Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

படம் : ஒரு கொடியில் இரு மலர்கள்(1976).

வரிகள் : வாலி

பாடியவர் : K J ஜேசுதாஸ்

இசை : M S விஸ்வநாதன்

அலங்கார ஓவியம் அன்பெனும் காவியம்
அண்ணனின் தங்கை அங்கே

நலம் பாடும் நெஞ்சமே நாளெல்லாம்
கொண்டவன் தங்கையின் அண்ணன் இங்கே

கண்ணனின் சன்னதியில்
எந்தன் கண்மணி புன்னகையில்
இனிமேல் காலங்கள் உள்ளவரை
எந்தன் பொன்மணிக்கென்ன குறை

கண்ணனின் சன்னதியில்
எந்தன் கண்மணி புன்னகையில்
இனிமேல் காலங்கள் உள்ளவரை
எந்தன் பொன்மணிக்கென்ன குறை

அன்பு சொன்ன வேதம் நான்
அன்று கொண்ட பாசம்
எங்கு நின்ற போதும் என்
எண்ணம் உன்னை வாழ்த்தும்
அன்னமிட்ட கைகள் நான்
அன்னை என்று சொல்லும்
கங்கை போல பொங்கும் என்
தங்கை கொண்ட உள்ளம்
கற்பனை ஒரு கோடி எந்தன் கண் வழி உருவாகி
இன்று சொப்பனம் காணுதம்மா
எங்கோ சிந்தனை ஓடுதம்மா

கண்ணனின் சன்னதியில்
எந்தன் கண்மணி புன்னகையில்
இனிமேல் காலங்கள் உள்ளவரை
எந்தன் பொன்மணிக்கென்ன குறை

மாலை சூடி கொண்டு
என் மஞ்சள் வாழை கன்று
நாணம் பொங்க நின்று நான்
காண வேண்டும் என்று
அண்ணன் செய்த யாவும்
நீ அறிந்ததில்லை இன்று
காலம் சொல்ல கூடும் என் உள்ளம் என்னவென்று
கட்டிலில் ஓர் உறவு பின்னால்
தொட்டிலில் ஓர் உறவு
இது போல் ஆயிரம் உறவு வரும்
எங்கே அண்ணனின் நினைவு வரும்

கண்ணனின் சன்னதியில்
எந்தன் கண்மணி புன்னகையில்
இனிமேல் காலங்கள் உள்ளவரை
எந்தன் பொன்மணிக்கென்ன குறை

  • Replies 2.9k
  • Views 247.1k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • நிலாமதி
    நிலாமதி

    கண்ணனும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே எண்ணம்போல் வந்து நின்றாடுதே

  • பால்வண்ணம் பருவம் கண்டு வேல்வண்ணம் விழிகள் கண்டு மான்வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்....!  💞 (எங்களது வெற்றிகரமான 35 வது திருமணநாள் இன்று).......!  🌹

  • புரட்சிகர தமிழ்தேசியன்
    புரட்சிகர தமிழ்தேசியன்

    படம்: அமுதா(1975) இசை: MSV  வரிகள் : கண்ணதாசன்  பாடியோர் : TMS 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

படம் : ஒரு கொடியில் இரு மலர்கள்(1976).

புரட்சி 
ஏக் பூல் தோமாலி என்ற இந்திப்படத்தின் காப்பி என்று எண்ணுகிறேன்.
யாழில் ஆராதனா ஏக் பூல் தோமாலி இரண்டும் நிறைய நாள் ஓடிய படங்கள்.
இணைப்புக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

படம் : கப்பல் ஒட்டிய தமிழன்(1961)

வரிகள் : சுப்ரமணிய பாரதி

இசை : G ராமநாதன்

பாடியவர்கள் : P B சீனிவாஸ் & P சுசீலா..

காற்று வெளியிடைக் கண்ணம்மா;-நின்றன்
காதலை எண்ணிக் களிக்கின்றேன்; அமு
தூற்றினை ஒத்த இதழ்களும்-நில
வூறித் ததும்பும் விழிகளும்-பத்து
மாற்றுப்பொன் னொத்தநின் மேனியும்-இந்த
வையத்தில் யானுள்ள மட்டிலும்-எனை
வேற்று நினைவின்றித் தேற்றியே-இங்கோர்
விண்ணவ னாகப் புரியுமே! - இந்தக் (காற்று)

நீ யென தின்னுயிர் கண்ணம்மா! - எந்த
நேரமும் நின்றனைப் போற்றுவேன் - துயர்
போயின, போயின துன்பங்கள் நினைப்
பொன்னெனக் கொண்ட பொழுதிலே- என்றன்
வாயினி லேயமு தூறுதே-கண்ணம்
மாவென்ற பேர்சொல்லும் போழ்திலே-உயிர்த்
தீயினி லேவளர் சோதியே-என்றன்
சிந்தனையே, என்றன் சித்தமே-இந்தக் (காற்று)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கண்போன போக்கிலே கால் போகலாமா.....!   😁

  • கருத்துக்கள உறவுகள்

படம் : அன்னை (1962) பாடியவர்கள்: P B .ஸ்ரீனிவாஸ் - P.சுசீலா
இசை: R .சுதர்சனம்
வரிகள்: கண்ணதாசன்

அழகிய மிதிலை நகரினிலே
யாருக்கு ஜானகி காத்திருந்தாள்
பழகிடும் ராமன் வரவை எண்ணி
பாதையை அவள் பார்த்திருந்தாள்
பாதையை அவள் பார்த்திருந்தாள்

 ....
அழகிய மிதிலை நகரினிலே
யாருக்கு ஜானகி காத்திருந்தாள்
பழகிடும் ராமன் வரவை எண்ணி
பாதையை அவள் பார்த்திருந்தாள்
பாதையை அவள் பார்த்திருந்தாள்

....
காவியக் கண்ணகி இதயத்திலே ஆ...
காவியக் கண்ணகி இதயத்திலே
கனிந்தவர் யார் இளம் பருவத்திலே
கோவலன் என்பதை ஊரறியும்
கோவலன் என்பதை ஊரறியும்
சிறு குழந்தைகளும் அவன் பேரறியும்

....
அழகிய மிதிலை நகரினிலே
யாருக்கு ஜானகி காத்திருந்தாள்
பழகிடும் ராமன் வரவை எண்ணி
பாதையை அவள் பார்த்திருந்தாள்
பாதையை அவள் பார்த்திருந்தாள்

...
பருவத்துப் பெண்கள் தனித்திருந்தால்
ஆஹா ஓஹோ ஓஹோ ஆஹஹா
பருவத்துப் பெண்கள் தனித்திருந்தால்
பார்ப்பவர் மனதில் என்ன வரும்
இளையவரென்றால் ஆசை வரும்
இளையவரென்றால் ஆசை வரும்
முதியவர் என்றால் பாசம் வரும்

...
ஒருவரை ஒருவர் உணர்ந்து கொண்டால்
உள்ளத்தை நன்றாய்ப் புரிந்து கொண்டால்
இருவர் என்பது மாறிவிடும்
இரண்டும் ஒன்றாய்க் கலந்து விடும்

...
அழகிய மிதிலை நகரினிலே
யாருக்கு ஜானகி காத்திருந்தாள்
பழகிடும் ராமன் வரவை எண்ணி
பாதையை அவள் பார்த்திருந்தாள்
பாதையை அவள் பார்த்திருந்தாள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சரவணப் பொய்கையில் நீராடி.....!  🌺

  • கருத்துக்கள உறவுகள்

படம் : மீண்ட சொர்க்கம் (1960)

வரிகள் : கண்ணதாசன்

இசை : T சலாபதி ராவ்

பாடியோர் : A M ராஜா & P சுசீலா

ராஜா:
துயிலாத பெண் ஒன்று கண்டேன்

சுசீலா: எங்கே?

ராஜா:
இங்கே
என்னாளும் துயிலாத பெண் ஒன்று கண்டேன்

சுசீலா: எங்கே?

ராஜா:
இங்கே
என்னாளும் துயிலாத பெண் ஒன்று கண்டேன்

சுசீலா:
அழகான பழம் போலும் கன்னம்
அதில் தர வேண்டும் அடையாள சின்னம்

ராஜா:
பொன் போன்ற உடல் மீது மோதும்
இந்தக் கண் தந்த அடையாளம் போதும்
இந்தக் கண் தந்த அடையாளம் போதும்

ராஜா:
துயிலாத பெண் ஒன்று கண்டேன்

சுசீலா: நானா?

ராஜா:
ஆமாம்
என்னாளும் துயிலாத பெண் ஒன்று கண்டேன்

சுசீலா:
மாலைக்கு நோயாகிப் போனேன்
காலை மலருக்குப் பகையாக ஆனேன்

ராஜா:
உறவோடு விளையாட எண்ணும்
கண்கள் உறங்காது உறங்காது கண்ணே
கண்கள் உறங்காது உறங்காது கண்ணே

ராஜா:
துயிலாத பெண் ஒன்று கண்டேன்

சுசீலா: யாரோ?

ராஜா:
நீ தான்
என்னாளும் துயிலாத பெண் ஒன்று கண்டேன்

சுசீலா:
மண மேடை தனில் மாலை சூடும்
உங்கள் மன மேடை தனில் ஆட வேண்டும்

ராஜா:
நெஞ்சம் பிறர் காண முடியாத மேடை
அதில் நடமாடிப் பயன் ஏதுமில்லை
அதில் நடமாடிப் பயன் ஏதுமில்லை

ராஜா:
துயிலாத பெண் ஒன்று கண்டேன்

சுசீலா: ஓஹோ..

ராஜா:
என்னாளும் துயிலாத பெண் ஒன்று கண்டேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீயே கதி ஈஸ்வரி.....!   🌺

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செய்யும் தொழிலே தெய்வம்......!    😁

  • கருத்துக்கள உறவுகள்

படம் : கலோ மிஸ்ரர் ஜமீன்தார்( 1965)

வரிகள் : கண்ணதாசன்

இசை : விஸ்வநாதன் - ராமமூர்த்தி

பாடியவர் : P சுசீலா

இளமை கொலுவிருக்கும்
இனிமை சுவையிருக்கும்
இயற்கை மணமிருக்கும் பருவத்திலே பெண்
இல்லாமல் சுகமில்லை உலகத்திலே..
...
அணைத்து வளர்ப்பவளும் தாயல்லவோ
அணைப்பில் அடங்குவதும் அவளல்லவோ
கவிஞர் பாடுவதும் கலைஞர் நாடுவதும்
இளைஞர் தேடுவதும் பெண்ணல்லவோ பெண்
இயற்கையின் சீதனப் பரிசல்லவோ...
...
(இளமை...)
...

பொன்னும் பொருளும் வந்து மொழி சொல்லுமா ஒரு
பூவைக்கு மாலையிடும் மணம் வருமா
இன்று தேடி வரும் நாளை ஓடிவிடும்
செல்வம் சிரித்தபடி அமுதிடுமா எந்த
செல்வமும் பெண்மையின் சுகம் தருமா..

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

 அந்த கால பயிர்ச்செய்கை பாடல்

படம் : பழனி (1965 )

வரிகள் : கண்ணதாசன்

இசை : விஸ்வநாதன் - ராமமூர்த்தி

பாடியோர் : TMS & PBS & சீர்காழி கோவிந்தராஜன்.

ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்
ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்
போராடும் வேலை இல்லை யாரோடும் பேதம் இல்லை
ஊரோடும் சேர்ந்துண்ணலாம் ஆஆஆ
ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்

மண்ணிலே தங்கம் உண்டு மணியும் வைரம் உண்டு
கண்ணிலே காணச் செய்யும் கைகள் உண்டு வேர்வை உண்டு
நெஞ்சிலே ஈரம் உண்டு பாசம் உண்டு பசுமை உண்டு
பஞ்சமும் நோயும் இன்றி பாராளும் வலிமை உண்டு
சேராத செல்வம் இன்று சேராதோ?
தேனாறு நாட்டில் எங்கும் பாயாதோ?

ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்
ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்
ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்
போராடும் வேலை இல்லை யாரோடும் பேதம் இல்லை
ஊரோடும் சேர்ந்துண்ணலாம் ஆஆஆ
ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்

பச்சை வண்ணச் சேலை கட்டி முத்தம் சிந்தும் நெல்லம்மா
பச்சை வண்ணச் சேலை கட்டி முத்தம் சிந்தும் நெல்லம்மா
பருவம் வந்த பெண்ணைப் போலே நாணம் என்ன சொல்லம்மா
நாணம் என்ன சொல்லம்மா
அண்ணன் தம்பி நால்வருண்டு என்ன வேணும் கேளம்மா
அறுவடைக் காலம் உன்தன் திருமண நாளம்மா
திருமண நாளம்மா

போராடும் வேலை இல்லை யாரோடும் பேதம் இல்லை
ஊரோடும் சேர்ந்துண்ணலாம் ஆஆஆ
ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்

கைகட்டிச் சேவை செய்து கண்கள் கெட்டு உள்ளம் கெட்டு
பொய் சொல்லிப் பிச்சை பெற்றால் அன்னை பூமி கேலி செய்வாள்
தேர் கொண்ட மன்னன் ஏது? பேர் சொல்லும் புலவன் ஏது?
தேர் கொண்ட மன்னன் ஏது? பேர் சொல்லும் புலவன் ஏது?
ஏர் கொண்ட உழவன் இன்றிப் போர் செய்யும் வீரன் ஏது?
போர் செய்யும் வீரன் ஏது?

போராடும் வேலை இல்லை யாரோடும் பேதம் இல்லை
ஊரோடும் சேர்ந்துண்ணலாம் ஆஆஆ
ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்
போராடும் வேலை இல்லை யாரோடும் பேதம் இல்லை
ஊரோடும் சேர்ந்துண்ணலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கொரு மகன் பிறப்பான்......!   😁

  • கருத்துக்கள உறவுகள்

படம் : தர்மம் தலை காக்கும் ( 1963 )

வரிகள் : கண்ணதாசன்

இசை: K V மகாதேவன்

பாடியோர் : T M சவுந்தரராஜன் & P சுசீலா

தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் -
கைபட்டுவிடப் பட்டுவிட மலரும்
பக்கம் வர பக்கம் வர மயங்கும் -
உடன்வெட்கம் வந்து வெட்கம் வந்து குலுங்கும்


முத்து முத்துப் புன்னகையைச் சேர்த்து -
கன்னிமுன்னும் பின்னும் அன்ன நடை கோர்த்து
எட்டி எட்டி செல்லுவதைப் பார்த்து -
நெஞ்சைத்தட்டி தட்டி விட்டதடி காத்து..

தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் -
கைபட்டுவிடப் பட்டுவிட மலரும்
பக்கம் வர பக்கம் வர மயங்கும் -
உடன்வெட்கம் வந்து வெட்கம் வந்து குலுங்கும்

கொஞ்சிக் கொஞ்சி எண்ணங்களை விளக்கும் -
சொல்லைக்கொட்டிக் கொட்டி வர்ணனைகள் அளக்கும்
அஞ்சி அஞ்சி கன்னி உடல் நடிக்கும் -
இடைகெஞ்சிக் கெஞ்சிக் கையிரண்டில் தவிக்கும்

தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் -
கைபட்டுவிடப் பட்டுவிட மலரும்
பக்கம் வர பக்கம் வர மயங்கும் -
உடன்வெட்கம் வந்து வெட்கம் வந்து குலுங்கும்

அள்ளி அள்ளி வைத்துக் கொள்ளத் துடிக்கும் -
கதைசொல்லிச் சொல்லிப் பாடங்கள் படிக்கும்
துள்ளித் துள்ளி சின்ன உடல் நடிக்கும் -
கன்னம்கிள்ளிக் கிள்ளி மெல்ல மெல்லச் சிரிக்கும்

தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும் -
கைபட்டுவிடப் பட்டுவிட மலரும்
பக்கம் வர பக்கம் வர மயங்கும் -
உடன்வெட்கம் வந்து வெட்கம் வந்து குலுங்கும்

  • கருத்துக்கள உறவுகள்

படம் : மங்கையர் திலகம் (1955)

பாடியவர் : ஜிக்கி

இசை : S தட்சிணாமூர்த்தி

வரிகள் : கண்ணதாசன்

ஒரு முறை தான் வரும்
கதை பல கூறும்
உல்லாச புதுமைகள் காட்டும்
இளமை ஒய்யார வண்ணங்கள் பாடும்
இளமை டா..டா..டா  ட. ட..டா..ட .டா டா

ஒரு முறை தான் வரும்
கதை பல கூறும்
உல்லாச புதுமைகள் காட்டும்
இளமை ஒய்யார வண்ணங்கள் பாடும்
இளமை டா..டா..டா  ட. ட..டா..ட .டா டா

சிறு மலர் பேசும்
செய்தியும் கூறும்
சிங்கார எண்ணங்கள் சேர்க்கும்
இளமை காலம்
இனிமை யாகும்
இளமை காலம்
இனிமை யாகும்
இன்பம் கூரும்
கவிதை யாகும்
ஒய்யார வண்ணங்கள் பாடும்
இளமை டா..டா..டா  ட. ட..டா..ட .டா டா

யவ்வன வாழ்வில்
செங்கனி மாது
சந்தோஷம் கொண்டாடும் போது
உலகம் யாவும்
அழகில் ஆடும்
உலகம் யாவும்
அழகில் ஆடும்
உள்ளம் தோரும்
கலைகள் கூடும்
ஒய்யார வண்ணங்கள் பாடும்
இளமை டா..டா..டா  ட. ட..டா..ட .டா டா
ஒரு முறை தான் வரும்
கதை பல கூறும்
உல்லாச புதுமைகள் காட்டும்
இளமை ஒய்யார வண்ணங்கள் பாடும்

டா..டா..டா  ட. ட..டா..ட .டா டா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடுத்தவன் போட்ட  தாளத்துக்கு எல்லாம் ஆடாதே ஆடாதே .....!   😁

  • கருத்துக்கள உறவுகள்

கருப்பு வெள்ளையில் வெளிவரா திரைபடம் ..

படம்  : நெஞ்சில் ஆடும் பூ ஒன்று..(1978)

இசை : இளையராஜா

வரிகள் : வாலி

பாடியவர்கள் : S ஜானகி & P ஜெயசந்திரன் .

வானம் எங்கே மேகம் எங்கே
ஒரு மேடை கொண்டு வா
ஒரு வீணை கொண்டு வா
புது ராகம் தாளம் பாவம் இங்கே ஆரம்பம் (வானம்)

விண் மீன்கள் தாலாட்ட பூந்தென்றல் சீராட்ட
மலர் காமன் பாராட்ட
இரு கண்கள் சந்திப்பு நகை மாலை முல்லைப்பூ
பாடல் ஒன்று பாடச் சொல்லி
காதல் தேவன் ஆணையிட்டானோ....(வானம்)

நீராடும் தீர்த்தங்கள் தேரோடும் மன்றங்கள்
பூங்கோலம் போடட்டும்
இனி மாலை நேரங்கள் கலைச் சோலை ஓரங்கள்
தோகை ஒன்று பக்கம் வந்து
ஆடும் என்று சேதி சொல்லுங்கள்....(வானம்)

வானம் எங்கே மேகம் எங்கே
ஒரு மேடை கொண்டு வா
ஒரு வீணை கொண்டு வா
புது ராகம் தாளம் பாவம் இங்கே ஆரம்பம் (வானம்)

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் மனதை ஒருவர் அறிய .....!  😁

  • கருத்துக்கள உறவுகள்

படம் : எங்க அம்மா சபதம்(1974)

வரிகள்: கண்ணதாசன்

இசை :விஜயபாஸ்கர்

பாடியோர் : SP பாலசுப்ரமணியம் & வாணிஜெயராம்

அன்பு மேகமே இங்கு ஓடி வா
எந்தன் துணையை அழைத்து வா
அர்த்த ராத்திரி சொன்ன சேதியை
உந்தன் நினைவில் நிறுத்தி வா

அன்பு தேவியே எந்தன் ஆவியே
உந்தன் கண்ணுக்குள் ஆடவா
அர்த்த ராத்திரி சொன்ன சேதியை
நெஞ்சின் மன்றத்தில் கூறவா

கல்யாண சொர்கத்தின் ரதம் வந்தது
கண்ணீரில் நீ சொன்ன கதை வந்தது
கல்யாண சொர்கத்தின் ரதம் வந்தது
கண்ணீரில் நீ சொன்ன கதை வந்தது
பொன்வண்ண மேகங்கள் பேர் சொன்னதா
பூமாலை நான் சூடும் நாள் வந்ததா
நான் நீயன்றோ நீ நானன்றோ
எனது மயக்கம் தெளிந்ததோ

அன்பு மேகமே இங்கு ஓடி வா
எந்தன் துணையை அழைத்து வா
அர்த்த ராத்திரி சொன்ன சேதியை
நெஞ்சின் மன்றத்தில் கூறவா

காணாத துணை காண வந்தது இரவு
கையோடு கை சேர்க்க வந்தது உறவு
காணாத துணை காண வந்தது இரவு
கையோடு கை சேர்க்க  வந்தது உறவு
சந்திரன் இங்கு சாட்சி உண்டு
சங்கமமாகும் காட்சி உண்டு
பூ மஞ்சமே பார் நெஞ்சமே
புதிய உலகம் பிறந்தது
பழைய கனவு மறைந்தது

அன்பு மேகமே இங்கு ஓடி வா
எந்தன் துணையை அழைத்து வா
அர்த்த ராத்திரி சொன்ன சேதியை
உந்தன் நினைவில் நிறுத்தி வா

அன்பு தேவியே எந்தன் ஆவியே
உந்தன் கண்ணுக்குள் ஆடவா
அர்த்த ராத்திரி சொன்ன சேதியை
நெஞ்சின் மன்றத்தில் கூறவா..

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை ராகம் .....!  😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

                இரசிக்கத்தானே இந்த அழகு .....!  😁

  • கருத்துக்கள உறவுகள்

படம்: சபாஷ் மீனா(1958)
வரிகள்: கு.ம. பாலசுப்பிரமணியம்
இசை: டி.ஜி. லிங்கப்பா
பாடியவர்: மோடி, பி.சுசீலா

காணா இன்பம் கனிந்ததேனோ
காணா இன்பம் கனிந்ததேனோ காதல் திருமண ஊர்வலந்தானோ
ஆஆஅ ஆஆஅ ஆஆஆஆஆஆஆஆஆஅ
காணா இன்பம் கனிந்ததேனோ காதல் திருமண ஊர்வலந்தானோ

வானம் சிந்தும் மாமழை எல்லாம்
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆஆஆஅ
ஆஆஆஆஆஆஅ ஆஆஆஆஆஆஆஆஅ
வானம் சிந்தும் மாமழை எல்லாம்
வானோர் தூவும் தேன்மலரோ?
வானோர் தூவும் தேன்மலரோ?
மேகம் யாவும் பேரொலியோடு
ஆஆஆஆஆஆஅ ஆஆஆஆஆஆஆஆஅ
மேகம் யாவும் பேரொலியோடு
மேளம் போலே முழங்குவதாலே

காணா இன்பம் கனிந்ததேனோ காதல் திருமண ஊர்வலந்தானோ

கன்னல் மொழியே மின்னல் எல்லாம்
விண்ணில் வாண வேடிக்கையோ?
மண்ணில் பெருகும் வெள்ளம் போலே
மனதில் பொங்கும் பிரேமையினாலே

காணா இன்பம் கனிந்ததேனோ
ஆஅஆஆஆஆஆஆ
காணா இன்பம் கனிந்ததேனோ
ஆஅஆ..ஆஆஆஆஆஆஅ ஆஆஆஆஆஆஆஆஅ
காணா இன்பம் கனிந்ததேனோ
ஆஅஅ, ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆஆஆஅ ஆஆஆஆஆஆஆஆஅ
ஆஆஆஆஆஆஅஅ ஆஆஆஆஆஆஆஆஅ
காணா இன்பம் கனிந்ததேனோ காதல் திருமண ஊர்வலந்தானோ..

  • கருத்துக்கள உறவுகள்

படம் : வல்லவன் ஒருவன் (1966)

இசை : வேதா

வரிகள் : கண்ணதாசன்

பாடியோர் : TMS & P சுசீலா

இன்னும் பார்த்து கொண்டிருந்தால் என்னாவது

இந்த பார்வைக்குத் தானா பெண்ணானது
நான் கேட்டதை தருவாய் இன்றாவது

இன்னும் கேட்டுக்கொண்டிருந்தால் என்னாவது
இந்த கேள்விக்குத் தானா பெண்ணானது
நெஞ்சக் கோட்டையை திறப்பாய் இன்றாவது

இன்னும் பார்த்து கொண்டிருந்தால் என்னாவது

மாலைக்கு மாலை காதலர் பேசும்
வார்த்தைகள் பேசிட வேண்டும்
பேசிடும் போதே…கைகளினாலே
வேடிக்கை செய்யவும் வேண்டும்
அதில் ஆடி வரும்…இன்பம் ஓடி வரும்

இன்னும் பார்த்து கொண்டிருந்தால் என்னாவது
இந்த பார்வைக்குத் தானா பெண்ணானது
நான் கேட்டதை தருவாய் இன்றாவது
இன்னும் பார்த்து கொண்டிருந்தால் என்னாவது

காட்டுப் புறாக்கள் கூட்டுக்குள் பாடும்
பாட்டுக்கு யார் துணை வேண்டும்
தோட்டத்து பூவை மார்புக்கு மேலே
சூடிட யார் சொல்ல வேண்டும்
இங்கு யாருமில்லை…இனி நேரமில்லை

இன்னும் கேட்டுக்கொண்டிருந்தால் என்னாவது
இந்த கேள்விக்குத் தானா பெண்ணானது
நெஞ்சக் கோட்டையை திறப்பாய் இன்றாவது
இன்னும் கேட்டுக்கொண்டிருந்தால் என்னாவது

செண்பகப் பூவில் வண்டு விழுந்து
தேன் குடித்தாடுதல் போலே
சேர்ப்பதை சேர்த்து…பார்ப்பதை பார்த்து
வாழ்ந்திட துடிப்பதனாலே
இனி பிரிவதில்லை…உன்னை விடுவதில்லை

இன்னும் பார்த்து கொண்டிருந்தால் என்னாவது
இந்த பார்வைக்குத் தானா பெண்ணானது
நான் கேட்டதை தருவாய் இன்றாவது

இன்னும் கேட்டுக்கொண்டிருந்தால் என்னாவது
இந்த கேள்விக்குத் தானா பெண்ணானது
நெஞ்சக் கோட்டையை திறப்பாய் இன்றாவது

இன்னும் பார்த்து கொண்டிருந்தால் என்னாவது
இன்னும் கேட்டுக்கொண்டிருந்தால் என்னாவது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மண்ணை நம்பி மரம் இருக்கு கண்ணே ....!   😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடும் குரல் இங்கே .....!  😄

  • கருத்துக்கள உறவுகள்

படம் : பாலூட்டி வளர்த்த கிளி (1976)

வரிகள்: கண்ணதாசன்

இசை : இளையராஜா

பாடியவர் : S ஜானகி

கொலைகொலையா முந்திரிக்கா  
நிறைய நிறைய சுத்திவா
கொள்ளையடிச்சவன் எங்கிருக்கான்
கூட்டத்தில் இருப்பான் கண்டுபிடி
.
கொலைகொலையா முந்திரிக்கா  
நிறைய நிறைய சுத்திவா
கொள்ளையடிச்சவன் எங்கிருக்கான்
கூட்டத்தில் இருப்பான் கண்டுபிடி
கண்ணோட கண்ணு ரெண்டு ஒன்னோட ஒன்னு
கண்ணோட கண்ணு ரெண்டு ஒன்னோட ஒன்னு
கள்ளம் இல்லை முள்ளும் இல்லை பூவிலே
கண்ணா ஓடோடி வா ராஜா வா ராஜா வா
.
கொலைகொலையா முந்திரிக்கா  
 நிறைய நிறைய சுத்திவா
கொள்ளையடிச்சவன் எங்கிருக்கான்  
கூட்டத்தில் இருப்பான் கண்டுபிடி
.
மான் வளர்த்த குட்டி ஒரு மூனு - அந்த
மூனும் ஒரு குடும்பம்
பாலூட்டி வந்ததந்த மானு - அதன்  
பாசம் ஒரு உலகம்
சிரிச்சா அதுவும் சிரிக்கும்
அம்மானை எப்போதும் நாம் காப்போம்
சிறிய வயசு உனக்கும் எனக்கும்  
பெரிய மனசு நமக்கு இருக்கு

கண்ணா ஓடோடி வா ராஜா வா
கொலைகொலையா முந்திரிக்கா  
நிறைய நிறைய சுத்திவா
கொள்ளையடிச்சவன் எங்கிருக்கான்  
கூட்டத்தில் இருப்பான் கண்டுபிடி
out
கண்ணோட கண்ணு ரெண்டு ஒன்னோட ஒன்னு
கள்ளம் இல்லை முள்ளும் இல்லை பூவிலே
கண்ணா ஓடோடி வா ராஜா வா
.
எல்லோருக்கும் தந்தை அந்த சாமி அது  
எங்கோ குடி இருக்கு
கல்லானசாமிக்கொரு தூது அது
எங்கே துணை இருக்கு
எடுக்க அணைக்க வளர்க்க அன்பென்னும்  
நூலாலே நம்மை இணைக்க
அல்லும் பகலும் அவரை நினைக்க  
அன்பை நினைச்சி நெருங்கி இருக்க

கண்ணா ஓடோடி வா ராஜா வா
கொலைகொலையா முந்திரிக்கா  
நிறைய நிறைய சுத்திவா
கொள்ளையடிச்சவன் எங்கிருக்கான்  
கூட்டத்தில் இருப்பான் கண்டுபிடி

கண்ணோட கண்ணு ரெண்டு ஒன்னோட ஒன்னு
கண்ணோட கண்ணு ரெண்டு ஒன்னோட ஒன்னு
கள்ளம் இல்லை முள்ளும் இல்லை பூவிலே
கண்ணா ஓடோடி வா ராஜா வா ராஜா வா
கொலைகொலையா முந்திரிக்கா  
நிறைய நிறைய சுத்திவா
கொள்ளையடிச்சவன் எங்கிருக்கான்  
கூட்டத்தில் இருப்பான் கண்டுபிடி.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.