Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு – செரீனா வில்லியமஸ் மேலாடையின்றி பாடினார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு – செரீனா வில்லியமஸ் மேலாடையின்றி பாடினார்…

October 1, 2018

1 Min Read

 

 

 

 

மார்புக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் மேலாடையின்றி பாட்டு பாடும் காணொளி தற்போது இணையத்தில் வெளிவந்திருக்கிறது.

ஒக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாதமாக கருதப்படுகிறது. இதனையொட்டி அமெரிக்க டென்னிஸ் நட்சத்திரம் செரீனா வில்லியமஸ், மார்பகப் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பாடல் ஒன்றை பாடி அதை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.”ஐ றச் மை செல்ப்’” (I Touch Myself ) பாடலை பாடி பெண்களுக்கான மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தை அவர் மேற்கொண்டுள்ளார்.

“ஐ டச் மைசெல்ப்” ( I Touch Myself )பாடலை எழுதியது ஆஸ்திரேலியாவின் டிவின்ல்ஸ் என்பவர். அவர், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் மார்கப்புற்றுநோயால் 53 வயதில் இறந்து போனார். இப்போது இந்த பாடலையே செரீனா தனது இரு கரங்களையும் தனது மார்பில் பதித்து பாடியுள்ளார்.  “பெண்கள் தங்கள் மார்பகங்களை கையால் அவ்வப்போது சோதனை செய்து சோதனை செய்தாலே ஏராளமானவர்களின் உயிரை காக்க முடியும்” என குறிப்பிட்டுள்ள செரீனா வில்லியமஸ், மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இப்படி செய்தேன். வரும்முன் காப்பதே நல்லது என தெரிவித்துள்ளார்.

செரீனாவின் இந்த முயற்சியை பலரும் பாராட்டி வருகிறார்கள், அவர்களுடைய ரசிகர்கள் மற்றும் பெண்கள் என அனைத்து தரப்பினரும் வாழ்த்து செய்தியை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். இந்த காணொளியை செரீனா வில்லியம்ஸ் பதிவிட்ட 10 மணி நேரத்தில் 13 லட்சம் பேர் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, கிருபன் said:

இந்த காணொளியை செரீனா வில்லியம்ஸ் பதிவிட்ட 10 மணி நேரத்தில் 13 லட்சம் பேர் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்தக் காணொளியை... யாழ். களத்திலும், டக்கென்று....  நான்கு பேர் பார்த்து விட்டார்கள்.:grin:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
34 minutes ago, தமிழ் சிறி said:

இந்தக் காணொளியை... யாழ். களத்திலும், டக்கென்று....  நான்கு பேர் பார்த்து விட்டார்கள்.:grin:

உள்ளேன் ஐயா...:cool:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

இந்தக் காணொளியை... யாழ். களத்திலும், டக்கென்று....  நான்கு பேர் பார்த்து விட்டார்கள்.:grin:

இதில் என்ன தவறு இருக்கு.....ஒரு நல்ல சேவையின் நிமித்தம் இந்த சேவையினை செய்கிறார். அதுவும் எவ்வளவு தன்னடக்கத்துடன் கைகளைக் கட்டிக்கொண்டு....!   tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்.... பாராட்டப் பட வேண்டிய முன்மாதிரி!

பாலியல் சமபந்தமான நோய்கள் பற்றிய விழிப்புணர்வு நாள் எப்போது வரும் என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன்!

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, புங்கையூரன் said:

ம்ம்ம்.... பாராட்டப் பட வேண்டிய முன்மாதிரி!

பாலியல் சமபந்தமான நோய்கள் பற்றிய விழிப்புணர்வு நாள் எப்போது வரும் என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன்!

புங்கையூரானுக்கு  ஆசையை... பாருங்கள்.  அப்பவும்... பொத்திக்  கொண்டுதான் பாடுவார்கள். :grin:

  • கருத்துக்கள உறவுகள்

துரதிஷ்ட்டவசமாக  இதன்  பின்னாலும் பாரிய வியாபாரம்தான் இருக்கிறது 
பெண்களை ஏய்த்து பிழைக்கும் ஒரு கும்பல்தான் இதை பின் இருந்து 
நடத்துகிறது ...

மார்பக புற்றுநோக்கு யாரும் மருந்து கண்டு பிடித்தால் 
இவர்கள் காசை கொடுத்து அதை தடுப்பார்கள் அல்லது அவர்களை 
கொன்று விடுவார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Maruthankerny said:

மார்பக புற்றுநோக்கு யாரும் மருந்து கண்டு பிடித்தால் 
இவர்கள் காசை கொடுத்து அதை தடுப்பார்கள் அல்லது அவர்களை 
கொன்று விடுவார்கள். 

புதிய மருந்துகள் கண்டு பிடிப்பவர்களை... ஏன் தடுக்கின்றார்கள், அல்லது கொல்கின்றார்கள்?
இப்படியானவர்கள் உலகித்திற்கே அச்சுறுத்தலான செயலை செய்ப்பவர்கள் என்பதால்....
அந்த நாட்டு அரசோ... உலக சுகாதார நிறுவனமோ  நடவடிக்கை எடுக்க மாட்டாதா?   

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செரீனா மேலாடை இல்லாமல் பாடியதால் பல யாழ் கள வாசகர்களுக்கும் மார்பகப் புற்றுநோய் சம்பந்தமாக “விழிப்புணர்வு” வந்திருக்கும்.?

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, கிருபன் said:

செரீனா மேலாடை இல்லாமல் பாடியதால் பல யாழ் கள வாசகர்களுக்கும் மார்பகப் புற்றுநோய்ம்பந்தமாக “விழிப்புணர்வு” வந்திருக்கும்.?

விழி அகண்டிருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

புதிய மருந்துகள் கண்டு பிடிப்பவர்களை... ஏன் தடுக்கின்றார்கள், அல்லது கொல்கின்றார்கள்?
இப்படியானவர்கள் உலகித்திற்கே அச்சுறுத்தலான செயலை செய்ப்பவர்கள் என்பதால்....
அந்த நாட்டு அரசோ... உலக சுகாதார நிறுவனமோ  நடவடிக்கை எடுக்க மாட்டாதா?   

Sgk-logo.png

உலகு எங்கும் மார்பு புற்றுநோய் தடுப்புக்காக என்று 
நன்கொடையாக பல பில்லியன் டொலர்களை சேகரிக்கும் 
இந்த நிறுவனத்தின் ... தலைவர் ....செயலாளர் .... பொருளாளர் 
என்று மேல் மட்டம் எல்லாமே ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் 

இவர்களுக்கு சம்பளம் பல மில்லியன் டொலர்கள் ஒரு மாதத்துக்கு 
இவர்களுக்கு தனியார் விமானம் .... யஃஹ்ட் கப்பல்கள் கூட உண்டு 

அமெரிக்காவை பொறுத்தவரை மார்பு புற்றுநோயால் ஒரு உறவினர் 
இறந்து இருப்பார் அல்லது பாதிக்க பட்டு இருப்பார் ... அதை நேரில் பார்த்த 
உறவினர்கள் இப்படி வேறு யாருக்கும் நடக்க கூடத்து என்று ..... நன்கொடையாக 
இவர்களுக்கு பணம் கொடுப்பார்கள் இங்கு கொடுக்காதவர்கள் மிக மிக குறைவு 

வியாபார யுத்தியை பாவித்து.... இப்படி செரீனாவை ஆடை களைவது 
மாரத்தான் ஓட்டம் .... அது இது என்று இவர்கள் பணத்தை சேகரித்துக்கொண்டே 
இருப்பர்கள் .....
ஆய்வுக்காக என்று பல கோடிகளை செலவளித்தாக கணக்கு காட்டும்  இவர்கள் 
எங்கே என்ன ஆய்வு செய்தார்கள் என்று கூறுவதில்லை.
மிகவும் சிறிய மருத்துவ நிறுவனங்களே இப்போதைய பல கான்செர் 
மருந்துகளை கண்டுபிடிக்கிறார்கள் முற்றாக மாற்ற முடியாது போனாலும் 
இப்போது பாவனையில் இருக்கும் பல  மருந்துகள் சிறிய நிறுவனங்களால் 
கண்டுபிடிக்க பட்டதுதான்.

இவர்கள் அரசியல் வாதிகளையும் காசுக்கு வழித்து வைத்திருக்கிறார்கள் 
மற்றது சனத்துக்கு லூசு .... கொடுப்பது சரி அவர்கள் என்ன செய்கிறார்கள் 
என்றாவது ஒரு கேள்வியை கேட்கலாமே? எமது சனம் கோவிலில் உண்டியலை 
நிரப்புவதுபோல.

மார்பு புற்றுநோயால் லட்ஷம் பேர் இறந்து இருக்கலாம் 
கோடியை புரட்டி உல்லாச வாழ்க்கை வாழ்ந்தவர்கள் இவர்கள்தான் 
யாரவது மருந்து கண்டு பிடித்தால் விடுவார்களா ??  

  • கருத்துக்கள உறவுகள்

மருதர்,

பத்து ருபா தானம் கொடுத்தால் ஏமு ருபா அட்மின் செலவுக்கு என கணக்கு காடடுகினம் தர்மஸ்தாபனங்கள்.

மீதி மூன்று ருபாவும், ‘அங்கே பொசியுமாம்’ என்பதாக தானமளிக்கப்பட்ட நோக்கத்திற்கு நொந்து நூடுல்ஸ் ஆகி செல்லும்.

On 10/2/2018 at 8:52 AM, புங்கையூரன் said:

ம்ம்ம்.... பாராட்டப் பட வேண்டிய முன்மாதிரி!

பாலியல் சமபந்தமான நோய்கள் பற்றிய விழிப்புணர்வு நாள் எப்போது வரும் என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன்!

அங்கின ஏதும் பிரச்சணையோ, புங்கையர்? ?

  • கருத்துக்கள உறவுகள்
On 10/2/2018 at 8:07 AM, suvy said:

இதில் என்ன தவறு இருக்கு.....ஒரு நல்ல சேவையின் நிமித்தம் இந்த சேவையினை செய்கிறார். அதுவும் எவ்வளவு தன்னடக்கத்துடன் கைகளைக் கட்டிக்கொண்டு....!   tw_blush:

பெண்களை... ஆ....... எண்டு நிணைக்கும் ஆக்கள் யாழில் இருக்கினம் எண்டு, தாரும் வராமல் இருக்கோணும்...?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.