Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

28 வருடங்களின் பின்னா் திறக்கப்பட்டது காங்கேசன்துறை, பொன்னாலை வீதி!

Featured Replies

28 வருடங்களின் பின்னா் திறக்கப்பட்டது காங்கேசன்துறை, பொன்னாலை வீதி!

 

 

28 வருடங்களின் பின்னா் திறக்கப்பட்டது காங்கேசன்துறை, பொன்னாலை வீதி!

பருத்தித்துறை - காங்கேசன்துறை - பொன்னாலை வீதி 28 வருடங்களின் பின்னா் மக்களின் பாவனைக்கு கட்டுப்பாட்டுடன் இன்றையதினம்(13-04-2018) திறந்து வைக்கப்பட்டது.

நாட்டில் இடம்பெற்ற யுத்த சூழ்நிலைகளின் காரணமாக 1990 ஆம் ஆண்டு மூடப்பட்ட பருத்தித்துறை - காங்கேசன்துறை - பொன்னாலை வீதி இன்றையதினம் மக்கள் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்ட நிநலையில் இந்த வீதியின் ஊடாக காலை 6 மணி தொடக்கும் இரவு 7 மணிவரை பொது மக்கள் சகல வாகனங்களிலும் பயணிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

28 வருடங்களின் பின்னா் திறக்கப்பட்டது காங்கேசன்துறை, பொன்னாலை வீதி!

இதேவேளை, பருத்தித்துறை - பொன்னாலை வீதியின் ஒரு பகுதி இதுவரை காலமும் இ.போ.ச பேருந்து சேவைக்காக கடந்த உள்ளூராட்சித் தேர்தலுடன் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ்.வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்த 683 ஏக்கர் நிலம் இன்றையதினம்(13-04-2018) மீள்குடியேற்றத்திற்காக மக்களிடம் மீள கையளிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 5 கிராம சேவகர் பிரிவுகளைச் சேரந்த 12 நலன்புரி நிலையங்களில் வாழ்ந்து வரும் 964 குடும்பங்களுக்கு சொந்தமான 683 ஏக்கர் காணிகள் இன்றையதினம் விடுவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த 1990 ஆம் ஆண்டு முதல் படையினர் ஆக்கிரமித்து வைத்திருக்கும் பொது மக்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவிக்குமாறு தொடர்ச்சியாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றதன் அடிப்படையில் படிப்படியாக காணிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

28 வருடங்களின் பின்னா் திறக்கப்பட்டது காங்கேசன்துறை, பொன்னாலை வீதி!

28 வருடங்களின் பின்னா் திறக்கப்பட்டது காங்கேசன்துறை, பொன்னாலை வீதி!

https://news.ibctamil.com/ta/internal-affairs/Opened-Pedro--Kankesanthurai--Ponnala-road

நல்ல மகிழ்ச்சியான விடயம். நான் கடைசியாக பதினிரண்டு வயது சொச்சம் இந்தப்பாதையால் பயணம் செய்தேன் பேருந்தில்.

001.thumb.png.ae903f551eec6778558fb83750a8d9cb.png 

காங்கேசன்துறை - கீரிமலை வீதி இன்னமும் விடப்படவில்லை என்று அறிகின்றேன். இப்பவும் காங்கேசன்துறையில் இருந்து கீரிமலை செல்வதாயின் மாவிட்டபுரம் ஊடாகத்தான் செல்லவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஜீவன் சிவா said:

001.thumb.png.ae903f551eec6778558fb83750a8d9cb.png 

காங்கேசன்துறை - கீரிமலை வீதி இன்னமும் விடப்படவில்லை என்று அறிகின்றேன். இப்பவும் காங்கேசன்துறையில் இருந்து கீரிமலை செல்வதாயின் மாவிட்டபுரம் ஊடாகத்தான் செல்லவேண்டும்.

ஜீவன் சிவா, ஒரு தரம் உங்களுடைய வாகனத்தில் போய் வாருங்கள்.

 

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஜீவன் சிவா said:

001.thumb.png.ae903f551eec6778558fb83750a8d9cb.png 

காங்கேசன்துறை - கீரிமலை வீதி இன்னமும் விடப்படவில்லை என்று அறிகின்றேன். இப்பவும் காங்கேசன்துறையில் இருந்து கீரிமலை செல்வதாயின் மாவிட்டபுரம் ஊடாகத்தான் செல்லவேண்டும்.

நன்றி விளக்கமாக படம் போட்டதுக்கு .

7 hours ago, ஜீவன் சிவா said:

001.thumb.png.ae903f551eec6778558fb83750a8d9cb.png 

காங்கேசன்துறை - கீரிமலை வீதி இன்னமும் விடப்படவில்லை என்று அறிகின்றேன். இப்பவும் காங்கேசன்துறையில் இருந்து கீரிமலை செல்வதாயின் மாவிட்டபுரம் ஊடாகத்தான் செல்லவேண்டும்.

நன்றி ஜீவன் தகவலுக்கு. ஆம், பொன்னாலை மற்றப்பக்கம் எனக்கும் நினைவில் வரவில்லை. காங்கேசன்துறை பக்கம் சென்றால் குருநாதசுவாமி கோயிலடி எமது வீட்டுப்பக்கம் படம் பிடித்து போடுங்கள் பார்க்க ஆவலாய் இருக்கின்றேன், நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, MEERA said:

ஜீவன் சிவா, ஒரு தரம் உங்களுடைய வாகனத்தில் போய் வாருங்கள்.

 

எப்ப போய் எப்பப்பா வாரது  அவரும் அவர் வயசுக்கேற்ற வாகனமும் அது பக்கா பாதுகாப்பும் அவருக்கு  என்ன இருவரை ஏத்தினால் பின்னுக்கு இருக்கிறவர் பின்னுக்கு நின்றே  அதை தள்ள வேண்டும் :11_blush:

9 hours ago, ஜீவன் சிவா said:

001.thumb.png.ae903f551eec6778558fb83750a8d9cb.png 

காங்கேசன்துறை - கீரிமலை வீதி இன்னமும் விடப்படவில்லை என்று அறிகின்றேன். இப்பவும் காங்கேசன்துறையில் இருந்து கீரிமலை செல்வதாயின் மாவிட்டபுரம் ஊடாகத்தான் செல்லவேண்டும்.

ஜீவன் ஒருமுறை உங்கள் புகைபட கருவியை இந்த வீதிகளில் தவழ விடலாமே. பார்க்க ஆசையாக இருக்கு.

அந்த இடங்களை எங்கள் வாழ்நாளில் காண ஆசையாக இருக்கு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.