Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு, கிழக்கு இணைப்பு குறித்து பேச சுமந்திரன் உள்ளிட்ட தமிழ் கூட்டமைப்பு தலைவர்களுக்கு எந்த அருகதையும் இல்லை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

FB_IMG_1547174834691.jpg

சு. கவின் காரைதீவு அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி ஆவேசம்

 வடக்கு, கிழக்கு இணைப்பு குறித்து பேசுகின்ற அருகதையை சுமந்திரன் உள்ளிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் அனைவரும் இழந்து நிற்கின்றனர் என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் காரைதீவு பிரதேச அமைப்பாளரும், காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் பிரதி தவிசாளருமான வீரகத்தி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

இவரின் காரைதீவு இல்லத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து அரசியல் நடப்புகள் தொடர்பாக பேசியபோதே இவர் இவ்வாறு தெரிவித்தார்.

இவர் இங்கு தெரிவித்தவை வருமாறு:-

தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை மாற்றான் தாய் மனப்பான்மையுடனேயே கிழக்கு மாகாணத்தை எப்போதும் அணுகி வருகின்றது. கிழக்கு மாகாணத்தில் வாழ்கின்ற தமிழ் மக்கள் குறித்து இவர்கள் கிஞ்சித்தும் சிந்திப்பவர்களாக இல்லை. சம்பந்தன் ஐயாவின் இருப்பிடமாக திருகோணமலை இருப்பினும்கூட அவரின் இருதயத்தில் வடக்குக்கு மாத்திரம் இடம் இருக்கின்றது என்பதை அவருடைய செயற்பாடுகள், செயலின்மைகள் ஆகியன மூலமாக மிக நீண்ட காலமாகவே அவதானித்து வந்திருக்க முடிகின்றது. தேர்தல் காலங்களில் மாத்திரம் கிழக்கு மாகாணத்துக்கு வந்து கிழக்கு மாகாண தமிழ் மக்களின் வாக்குகளை பெற்ற பிற்பாடு இம்மக்களை கறிவேப்பிலைகளாக ஒதுக்கி தள்ளுகின்ற நடைமுறையைதான் இவர்களின் அரசியல் வழிமுறை கொண்டிருக்கின்றது. இதுவே ஆளுனர்கள் நியமனம் சம்பந்தப்பட்ட விடயத்திலும் நடந்தேறி உள்ளது.

வட மாகாண ஆளுனர் நியமனம் தொடர்பாக மாத்திரமே தமிழ் தேசிய கூட்டமைப்பு அக்கறை செலுத்தி உள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலையீடு காரணமாகவும்தான் வட மாகாண ஆளுனரை ஜனாதிபதி நியமிப்பதில் தாமதம் நேர்ந்து உள்ளது. இது தொடர்பாக சுமந்திரன் எம். பி போன்றவர்களின் கருத்துகள் பத்திரிகைகளில் கொட்டை எழுத்துகளில் வெளியாகி உள்ளன. ஆனால்  கிழக்கு மாகாண ஆளுனர் நியமனம் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைகள் அழுத்தம் கொடுத்ததாக தெரியவே இல்லை. இந்த இரட்டை வேடத்தை கிழக்கு மாகாணத்தில் வாழ்கின்ற ஒட்டுமொத்த தமிழ் மக்கள் சார்பாகவும் நான் வன்மையாக கண்டிக்கின்றேன். ஆகவேதான் வடக்கு, கிழக்கு இணைப்பு குறித்து பேசுகின்ற அருகதை சுமந்திரன் உள்ளிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் எவருக்கும் கிடையாது என்று அடித்து கூறுகின்றேன்.

எது எப்படி இருந்தாலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆளுனர் பதவிகளுக்கு மிக பொருத்தமானவர்களையே அடையாளம் கண்டு நியமித்து உள்ளார் என்பதில் எந்த மாற்றமும் கிடையாது. அந்த வகையில் கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுனராக நியமனம் பெற்று உள்ள முன்னாள் அமைச்சர் ஹிஸ்புல்லாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கின்றேன். கிழக்கு மாகாணத்தில் வாழ்கின்ற மூவின மக்களுக்குமான ஜனாதிபதியின் நேரடியான பிரதிநிதியாக ஆளுனர் ஹிஸ்புல்லா செயற்படுவார் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. அவர் எல்லா விடயங்களிலும் இன சமத்துவத்தை பேணி நடக்க வேண்டும் என்பது கிழக்கு மாகாண மக்களின் எதிர்பார்ப்பு ஆகும்.
Tharmi

http://www.aljazeeralanka.com/2019/01/blog-post_11.html

  • கருத்துக்கள உறவுகள்

இவர் எப்ப இஸ்லாமியராக் போகிறார்?

  • கருத்துக்கள உறவுகள்
Quote

ஆளுனராக நியமனம் பெற்று உள்ள முன்னாள் அமைச்சர் ஹிஸ்புல்லாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கின்றேன். கிழக்கு மாகாணத்தில் வாழ்கின்ற மூவின மக்களுக்குமான ஜனாதிபதியின் நேரடியான பிரதிநிதியாக ஆளுனர் ஹிஸ்புல்லா செயற்படுவார் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. அவர் எல்லா விடயங்களிலும் இன சமத்துவத்தை பேணி நடக்க வேண்டும் என்பது கிழக்கு மாகாண மக்களின் எதிர்பார்ப்பு ஆகும்.

கிஸ்புல்லாவின்  இனவாத பேச்சுக்களை கேட்காதது போல் என்னமா நடிக்கிறார்.

என்னத்த சொல்ல வந்தேன் என்பது கூட புரியாமல் உளறுகின்றார் .... 

  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரியை பிடிச்சு தொங்காம, சந்திரிகா பக்கம் போங்கப்பா.

மகிந்தவை நம்பி, உள்ளதும் போச்சுடா நொள்ளைக் கண்ணா எண்டு, அந்தாள் அல்லாடிக் கொண்டு நிக்குது.

பேசாம இருந்திருக்கலாம்..... இப்ப மக்கள் ஆதரவும் இல்லாமல், ஒரு அரசியல் கட்சி ஆதரவும் இல்லாமல் தோல்வியில் முடியப் போகுது அந்தாள் அரசியல் வாழ்வு. 

 கிருஷ்ணமூர்த்தி ஆவேசம்   🤣

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Iraivan said:

 கிருஷ்ணமூர்த்தி ஆவேசம்   🤣

அது சரி, கிருஸ்ணரிண்ட தாடி ஏன் இப்படி நிக்குது? ஆவேசம் வருற அளவுக்கு ஆடு கடிச்சிட்டுதோ?😂

கிருஷ்ணா - முகுந்தா - முராரே 

ஜெய கிருஷ்ணா - முகுந்தா - முராரே 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தாள் வேற ஊருக்குள்ள இருந்து ஊழையிட்டுக்கொண்டு திரியுது  ஆட்சிக்கு மாறி மாறி கூவி திரியுது  ஆனால் சொல்லுறதிலயும் நியாயம் இருக்கு 

கூட்டமைப்பு  கிழக்கு மக்களை வைத்து நல்லா செய்யுது tw_cold_sweat:

காரைதீவு கிருஸ்ணமூர்த்தியார் கதைத்துக்கொண்டிருப்பதற்கு முன்பிருந்தே, மற்றப்பக்கத்தால் காக்கா காரைதீவை கொத்ததொடங்கீட்டுது!  இருக்கிறதை எண்டாலும் நல்லவர் கிஸ்புல்லாவிடமிருந்து காப்பாற்றட்டும்!

தமிழர் கூத்தமைப்பு கிழக்கை கைவிட்டது என்பது உண்மையே! அத்தோடு இன்னொன்றையும் சேருங்கள், கிழக்கை மட்டுமல்ல வடக்கையும் கை விட்டு விட்டார்கள்! இன்று வரை வடக்கிற்கு என்று கூத்தமைப்பினர் செய்தவைகளை ஏதாவது????????

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Nellaiyan said:

காரைதீவு கிருஸ்ணமூர்த்தியார் கதைத்துக்கொண்டிருப்பதற்கு முன்பிருந்தே, மற்றப்பக்கத்தால் காக்கா காரைதீவை கொத்ததொடங்கீட்டுது!  இருக்கிறதை எண்டாலும் நல்லவர் கிஸ்புல்லாவிடமிருந்து காப்பாற்றட்டும்!

தமிழர் கூத்தமைப்பு கிழக்கை கைவிட்டது என்பது உண்மையே! அத்தோடு இன்னொன்றையும் சேருங்கள், கிழக்கை மட்டுமல்ல வடக்கையும் கை விட்டு விட்டார்கள்! இன்று வரை வடக்கிற்கு என்று கூத்தமைப்பினர் செய்தவைகளை ஏதாவது????????

அப்படி ஒன்றும் பெரிசா இல்லையே  ஆனால் காரைதீவை கைப்பற்ற முடியாது ஐயா நானும் அந்த ஊரான் தான் :)

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அப்படி ஒன்றும் பெரிசா இல்லையே  ஆனால் காரைதீவை கைப்பற்ற முடியாது ஐயா நானும் அந்த ஊரான் தான் :)

அப்படி சொல்லேலாது.

எங்கண்ட முனிவர் ஒருத்தர், இப்ப ஆசிரமத்தை விட்டுட்டு வந்து, தனிய நிக்கிறார் கொஞ்ச நாளில, தனியல்லா எண்டு நிக்கப்போறார்... 😜

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Nathamuni said:

அப்படி சொல்லேலாது.

எங்கண்ட முனிவர் ஒருத்தர், இப்ப ஆசிரமத்தை விட்டுட்டு வந்து, தனிய நிக்கிறார் கொஞ்ச நாளில, தனியல்லா எண்டு நிக்கப்போறார்... 😜

ஏன்யா இப்படி :):)

Edited by தனிக்காட்டு ராஜா

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

ஏன்யா இப்படி :):)

அல்லாண்ட அருள் அப்படி. 

ஆளுக்கு 10 இலட்சம் கிடைக்குதாமே.   :grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.