Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பதின்ம வயது திருமணங்கள் யாழ்ப்பாணத்தில் அதிகரிப்பு : மாவட்ட சமூக பாதுகாப்புக்குழு கூட்டத்தில் சுட்டிக்காட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சட்டங்கள் அப்படித்தான் இருக்கும்...... கோயிலுக்கு போனால்  பொடியளிடம் செருப்பை கழட்டி விட்டிட்டு தள்ளிப்போய் பொடியளிடம் கற்பூரம்,தேங்காய் வாங்கிக்கொண்டு போய் உடைத்து விட்டு சாமியை சந்தோசமாய் கும்பிடலாம்......!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

இது நிச்சயமாக சிங்களவனின் வேலையாகதான் இருக்கும். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
37 minutes ago, colomban said:

இது நிச்சயமாக சிங்களவனின் வேலையாகதான் இருக்கும். 

சீ....அப்பிடியே??? :27_sunglasses:

எனது அக்கா 2 பால்மாடு வைத்திருக்கிறார் அதன்மூலம் வரும் வருமானம் தனது குடும்பத்தின் அன்றாடசெலவுகளிற்கு போதுமென்கிறார் ..கணவனின் வருமானம் கடனுகள் கட்ட (முன்னர்) வாங்கிய) மற்றும் கொஞ்ச சேமிப்புக்கும் பயன் படுது..  பதின் வயதில் திருமணம் செய்பவரும் உழைப்பதற்கான வழிகள் நிறையவே உண்டு தாயகத்தில் என்ன எந்த வேலையானாலும் செய்ய நீங்கள் ரெடி ஆக இருக்கணும்.. மேசன் தொழில் மற்றும் உதவியாளருக்கு 1200-1700 வரை சம்பளம், இதுவே கொழும்புக்கு வேலைக்கு போனால் 2000-2500 சிலிடங்களில் இன்னும் கூட .. 

குடும்ப பொறுப்பும் உழைக்கணும் எனும் எண்ணமும் இருந்தால் எங்கும். உழைக்கலாம் 

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Jude said:

1. அவனை அவள் கைவிடலாமா? அது பற்றி    நீங்கள் எழுதவில்லையெ?
2. வாழ்க்கை செலவுக்கு வழி இல்லாமல் அவர்கள் திருடரானால், தற்கொலை செய்தால், முசுலிம் ஆனால், ஆமிக்கு வேலை செய்தால் சம்மதமா?
3. பதின்ம வயதில் செய்யாமல் இரெண்டு வருடம் தள்ளி திருமணம் செய்தால் இனம் பெருகாதா?

பல இளவயது திருமணங்கள் ஈர்ப்பினால் நடக்கிறது பாருங்க அதன் பிறகு பிரிந்து விடுகிரார்கள் அல்லது ஒரு பிள்ளையை கொடுத்துவிட்டு விலகி செல்கிறார்கள் குடும்பத்தை நடத்த முடியாமல் கணவனோ ,மனைவியோ வெளிநாடு சென்று விடுகிறார்கள் பின்னர் அவர்கள் வாழ்க்கையென்பது ?? நீங்கள் போட்ட கேள்விக்குறி போலவே  விடை கேட்டு நிற்கிறது 

தன், தாங்கள் வாழ்க்கையை தொடங்கி  வாழ்க்கையை நடத்த தெரியாமல் தற்கொலை, ஆமிக்கு வேலை செய்தால் , முஸ்லீம் ஆனால் இதில் சம்மதமா என்பதை என்ன்னிடம் நீங்கள் கேட்பீர்கள் ஆனால் அதை தடுக்க உங்களால் மட்டும் முடியுமா என்ன ???  மூடித்து போக  வேண்டியதுதான் ஏனென்றால் அதுதான் அவரது விருப்பம் என்று சொன்னால் உங்களால் என்னதான் செய்திட முடியும் 

பதின்ம வயதில் செய்யாமல் இரெண்டு வருடம் தள்ளி திருமணம் செய்தால் இனம் பெருகாதா?

பெருகும் அதுவும் அவர் விருப்பத்தை பொறுதே அதுவும் அமையும் :grin:

 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

தாங்கள் வாழ்க்கையை தொடங்கி  வாழ்க்கையை நடத்த தெரியாமல் தற்கொலை, ஆமிக்கு வேலை செய்தால் , முஸ்லீம் ஆனால் இதில் சம்மதமா என்பதை என்ன்னிடம் நீங்கள் கேட்பீர்கள் ஆனால் அதை தடுக்க உங்களால் மட்டும் முடியுமா என்ன ???  மூடித்து போக  வேண்டியதுதான் ஏனென்றால் அதுதான் அவரது விருப்பம் என்று சொன்னால் உங்களால் என்னதான் செய்திட முடியும் 

மனிதர்கள் இயற்கையோடு ஒன்றி உடல் விட்ட வழியில் வாழ்வதை பொருளாதார வளர்ச்சி குன்றிய. சமுதாயங்களில் காணலாம். காடுகளில் வாழும் மனிதர் இப்படியானவர்கள்.  பொருளாதார வளர்ச்சி. கூட.  மனிதர் சிறப்பான வாழ்க்கை பற்றி சிந்தித்து அதை அறிவாகவும் சட்டங்களாகவும் ஆக்கி இயற்கை தந்த வாழ்க்கையிலும்  சிறப்பான வாழ்க்கையை  அமைத்து கொள்கிறார்கள். இந்த அறிவுக்கு. நானும்.நீங்களும் கூட  பங்களிப்பு  செய்கிறொம். 
 இவர்கள் தமது விருப்பப்படி மற்றவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு பற்றி அக்கறை இன்றி வாழ விரும்பினால் காடு தான் அவர்களுக்கு உகந்த இடம் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 எம் மூதையர்கள் பதின்ம வயதுகளில் மணம் முடித்ததால் தான் பிள்ளை பேரப்பிள்ளை பூட்டப்பிள்ளை என கூட்டுக்குடும்பமாக  நோய் நொடிகள் வரும் வயதிற்கு முன்னரே சகலதையும் அனுபவித்தார்கள். இது மேற்குலகத்தவர்க்கும் சாரும்.:cool:
ஆனால் இன்றோ......

முக்கி முக்கி  40 வயதிலை முதல் பிள்ளையாம்...அதோடை இடுப்பும் இடிஞ்சு போச்சுதாமெல்லே!!! tw_yum:

  • கருத்துக்கள உறவுகள்

முதிராப் பருவத்தில் திருமணம் செய்பவர்கள் குடும்பம் நடத்தக்கூடிய பக்குவத்துடனா உள்ளார்கள்?

இங்கு விவாதிக்கப்படும் பதின்ம வயதினர் சட்டப்படியான திருமண வயதெல்லையை அடையாதவர்கள். அதனால்தான் பொலிஸ் தலையிடமுடிகின்றது. குழந்தைத் திருமணத்திற்கு வக்காலத்து வாங்கி அது திறம் என்று வாதத்திற்குச் சொல்லலாம். ஆனால் உலகம் மாறிக்கொண்டு வருகின்றது. கற்காலத்தில் இருந்த பழக்கம் எல்லாம் இப்போதும் சரியாக இருக்காது!

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, கிருபன் said:

முதிராப் பருவத்தில் திருமணம் செய்பவர்கள் குடும்பம் நடத்தக்கூடிய பக்குவத்துடனா உள்ளார்கள்?

இங்கு விவாதிக்கப்படும் பதின்ம வயதினர் சட்டப்படியான திருமண வயதெல்லையை அடையாதவர்கள். 

இலங்கை முஸ்லிம்களின் திருமண சட்டம் சிறுவர் திருமணத்தை அனுமதிக்கிறது. இது ஷரியா சட்டத்தை அமுல்படுத்துகிறது. படித்த முஸ்லிம் பெண்கள், குறிப்பாக சட்டத்தரணிகள் இந்த சட்டத்தை மாற்றும் முயற்சிகள் எடுத்து ஒரு முஸ்லிம் நீதிபதி தலைமையில் இந்த சட்டத்தை மாற்ற வேண்டும் என்று பல ஆண்டுகளுக்கு முன் பிரேரிக்க பட்டது. ஆனால் முஸ்லிம் அரசியல்வாதிகள் தலையிட்டு சட்டத்தை மாற்ற விடவில்லை. இப்போது மீண்டும் முஸ்லிம் பெண்கள் அமைப்புகள் இன்றைய அரசில் செல்வாக்கு செலுத்தி இந்த சிறுவர் திருமண அனுமதியை சட்டவிரோதமாக்க முயற்சி செய்கிறார்கள். இங்கே தமிழர் சட்டவிரோதமாகவே சிறுவர் திருமணத்தை ஆதரிக்க கேட்கிறார்கள். ஆனால் பன்னிரண்டு வயது மகள் பக்கத்துக்கு வீட்டு பையனுடன் பற்றைக்குள் ஒதுங்கினால் எங்கள் குழந்தையை கெடுத்து விட்டான் என்று ஒப்பாரி வைக்கிறார்கள். பாலியல் பற்றி அறிவும் ஆர்வமும் இல்லாதை குழந்தை திருமணத்துக்கு எங்கள் சமூகத்தில் இவ்வளவு ஆதரவா?

6 hours ago, குமாரசாமி said:

 எம் மூதையர்கள் பதின்ம வயதுகளில் மணம் முடித்ததால் தான் பிள்ளை பேரப்பிள்ளை பூட்டப்பிள்ளை என கூட்டுக்குடும்பமாக  நோய் நொடிகள் வரும் வயதிற்கு முன்னரே சகலதையும் அனுபவித்தார்கள்.

உங்கள் மூதாதையர் ஏன் உங்களை பதினாலு வயதில் ஒரு பன்னிரண்டு வயது பெண்ணை திருமணம் செய்ய விடவில்லை? அவர்களின் பட்டறிவு உங்களுக்கு இன்னமும் புரியவில்லையா?

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு சிறுவர் திருமணத்தை ஆதரிப்பவர்கள் எத்த‌னை பேர் தாங்கள் குழந்தைகளை 18 வயதிற்கு முன்னமே திருமணம் முடித்து கொடுப்பர். காலம் மாறும்போது இந்த காட்டு மிராண்டித்த‌னங்கள் எல்லாம் மாறவேண்டும். 

முன்னேர்கள் குகைகளில் வாழ்ந்தார்கள், வெளியே பொட்டலில் கக்கா போனார்கள் என இக்காலத்தில் நாம் செய்ய முடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Jude said:

மனிதர்கள் இயற்கையோடு ஒன்றி உடல் விட்ட வழியில் வாழ்வதை பொருளாதார வளர்ச்சி குன்றிய. சமுதாயங்களில் காணலாம். காடுகளில் வாழும் மனிதர் இப்படியானவர்கள்.  பொருளாதார வளர்ச்சி. கூட.  மனிதர் சிறப்பான வாழ்க்கை பற்றி சிந்தித்து அதை அறிவாகவும் சட்டங்களாகவும் ஆக்கி இயற்கை தந்த வாழ்க்கையிலும்  சிறப்பான வாழ்க்கையை  அமைத்து கொள்கிறார்கள். இந்த அறிவுக்கு. நானும்.நீங்களும் கூட  பங்களிப்பு  செய்கிறொம். 
 இவர்கள் தமது விருப்பப்படி மற்றவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு பற்றி அக்கறை இன்றி வாழ விரும்பினால் காடு தான் அவர்களுக்கு உகந்த இடம் 

நாம் ஏதோ வளர்ச்சி அடைந்துவிட்டோம் என்று புலத்தில் வெளிநாடுகளில் இருப்பவர்கள் நினைத்தாலும் சில நாடுகள் அப்படியே தான் இருக்கிறது  அதற்குள் இலங்ககையும் அடக்கம் யாழ்ப்பாணத்தில் திருமணம் ஆகாமல் அதாவது குடும்பமாகி பிள்ளைகள் பெற்று வாழ்ந்தாலும் அதை உறுதிப்படுத்தும் விவாகப்பதிவு முறையாக தற்போதுதான் பெற்றார்கள் செய்தி மற்றும் படங்கள் கைவசம் உள்ளன . 

 

திருமணம் செய்யாமல் பல காலமாக யாழ்பாணத்தில் குடும்பம் நடத்தி வந்த 100 தம்பதியினருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் சட்டப்படி திருமணம் செய்து வைத்ததாக அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.:104_point_left:

  • கருத்துக்கள உறவுகள்

18 வயசுக்கு முதல் கல்யாணம் கட்டி 40,45 வயதுக்கு முதல் பேரன் ,பேத்தி கண்டவர்கள் தான் கள்ளத் தொடர்பு வைச்சு இருக்கிறவை?

 

  • கருத்துக்கள உறவுகள்

நான் யாழ் குடாநாட்டில் பிறந்துவளர்தவன் எனது அன்னையை எவ்வளவுக்கெவ்வளவு அன்பாக நேசித்தேணோ அதற்கீடாக நான் யாழ் மண்ணையும் பொதுவாகவே எனது தேசத்தை நேசித்தேன்,

ஆனால் இரண்டாயிரத்தி ஒன்பதில் யாழ் குடாநாட்டின் மக்கள் கூப்பிடு தூரத்தில்  தனது உறவுகள் கொலைசெய்யப்பட்டுக்கொண்டிருக்கையில் இவர்களுக்கு இது வேண்டும் என்னத்துக்கு அவங்கட கதையைக்கேடு போனவையள் இவங்கள் அழிஞ்சு கொழும்புப்பாதையும் திறந்திட்டாங்கள் எண்டால் ஒரு பிரச்சனையும் இல்லை மனிசர் நிம்மதியாக இருக்கலாம் என என் காதுபடவே கூறியவர்கள் கொழும்புப்பாதையும் திறந்து சில நல்லதுகளுடன் அதிகமாக தீமைகள் குடாநாட்டுக்குள் உள்நுழைந்ததும் அவர்கள் ஆடிய ஆட்டம் அவ்வாட்டத்தை இப்போதும் தொடருவது இவைகளால் மனதளவில் மிகவும் சோர்வுற்றவர்களில் நானும் ஒருவன்.

யாழ் குடாநாட்டின் தமிழ் சமூகம் முற்றிலுமாகச் சிதிலமாவதையே நான் விரும்புகிறேன் கூடிய விரைவில் அது நடக்கும் அல்லாதுவிடின் பிரபாகரன் தமிழ்மக்கள்மத்தியில் ஒரு விசஜந்து எனக்கூறுமளவுக்கு டக்ளசை இவர்கள் வளர்த்துவிட்டிருக்கமாட்டார்கள் 

இச்செய்தியை வாசிக்கும்போது மனதுக்குள் பதினாயிரம் பட்டாம்பூச்சிகள் பல நிறங்களில் சிறகடித்து என்னைச்சுற்றிப்பறபதாக உணர்கிறேன்.

இத வாசிப்பவர்கள் என்னை மிகவும் மனச்சாட்சி இல்லாத வக்கிரம் நிறைந்த விலங்கினம் என என்னை விமர்சிக்கலாம் அதுவும் எனக்கு மகிழ்சியே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 hours ago, கிருபன் said:

முதிராப் பருவத்தில் திருமணம் செய்பவர்கள் குடும்பம் நடத்தக்கூடிய பக்குவத்துடனா உள்ளார்கள்?

இங்கு விவாதிக்கப்படும் பதின்ம வயதினர் சட்டப்படியான திருமண வயதெல்லையை அடையாதவர்கள். அதனால்தான் பொலிஸ் தலையிடமுடிகின்றது. குழந்தைத் திருமணத்திற்கு வக்காலத்து வாங்கி அது திறம் என்று வாதத்திற்குச் சொல்லலாம். ஆனால் உலகம் மாறிக்கொண்டு வருகின்றது. கற்காலத்தில் இருந்த பழக்கம் எல்லாம் இப்போதும் சரியாக இருக்காது!

முதிர்ந்து முத்திய பின் நடக்கும் திருமணவாழ்க்கை எல்லாம் ஆகோ ஓகோ என்று பய பக்தி பக்குவத்துடன் ஓடுதாக்கும்? :cool:

எங்கை பாத்தாலும் டெய்லி விவாகரத்து செய்தியாத்தானே கிடக்குது. எனக்கு தெரிஞ்ச தமிழ் லோயரிட்டை மட்டும் 730 விவகரத்து கேஸ் கைவசம் இருக்காம். குண்டியிலை தட்டி புளுகமாய் சொல்லுறார். அந்தக்காலத்திலை விவாகரத்து கோட்டு கேஸ் எண்டு அலைஞ்ச சனம் குறைவு. இப்ப என்னடாவெண்டால் இண்டைக்கு கலியாணம் நாளைக்கு டைவேர்ஸ் காலம் ஓடுது.

கற்காலத்திலை இருந்த குடும்ப வாழ்க்கையும் சாப்பாட்டு பழக்கவழக்கங்களும் எந்த பாதிப்பையும் மக்களுக்கு தரவில்லை. இன்று கைத்தொலைபேசியை நோண்டி நோண்டி கண்குருடாய் போகுதாம்......கண்டகண்ட களிசறையளை சாப்பிட்டு வாற வருத்தங்கள் எல்லாம் புதிர் புதிராய் இருக்காம்.
உச்சந்தலை தொடக்கம் உள்ளங்கால் வரைக்கும் உள்ள வருத்தங்களுக்கு டெய்லி 68 மருந்து மாத்திரையளை எடுத்துக்கொண்டு கற்காலம் கருங்கல்லுக்காலம் எண்டு வியாக்கியானம் வேறை....:grin:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 hours ago, Jude said:

இலங்கை முஸ்லிம்களின் திருமண சட்டம் சிறுவர் திருமணத்தை அனுமதிக்கிறது. இது ஷரியா சட்டத்தை அமுல்படுத்துகிறது. படித்த முஸ்லிம் பெண்கள், குறிப்பாக சட்டத்தரணிகள் இந்த சட்டத்தை மாற்றும் முயற்சிகள் எடுத்து ஒரு முஸ்லிம் நீதிபதி தலைமையில் இந்த சட்டத்தை மாற்ற வேண்டும் என்று பல ஆண்டுகளுக்கு முன் பிரேரிக்க பட்டது. ஆனால் முஸ்லிம் அரசியல்வாதிகள் தலையிட்டு சட்டத்தை மாற்ற விடவில்லை. இப்போது மீண்டும் முஸ்லிம் பெண்கள் அமைப்புகள் இன்றைய அரசில் செல்வாக்கு செலுத்தி இந்த சிறுவர் திருமண அனுமதியை சட்டவிரோதமாக்க முயற்சி செய்கிறார்கள். இங்கே தமிழர் சட்டவிரோதமாகவே சிறுவர் திருமணத்தை ஆதரிக்க கேட்கிறார்கள். ஆனால் பன்னிரண்டு வயது மகள் பக்கத்துக்கு வீட்டு பையனுடன் பற்றைக்குள் ஒதுங்கினால் எங்கள் குழந்தையை கெடுத்து விட்டான் என்று ஒப்பாரி வைக்கிறார்கள். பாலியல் பற்றி அறிவும் ஆர்வமும் இல்லாதை குழந்தை திருமணத்துக்கு எங்கள் சமூகத்தில் இவ்வளவு ஆதரவா?

உங்கள் மூதாதையர் ஏன் உங்களை பதினாலு வயதில் ஒரு பன்னிரண்டு வயது பெண்ணை திருமணம் செய்ய விடவில்லை? அவர்களின் பட்டறிவு உங்களுக்கு இன்னமும் புரியவில்லையா?

நாகரீகம் எனும் பெயரில் என் பிள்ளை .....நன்றாக படித்து சகல பட்டங்களும் பெறவேண்டும்....பதவியின் உச்சத்தில் இருக்க வேண்டும்.....என நினைத்த பெற்றோருக்கு தன் பிள்ளை 40 வயதை தாண்டியும் இன்னும் திருமணம் கை கூடவில்லையே என தலையில் கையைவைத்துக்கொண்டு திரியும் பொற்கால பெற்றோரை நீங்கள் காணவேயில்லையா?

இல்லையேல் நாலு ஊருக்கு சாதாரணமாக சென்று வாருங்கள். தலை கிறுகிறுக்கும். :27_sunglasses:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.