டியிட மாட்டார் என எழுதினேன்.

பிரேமதாசா சிங்களத்தின் செல்வாக்கு மிக்க கொவிகம சாதியில் பிறக்காமல் கடைநிலை சமூகம் ஒன்றில் பிறந்து படிப்படியாக முன்னேறி இலட்சக்கணக்கான சிங்களவர்களுக்கு வீடமைப்பு திட்டங்களின் மூலம் வீடுகள் வழங்கி பிரதமராகி இந்திய எதிர்ப்பு அரசியலை முன்னிறுத்தி ஈற்றில் சனாதிபதியானவர். செல்வாக்கு மிக்க குடும்ப சூழல் என்று எந்த அடையாளமும் இன்றி முன்னேறிய அவரது அரசியலும் நாமலின் அரசியலும் முற்றாக வேறு விதமானவை.

சனாதிபதி தேர்தலுக்கு இன்னும் அதிக காலம் இல்லை. இன்னும் இரண்டு வருடங்கள் தான் இருக்கு. இந்த திரியை bookmark பண்ணி வையுங்கள்.

மகிந்த... ஓய்வு பெறாமல் அரசியலில் இருப்பதற்கு... காரணமே... நாமலுக்கு... ராஜபாடடை அமைத்துக் கொடுக்கவே...

இலங்கை அரசியலமைப்பையே மாத்தவேண்டாம் வேண்டாம் என்று சொல்வதன் காரணமும்.... அதுவே...

கோத்த... அது இது என்று பீலா விடுவதன் நோக்கம்... இன்றய அரசு அவர்களை இலக்கு வைக்கும்... உதாரணம் கீதா குமாரசிங்க... இரட்டை குடியுரிமையினால் எம் பி பதவி பறிப்பு.

பார்க்கலாம்..... 

11 minutes ago, Nathamuni said:

அப்படி ஒரு தலைமை வந்தால்..... ஈழத்தினை மறந்து ஒற்றுமையாக இருக்கலாம். இல்லாவிடில் எதிர்மறை தான்.. அந்த வகையில்.... மகிந்த அல்லது கோத்தா மீண்டும் வரவேண்டும்....

 

இப்படியான ஒரு சிந்தனையால் தான் புலிகள் மகிந்தவை வெல்ல வைப்பதற்காக தமிழ் மக்களை ரணிலுக்கு வாக்களிக்க விடாது தடுத்தனர்; விளைவு என்னவென எல்லாருக்கும் தெரியும்.

மகிந்தவோ அல்லது கோத்தாவோ வந்தால் சிங்களவருக்கு ஏற்படும் சேதத்தினை விட தமிழர்களுக்கு தான்  மிக அதிகமாக இருக்கும். கடும் இனவாதிகள் வென்று விட்டனர் என்பதற்காக தமிழ் மக்களை வாரி எடுத்து உரிமை கொடுக்க சர்வதேசம் முன்வராது. அதற்கு பதிலாக, தம் செயற்திட்டங்களை செயற்படுத்தும் வண்ணம் சிங்கள இனவாதத்தையும் தலைமையயும் கையாள முயலும், முடியாவிடின் அந்த தலைமையை அகற்ற முயலும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, valavan said:

நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்றே புரியவில்லை, இலகு தமிழில் இரு வரியில் சொன்னால் புரிந்து கொள்வேன்! நெல்சன்மண்டேலாவே ஒரு நாட்டுக்குள் ஒடுக்கப்படும் இன்னொரு நிற இனத்துக்காய் போராடியதால் முழுதாய் ஆயுள் சிறை தண்டனை அனுபவித்த  மனிதர், அவர் எப்படி தென்னாபிரிக்காவை ஒற்றுமையாய் வைத்திருந்தார்? இந்திய ஊடகம் சொல்லியது அதனை, நான் அல்ல என்று நீங்கள் சொல்ல விழைந்தால் அதை எப்படி ஒரு ஆதாரமாக இங்கு சொல்கிறீர்கள் என்பதையும் சொன்னால் மகிழ்ச்சி!

நெல்சன் மண்டேலாவுக்கும்... ராபர்ட் முகாபேயுக்கும் உள்ள வித்தியாசத்தினை வாசித்து அறிந்து கொள்ளுங்கள் வளவன்....

1 minute ago, நிழலி said:

இப்படியான ஒரு சிந்தனையால் தான் புலிகள் மகிந்தவை வெல்ல வைப்பதற்காக தமிழ் மக்களை ரணிலுக்கு வாக்களிக்க விடாது தடுத்தனர்; விளைவு என்னவென எல்லாருக்கும் தெரியும்.

மகிந்தவோ அல்லது கோத்தாவோ வந்தால் சிங்களவருக்கு ஏற்படும் சேதத்தினை விட தமிழர்களுக்கு தான்  மிக அதிகமாக இருக்கும். கடும் இனவாதிகள் வென்று விட்டனர் என்பதற்காக தமிழ் மக்களை வாரி எடுத்து உரிமை கொடுக்க சர்வதேசம் முன்வராது. அதற்கு பதிலாக, தம் செயற்திட்டங்களை செயற்படுத்தும் வண்ணம் சிங்கள இனவாதத்தையும் தலைமையயும் கையாள முயலும், முடியாவிடின் அந்த தலைமையை அகற்ற முயலும்.

இல்லை, நிழலி...

இவர்கள் முழு சீன சார்பானவர்கள்....

இவர்கள் வருவது இந்திய... அமெரிக்க நலன்களுக்கு பாதிப்பானது... அவர்களை மீறி வர முடியாது. வந்தால்.... அதனூடு சில நன்மைகள் நமக்கு.....

On 12/31/2017 at 8:15 PM, nochchi said:

020 ஆம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ களமிறங்குவார் என மஹிந்த அணி தெரிவித்துள்ளது.

 

உலகின் மிகமோசமான போர்க்குற்றவாளி, கடத்தல்க்காரன், கொலைகாரன், கொள்ளைக்காரன் ஆகவுள்ள பயங்கரவாதி கோத்தபாய ராஜபக்சவை சிங்கள-பௌத்த பயங்கரவாதிகள் அதிகாரத்துக்கு கொண்டுவர முயற்சிக்கிறார்கள். அது அவர்களின் அழிவில் முடிவடையும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.