Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளை அழித்த எமக்கு ரணிலை அனுப்புவது பெரிய விடயமல்ல! மகிந்த

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
விடுதலைப் புலிகளை அழித்த எமக்கு ரணிலை ஆட்சியிலிருந்து வீட்டிற்கு அனுப்புவது சவாலான விடயம் கிடையாது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“நாங்கள் தோல்வியடையவில்லை. அதேபோல் புறமுதுகு காட்டி ஓடவும் இல்லை. ஆனால் எங்களை பார்த்து அரசியல் சூழ்ச்சிகாரர்கள் என்று ஐக்கிய தேசியக் கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

நாங்கள் அரசியல் சூழ்ச்சி எதனையும் செய்யவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியினரே நீதிமன்றங்களை பயன்படுத்தி அரசியல் சூழ்ச்சியைத் செய்து எம்மை வெளியேற்றினார்கள்.

நாங்கள் நீதிமன்றில் தீர்ப்பிற்கு தலைவணங்குகின்றோம். நாட்டு மக்களின் நலன் கருதியே பிரதமர் பதவியை இராஜினாமா செய்தேன். நான் ஒருபோதும் பதவிக்கு ஆசைப்பட்டவன் கிடையாது.

அதனை நான் நிரூபித்து காட்டியுள்ளேன். நாடாளுமன்ற தேர்தலை இப்போது நடத்தினால் நாங்களே நிச்சயம் வெற்றிபெறுவோம். இதன் காரணமாகவே ஐக்கிய தேசியக் கட்சியினர் தேர்தலுக்கு அச்சமடைகின்றனர்.

விடுதலைப் புலிகளைக் கூண்டோடு அழித்து, பயங்கரவாதத்துக்கு எதிரான போரை முடிவுக்குக் கொண்டு வந்த எமக்கு ஊழல், மோசடிகளை மறைத்து ஆட்சி நடத்தும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை வீட்டுக்கு அனுப்புவது கடினமான வேலை அல்ல.” என அவர் கூறியுள்ளார்.

http://www.battinews.com/2019/01/blog-post_1.html

 
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

srilanka-army-249x191.jpg

இப்படியான மிருகங்களை மகிந்த எப்படி அழைப்பார்??

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, nunavilan said:

srilanka-army-249x191.jpg

இப்படியான மிருகங்களை மகிந்த எப்படி அழைப்பார்??

பசு என்று அழைப்பார்...

  • கருத்துக்கள உறவுகள்

இவர் இப்படியே வசனம் பேசிக்கிட்டு இருக்க வேண்டியான்.

புலிகளை அழிக்க துணைக்கு வந்த மேற்குலகமும்.. ஹிந்தியாவும் ரணிலை அழிக்க வராதுங்கோ. சீனா மட்டும் தான் கூட வரும். வசதி எப்படி..??! 

யாரோ நெருப்பு மூட்ட அதில் குளிர்காய்ந்தது போல் நடந்தது புலி அழிப்பு. உந்தக் குளிர் காய்ந்தல் எல்லா நேரத்திலும் அமையாது பாருங்கோ.. மகிந்தர். 🙁

4 hours ago, nedukkalapoovan said:

இவர் இப்படியே வசனம் பேசிக்கிட்டு இருக்க வேண்டியான்.

புலிகளை அழிக்க துணைக்கு வந்த மேற்குலகமும்.. ஹிந்தியாவும் ரணிலை அழிக்க வராதுங்கோ. சீனா மட்டும் தான் கூட வரும். வசதி எப்படி..??! 

யாரோ நெருப்பு மூட்ட அதில் குளிர்காய்ந்தது போல் நடந்தது புலி அழிப்பு. உந்தக் குளிர் காய்ந்தல் எல்லா நேரத்திலும் அமையாது பாருங்கோ.. மகிந்தர். 🙁

சீனாவும் வராது , சீனாகாரன் இந்தியாவையே தனது காலடியில் மண்டியிட வைத்து விட்டான், அவனுக்கு இனிமேல் மஹிந்தவும் தேவையில்லை ரணிலும் தேவையில்லை. முழு இந்து சமுத்த்திரமும் அவன் கட்டுப்பாட்டில். மோடி வந்ததில் இருந்து சீனாவும் இந்தியாவும்  நெருங்க ஆரம்பித்து விட்டனர், மஹிந்த தான் சீனா தனது நண்பன் என்று நம்பி ஏமாந்து போனார்.

சிங்களவனுக்கும் மஹிந்த்ஹவுக்கும் இருக்கும் ஒர் நிரந்தர நண்பன் தி.மு.க மட்டுமே, அதுவும் இப்ப ஸ்டாலினின் கையில் சிக்கி வெத்து வேட்டா போய் விட்டது.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 1/1/2019 at 1:12 PM, colomban said:

விடுதலைப் புலிகளைக் கூண்டோடு அழித்து, பயங்கரவாதத்துக்கு எதிரான போரை முடிவுக்குக் கொண்டு வந்த எமக்கு

ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா....
ஆசையெனும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.