Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய எல்லைக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த படகு-12 சிங்களர்கள் கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய எல்லைக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த படகு-12 சிங்களர்கள் கைது

ஏப்ரல் 12, 2007

தூத்துக்குடி: இந்திய கடல் எல்லைப் பகுதிக்குள் நுழைந்த இலங்கையை சேர்ந்த 12 பேரை கடலோர காவல்படையினர் கைது செய்துள்ளனர்.

நேற்றிரவு கடலோர காவல்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் போது, தூத்துக்குடிக்கு கிழக்கே மன்னார் வளைகுடா பகுதியில் 12 பேர் கொண்ட மரியா என்ற படகு வந்தது.

அதை சந்தேகத்தின் பேரில் வழி மறித்து சோதனையிட்டபோது அதில் ஏராளமான ஆயுதங்கள் இருந்தன. அதிலிருந்த அனைவரும் இலங்கையை சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது.

இவர்களை கைது செய்து தூத்துக்குடி போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இவர்கள் கடல் கொள்ளையர்களா அல்லது தமிழக மீனவர் மீது துப்பாக்கி சூடு நடத்த வந்தவர்களா என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

சில நாட்களுக்கு முன் 5 இந்திய மீனவர்களை துப்பாக்கியால் சுட வந்தவர்கள் மரியா என எழுதியிருந்ததாக மீனவர்கள் தெரிவித்தனர். எனவே இந்த படகில் வந்தவர்கள் தான் அவர்களை சுட்டு கொன்றிருக்க கூடும் என போலீஸார் சந்தேகப்படுகின்றனர்.

http://thatstamil.oneindia.in/news/2007/04/12/arrest.html

தமிழ்நாடு கடற்றொழிலாளர்களைச் சுட்டுக் கொன்ற சிங்களவர்கள் கைது - விடுதலைப் புலிகளுக்கு எதிரான பிரசாரம் முறியடிப்பு.

தமிழ்நாடு கடற்றொழிலாளர்களை அண்மைக் காலமாக கடலில் சுட்டுப் படுகெலை செய்துவந்த 12 சிங்களவர்களை இந்தியக் கடற் படையினர் நேற்று மதியம் கைது செய்துள்ளனர்.

இந்தியக் கடல் எல்லைக்குள் கைது செய்யப்பட்ட இந்த சிங்களவர்கள் பயணித்த படகில் இருந்து பல ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

தூதுத்துக்குடி துறைமுகத்திற்கு நேற்றிரவு கொண்டு செல்லப்பட்ட சிங்களவர்களை, கியூ பிரிவு காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கன்னியாகுமரியைச் சேர்ந்த 5 கடற்றொழிலாளர்களை இதே படகில் சென்றவர்களே சுட்டுக் கொன்றதாக ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.

இதனால் விடுதலைப் புலிகளே தமிழ்நாடு கடற்றொழிலாளர்களைச் சுட்டுக் கொல்வதாக இந்திய, சிறீலங்கா அரச அதிகாரிகள் மேற்கொண்டுவந்த பிரசாரம் முறியடிக்கப்பட்டு, உண்மை வெளிவந்துள்ளது.

-Pathivu-

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் உண்மை வெளிப்பட்டு விட்டது.

நல்ல செய்தி உண்மை இனியாவது வெளிவரும்

ஆமாம் உண்மை வெளிப்பட்டு விட்டது.

நல்ல செய்தி உண்மை இனியாவது வெளிவரும்

எங்கே உண்மை வெளிவரும் இந்திய போலீசுக்கு காசு கீசு குடுத்து ஏதாச்சும் பண்ணீடுவாங்கள் :rolleyes::lol:

கைதானவர்கள் பற்றிய விடயங்கள் யாவும் சாதாரண ஜனங்களுக்கும் தெரியும்படியாக அரசு மட்டத்தில் என்ன நடக்கிறது என்பதை நிச்சயப்படுத்திக் கொள்வதற்கு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக கைதானவர்களுக்கெதிராக வழக்குத் தாக்கல் செய்யவேண்டும். இதனால் கைதானவர்கள் பற்றிய சகல விபரங்களையும் வெளிகொண்டு வருவதுடன் அவை பொது ஜனங்களுக்கும் எட்டக்கூடியதாக பத்திரிகைகள் இவ்விடயத்தில் ஈடுபாடு காட்டும்.

Edited by Norwegian

இப்பவே எல்லார்க்கும் தெரியும். :lol:

<<<>>>இந்தியக் கடல் எல்லைக்குள் கைது செய்யப்பட்ட இந்த சிங்களவர்கள் பயணித்த படகில் இருந்து பல ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.<<<>>>

அனைத்தும் இலங்கை இராணுவம் பயன்படுத்தும் ஆயுதங்கள் :angry: :angry:

http://www.webulagam.com/news/regional/070...070412001_1.htm

இனிமேலாவது இந்திய அரசாங்கம் திருந்துமா?????? :lol:

பிடித்தவர்களில் பாதி பேரை கடலில் வைத்தே சுட்டு தள்ளியிருக்க வேண்டும், மீதி பேரை கைது செய்திருக்க வேன்டும்

பிடித்தவர்களில் பாதி பேரை கடலில் வைத்தே சுட்டு தள்ளியிருக்க வேண்டும், மீதி பேரை கைது செய்திருக்க வேன்டும்
:lol::):lol:

ம்ம்ம்ம்,

அவன்கள கொல்வதைவிட. மேல ஐ.நா சபையிலயும் ஐரொப்பிய யூனியன்லையும் நிப்பாட்னா 150 க்கும் மேற்பட்ட அப்பாவி மீனவர்களை கொண்ற கொலைகாரன்(சிரிலங்க) யார் என்று விளங்கும். :lol:

Edited by வெங்கட்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மை வெளிவந்து விட்டது.

இந்தச் சிங்களக் கயவாளிக் கூட்டம்தான் எங்கள் தமிழகச் சகோதரர்களைக் கொலை செய்தது.

அது மட்டமல்ல இதற்கு விடுதலைப் புலிகள்தான் காரணம் என அபாண்டமாக பழி கூறிய இந்திய கடற்படைத் தளபதி தார்மீகப் பொறுப்பேற்று புலிகளிடமும் தமிழர்களிடமும் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்கவேண்டும்.

Edited by இளங்கோ

:lol::):lol:

ம்ம்ம்ம்,

அவன்கள கொல்வதைவிட. மேல ஐ.நா சபையிலயும் ஐரொப்பிய யூனியன்லையும் நிப்பாட்னா 150 க்கும் மேற்பட்ட அப்பாவி மீனவர்களை கொண்ற கொலைகாரன்(சிரிலங்க) யார் என்று விளங்கும். :lol:

இல்லை இல்லை பாதிப்பேரை கொண்று பழி தீர்த்திருக்க வேண்டும், அப்படி செய்தால்தான் இனிமேலும் வாலாட்டமாட்டார்கள், அதன் பின்னர் பாதி பேரை யாரிடமாவது ஒப்படைத்திருக்கலாம்

இவர்கள் சிங்கள கடற்படையாகத்தான் இருக்கும் சிறீலங்காவைக்காப்பாற்ற வெறுமனே சிங்களவர்கள் என்று சொல்லியிருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

குமரி மீனவர்களைச் சுட்டுக் கொன்ற சிங்களவர்கள் கைது!

தூத்துக்குடி, ஏப். 12- தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொன்ற 12 சிங்களவர்களை இந்தியக் கடலோரக் காவல் படையினர் நடுக்கடலில் நேற்று சுற்றி வளைத்துக் கைது செய்தனர். குமரி மாவட்டம் நித்திர விளை அருகே சின்னத்துறை பகுதியைச் சேர்ந்த அய்ந்து மீனவர்கள் சில நாள்களுக்கு முன்னர் நடுக் கடலில் மர்ம கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டனர். மர்ம கும்பல் வந்த படகில் மரியா என்று எழுதப் பட்டு இருந்ததாக மீனவர்கள் தெரிவித்தனர்.

இச்சம்பம் தமிழகம் முழுவதிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தமிழகக் கடலோரப் பகுதியில் இந்திய கடற்படையினரின் ரோந்து தீவிரப்படுத்தப்பட்டது.

தூத்துக்குடி கடலோரக் காவல்படையின் ரோந்துக் கப்பல் நாயகிதேவி மூலம் கேப்டன் எ°.எம். சிங் தலை மையில் நேற்று தீவிர கண் காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர். பிற்பகல் 2 மணி அளவில் கப்பலின் ரேடார் கருவியில், கன்னியாகுமரியிலிருந்து தென் கிழக்கே 40 கி.மீ. தொலைவில் படகு ஒன்று நிற்பது தெரிந்தது. உடனடியாக அந்தப்படகை நோக்கி ரோந்துக் கப்பல் விரைந்தது.

மரியா என்று பெயர் எழுதப்பட்டிருந்த அப்படகு தப்பிச் செல்ல முயன்றது. துரத்திச் சென்ற கடலோராக் காவல் படை கப்பல், துப்பாக்கி முனையில் படகை மறித்தது. அந்தப் படகில் 12 சிங்களவர் கள் இருந்தனர். கடற்படை ஆயுதங்களும் இருந்தன.

இந்தியக் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அவர் களைக் கடலோராக் காவல் படையினர் கைது செய்தனர். இவர்கள்தான் குமரி மீனவர் களை சுட்டுக் கொன்றிருப்பர் என்று கருதப்படுகிறது.

சிங்களவர்கள் படகுடன் இணைந்திருந்த 2 வள்ளங்களும், 12 சிங்களவர்களும் அந்தப் படகுடன் தூத்துக்குடி துறைமுகத்துக்கு நேற்று நள்ளிரவு கொண்டு வரப்பட்டனர். விசாரணைக்காக தமிழக ``கியூ’’ பிரிவு காவல்துறையிடம் அவர்கள் ஒப்படைக்கப்படுகின்றனர்.

-விடுதலை

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய கடற்படை தளபதி தமிழக தமிழரிடம் மன்னிப்பு கேட்பதா........????

சிங்கள காடையரை கைது செய்ததற்குதான் சிறிலங்காவிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு

அவர்களை ராஜமரியாதையுடன் கொழும்பில் கொண்டு போய்விடுவார்கள். இரவில் இருளுக்குள் கடல் எல்லை சரியாக தெரியாததால் தான் அவ்வாறு நடந்ததாக இரு தரப்பும் இந்நேரம் அறிக்கை தயாராக்கியிருப்பார்கள் இனி பத்திரிகையாளரை கூட்டி வெளியிடுவதுதான் பாக்கி!

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்குள்ள ஏஅதா சூது இருக்குது. தமிழ் மீனவர்களைச் சுட்டவங்கள் இந்தியக் கடற்படை வந்து பிடிக்கும் வரைக்கும் அஙகேயே சுத்திச் சுத்தி நிண்டிருக்கவா போறாங்கள். இது இலங்கைக் கடற்படையைக் குற்றச்சாட்டில இருந்து காப்பாற்றுறதுக்காக செய்யப்படுற சதிவேலை. இதுக்கு யார் யார் உடந்தையோ தெரியாது. கூட்டுரோந்துக்கு ஆதரவளிக்கிற ரெண்டு பக்கத்துச் சதிகாரர்களும் இதுக்குக் காரணமாயிருக்கலாம்.

உண்மைகள் உறங்குவதில்லை..

இந்த உண்மை எல்லா இந்திய ஊடகங்கள் மட்டுமல்ல

சர்வதேச உடங்களுக்கும் உடனடியாக தெறியப்படுத்தி இலங்கையரசின் நரித்தந்திரத்தையும்

புலிகளின் மீது குற்றம் சாட்டி ஒரே கல்லில் பல கனிகளை விழுத்தும் வித்தைகளை உலகிற்கு கொண்டு போனால் தான் எதிர் வரும் காலங்களில் இப்படியான சம்பவங்கள் நடக்காது.

தமிழ் நாட்டு மக்களை கொல்லுதல் மூலம்

* புலிகளை குற்றம் சுமத்தி புலிகளில்(ஈழத்தமிழர்களில்) வெறுப்பு உண்டாக்கல்

* இந்திய கடற்படையுடன் கூட்டு ரோந்து செய்யும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தல்

* தமிழர்களை அழித்தோம் எனும் சிங்களவெறிக்கு தீன் போடல்

இப்பவாது ஒரு ஒழுங்காக இந்தியகடற்படை நல்ல ஒரு நடவடிக்கை எடுத்து உண்மையை வெளிக்கொண்டு வந்துள்ளது. மத்திய அமைச்சர் அந்தோனிக்கு நல்ல அடி.... இனி என்ன சொல்லப்போகிறார்? நட்பு நாடு?

இந்திய கடற்படை தளபதி தமிழக தமிழரிடம் மன்னிப்பு கேட்பதா........????

சிங்கள காடையரை கைது செய்ததற்குதான் சிறிலங்காவிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு

அவர்களை ராஜமரியாதையுடன் கொழும்பில் கொண்டு போய்விடுவார்கள். இரவில் இருளுக்குள் கடல் எல்லை சரியாக தெரியாததால் தான் அவ்வாறு நடந்ததாக இரு தரப்பும் இந்நேரம் அறிக்கை தயாராக்கியிருப்பார்கள் இனி பத்திரிகையாளரை கூட்டி வெளியிடுவதுதான் பாக்கி!

:angry: :angry:

இப்பவாது ஒரு ஒழுங்காக இந்தியகடற்படை நல்ல ஒரு நடவடிக்கை எடுத்து உண்மையை வெளிக்கொண்டு வந்துள்ளது. மத்திய அமைச்சர் அந்தோனிக்கு நல்ல அடி.... இனி என்ன சொல்லப்போகிறார்? நட்பு நாடு?

அண்ணா என்னண்ணா உலகம் தெரியாம பேசுரிங்க.

அந்தோணியின் அறிக்கை.(ஒருவேலை இப்படிகூட சொல்லலாம்)

"இந்த 12 பேரும் புலிகளுக்கு பயந்தே தர்காப்பு ஆயுதங்களுடன் மின்பிடிக்க வந்துள்ளனர். அவர்களுக்கும் இந்தியாவிர்க்கும் எந்த பிரச்சினையும் இல்லை. என்வே அவர்கள் 12 பேரும் பத்திரமாக திருப்பி அனுப்ப படுவார்கள்."

மரியா என்ற பெயரிடப்பட்ட படகில் சிங்களவர் கைது செய்யப்பட்டதின் பின்னணியில் பெரிய அரசில் சூழ்ச்சி இருப்பதாகவே தெரிகிறது.

எமது தமிழக உறவுகள் தான் இப்போது தமது கட்சிகளுக்கும் அரசுக்கும் அழுத்தங்கள் கொடுத்து இப்பிரச்சினைக்கு தகுந்த முடிவை எட்ட எமக்கு உதவவேண்டும். பின்வரும் விடயங்கள் கவனத்தில் எடுக்கப்படவேண்டியன:

(1). மனித வேட்டைக்குச் செல்லும் சிங்களவர் ஏன் ஒரு பெயரிடப்பட்ட படகில் செல்லவேண்டும்?

(2). அப்படகு தேடுதலுக்குள்ளானது தெரிந்திருந்தும் இரண்டாவது முறையும் ஏன் அதே படகைப் பயன்படுத்தினர்?

(3). சிறிலங்கா கடற்படை அல்லது வேறு மீன்பிடி படகுகளின் கண்களில் படாமல் எப்படி மரியா படகு கடற்பிரதேசத்துள் நுழைய முடிந்தது?

(4). படகில் இருந்தவர்கள் சிங்களவர்களென்றால் அவர்கள் சிறிலங்கா அரச படையைச் சேர்ந்தவர்களா?

(5). பாதிக்கப்பட்ட மற்றும் கொலை செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் கைதான சிங்களவர்களுக் எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வார்களா?

தமிழ் நாட்டு அரசியல் கட்சிகள் மௌனம் சாதிக்காமல் உடனடி நடவடிக்கையில் இறங்கி இவ்விடயத்திற்கு முன்னுரிமை வழங்கி தங்களால் ஈழத் தமிழருக்கு உதவாது போனாலும் பாதிக்கப்பட்ட தமிழக உறவுகளுக்காவது நீதி பெற்றுக்கொடுக்க விழிப்புணர்வுடன் நடந்து கொள்வார்கள் என நம்புகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

பிடிபட்டிருக்கிற சிங்களவர்கள் ஈழத்தமிழர்களால் தமிழ்நாட்டு மீனவர்களைக் கொல்லுமாறு ஏவிவிடப்பட்டவர்கள் சிங்களக் கடற்படைக்கும் அவர்களுக்கும் பிடிபட்டவர்களுக்கும் சம்பந்தமில்லை எண்டொரு உடான்சை அந்தோனியும் இந்திய புலனாய்வுத்துறையும் விட்டாலும் யாரும் ஆச்சரியப்படாதீர்கள். அவர்கள் உண்மையை வெளிக்கொணருபவர்களாயிருந்தா

:P பிடிபட்டிருக்கிற சிங்களவர்கள் எல்லாம் "சிங்கள புலிகள்" என்று பச்சை குத்துதிடுவாங்களோ ????

பிடிபட்டிருக்கிற சிங்களவர்கள் ஈழத்தமிழர்களால் தமிழ்நாட்டு மீனவர்களைக் கொல்லுமாறு ஏவிவிடப்பட்டவர்கள் சிங்களக் கடற்படைக்கும் அவர்களுக்கும் பிடிபட்டவர்களுக்கும் சம்பந்தமில்லை எண்டொரு உடான்சை அந்தோனியும் இந்திய புலனாய்வுத்துறையும் விட்டாலும் யாரும் ஆச்சரியப்படாதீர்கள். அவர்கள் உண்மையை வெளிக்கொணருபவர்களாயிருந்தா
  • கருத்துக்கள உறவுகள்

சன் தொலைக்காட்சி தூத்துக்குடி பொலீஸை மேற்கோள் காட்டி வெளியிட்ட செய்தியில் கைது செய்யப்பட்டவர்களின் 6 பேர் தமிழக மீனவர்கள் என்றும் மிகுதி 6 பேர் இலங்கைத் தமிழ் மீனவர்கள் என்றும் தெரிவித்ததுடன் மீனவர்கள் தவறுதலாகவே இந்தியக் கடல் எல்லைக்குள் நுழைந்ததாகவும் தெரிவித்தது..!

இதில் எது உல்டா எது உண்மை..????????! :lol::):lol:

சன் தொலைக்காட்சி தூத்துக்குடி பொலீஸை மேற்கோள் காட்டி வெளியிட்ட செய்தியில் கைது செய்யப்பட்டவர்களின் 6 பேர் தமிழக மீனவர்கள் என்றும் மிகுதி 6 பேர் இலங்கைத் தமிழ் மீனவர்கள் என்றும் தெரிவித்ததுடன் மீனவர்கள் தவறுதலாகவே இந்தியக் கடல் எல்லைக்குள் நுழைந்ததாகவும் தெரிவித்தது..!

தமிழக மீனவர்கள் இந்தியக் கடல் எல்லைக்குள் நுழைந்தது தவறா? :P :P

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளி 13-04-2007 00:57 மணி தமிழீழம் [தாயகன்]

இந்திய கடற்படைத் தளபதி விடுதலைப் புலிகளிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் - பழ. நெடுமாறன்

இந்திய கடற்படைத் தளபதி விடுதலைப் புலிகளிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாடு கடற்றொழிலாளர்களை விடுதலைப் புலிகளே சுட்டுக்கொன்றுவிட்டு, சிறீலங்கா கடற்படை மீது பழி சுமத்தி வருவதாக, இந்திய கடற்படைத் தளபதி அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், தமிழ்நாடு கடற்றொழிலாளர்களைச் சுட்டுக் கொன்ற 12 சிங்களவர்களை இந்திய கடலோரக் கடற் படையினர் கைது செய்திருப்பதன் மூலம் உண்மை தெரிய வந்திருப்பதால், பழ. நெடுமாறன் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

அத்துடன், கைது செய்யப்பட்டுள்ள சிங்களவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர வேண்டும் எனவும், சுட்டுக் கொல்லப்பட்ட 5 கன்னியாகுமரி கடற்றொழிலாளர்களுக்கும் சிறீலங்கா அரசு நட்டஈடு வழங்க வேண்டும் என்றும் பழ. நெடுமாறன் கோரிக்கை விடுத்துள்ளார்.

pathivu

பீ பீ சி தமிழோசை இச்செய்தியை சொல்லவில்லை கவனித்தீர்களா?

ஏதோ சதி நடக்கிறது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.