Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கு லண்டனில் கணவனைக் கொலை செய்த குற்றச்சாட்டு – பாக்கியம் ராமதன் விளக்கமறியலில்..

Featured Replies

கிழக்கு லண்டனில் கணவனைக் கொலை செய்த குற்றச்சாட்டு – பாக்கியம் ராமதன் விளக்கமறியலில்..

uk-murder.jpg?resize=660%2C371

கணவனைக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் கிழக்கு லண்டன் நியூஹாமைச் சேர்ந்த 73 வயதான பாக்கியம் ராமதன் என்பவர் மீது லண்டன் தேம்ஸ் நீதவான் நீதிமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை வழக்கு தொடரப்பட்டுள்ளது.  கிழக்கு லண்டன் நியூஹாம் பேர்கர் வீதியில் (Burges Road ) உள்ள வீடொன்றில் 75 வயதான கனகசபை ராமதன் என்பவர் தலையில் கடும் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். .

 

கடந்த வெள்ளிக்கிழமை (21.09.18) பிற்பகல் 14: 20 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றதனை அடுத்து கைது செய்யப்பட்ட, பாக்கியம் ராமதன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  இதேவேளை கொல்லப்பட்ட கனகசபை ராமதனின் பிரேத பரிசோதனை உள்ளிட்ட சட்ட ரீதியான நடைமுறைகள் தொடர்வதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

http://globaltamilnews.net/2018/97107/

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வயதில் கொலைவெறி பிடிக்குமளவுக்கு என்ன செய்திருப்பார் ?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

இந்த வயதில் கொலைவெறி பிடிக்குமளவுக்கு என்ன செய்திருப்பார் ?

டிமென்ஷியா போன்ற வருத்தங்கள்... வருத்தக் காரர்களை பராமரிப்பவர்களை பெரும் விரக்திக்குள்ளாக்கும்.

கணவர் அப்படி ஒரு நோயாளராகவும்... மனைவி, பிள்ளைகள் வீட்டிலிருந்து வெளியேறிய நிலையில், கணவரை பராமரிப்பவராகவும் இருந்தால் இது நடக்க சாத்தியம் இருந்திருக்கலாம்.?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, பெருமாள் said:

இந்த வயதில் கொலைவெறி பிடிக்குமளவுக்கு என்ன செய்திருப்பார் ?

உண்மை பொய் தெரியாமல் ஒண்டும் கதைக்கேலாது.....
பாக்கியத்துக்குதான் வெளிச்சம்.

  • கருத்துக்கள உறவுகள்


இந்த வயசில் அம்மா ஜெயிலில் இருந்து என்ன செய்யப் போறாவோ?...பிள்ளைகள் செய்த குற்றத்தை தான் பொறுப்பெடுத்தவோ தெரியவில்லை 

 

  • கருத்துக்கள உறவுகள்
On 9/25/2018 at 10:15 PM, Nathamuni said:

டிமென்ஷியா போன்ற வருத்தங்கள்... வருத்தக் காரர்களை பராமரிப்பவர்களை பெரும் விரக்திக்குள்ளாக்கும்.

கணவர் அப்படி ஒரு நோயாளராகவும்... மனைவி, பிள்ளைகள் வீட்டிலிருந்து வெளியேறிய நிலையில், கணவரை பராமரிப்பவராகவும் இருந்தால் இது நடக்க சாத்தியம் இருந்திருக்கலாம்.?

விசாரித்ததில் நாதமுனியின் கருத்தே ஒத்து போகுது .

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் சொல்லுறது நல்லாத்தான் இருக்குது.  சரி பிழை கண்டுபிடிக்கிறதுதான் கஸ்டமான விடயம்.

.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 9/25/2018 at 11:15 PM, Nathamuni said:

டிமென்ஷியா போன்ற வருத்தங்கள்... வருத்தக் காரர்களை பராமரிப்பவர்களை பெரும் விரக்திக்குள்ளாக்கும்.

கணவர் அப்படி ஒரு நோயாளராகவும்... மனைவி, பிள்ளைகள் வீட்டிலிருந்து வெளியேறிய நிலையில், கணவரை பராமரிப்பவராகவும் இருந்தால் இது நடக்க சாத்தியம் இருந்திருக்கலாம்.?

இப்ப ஐரோப்பிய நாடுகளிலையெல்லாம் உப்பிடி சொல்லித்தான் கன கொலை குத்து வெட்டு கேஸ்சுகளையெல்லாம் இழுத்து மூடுறாங்கள்.

இனியென்ன அங்கையும்  உதுதான்......... வாள் வெட்டுக்காரனை மனநோயாளியெண்டு சேட்டிக்கரை குடுத்து பிரச்சனையை முடிப்பாங்கள் காணும்.:cool:

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, குமாரசாமி said:

இப்ப ஐரோப்பிய நாடுகளிலையெல்லாம் உப்பிடி சொல்லித்தான் கன கொலை குத்து வெட்டு கேஸ்சுகளையெல்லாம் இழுத்து மூடுறாங்கள்.

இனியென்ன அங்கையும்  உதுதான்......... வாள் வெட்டுக்காரனை மனநோயாளியெண்டு சேட்டிக்கரை குடுத்து பிரச்சனையை முடிப்பாங்கள் காணும்.:cool:

ஆ... அந்த பம்மாத்துக்கள் எல்லாம் ஊர்ல...

இங்க டாக்குத்தருள இருந்து மரண விசாரணை அதிகாரி, போலிசு அதிகாரி எல்லாரும் சைன் வைக்கோணும்... எல்லாம் ஒழுங்கா இருந்தால்... ஐந்து நிமிச வேலை கண்டியளோ..

எங்கையும் எசகு, பிசகு எண்டால்... உடம்பை பனிக் கட்டிக்குள வைச்சு போட்டு... ஆர அமர விசாரித்து தான் கையெழுத்து போடுவினம்.... அதுக்குள்ள பிழை விட்ட ஆக்கள் இருந்தால் உள்ள போக வேண்டியது தான்.

உங்க ஒரு நல்ல இடத்து அக்கவுண்டண்ட் பொடிச்சி.... கலர் காட்டின பொடியன் இடம் மாட்டி...அவன் செய்த கிரிமினல் வேலையில அப்பாவியாய் மாட்டி, 4 வருசம் உள்ள இருந்து போட்டு வந்திருக்கிறா.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Nathamuni said:

உங்க ஒரு நல்ல இடத்து அக்கவுண்டண்ட் பொடிச்சி.... கலர் காட்டின பொடியன் இடம் மாட்டி...அவன் செய்த கிரிமினல் வேலையில அப்பாவியாய் மாட்டி, 4 வருசம் உள்ள இருந்து போட்டு வந்திருக்கிறா.

இங்கு நாலு வருஷம் என்றால் இரண்டு வருஷம் தானே  ருசிகண்ட பூனை விடாது உள்ளே போனாலே கிரிமினல் 11+எக்ஸாம் பாஸ் பண்ணியது போல் வெளியில் வந்து எப்படி பிடிபடாமல் கிரைம் செய்வது இலகு டீலர்கள் அனைத்தும் தேர்ந்த ஆளாய் இருப்பா ?

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

இங்கு நாலு வருஷம் என்றால் இரண்டு வருஷம் தானே  ருசிகண்ட பூனை விடாது உள்ளே போனாலே கிரிமினல் 11+எக்ஸாம் பாஸ் பண்ணியது போல் வெளியில் வந்து எப்படி பிடிபடாமல் கிரைம் செய்வது இலகு டீலர்கள் அனைத்தும் தேர்ந்த ஆளாய் இருப்பா ?

கொலை முயற்சி.... போதைப் பொருள் பணம் லாப்ட்டில்... இருந்தது தனக்கு தெரியாது... என்று சொன்னாலும் அவர் அதே வீட்டில் இருந்தார் என்ற வகையில்...8 வருஷம் ...4 வருசம் உள்ள...

 

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 9/27/2018 at 12:58 AM, பெருமாள் said:

விசாரித்ததில் நாதமுனியின் கருத்தே ஒத்து போகுது .

பாக்கியத்தை விசாரிச்சனீங்களோ ???

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பாக்கியத்தை விசாரிச்சனீங்களோ ???

இல்லை அவர்களின் அயல் பக்கம் நம்ம ஆள் ஒருத்தர் மூலம் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 9/25/2018 at 11:15 PM, Nathamuni said:

டிமென்ஷியா போன்ற வருத்தங்கள்... வருத்தக் காரர்களை பராமரிப்பவர்களை பெரும் விரக்திக்குள்ளாக்கும்.

கணவர் அப்படி ஒரு நோயாளராகவும்... மனைவி, பிள்ளைகள் வீட்டிலிருந்து வெளியேறிய நிலையில், கணவரை பராமரிப்பவராகவும் இருந்தால் இது நடக்க சாத்தியம் இருந்திருக்கலாம்.?

கடவுளேயெண்டு நோய்நொடி வந்து முடக்கப்படுறதுக்கு முதலே போய்ச்சேர்ந்துடோணும்  character0009b_zps696f2aed.gif

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பாக்கியத்தை விசாரிச்சனீங்களோ ???

 

கேள்விப்பட்டதை எங்களுக்கும் சொல்லலாமே ?

 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ரதி said:

 

கேள்விப்பட்டதை எங்களுக்கும் சொல்லலாமே ?

 

நான் கேள்விப்பட்டால் சொல்ல மாட்டனோ ரதி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.