Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ். பல்கலைக்கழகத்தில் மாணவிகள் மீது பேராசிரியர்களால் பாலியல் துன்புறுத்தல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். பல்கலைக்கழகத்தில் மாணவிகள் மீது பேராசிரியர்களால் பாலியல் துன்புறுத்தல்

Report us Suthanthiran 32 minutes ago

யாழ். பல்கலைக்கழக மாணவிகள் மீது இடம்பெறும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை எடுக்க தவறிவருகின்றது என மாணவர் ஒன்றியம் கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று நடாத்திய ஊடகவியியலாளர் சந்திப்பின் போதே மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தள்ளனர். இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள அவர்கள்,

“யாழ். பல்கலைக்கழக மாணவர்களாலும் ஒட்டுமொத்த சமூகத்தாலும் வெறுக்கப்படும் வகையில் மாணவிகள் மீது பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் பல்கலைக்கழகத்திற்குள் நடந்திருக்கின்றன.

ஆனால் அதற்குரிய முழுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படாததால் அந்தக் குற்றங்களைச் செய்தவர்கள் தப்பித்துச் செல்லக் கூடிய நிலைமைய காணப்படுகின்றது.

குறிப்பாக பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் இவ்வாறு மாணவிகள் மீது பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை மேற்கொண்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.

இதே போன்றதொரு குற்றச்சாட்டு குறித்த பேராசிரியர் மீது கடந்த பல வருடங்களுக்கு முன்னரும் ஏற்கனவே முன்வைக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாத நிலையிலையே இத்தகைய இழிவான செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெற்றிருக்கின்றன.

ஆகையினாலேயே உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென நாம் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்திருக்கின்றோம்.

இந்த விடயங்கள் தொடர்பில் நிர்வாகத்திற்கும் மாணியங்கள் ஆணைக்குழுவிற்கும் பேரவைக்கும் தெரியப்படுத்தியும் முழுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாத நிலைமை தற்போதும் காணப்படுகின்றது.

இவ்வாறு விசாரணைகள் இழுத்தடிக்கப்படுவதால் குற்றஞ்சாட்டப்பட்ட பேராசிரியர் தண்டணைகளுக்குள்ளாகாமல் தப்பித்துச் செல்கின்ற நிலைமையே காணப்படுகிறது.

இந்த நிலைமைகள் தொடர்வது எமக்கு மிகுந்த மனவேதனையையே ஏற்படுத்துகின்றது.

ஆகவே பல்கலைக்கழக நிர்வாகம் இதனை மூடி மறைக்க முயலாது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று” கேட்டுக் கொண்டனர்.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

https://www.tamilwin.com/community/01/194775?ref=home-latest

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, பெருமாள் said:

இந்த விடயங்கள் தொடர்பில் நிர்வாகத்திற்கும் மாணியங்கள் ஆணைக்குழுவிற்கும் பேரவைக்கும் தெரியப்படுத்தியும் முழுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாத நிலைமை தற்போதும் காணப்படுகின்றது.

இவ்வாறு விசாரணைகள் இழுத்தடிக்கப்படுவதால் குற்றஞ்சாட்டப்பட்ட பேராசிரியர் தண்டணைகளுக்குள்ளாகாமல் தப்பித்துச் செல்கின்ற நிலைமையே காணப்படுகிறது.

பல்கலைக் கழக நிர்வாகம் நடவடிக்கை எடுக்கத்  தயங்கினால்...
அந்தப் பேராசிரியரின் பெயரை மட்டும்... வெளியே சொல்லி விடுங்கள்.

அவரின் பெயரை... மதிலில், கரித்துண்டால் எழுதியே... நாறப்  பண்ணி விடுவார்கள், யாழ் மக்கள். :grin:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, தமிழ் சிறி said:

அவரின் பெயரை... மதிலில், கரித்துண்டால் எழுதியே... நாறப்  பண்ணி விடுவார்கள், யாழ் மக்கள். :grin:

இப்பத்தான் முகநூல் இருக்கே . கலர் படமும் போட்டு விடலாம் .

15 hours ago, பெருமாள் said:

பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் இவ்வாறு மாணவிகள் மீது பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை மேற்கொண்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.

யார் அந்த கறுப்பாடு?

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Rajesh said:

யார் அந்த கறுப்பாடு?

கறுப்பாடு கிடாயா? மறியா??

5 minutes ago, Paanch said:

கறுப்பாடு கிடாயா? மறியா??

தெரியாதே!

வைத்தியர்களுக்கு அடுத்தபடியாக பேராசிரியர்களாக உள்ள தமிழர் பலர் சமூகத்து செய்ய வேண்டியதை செய்யாமல் மாதாந்தம் கிடைக்கும் சம்பளத்தை எண்ணுவதிலேயே காலத்தை செலவிடுகின்றனர். அதிலும் ஒருசிலர் சமூக விரோத செயல்களில் கொடிகட்டி பறக்கின்றனர். கூல் போன்ற ஒருசிலர் எட்டப்பர்களாவும் கைக்கூலிகளாகவும் இயங்கி வருகின்றனர்.

பேராசிரியர்கள் துரைராஜா, நந்தி, வித்தியானந்தன், கைலாசபதி, சிற்றம்பலம் போன்றவர்களின் பங்களிப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றும் நல்ல பேராசிரியர்கள் அமைந்தால் தமிழ் சமூகம் மேன்மை பெறும்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, போல் said:

வித்தியானந்தன், கைலாசபதி, 

வெறுமனே பெயர்களை தெரிந்து வைத்துக் கொண்டு பொழுதுபோக்குக்கு எழுதுகிறீர்களா?

நான் மாணவனாக இருந்த காலத்தில் துணைவேந்தராக இருந்த வித்தியானந்தனிடம் சென்ற போது அவரது அறையில் சாராயம் மணக்க வெறியில் இருந்தார். பல்கலைக்கழக கட்டுமான நிதியை கட்டட ஒப்பந்த நிறுவனத்துடன் சேர்ந்து ஊழலுக்கு துணை போனவர். ஈரோஸ் துப்பாக்கி முனையில் மிரட்டி பல்கலைக்கழகத்துக்கு வரக்கூடாது என்று நிர்ப்பந்தித்தால் தான் இவரது இடம் காலியாகி துரைராஜா துணைவேந்தாரானர். 

கைலாசபதி சீன-சார்பு கொம்யுநிஸ்ட் அமைப்பில் முன்ன்னின்று உழைத்தவர்.  இவரும் இவரது அமைப்பும் சிறிமாவோ பண்டாரநாயக்கவுடன் நெருக்கமானவர்கள். இது சீன-சார்பு உறவு. இவரது மகள் சுமங்களா கைலாசபதி அமெரிக்க நடிகர் கிளின்ட் ஈஸ்ட்வூட் இடம் பிரபாகரன் செல்வியை கடத்திவிட்டதாக சொல்லி கிளின்ட் ஈஸ்ட்வூட் இடம் இருந்து பிரபாகரனுக்கு பகிரங்க கடிதம் பெற்றவர். இந்த கடிதம் வந்து ஓரிரு வாரங்களில் செல்வி கொல்லப்பட்டார். அதற்கு முதல் செல்வியை விடுதலை செய்ய விடுதலைப்புலிகள் விரும்பி இருந்தார்கள் என்று அறிந்தேன். சுமியும் செல்வியும் நண்பிகள்.

"பேராசிரியர்கள் ... , வித்தியானந்தன், கைலாசபதி, ...போன்றவர்களின் பங்களிப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றும் நல்ல பேராசிரியர்கள் அமைந்தால் தமிழ் சமூகம் மேன்மை பெறும்."

இந்த முட்டாள்கள்  வழிநடத்தி தான் எங்கள் சனம் அழிந்து போய் இருக்கிறது. ஏதாவது தெரிந்த சங்கதி பற்றி நீங்கள் எழுதலாமே? 
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Jude said:

வெறுமனே பெயர்களை தெரிந்து வைத்துக் கொண்டு பொழுதுபோக்குக்கு எழுதுகிறீர்களா?

நான் மாணவனாக இருந்த காலத்தில் துணைவேந்தராக இருந்த வித்தியானந்தனிடம் சென்ற போது அவரது அறையில் சாராயம் மணக்க வெறியில் இருந்தார். பல்கலைக்கழக கட்டுமான நிதியை கட்டட ஒப்பந்த நிறுவனத்துடன் சேர்ந்து ஊழலுக்கு துணை போனவர். ஈரோஸ் துப்பாக்கி முனையில் மிரட்டி பல்கலைக்கழகத்துக்கு வரக்கூடாது என்று நிர்ப்பந்தித்தால் தான் இவரது இடம் காலியாகி துரைராஜா துணைவேந்தாரானர். 

கைலாசபதி சீன-சார்பு கொம்யுநிஸ்ட் அமைப்பில் முன்ன்னின்று உழைத்தவர்.  இவரும் இவரது அமைப்பும் சிறிமாவோ பண்டாரநாயக்கவுடன் நெருக்கமானவர்கள். இது சீன-சார்பு உறவு. இவரது மகள் சுமங்களா கைலாசபதி அமெரிக்க நடிகர் கிளின்ட் ஈஸ்ட்வூட் இடம் பிரபாகரன் செல்வியை கடத்திவிட்டதாக சொல்லி கிளின்ட் ஈஸ்ட்வூட் இடம் இருந்து பிரபாகரனுக்கு பகிரங்க கடிதம் பெற்றவர். இந்த கடிதம் வந்து ஓரிரு வாரங்களில் செல்வி கொல்லப்பட்டார். அதற்கு முதல் செல்வியை விடுதலை செய்ய விடுதலைப்புலிகள் விரும்பி இருந்தார்கள் என்று அறிந்தேன். சுமியும் செல்வியும் நண்பிகள்.

"பேராசிரியர்கள் ... , வித்தியானந்தன், கைலாசபதி, ...போன்றவர்களின் பங்களிப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றும் நல்ல பேராசிரியர்கள் அமைந்தால் தமிழ் சமூகம் மேன்மை பெறும்."

இந்த முட்டாள்கள்  வழிநடத்தி தான் எங்கள் சனம் அழிந்து போய் இருக்கிறது. ஏதாவது தெரிந்த சங்கதி பற்றி நீங்கள் எழுதலாமே? 

இவரது சகோதரி டாக்ட்டர் பவித்ரா (கொழும்பு பல்கலையில் எதோ முக்கிய பொறுப்பில் இருந்தார்) 
சிங்கள- இந்திய அரசுகள்தான் இவர்களை கையுக்குள் போட்டு பதவிகளிலும் வைத்திருக்க வேணும் 
என்பது எனது ஊகம்.
அவர்தான்  செல்வியின் விடயம் பற்றி பிரச்சராம் செய்துவர 
விடுவதுக்கு என்று வைத்திருந்த செல்வியை தட்டிவிட்ததாக நான் கேள்விபட்டேன். 

நல்ல வேளை நீங்கள் இந்த தகவலை எழுதியது ....
நான் இரண்டுமுறை சுமங்களா கைலாசபதியுடன் ஈமெயிலில் 
பேசி இருக்கிறேன்.
2014 சிட்டி கவுன்சில் தேர்தலில் வெற்றி பெற்றதுக்கும் வாழுத்துக்கள் கூறி 
ஈமெயில் அனுப்பி இருந்தேன் .... நன்றி கூறி பதிலும் வந்து இருந்தது. 

இவருக்கு ஈழ பிரச்சனை புலிகள் பற்றி தெரிந்து இருக்க வாய்ய்பு 
இல்லை என்று தவறாக கணக்கு போட்டு கொண்டு இருந்தேன்.

கடந்த வருடம் கனடாவில் இவரை பற்றி ஒருவருடன் பேசும்போதுதான் 
இவர் பவித்திராவின் சகோதரி என்பதும் தெரியவந்தது.
உலகம் இவளவு சிறிதாக இருக்கே ..

  • 2 weeks later...
On 10/3/2018 at 12:58 PM, Jude said:

வெறுமனே பெயர்களை தெரிந்து வைத்துக் கொண்டு பொழுதுபோக்குக்கு எழுதுகிறீர்களா?

உங்களைப் போல மற்றவர்களை நினைப்பது உங்கள் வாடிக்கை! உங்களைவிட மிக மிக அதிகம் தெரிந்தபடியால் எழுதுகிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, போல் said:

உங்களைவிட மிக மிக அதிகம் தெரிந்தபடியால் எழுதுகிறோம்.

உங்களுக்கு   தெரிந்தவை வெறும் பெயரர்கள் மட்டுமே என்று தான் உங்கள் எழுத்து காட்டுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

எங்கபோனாலும் இப்ப இதுதான் நடந்துக்கிட்டிருக்கு.
தப்பில்ல நல்லா ஜமாச்சுடுங்க. சுத்த தமிழனுக்கு இது தான் அடையாளம்.
என்ன, திரியின் தலைப்பையும் இடைக்கிடை பார்த்துக்கிட்டு எழுதுங்க.
எங்கேயோ  போக புறப்பட்டு எங்கேயோ வந்திட்ட எங்களுக்கு இது என்ன புதுசா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.