Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஹிட்லர் தனது நாட்டுக்கு செய்த நன்மைகள் பல.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, nedukkalapoovan said:

 

ஒரு பாவமும் அறியாத யூதர்கள்???????????
யூதர்கள் நல்லவர்களா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

ஒரு பாவமும் அறியாத யூதர்கள்???????????
யூதர்கள் நல்லவர்களா?

தமிழ்நாட்டில் சிலரிடம் இப்படியான பார்வை இருக்கலாம் யூதர்கள் மீது.

ஆனால் ஈழத்தமிழரைப் பொறுத்த வரை அவர்கள் இஸ்ரேலுக்கு எதிராக அல்லது யூதர்களுக்கு எதிராக ஒரு துரும்பையும் தூக்கிப் பிடித்தது கிடையாது. ஆனால்.. ஈழத்தமிழரின் விடுதலைப் போராட்டத்தை பெரும் அழிவுகளோடு இனப்படுகொலைகளோடு அழித்து முடிக்க.. இஸ்ரேல்.. ஈழப்போராட்டத்தின் ஆரம்ப காலம் தொட்டு சொறீலங்கா சிங்களப் பயங்கரவாத அரசுக்கு பெரும் இராணுவ.. இராணுவ தளபாட.. தொழில்நுட்ப உதவிகளை வழங்கியே வந்துள்ளது. தமிழ் மக்களின் இனப்படுகொலையில் இஸ்ரேலின் பங்கு மன்னிக்கப்பட முடியாத ஒன்றாகவே உள்ளது. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, nedukkalapoovan said:

தமிழ்நாட்டில் சிலரிடம் இப்படியான பார்வை இருக்கலாம் யூதர்கள் மீது.

ஆனால் ஈழத்தமிழரைப் பொறுத்த வரை அவர்கள் இஸ்ரேலுக்கு எதிராக அல்லது யூதர்களுக்கு எதிராக ஒரு துரும்பையும் தூக்கிப் பிடித்தது கிடையாது. ஆனால்.. ஈழத்தமிழரின் விடுதலைப் போராட்டத்தை பெரும் அழிவுகளோடு இனப்படுகொலைகளோடு அழித்து முடிக்க.. இஸ்ரேல்.. ஈழப்போராட்டத்தின் ஆரம்ப காலம் தொட்டு சொறீலங்கா சிங்களப் பயங்கரவாத அரசுக்கு பெரும் இராணுவ.. இராணுவ தளபாட.. தொழில்நுட்ப உதவிகளை வழங்கியே வந்துள்ளது. தமிழ் மக்களின் இனப்படுகொலையில் இஸ்ரேலின் பங்கு மன்னிக்கப்பட முடியாத ஒன்றாகவே உள்ளது. 

மேற்குலகம் தன்நலன் கருதியே மத்தியகிழக்கு மத்தியில் யூதர்களுக்கு நாடு உருவாக்கி பரிபாலிக்கின்றது என பல பாரசீகக்காரர்கள் கூறுகின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு இனத்தையே பூண்டோடு அழிக்க முனைந்த ஹிட்லரையும் அவரது கொள்கைகளையும் ஆதரிப்பவர்கள் நாஜிகளாகத்தான் இருக்கமுடியும். ஆனால் இப்படியான வெளிநாட்டவரை தற்போதைய ஜெர்மனிய நவநாஜிகள் கூட தங்களுக்குக் கிட்ட விடமாட்டார்கள்.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 9/22/2018 at 2:38 PM, கிருபன் said:

ஒரு இனத்தையே பூண்டோடு அழிக்க முனைந்த ஹிட்லரையும் அவரது கொள்கைகளையும் ஆதரிப்பவர்கள் நாஜிகளாகத்தான் இருக்கமுடியும். ஆனால் இப்படியான வெளிநாட்டவரை தற்போதைய ஜெர்மனிய நவநாஜிகள் கூட தங்களுக்குக் கிட்ட விடமாட்டார்கள்.

 

எந்த இன மக்களை அழிக்காமல் பிரிட்டிஷ் சாம்ராஜம் உலகம் முழுவதும் பரவியிருக்கின்றது?.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

எந்த இன மக்களை அழிக்காமல் பிரிட்டிஷ் சாம்ராஜம் உலகம் முழுவதும் பரவியிருக்கின்றது?.

நான் இன்னமும் தமிழன்தான்?

சிங்கள இனத்தால் அடக்குமுறைக்கு உட்பட்ட தமிழர்களால் ஒரே சமயத்தில் ஹிட்லரை ஆதரிப்பதும் மகிந்தவை எதிர்ப்பதும் முரண்நகையானது. 

யூதர்கள் பலஸ்தீனியர்களை ஒடுக்குவதுபோல் அதிகாரம் கிடைக்கும்பட்சத்தில் தமிழர்களும் பிற இனங்களை அடக்கமுனைவார்கள் என்பதற்கான அடிப்படை எங்கள் பாரம்பரியத்தில் இருக்கின்றது என்பதுதான் இப்படியான நாஜி சிந்தனைகள் சொல்கின்றன.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
17 hours ago, கிருபன் said:

நான் இன்னமும் தமிழன்தான்?

சிங்கள இனத்தால் அடக்குமுறைக்கு உட்பட்ட தமிழர்களால் ஒரே சமயத்தில் ஹிட்லரை ஆதரிப்பதும் மகிந்தவை எதிர்ப்பதும் முரண்நகையானது. 

யூதர்கள் பலஸ்தீனியர்களை ஒடுக்குவதுபோல் அதிகாரம் கிடைக்கும்பட்சத்தில் தமிழர்களும் பிற இனங்களை அடக்கமுனைவார்கள் என்பதற்கான அடிப்படை எங்கள் பாரம்பரியத்தில் இருக்கின்றது என்பதுதான் இப்படியான நாஜி சிந்தனைகள் சொல்கின்றன.

நான் என்றும் தமிழன்.

அரசர் காலம் தொடக்கம் அண்மைக்காலம் வரைக்கும் நயவஞ்சகர்களால் காட்டிக்கொடுக்கப்பட்டும்  நம்பவைத்து கழுத்தறுக்கப்பட்ட இனம்தான் தமிழினம். அதன் பலனை அனுபவித்தும் இன்னும் திருந்தாத இனம் தமிழினம்.

அவர்கள் வீட்டில் புத்தர் சிலையும் அவரின் சிந்தனைகளும் வீட்டை அலங்கரிக்கின்றன.

குருட்டு வாக்கில் கிடைத்த சுதந்திரத்தை வைத்து பேரும் புகளும் அடைந்த காந்திஜீயின் உபதேச புத்தகங்கள் அலுமாரியை அலங்கரிக்கின்றன. ஆனால் தமிழினமோ இன்னும் ஐம்பது வருடங்களில் அழியப்போகின்றது என்ற அச்சம் சுய இன்பம் காண்பவர்களுக்கு தேவையில்லை.

நிற்க...

உங்களிடம் ஒரு கேள்வி!


இவ்வளவு அல்லல்ப்பட்டு அழியும் தறுவாயிலிருந்த யூத இனம் மீண்டெழுந்து இஸ்ரேலை உருவாக்கியது. தலை நிமிர்ந்து நிற்கின்றது. பிரமாதம். இடை விடா முயற்சியின் உதாரண மக்கள் திலகங்கள். இன்றும் தினம் தினம் தமது அழிவிற்கான நாஷியை தூற்றுவதன் மூலம் அழிவுச்சம்பவங்களை நினைவில் வைத்திருந்து ஜேர்மனியை மட்டம் தட்டி வைத்திருப்பவர்கள்.
ஒரு இன அழிவு எப்படியிருக்கும் என்று அனுபவப்பட்ட யூதம் ஏன் பலஸ்தீன மக்களை ஒடுக்குகின்றது? ஏன் அழிக்க நினைக்கின்றது? ஏன் தாங்கள் மட்டும் முதன்மையாக வாழ வேண்டும் என்று நினைக்கின்றார்கள்? ஏன் ஏனைய இனங்கள் மீது சமத்துவம் பரிதாபங்கள் வரவில்லை?

தாங்கள் பட்ட கஷ்ட துன்பங்கள் ஏனைய இனத்திற்கு வரக்கூடாது என்ற சிந்தனை ஏன் இவர்களுக்கு இல்லை?

 

தமிழ் விடுதலை இயக்கம் மற்றவர்களை ஆள/அழிக்க நினக்கவில்லை. தான் சுய நிர்ணய உரிமையுடன் மட்டுமே வாழ நினைத்தது.:wink:

 

இந்த பூமியில் ஒன்றை ஆக்கிரமித்து இன்னொன்று வாழ்ந்ததாகத்தான் வரலாறும் இயற்கையும் சொல்கின்றது. ஆனால் தமிழினம் பஞ்சமாபாதகத்திற்கும் பரலோகத்திற்கும் பயந்து கோமணத்துடன் நடுத்தெருவில் நிற்கின்றது.:cool:

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

இவ்வளவு அல்லல்ப்பட்டு அழியும் தறுவாயிலிருந்த யூத இனம் மீண்டெழுந்து இஸ்ரேலை உருவாக்கியது. தலை நிமிர்ந்து நிற்கின்றது. பிரமாதம். இடை விடா முயற்சியின் உதாரண மக்கள் திலகங்கள். இன்றும் தினம் தினம் தமது அழிவிற்கான நாஷியை தூற்றுவதன் மூலம் அழிவுச்சம்பவங்களை நினைவில் வைத்திருந்து ஜேர்மனியை மட்டம் தட்டி வைத்திருப்பவர்கள்.
ஒரு இன அழிவு எப்படியிருக்கும் என்று அனுபவப்பட்ட யூதம் ஏன் பலஸ்தீன மக்களை ஒடுக்குகின்றது? ஏன் அழிக்க நினைக்கின்றது? ஏன் தாங்கள் மட்டும் முதன்மையாக வாழ வேண்டும் என்று நினைக்கின்றார்கள்? ஏன் ஏனைய இனங்கள் மீது சமத்துவம் பரிதாபங்கள் வரவில்லை?

 தாங்கள் பட்ட கஷ்ட துன்பங்கள் ஏனைய இனத்திற்கு வரக்கூடாது என்ற சிந்தனை ஏன் இவர்களுக்கு இல்லை?

 

 நாஜிகளால் திட்டமிடப்பட்ட ரீதியில் 6 மில்லியன் யூதர்கள் கொல்லப்படுவதை Holocaust என்று குறிக்கின்றார்கள். இதனை உலகம் நினைவில் வைத்து இதுபோன்ற படுகொலைகளைச் செய்யக்கூடாது என்பதற்காகவே மீண்டும் மீண்டும் நினைவூட்டப்படுகொன்றது. ஜெர்மனியரை மட்டம் தட்டவல்ல. ஒரு சில நாஜி சிந்தனையுடையவர்களைத் தவிர்த்து பெரும்பாலான ஜேர்மனியர்கள் யூதர்களின் மீதான இனப்படுகொலைக்காக வருந்துபவர்களாகத்தான் உள்ளனர்.

 

யூதர்கள் பலஸ்தீனர்களை ஒடுக்குவதற்கும் சிங்களவர்கள் தமிழர்களை ஒடுக்குவதற்கும் ஒத்த காரணங்கள் உள்ளன. இரண்டு இனங்களுமே இந்த உலகில் தமக்கு மிகவும் சிறிய நிலப்பகுதிதான் உள்ளது என்று நினைப்பவை. தமது இனத்தின் இருப்பைத் தக்கவைக்க நிலப்பரப்பை அதிகரிப்பதும் பாதுகாப்பதும் முக்கியம் என்பதாலேயே பிற இனங்களை ஒடுக்குகின்றன. யூதர்களிடையே உள்ள ஒற்றுமை, தேசிய உணர்வு பலஸ்தீனர்களிடமும், தமிழர்களிடம் ஒப்பீட்டளவில் குறைவு. இதனால்தான் புலம்பெயர்ந்த நாடுகளில் பெருமளவில் இருந்தும் அரசியல் அழுத்தங்களை பிரயோகிக்கமுடியாமல் உள்ளனர். பலவீனமான இனங்கள் நீண்டகாலத்திற்கு தாக்குப்பிடிக்கமாட்டா. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
17 hours ago, கிருபன் said:

 நாஜிகளால் திட்டமிடப்பட்ட ரீதியில் 6 மில்லியன் யூதர்கள் கொல்லப்படுவதை Holocaust என்று குறிக்கின்றார்கள். இதனை உலகம் நினைவில் வைத்து இதுபோன்ற படுகொலைகளைச் செய்யக்கூடாது என்பதற்காகவே மீண்டும் மீண்டும் நினைவூட்டப்படுகொன்றது. ஜெர்மனியரை மட்டம் தட்டவல்ல. ஒரு சில நாஜி சிந்தனையுடையவர்களைத் தவிர்த்து பெரும்பாலான ஜேர்மனியர்கள் யூதர்களின் மீதான இனப்படுகொலைக்காக வருந்துபவர்களாகத்தான் உள்ளனர். 

நாஷிகளால்  படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவில் வைத்து துக்கம் கொண்டாடும் உலகம்...யூதர்களால் தினம்  தினம் படுகொலை செய்யப்படும் பலஸ்தீனர்களை கண்டும் காணமலும் இருப்பதேன்? 

யூதப்படுகொலை ஹிட்லர் விட்ட தவறு என்பது மட்டும் தான் இவர்களது கவலை...மற்றும் படி ஏதுமில்லை.:wink:

  • கருத்துக்கள உறவுகள்
On 9/24/2018 at 4:29 PM, குமாரசாமி said:

உங்களிடம் ஒரு கேள்வி!


இவ்வளவு அல்லல்ப்பட்டு அழியும் தறுவாயிலிருந்த யூத இனம் மீண்டெழுந்து இஸ்ரேலை உருவாக்கியது. தலை நிமிர்ந்து நிற்கின்றது. பிரமாதம். இடை விடா முயற்சியின் உதாரண மக்கள் திலகங்கள். 

....
ஒரு இன அழிவு எப்படியிருக்கும் என்று அனுபவப்பட்ட யூதம் ஏன் பலஸ்தீன மக்களை ஒடுக்குகின்றது? ஏன் அழிக்க நினைக்கின்றது?

இசுரேலின் வரலாற்றை நீங்கள் அறிந்தால் இந்த கேள்விக்கான பதில் உங்களுக்கு தெரிய வரும். பிரித்தானியா பாலஸ்தீனத்தை (சிலோனை போல) ஆண்ட காலத்தில் இசுரேல் (தமிழீழம் போல) இருக்கவில்லை. யூத மக்கள் (தமிழ் மக்களை போல) பெரும்பான்மை பாலத்தீன அரபிகளிடம் (சிங்களவரிடம்) தமது சுயநிர்ணய உரிமையை இழந்து விட்ட நிலையில் பிரித்தானியாவை தமது பகுதியை பிரித்து தரும்படி கேட்டார்கள். பாலத்தீன (அரபி) மக்கள் அதை ஏற்கவில்லை. இந்த பாலத்தீன அரபிகளுக்கு சுற்றிலும் உள்ள அரபி நாடுகள் பலவகையான ஆதரவையும் வழங்கினார்கள். யூதர்களுக்கு (தமிழருக்கு) எதிராக பல கலவரங்கள் நடந்தன. ஹிட்லரின் இனப்படுகொலையால் ஐரோப்பாவில் அழிவை கண்ட யூதர்  தமது தாயகத்திலும் பாலத்தீன (சிங்கள) பெரும்பான்மையால்  அழிக்கப்பட்டார்கள். ஆகவே புலம்பெயர்ந்த யூதர்களின் உதவியுடன் தனிநாட்டை தாமே அமைக்க தீர்மானித்தார்கள். இந்த காலத்தில் தான் பெருமளவு யூத விஞ்ஞானிகள் அமெரிக்காவில் தஞ்சம் அடைந்தார்கள். இவர்களுள் ஐன்ஸ்டைனும் ஒருவர். அவர் அமெரிக்க யூத காங்கிரசில் தீவிரமாக செயற்பட்டார். ஹிட்லரை ஆதரிக்கும் ஜெர்மன் விஞ்ஞானிகள் அணுக்குண்டை செய்ய தீவிரமாக முயற்சி செய்து வந்தார்கள். இதை அமெரிக்க அரசுக்கு தெரியப்படுத்தி அந்த ஜெர்மன் விஞ்ஞானிகள்அணுக்குண்டை செய்ய முதல் அமெரிக்காவுக்கு செய்து கொடுத்தவர்கள் யூதர்கள். இந்த செல்வாக்கை வைத்து அமெரிக்க யூத காங்கிரஸ், இரெண்டாம் உலகப் போரில் வென்ற அமெரிக்க ஆதரவின் காரணமாக பாலத்தீன அரபிகளின் முழு எதிர்ப்புக்கு மத்தியிலும் முழு அரபு உலகின் எதிர்ப்பையும் மீறி இசுரேலை ஒரு நாடாக அங்கீகரிக்க வைத்து யூதர்களுக்கு விடுதலை பெற்று கொடுத்தார்கள். பதினேழு நாட்டு அரபிகளும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவு கொடுத்து இந்த புதிய சிறிய நாட்டுக்கு எதிராக போர் தொடுத்தார்கள். சிறிய நாடானாலும் இசுரேல் இந்த அரபிகளை வென்று பாலஸ்தீனத்தை முற்றிலும் அழித்து, ஆதரவு வழங்கிய லெபனானையும் சீர்குலைத்தது. இந்த போர் யூதர்களின் முள்ளிவாய்க்கால். ஆனால் தமிழரை போல் அன்றி யூதர்கள் வென்று விட்டார்கள். சிங்களவரை போன்று அடக்கி ஆழ விரும்பிய பாலஸ்தீனம் முற்றிலும் அழிந்தது. ஐன்ஸ்டைனை இசுரேலின் பிரதமாராகும்படி கேட்டார்கள், ஆனால் அவர் மறுத்து விட்டார்.

இதோ விபரமாக விக்கிபீடியாவில் படியுங்கள் (நான் மேலே எழுதிய பல விடயங்கள் வைக்கிபெடியாவில் இருக்காமலும் போகலாம்):

யூதர்களின் தலைமறைவான குழுக்கள் (பாசறைகள்)[தொகு]

பாலஸ்தீனர்களுக்கும், யூதர்களுக்கும் இடையே வலுவடைந்து வந்த முரண்பாடுகளாலும், பிரித்தானியரிடம் இருந்து யூதர்களுக்கான உறுதிகோள் ஏதும் வராததினாலும் யூதர்கள் தாங்களேதங்களை பாதுகாக முடிவெடுத்தனர்.

பால்பூர் அறிவிப்பையும் யூத தேசத்தையும் எதிர்த்த அரபு தேசீயவாதிகள், யூதர்களுக்கு எதிரான கலவரங்களை எரூசலம், ஹீப்ரான், ஜாப்பா, ஹைபாவில் தூண்டினர். 1921 யூத எதிர்ப்பு கலவரங்களை தொடர்ந்து, ஹகானா என்ற அமைப்பு தற்காப்பிற்க்காக யூதர்களால் ஆரம்பிக்கப் பட்டது. 1931, ஹகானாவிள் பிளவு ஏற்ப்பட்டு, இர்குன் அமைப்பு வெளியேரியது. இர்குன் இன்னும் தீவிர செயல் நோக்கை பின்பற்றி, யூதர்களிள் மேல் ஏற்பட்ட வன்முறைகளுக்கு பதிலடி கொடுத்து, பிரித்தானிய ஐநா ஒப்படைப்பு அரசாங்கத்தின் மீதும் தாக்கியது. இர்குனிலிருந்து இன்னும் தீவிர செயல்வாத லேஹி குழு பிளந்து வெளியேரியது. இர்குன் கொள்கைக்கு மாற்றாக, அது உலகப் போரில், பிரித்தனுடன் ஒத்துழைப்பை மறுத்தது.. இக்குழுக்கள் 1948 அரபு-இஸ்ரேலிய போர் முன், இஸ்ரேலி பாதுகாப்பு சேனை உதயத்திலும், அலியா-பெத் போன்ற இஸ்ரேலிய அகதிகள் வரவழிப்பிலும், பெரும் தாக்கம் ஏற்படுத்தின.

நாடு நிறுவப்படுதல்[தொகு]

180px-Declaration_of_State_of_Israel_194
 
டேவிட் பென்-குரியன்டெல் அவீவில் மே 14, 1948ல் இசுரேல் நாட்டின் தோற்றத்தை அறிவித்தல்
முதன்மைக் கட்டுரை: இசுரேலிய சுதந்திரப் பிரகடனம்

1947ல் யூதர்களுக்கும் அரேபியர்களுக்கும் இடையே மிகுதி பெற்று வந்த வன்முறை நிகழ்வுகளைக் தடுக்கவோ கட்டுப்படுத்தவோ இயலாத நிலையில், பிரிட்டன் நாடு தன் ஆட்சி உரிமையில் இருந்து விலகிக்கொள்ள முடிவெடுத்தது. 1947ல் உலகநாடுகளின் பேரவை (UN General Assemby), பாலசுத்தீனத்தை இருநாடுகளாகப் பிரிக்க ஒப்புதல் அளித்தது. யூதர்கள் இருக்க நிலப்பகுதியில் 55% யும், அராபியர்கள் இருக்க நிலத்தில் 45% யும் தருவதென இருந்தது. எருசலேம் நகரம் உலகநாடுகள் நிர்வகிக்கும் நகரமாக இருக்கட்டும் என்றும் முடிவு செய்தது. எருசலேமை ஈரின மக்களும் தமக்கே வேண்டும் என மிக வல்லுரிமையோடு கோருவார்கள் என்றும் அதனைத் தவிர்ப்பதற்காக இம்முடிவு என்று கூறப்பட்டது.

இரு நாடுகளாகப் பிரிப்பது என்னும் திட்டத்தை உலகநாடுகளின் பேரவை நவம்பர் 29, 1947ல் ஏற்ற உடன், யூதர்களின் சார்பாக டேவிட் பென்கூரியன் (David Ben-Gurion) தற்காலிகமாக ஏற்றுக்கொண்டார், ஆனால் அரேபியர்களின் குழு (Arab League) மறுத்தது. இதைத் தொடர்ந்து அரேபியர்கள் யூதர்களின் மீதும், யூதர்கள் அரேபியர்களின் மீதும் நடத்திய தாக்குதல்களின் விளைவாகப் பரவிய உள்நாட்டுப் போர், 1948க்கான இசுரேலிய விடுதலைப்போரின் முதல் கட்டமாக அமைந்தது.

பிரித்தானியரின் ஆட்சி உரிமை மே 15, 1948 பிற்பகல் 5 மணிக்கு முடிவடையும் முன்னரே, மே 14, 1948ல் இசுரேலிய நாடு தம் நாடு உருவானதை அறிவித்தது.

விடுதலைப் போரும் மக்கள் திரண்டு வருவதும்[தொகு]

முதன்மைக் கட்டுரைகள்: 1948 இசுரேல்-அரபுப் போர் மற்றும் அரபு-இசுரேல் பிரச்சனை

இசுரேல் ராஜ்ஜியத்தின் நிர்மாணத்தின் பின், எகிப்து, சிரியா, யோர்தான், இராக் நாடுகளின் சேனைகள் போரில் கலந்து கொண்டு, 1948 அரபு-இசுரேலி போர் இரண்டாம் நிலை தொட்டது. வடக்கிலிருந்து வந்த சிரியா, லெபனான், இராக் படைகள் இசுரேல் எல்லையில் நிறுத்தப்பட்டன; யோர்தான் படைகள் கிழக்கு எருசலேமை கைப்பற்றி மேற்கு எருசலேமை முற்றுகையிட்டன. ஹகானா அப்படி ஊடுருவிய படைகளை நிறுத்தியது, இர்குன் படைகள் எகிப்து படைகளை நிறுத்தியது. 1948 ஜூனில், ஐ.நா. ஒரு மாத போர்நிறுத்த பிரகடனம் செய்தது; அச்சமயம் இசுரேல் பாதுகாப்பு படை அரசாங்க ரீதியில் தாபிக்கப் பட்டது.. பல மாத போருக்குப் பின், 1949ல், போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்ப்பட்டு, தாற்காலிக எல்லைகள் நிலைக்கப் பட்டன. இசுரேல் யோர்தான் நதிக்கு மேற்கே ஒப்பந்த பகுதிகளின் 26% நிலைத்தை அடைந்தது. யோர்தான் 'மேற்குக் கரை' என்ற யூதேயா, சமாரியா போன்ற மலைப் பிரதேசங்களை ஏற்றது. எகிப்து காசா என அழைக்கப்படும் சிறிய கடலோர நிலத்தை அடைந்தது.

போர்போதும், பின்னும் இசுரேலிய பிரதான அமைச்சர் டேவிட் பென்குரியன் , பல்மாக், இர்குன், லேஹி முதலிய அமைப்புகளைக் கலைக்க உத்தரவிட்டார். ஒரு சுவீட நாட்டு தூதுவாலய ஊழியரை கொலையினால் , இர்குன்னும் லேஹியும் பயங்கர வாத அமைப்புகளாக அழைக்கப் பட்டு தடை செய்யப் பட்டன.

பல அரபு மக்கள் புதிய இசுரேலிய நாட்டினிலிருந்து வெளியேரினர் அல்லது வெளியேற்றப் பட்டனர். (அகதிகள் எண்ணிக்கை 600000 ந்து 900000 ஆக கணக்கிடப் பட்டுள்ளது; ஐ.நா. கணக்கு 711000 ஆகும்.) அதே சமயம் 1000000 யூதர்கள் அரபு நாடுகளிலிருந்து துரத்தப் பட்டனர். (ஆதாரங்கள் சந்தேகத்திற்கு உரியது)

யூத இன அழிப்பை (ஹோலோகாஸ்ட்) பிழைத்தவர்களும், அரபு நாடுகளிலிருந்த வந்த யூத அகதிகளும் இசுரேல் மக்கள் தொகையை ஒரே வருடத்தில் இரு மடங்காக்கினர்

https://ta.wikipedia.org/wiki/இசுரேல்

 

 

 

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்

கடாபியும் / சதாமும் தமது மக்களுக்கு நல்லதுதான் செய்தார்கள் என இங்குள்ளவர்கள் கூறுவார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 hours ago, Jude said:

இசுரேலின் வரலாற்றை நீங்கள் அறிந்தால் இந்த கேள்விக்கான பதில் உங்களுக்கு தெரிய வரும். பிரித்தானியா பாலஸ்தீனத்தை (சிலோனை போல) ஆண்ட காலத்தில் இசுரேல் (தமிழீழம் போல) இருக்கவில்லை. யூத மக்கள் (தமிழ் மக்களை போல) பெரும்பான்மை பாலத்தீன அரபிகளிடம் (சிங்களவரிடம்) தமது சுயநிர்ணய உரிமையை இழந்து விட்ட நிலையில் பிரித்தானியாவை தமது பகுதியை பிரித்து தரும்படி கேட்டார்கள். பாலத்தீன (அரபி) மக்கள் அதை ஏற்கவில்லை. இந்த பாலத்தீன அரபிகளுக்கு சுற்றிலும் உள்ள அரபி நாடுகள் பலவகையான ஆதரவையும் வழங்கினார்கள். யூதர்களுக்கு (தமிழருக்கு) எதிராக பல கலவரங்கள் நடந்தன. ஹிட்லரின் இனப்படுகொலையால் ஐரோப்பாவில் அழிவை கண்ட யூதர்  தமது தாயகத்திலும் பாலத்தீன (சிங்கள) பெரும்பான்மையால்  அழிக்கப்பட்டார்கள். ஆகவே புலம்பெயர்ந்த யூதர்களின் உதவியுடன் தனிநாட்டை தாமே அமைக்க தீர்மானித்தார்கள். இந்த காலத்தில் தான் பெருமளவு யூத விஞ்ஞானிகள் அமெரிக்காவில் தஞ்சம் அடைந்தார்கள். இவர்களுள் ஐன்ஸ்டைனும் ஒருவர். அவர் அமெரிக்க யூத காங்கிரசில் தீவிரமாக செயற்பட்டார். ஹிட்லரை ஆதரிக்கும் ஜெர்மன் விஞ்ஞானிகள் அணுக்குண்டை செய்ய தீவிரமாக முயற்சி செய்து வந்தார்கள். இதை அமெரிக்க அரசுக்கு தெரியப்படுத்தி அந்த ஜெர்மன் விஞ்ஞானிகள்அணுக்குண்டை செய்ய முதல் அமெரிக்காவுக்கு செய்து கொடுத்தவர்கள் யூதர்கள். இந்த செல்வாக்கை வைத்து அமெரிக்க யூத காங்கிரஸ், இரெண்டாம் உலகப் போரில் வென்ற அமெரிக்க ஆதரவின் காரணமாக பாலத்தீன அரபிகளின் முழு எதிர்ப்புக்கு மத்தியிலும் முழு அரபு உலகின் எதிர்ப்பையும் மீறி இசுரேலை ஒரு நாடாக அங்கீகரிக்க வைத்து யூதர்களுக்கு விடுதலை பெற்று கொடுத்தார்கள். பதினேழு நாட்டு அரபிகளும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவு கொடுத்து இந்த புதிய சிறிய நாட்டுக்கு எதிராக போர் தொடுத்தார்கள். சிறிய நாடானாலும் இசுரேல் இந்த அரபிகளை வென்று பாலஸ்தீனத்தை முற்றிலும் அழித்து, ஆதரவு வழங்கிய லெபனானையும் சீர்குலைத்தது. இந்த போர் யூதர்களின் முள்ளிவாய்க்கால். ஆனால் தமிழரை போல் அன்றி யூதர்கள் வென்று விட்டார்கள். சிங்களவரை போன்று அடக்கி ஆழ விரும்பிய பாலஸ்தீனம் முற்றிலும் அழிந்தது. ஐன்ஸ்டைனை இசுரேலின் பிரதமாராகும்படி கேட்டார்கள், ஆனால் அவர் மறுத்து விட்டார்.

இதோ விபரமாக விக்கிபீடியாவில் படியுங்கள் (நான் மேலே எழுதிய பல விடயங்கள் வைக்கிபெடியாவில் இருக்காமலும் போகலாம்):

யூதர்களின் தலைமறைவான குழுக்கள் (பாசறைகள்)[தொகு]

பாலஸ்தீனர்களுக்கும், யூதர்களுக்கும் இடையே வலுவடைந்து வந்த முரண்பாடுகளாலும், பிரித்தானியரிடம் இருந்து யூதர்களுக்கான உறுதிகோள் ஏதும் வராததினாலும் யூதர்கள் தாங்களேதங்களை பாதுகாக முடிவெடுத்தனர்.

பால்பூர் அறிவிப்பையும் யூத தேசத்தையும் எதிர்த்த அரபு தேசீயவாதிகள், யூதர்களுக்கு எதிரான கலவரங்களை எரூசலம், ஹீப்ரான், ஜாப்பா, ஹைபாவில் தூண்டினர். 1921 யூத எதிர்ப்பு கலவரங்களை தொடர்ந்து, ஹகானா என்ற அமைப்பு தற்காப்பிற்க்காக யூதர்களால் ஆரம்பிக்கப் பட்டது. 1931, ஹகானாவிள் பிளவு ஏற்ப்பட்டு, இர்குன் அமைப்பு வெளியேரியது. இர்குன் இன்னும் தீவிர செயல் நோக்கை பின்பற்றி, யூதர்களிள் மேல் ஏற்பட்ட வன்முறைகளுக்கு பதிலடி கொடுத்து, பிரித்தானிய ஐநா ஒப்படைப்பு அரசாங்கத்தின் மீதும் தாக்கியது. இர்குனிலிருந்து இன்னும் தீவிர செயல்வாத லேஹி குழு பிளந்து வெளியேரியது. இர்குன் கொள்கைக்கு மாற்றாக, அது உலகப் போரில், பிரித்தனுடன் ஒத்துழைப்பை மறுத்தது.. இக்குழுக்கள் 1948 அரபு-இஸ்ரேலிய போர் முன், இஸ்ரேலி பாதுகாப்பு சேனை உதயத்திலும், அலியா-பெத் போன்ற இஸ்ரேலிய அகதிகள் வரவழிப்பிலும், பெரும் தாக்கம் ஏற்படுத்தின.

நாடு நிறுவப்படுதல்[தொகு]

180px-Declaration_of_State_of_Israel_194
 
டேவிட் பென்-குரியன்டெல் அவீவில் மே 14, 1948ல் இசுரேல் நாட்டின் தோற்றத்தை அறிவித்தல்
முதன்மைக் கட்டுரை: இசுரேலிய சுதந்திரப் பிரகடனம்

1947ல் யூதர்களுக்கும் அரேபியர்களுக்கும் இடையே மிகுதி பெற்று வந்த வன்முறை நிகழ்வுகளைக் தடுக்கவோ கட்டுப்படுத்தவோ இயலாத நிலையில், பிரிட்டன் நாடு தன் ஆட்சி உரிமையில் இருந்து விலகிக்கொள்ள முடிவெடுத்தது. 1947ல் உலகநாடுகளின் பேரவை (UN General Assemby), பாலசுத்தீனத்தை இருநாடுகளாகப் பிரிக்க ஒப்புதல் அளித்தது. யூதர்கள் இருக்க நிலப்பகுதியில் 55% யும், அராபியர்கள் இருக்க நிலத்தில் 45% யும் தருவதென இருந்தது. எருசலேம் நகரம் உலகநாடுகள் நிர்வகிக்கும் நகரமாக இருக்கட்டும் என்றும் முடிவு செய்தது. எருசலேமை ஈரின மக்களும் தமக்கே வேண்டும் என மிக வல்லுரிமையோடு கோருவார்கள் என்றும் அதனைத் தவிர்ப்பதற்காக இம்முடிவு என்று கூறப்பட்டது.

இரு நாடுகளாகப் பிரிப்பது என்னும் திட்டத்தை உலகநாடுகளின் பேரவை நவம்பர் 29, 1947ல் ஏற்ற உடன், யூதர்களின் சார்பாக டேவிட் பென்கூரியன் (David Ben-Gurion) தற்காலிகமாக ஏற்றுக்கொண்டார், ஆனால் அரேபியர்களின் குழு (Arab League) மறுத்தது. இதைத் தொடர்ந்து அரேபியர்கள் யூதர்களின் மீதும், யூதர்கள் அரேபியர்களின் மீதும் நடத்திய தாக்குதல்களின் விளைவாகப் பரவிய உள்நாட்டுப் போர், 1948க்கான இசுரேலிய விடுதலைப்போரின் முதல் கட்டமாக அமைந்தது.

பிரித்தானியரின் ஆட்சி உரிமை மே 15, 1948 பிற்பகல் 5 மணிக்கு முடிவடையும் முன்னரே, மே 14, 1948ல் இசுரேலிய நாடு தம் நாடு உருவானதை அறிவித்தது.

விடுதலைப் போரும் மக்கள் திரண்டு வருவதும்[தொகு]

முதன்மைக் கட்டுரைகள்: 1948 இசுரேல்-அரபுப் போர் மற்றும் அரபு-இசுரேல் பிரச்சனை

இசுரேல் ராஜ்ஜியத்தின் நிர்மாணத்தின் பின், எகிப்து, சிரியா, யோர்தான், இராக் நாடுகளின் சேனைகள் போரில் கலந்து கொண்டு, 1948 அரபு-இசுரேலி போர் இரண்டாம் நிலை தொட்டது. வடக்கிலிருந்து வந்த சிரியா, லெபனான், இராக் படைகள் இசுரேல் எல்லையில் நிறுத்தப்பட்டன; யோர்தான் படைகள் கிழக்கு எருசலேமை கைப்பற்றி மேற்கு எருசலேமை முற்றுகையிட்டன. ஹகானா அப்படி ஊடுருவிய படைகளை நிறுத்தியது, இர்குன் படைகள் எகிப்து படைகளை நிறுத்தியது. 1948 ஜூனில், ஐ.நா. ஒரு மாத போர்நிறுத்த பிரகடனம் செய்தது; அச்சமயம் இசுரேல் பாதுகாப்பு படை அரசாங்க ரீதியில் தாபிக்கப் பட்டது.. பல மாத போருக்குப் பின், 1949ல், போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்ப்பட்டு, தாற்காலிக எல்லைகள் நிலைக்கப் பட்டன. இசுரேல் யோர்தான் நதிக்கு மேற்கே ஒப்பந்த பகுதிகளின் 26% நிலைத்தை அடைந்தது. யோர்தான் 'மேற்குக் கரை' என்ற யூதேயா, சமாரியா போன்ற மலைப் பிரதேசங்களை ஏற்றது. எகிப்து காசா என அழைக்கப்படும் சிறிய கடலோர நிலத்தை அடைந்தது.

போர்போதும், பின்னும் இசுரேலிய பிரதான அமைச்சர் டேவிட் பென்குரியன் , பல்மாக், இர்குன், லேஹி முதலிய அமைப்புகளைக் கலைக்க உத்தரவிட்டார். ஒரு சுவீட நாட்டு தூதுவாலய ஊழியரை கொலையினால் , இர்குன்னும் லேஹியும் பயங்கர வாத அமைப்புகளாக அழைக்கப் பட்டு தடை செய்யப் பட்டன.

பல அரபு மக்கள் புதிய இசுரேலிய நாட்டினிலிருந்து வெளியேரினர் அல்லது வெளியேற்றப் பட்டனர். (அகதிகள் எண்ணிக்கை 600000 ந்து 900000 ஆக கணக்கிடப் பட்டுள்ளது; ஐ.நா. கணக்கு 711000 ஆகும்.) அதே சமயம் 1000000 யூதர்கள் அரபு நாடுகளிலிருந்து துரத்தப் பட்டனர். (ஆதாரங்கள் சந்தேகத்திற்கு உரியது)

யூத இன அழிப்பை (ஹோலோகாஸ்ட்) பிழைத்தவர்களும், அரபு நாடுகளிலிருந்த வந்த யூத அகதிகளும் இசுரேல் மக்கள் தொகையை ஒரே வருடத்தில் இரு மடங்காக்கினர்

https://ta.wikipedia.org/wiki/இசுரேல்

 

 

 

இஸ்ரேலின் வரலாறு தேவையில்லை.  யார் இந்த யூதர்கள்? அவர்களின் ஆரம்ப வரலாறும் இந்த திரிக்கு தேவை?

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

இஸ்ரேலின் வரலாறு தேவையில்லை.  யார் இந்த யூதர்கள்? அவர்களின் ஆரம்ப வரலாறும் இந்த திரிக்கு தேவை?

இசுரெலின் வரலாறு  மட்டுமல்ல யூதர்களின் வரளாறு கூட உங்களுக்கு தேவையற்றது தானெ? 
தேவையாக இருந்தால் நீங்களாகவே தேடி படித்து இருப்பீர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 hours ago, Jude said:

இசுரெலின் வரலாறு  மட்டுமல்ல யூதர்களின் வரளாறு கூட உங்களுக்கு தேவையற்றது தானெ? 
தேவையாக இருந்தால் நீங்களாகவே தேடி படித்து இருப்பீர்கள்.

யூதர்கள் இன்று பாலஸ்தீனத்திற்கும் அரேபியர்களுக்கும் செய்யும் அட்டுளீயங்களை பார்க்கும் போது....

யூதர்களுக்கு ஹிட்லர்  இனம் கண்டு சரியாக செய்ததாகவே அனுமானிக்க முடிகின்றது.:cool:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 9/26/2018 at 9:33 AM, colomban said:

கடாபியும் / சதாமும் தமது மக்களுக்கு நல்லதுதான் செய்தார்கள் என இங்குள்ளவர்கள் கூறுவார்கள்.

அப்படித்தான் பலரும் கூறுகின்றார்கள். தேன்கூடு மாதிரி இருந்த மக்களை கலைத்து/சிதைத்து விட்டு......... இப்போது அகதிகள் தொல்லை என வாய்கிழிய கத்துகின்றார்கள்.:cool:
எட்டத்திலை இருந்து அடிச்சு குழப்பின அண்ணைமார்  இப்ப ஒண்டும் தெரியாத  மாதிரி திரியினம்.:grin:

Edited by குமாரசாமி
மாதிரி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 9/25/2018 at 6:33 AM, கிருபன் said:

நாஜிகளால் திட்டமிடப்பட்ட ரீதியில் 6 மில்லியன் யூதர்கள் கொல்லப்படுவதை Holocaust என்று குறிக்கின்றார்கள்.

அப்போ அமெரிக்கர்.. ஜப்பானில் அணுகுண்டு வீசி கொத்துக் கொத்தாகக் கொன்றார்கள்.. இன்னும் பல நாடுகளில் ஆக்கிரமிப்புச் செய்து கொன்றார்களே.. ஏன் தமிழின அழிப்பைக் கூட முன்னின்று நடத்தினார்களே.. அதை எப்படி அழைப்பீர்கள்.

ஹிட்லரின் படைகளை நாசிப் படை என்றால்.. அமெரிக்காவின் படை நாசப் படை. அதுக்கு பெயர் வைக்க முடியல்லை என்பதற்காக ஹிட்லரை நாசி நாசி என்று திட்டிக் கொண்டிருக்கக் கூடாது.

சம காலத்தில் கூட.. யூதர்கள் எதற்காக தமிழின அழிப்புக்கு ஒத்துழைக்கிறார்கள்.. முதலில் அதுக்கு விளக்கம் சொல்லுங்கள்.. நாசியம்.. ஹிட்லரை பற்றிப் பிறகு பார்ப்பம்.

இதை தான் யூதர்கள் ஜேர்மனியிலும் செய்தார்கள். யூதர்கள் திறமானவர்களா.. எத்தனை ஆயிரம் கத்தோலிக்கர்களை ஜேசுவைச் சாட்டி கொன்று குவித்தார்கள்..! அதுக்கெல்லாம் என்ன பெயர் வைச்சு அழைப்பீர்கள்.

ஹிட்லர்.. மட்டும் மனிதரில் ஒரு குழுமத்துக்கு எதிராகச் செயற்படவில்லை. உலகில் பலரும் செயற்பட்டுள்ளனர். ஆனால் ஹிட்லர் ஜேர்மனிய மக்களின் முன்னேற்றம் என்பதில் அக்கறைக் கொண்டிருந்தார். அது போற்றத்தக்க ஒன்றே. அது மகிந்தவிடம் இருக்கவே இல்லை. அவர் தமிழ் மக்களை மட்டும் கொல்லவில்லை. தனக்கு எதிரான சிங்கள மக்களையும் கொன்றார். சொந்த மக்களை பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளி.. அவர்களின் பணத்தையே சூறையாடினார்.

அந்த வகையில்.. ஹிட்லர்.. மகிந்த ஒப்பீடு சரியாக அமையாது. ஹிட்லர் தன் சொத்துக்களை கூட தன் நாட்டு மக்களுக்கு எழுதி வைத்துவிட்டுப் போனார். மகிந்த..???! ரணில்..??! சந்திரிக்கா..??! சம்பந்தன்..???! உண்மையில் இவர்கள் தான் ஹிட்லரை விட மோசமானவர்கள். ?

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஆக .... யூதர்கள் திறமில்லை.. எனவே அவர்களை ஹிட்லர் ஒழித்தது சரி என்று வாதிக்கின்றீர்கள்..

அது போலத்தான் தமிழர்கள் திறமில்லை என்று சிங்களவர்கள், இந்தியர், மேற்கத்தையர், சீனர், யூதர், இஸ்லாமியர் எல்லோருடனும் கூட்டுச் சேர்ந்து அழித்தார்கள். அதுவும் சரியாகத்தானே இருக்கவேண்டும்!

நானும் ஹிட்லரின் படத்தை இனி பெரிதாக வீட்டில் மாட்டி நாஜியாக மாறினால்தான் இந்தத் திரியில் இருந்து தப்பிக்கலாம்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஹிட்லரை திறமோ இல்லை செய்ததெல்லாம் சரியெனவோ இங்கே யாரும் வாதிடவில்லை.

இவ்வளவு ஒடுக்கப்பட்டு அழிக்கப்பட்ட யூத இனம் ஏனைய விடுதலை அமைப்புகளை அழிக்க உதவியதைத்தான் ஜீரணித்து பார்க்க முடியவில்லை.
 

யூதம் பாலஸ்தீன இன அழிப்பு முதல் குர்திஷ்தான் விடுதலை தலைவரை காட்டிக்கொடுத்து கைது செய்ய உதவியது ஊடாக தமிழீழத்தை அழிக்க உதவியது வரைக்கும் வந்து நிற்கின்றது.

Quote

 

ஆக .... யூதர்கள் திறமில்லை.. எனவே அவர்களை ஹிட்லர் ஒழித்தது சரி என்று வாதிக்கின்றீர்கள்..

அது போலத்தான் தமிழர்கள் திறமில்லை என்று சிங்களவர்கள், இந்தியர், மேற்கத்தையர், சீனர், யூதர், இஸ்லாமியர் எல்லோருடனும் கூட்டுச் சேர்ந்து அழித்தார்கள். அதுவும் சரியாகத்தானே இருக்கவேண்டும்!

 

சிங்கள இனத்தையோ அல்லது பிற இனத்தையோ அழித்து தாங்கள் சுகமாக வாழவேண்டும் என தமிழினம் நினைக்கவில்லை. அப்படியொரு வரலாறும் இல்லை.

ஒரு இனத்தையோ இல்லை ஒரு சிறு சமூகம் ஊர் அல்லது குடும்பத்தை அழிப்பதை நாம் சரி என்ற நோக்கில் அடிப்படையில் அணுக முடியாத நிலையில் இருக்கின்றோம் அதற்கு காரணம் இனமாக அடயாளப்படுத்தப்பட்டு அழிவுக்கு உட்பட்டவர்களாக இருக்கின்றறோம் தொடர்ந்தும் அழிவுப்பாதையிலேயே இருக்கின்றோம்

. அமரிக்கா கனடா போன்ற நாடுகளை யூதர்களே பெரும்பாலும் கட்டுப்படுத்துகின்றார்கள். அரசியல் ஊடகத்துறை வர்த்தகம் பல்கலைக்கழக தலமைப்பொறுப்புகள் என அரச எந்திரத்தில் அவர்கள் ஆதிக்கம் வலுவாக இருக்கின்றது இதன் காரணமாக அரபு நாடுகள் மீதான மேற்குலகின் ராணுவ நடவடிக்கையின் பின்புலத்தில் அவர்கள் பங்கு இருக்கின்றது. இவ்வுலகின் பெரும்பான்மை மனிதகுல அழிவிலும் போர்களிலும் யுதர்களின் பங்கு இருக்கின்ற போதிலும் அவர்களுக்கு எதிரா கிட்லரின் நடவடிக்கை சரி என்று அணுகமுடியாது. 

முன்பு பலமுறை கூறியது போன்று உலகம் மனுடத்தின் வேட்டைக்காடு. பலமுள்ளவர்கள் பலவீனமானவர்களை வேட்டையாடுவதுதான் யதார்த்தம். வர்த்தகம், கார்பரேட் நிறுவனங்கள், அவர்களுக்கு இசைந்த அரசியல் என்பதெல்லாம் பலமான வேட்டைக்காரர்கள். எங்கெல்லாம் மக்கள் சமூகங்கள் தங்களுக்குள் முரண்ட்டு ஒன்றுபட முடியாமல் சிதைந்திருக்கின்றார்களோ அவர்கள் வேட்டைக்கு உட்படுவது தவிர்க்க முடியாது. இதன் அடிப்படையில் சிங்களவர்களால் தமிழர்களை இலகுவாக வேட்டையாட முடிந்தது. 

இவ்வுலகில் அறம் தர்மம் நியாயம் மனிதஉரிமைகள் அடிப்படையில் அவற்றுக்கான அமைப்புகள் ஐ நா நிறுவனங்கள் என அனைத்தும் பலமான வேட்டைக்காரர்கள் கைகளிலேயே உள்ளது. அதனால் நீதி நியாயம் பற்றி நம்புவது கடசி நேரத்தில் கடவுள் காப்பாற்றுவார் என்பதுக்கு நிகரானது. கடவுள் ஒருபோதும் காப்பாற்றவும் இல்லை காப்பாற்றவும் மாட்டார். 

எம்மைக்காப்பாற்ற ஒற்றுமையை கட்டியெழுப்புதல் இனமாக பலப்படுதல் பலவீனங்களை அகற்றுதல் என்பது குறித்து மட்டுமே சிந்திக்க முடியும். இல்லையேல் எஞ்சியவர்களும் வேட்டையாடப்படுவார்கள். இது மானுட இயற்கையின் நியதி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பக்கசார்பில்லாமல் அழிவுகளை நியாயப்படுத்துங்கள்.

அதுதான் நியாயம்.

யூதர்களின் பலத்தை வைத்து அநியாயங்கள் நியாயமாக்கப்படக்கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்
On 9/26/2018 at 5:30 PM, குமாரசாமி said:

இஸ்ரேலின் வரலாறு தேவையில்லை.  யார் இந்த யூதர்கள்? அவர்களின் ஆரம்ப வரலாறும் இந்த திரிக்கு தேவை?

யூதர்களும் அதே மண்ணில் இருந்து அரேபியர்களால் விரட்டப்பட்டவர்கள். இன்றைய இஸ்ரேல் யூதர்களின் தாய்மண். 
மதரீதியில் இஸ்ரேலியர்களும் அரபியர்களும் மச்சான்கள் என்று அவர்களே கூற கேட்டுள்ளேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.