Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விடுதலைப் புலிகள் தொடர்பாக உங்கள் நிலைப்பாடுதான் என்ன? சுமனிடம் கேட்ட வித்தி!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நான் கூட்டமைப்புக்கோ அல்லது சுமத்திரனுக்கோ சப்போட் இல்லை...ஆனாலும் எனக்கு விளங்காதது மாவை தொடங்கி ஸ்ரீதரன் வரைக்கும் எத்தனையோ பேர் இருக்கும் போது சுமத்திரனை மட்டும் ஏன் எல்லோரும் போட்டுத் தாக்குகிறார்கள் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இதை எழுதுவது, சுமந்திரனை ஆதரிப்பதாலோ அல்லது எதிர்ப்பதாலோ அல்ல. மாறாக, அவர்மீது வைக்கப்பட்டு வரும் விமர்சனங்கள் பற்றிய தெரிவான புரிதலை நான் அடைவதற்கு மட்டுமே.

முதலாவதாக, சுமந்திரன் மட்டும் ஏன் இலக்குவைத்து தொடர்ச்சியாக விமர்சிக்கப்படுகிறார் என்கிற கேள்வி. இதுபற்றிய எனது புரிதல் என்பது இவ்வாறு அமைகிறது. 

இன்று தமிழர்களைப் பெரும்பான்மையாகப் பிரதிநித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில், தொடர்ச்சியாக தமிழர்களின் பிரச்சனைகள் பற்றியோ அவற்றிற்கான தீர்வொன்றினைப் பற்றியோ பேசிவருவது யார்? சம்பந்தனால் இதுதொடர்பாக குறிப்பிட்ட அள்விற்கு மேல் பேச முடியாது. வெளிநாட்டுப் பிரதிநிதிகளைச் சந்திப்பதுடன் அவருடைய பேச்சு நின்று விடும். மாவை எதுவுமே பேசுவதில்லை. ஆனால், சுமந்திரன் தொடர்ந்து பேசுகிறார். அரசியலமைப்பு ஆணைக்குழுவில் அங்கத்துவம் வகிக்கிறார். இப்போது வெளியிடப்பட்ட நகலில் பங்குபற்றியதோடு மட்டுமல்லாமல், அதுபற்றி பேசியும் வருகிறார். அவர்மூலமாகவே இந்த முயற்சிகள் பற்றி அறிந்துகொள்கிறோம், ஆகவே அவரை விமர்சிக்கிறோம்.
ஆனால், அவர்மீதான விமர்சனத்திற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. அதுதான் அவரது புலிகள் தொடர்பான நிலைப்பாடு. புலிகள் நடவடிக்கைகள் மீது அவர் வைக்கும் விமர்சனம். புலிகள் மீது அபிமானம் வைத்திருக்கும் எல்லோருக்கும் சுமந்திரனது கருத்துக்களும், விமர்சனங்களும் ஆத்திரத்தை உண்டுபண்ணும் என்பது இயல்பானது. ஆனால், புலிகளை அவர் விமர்சிக்கிறார் என்கிற காரணத்தை மட்டுமே முன்வைத்து அவரை நாம் விமர்சிப்பதென்பது, உண்மையாகவே அவர் ஒரு நல்ல விடயத்தைச் செய்கிறார் (ஒரு பேச்சிற்கு) என்று வைத்துக்கொண்டால், அது தவறாகி விடாதோ என்கிற் ஐய்யமும் எனக்கிருக்கிறது.
புலிகள் மீதான அவரது விமர்சனத்தை விலக்கிப் பார்த்தால், அவர் இப்போது செய்துவருவது உண்மையிலேயே தவறானதா என்பது பார்க்கபடல் வேண்டும்.

அடுத்தது, அவர் ஒரு துரோகியா என்பது.
ஒருவர் துரோகியாவதற்கோ அல்லது ஒரு இனத்தை ஏமாற்றுவதற்கோ, முதலில் ஒன்றைச் செய்வதாகக் கூறி, பின்னர் வேறொன்றை, அந்த இனத்திற்கெதிராகச் செய்பவராக இருக்க வேண்டும். அப்படிப் பார்த்தால், சுமந்திரன் எதைச் முன்னர் சொன்னார், இப்போது என்ன செய்கிறார் என்பது பார்க்கப்படல் வேண்டும்.
என்னைப்பொறுத்தவரை, சுமந்திரன் தனி ஈழம் பெற்றுத்தருவேன் என்று எந்தவிடத்திலும் சொல்லவில்லை. அதிகமாக ஆசைப்படாதீர்கள், எம்மால் முடிந்ததைத்தான் பெற்றுக்கொள்ள முடியும் என்றுதான் சொல்லி வருகிறார். இதை நோக்கித்தான் அவரது செயற்பாடும் இருக்கிறது. தாம் செய்வதையும், இருக்கும் சந்தர்ப்பங்களையும் யதார்த்தமாகப் பேசுகிறார் என்பதுதான் எனது எண்ணம், இது தவறாக இருக்கலாம்.
எமக்கான தீர்வை பெறுவதற்கு இருக்கும் சாத்தியம் என்பது, எமது கைகளை விட்டுப் போனபின்னர், அவர்களுடன் சமரசத்திற்கு வந்துதான் எமக்கானவற்றை பெற்றுக்கொள்ள வேண்டும் என்கிற கட்டாயம் இருக்கிறது. இலங்கைக்கெதிராக எந்தவொரு சர்வதேச நாடும் இறங்கிவந்து எமக்கான உரிமைகளையோ தனிநாட்டையோ பெற்றுத்தரப்போவதில்லை. இது சுமந்திரனுக்கு நன்கே தெரிந்திருக்கிறது, எமக்கும் இது தெரியும். ஆகவே, அதி தீவிர தேசிய தேடும் எம்மால் இப்போதைக்கு காத்திரமாக எதையுமே செய்ய முடியப்போவதில்லை என்பதுதான் உண்மை.

சுமந்திரனுடன் சேர்ந்து முழுத்தமிழினமும் மீண்டுமொருமுறை ஏமாற்றப்படப் போகிறதென்கிற கருத்து.
இது சாத்தியமானதென்றே நான் நினைக்கிறேன். ஏனென்றால், இது முன்னரும் நடந்தது. செல்வநாயகம் தொடங்கி, அவ்வப்போது முயற்சித்த அனைத்து தமிழ்த் தலைவர்களுக்கும் இது நடந்தது. இப்போது சுமந்திரனது தடவை, அவரும் முயற்சிக்கிறார்.
2009 இல் இனக்கொலையை நடத்தி வெற்றிக் களிப்போடு வீற்றிருந்த மகிந்த, மேற்கிற்கு எதிராக சீனாவின் பக்கம் சாய்ந்தபோது, அவருக்கு அழுத்தம் கொடுக்கவே போர்க்குற்ற விசாரணை, மனிதவுரிமை மீறலுக்கான விசாரணை என்று மேற்குலகு செயற்பட்டதென்பது பொதுவான கருதுகோள். மகிந்த தொடர்ச்சியாக ஆட்சியில் இருப்பதென்பது, தமது தலைவர்களையும், போரில் வெற்றியை ஈட்டித் தந்த ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்களையும் சர்வதேச விசாரணை ஒன்றில் இழக்க நேரிடலாம் என்று கருதிய சிங்களப் புத்திஜீவிகளின் முயற்சியே மகிந்தவை ஆட்சியிலிருந்து அகற்றி மேற்குலகிற்குச் சார்பான ரணில் அரசை ஆட்சிக்குக் கொண்டுவந்தது என்கிற அபிப்பிராயமும் இருக்கிறது. இந்த ரணில் அரசை ஆட்சிக்குக் கொண்டுவருதல் மற்றும் ஆட்சியில் ரணிலை தொடர்ந்தும் வைத்திருத்தலில் சுமந்திரன் தலைமையில் இயங்கும் கூட்டமைப்பின் வகிபாகம் என்பது ஒருவிதத்தில் சிங்களப் பேரினவாதப் புத்திஜீவிகளின் முயற்சிக்கு ஏதுவாக அமைந்ததுடன், அப்போது மேற்குலகு மகிந்த மீது வைத்திருந்த அழுத்தத்தையும் நீர்த்துப் போட்டது என்றும் கருதப்படுகிறது. இக்கருத்தின்படி பார்த்தால், தமிழ்க் கூட்டமைப்பின் ஒரு நடவடிக்கை சிங்களத்தின் மீதான போர்க்குற்ற விசாரணைகளை சில வருடங்களுக்காவது பின் தள்ளியிருக்கிறது அல்லது, தாமதப்படுத்தி ஆறப்போட்டிருக்கிறது என்று சொல்லலாம். ஆறிய கஞ்சி பழங்கஞ்சி என்கிற நிலைதான் எமது போர்க்குற்ற விசாரணைகளுக்கான நிலை.
தமிழ்க் கூட்டமைப்பின் தொடர்ச்சியான ஆதரவிற்கு மத்தியிலும் கூட, மகிந்த உற்பட்ட, பெளத்த மகா சங்கத்தினர், புத்தி ஜீவிகள், இனவாதிகளின் அழுத்தத்திற்குப் பணிந்து ரணில் ஒருவேளை இந்த தீர்மானங்களைக் கைவிட்டால், மீண்டும் பண்டா - செல்வா காலத்திற்கு வந்து நிற்கப்போகிறோம் என்கிற கருத்தும் இருக்கிறது. 

ஆகவே, சுமந்திரன் தமிழர்களின் அபிலாஷைகளுக்கான தீர்வொன்றை நியாயமாகவே கொண்டுவர நினைத்தாலும்கூட, அவர் கூட ஏமாற்றப்படலாம் என்கிற நிலைதான் இப்போது. எல்லோரும் ஏறி விழுந்த குதிரையில், சுமந்திரனும் ஏறி விழக்கூடும். பார்க்கலாம்.
 

Link to comment
Share on other sites

6 hours ago, ரதி said:

நான் கூட்டமைப்புக்கோ அல்லது சுமத்திரனுக்கோ சப்போட் இல்லை...ஆனாலும் எனக்கு விளங்காதது மாவை தொடங்கி ஸ்ரீதரன் வரைக்கும் எத்தனையோ பேர் இருக்கும் போது சுமத்திரனை மட்டும் ஏன் எல்லோரும் போட்டுத் தாக்குகிறார்கள் ?

கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ பேச்சாளர் அவர் என்பதால் ஊடகங்களில் இருந்து வெளிநாட்டு தூதுவர்கள், சிங்கள தலைவர்கள், ஊடகவியளாளர்கள் என பலருடனான செவ்விகள் ஊடகங்களில் வருகின்றன. பல ஊடகங்கள் ஊதிப்பெருப்பித்து 
தமது ஊடக விபச்சாரத்தை செய்கின்றன. அத்தோடு மும்மொழியும் சரளமாக பேசுவதால் பலருடன் பேச சந்தர்ப்பங்கள் கிடைக்கின்றன. 
மேற் கூறிய காரணங்களால் அவரை பலரும் போட்டு தாக்குகிறார்கள்.

Link to comment
Share on other sites

இணைந்த வடக்கு கிழக்கில் காணி போலீஸ் அதிகாரமற்ற எந்த தீர்வை ஆதரிப்பது என்பது நம் கைகளால் எமது கண்ணை குத்துவது போன்றது. மற்றது போர்க்குற்ற விசாரணை மற்றும் புலிகள் மீதான இவரின் பார்வை .
புலிகளை குற்றம் சொல்ல இவர் என்ன மாவீரரின் தந்தையா? 

சுமந்திரனின் நகர்வு தெளிவாக தெரிகின்றது ... இவர் ஏன் விக்னேஸ்வரன் ஐயா அவர்களை எதிர்த்தார் ? ரணிலுக்கு பிடிக்கவில்லை அதனால் எதிர்த்தார் . இது போதாதா இவரை நாம் நம்பலாமா அல்லது இல்லையா என தீர்மானிப்பதற்கு 

Link to comment
Share on other sites

13 hours ago, பிரபாதாசன் said:

இணைந்த வடக்கு கிழக்கில் காணி போலீஸ் அதிகாரமற்ற எந்த தீர்வை ஆதரிப்பது என்பது நம் கைகளால் எமது கண்ணை குத்துவது போன்றது.

சரி,  அப்ப அரசியல் தீர்வு ஒன்றை அல்லது தமிழ் மக்களுக்கான தீர்வு ஒன்றை எப்படி பெறலாம் என நினைக்கின்றீர்கள்? மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டத்தின் மூலமா?
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, nunavilan said:

கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ பேச்சாளர் அவர் என்பதால் ஊடகங்களில் இருந்து வெளிநாட்டு தூதுவர்கள், சிங்கள தலைவர்கள், ஊடகவியளாளர்கள் என பலருடனான செவ்விகள் ஊடகங்களில் வருகின்றன. பல ஊடகங்கள் ஊதிப்பெருப்பித்து 
தமது ஊடக விபச்சாரத்தை செய்கின்றன. அத்தோடு மும்மொழியும் சரளமாக பேசுவதால் பலருடன் பேச சந்தர்ப்பங்கள் கிடைக்கின்றன. 
மேற் கூறிய காரணங்களால் அவரை பலரும் போட்டு தாக்குகிறார்கள்.

சுமத்திரன் தான் ஓரளவுக்கு பேச்சாற்றல் மிக்க,செயற் திறன் மிக்கவராய் இருக்கிறார். அவரையும் வாயை மூடப் பண்ணி விட்டால் விஷயம் முடிந்தது....இல்லையா 😪
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நிழலி said:

சரி,  அப்ப அரசியல் தீர்வு ஒன்றை அல்லது தமிழ் மக்களுக்கான தீர்வு ஒன்றை எப்படி பெறலாம் என நினைக்கின்றீர்கள்? மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டத்தின் மூலமா?
 

தருவதை தாருங்கள் என்றிருந்தால் 70களிலேயே பிரச்சனை முடிந்திருக்கும். இனக்கலவரங்களை தவிர்த்து போர் கிபீர் எதுவுமே வந்திருக்காது.

இனியொரு ஆயுதம் தேவையில்லை. ஆயுதத்தை விட கூர்மையான அரசியல் வேண்டும்.

அது சம்பந்தனிடமும் அவரின் மெய்ப்பாதுகாவலரிடமும்  இல்லை.

பிரச்சனை சூடாக இருக்கும்போதேஅதை கையாள தவறிவிடுகின்றனர்.

ஆறின கஞ்சி பழங்கஞ்சி என்பது ஈழத்தமிழின வரலாற்றில் நடந்தேறி வருகின்றது.
 

Link to comment
Share on other sites

ஆயுத போராடடம் தேவையில்லை , இவர்கள் சிங்களத்திக்கு துணை போவதை நிறுத்தி விட்டு , மக்களுக்கு உண்மையாக இருந்தாலே போதும் , ஏன் வடக்கு கிழக்கு இணைந்த தீர்வு என்பது மிகவும் குறைந்த ஒன்று .
இதனை தர முடியாத சிங்களத்துக்கு ஏன் இவர்கள் சார்பாக இருக்க வேண்டும் .

ரணில் மகிந்த என்பது எங்களுக்கு தேவை இல்லை . சர்வதேசத்திக்கு தெளிவாக சொல்ல வேண்டியது தானே .
புலிகளை அழிக்க உதவியவர்கள் எங்களின் குறைந்த பட்ச தேவைக்கு உதவி செய்ய வேண்டும் .

நாம் கேடடாள் தான் அவர்கள் அது பற்றி சிந்திப்பார்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/18/2019 at 11:50 AM, ragunathan said:

ஆகவே, சுமந்திரன் தமிழர்களின் அபிலாஷைகளுக்கான தீர்வொன்றை நியாயமாகவே கொண்டுவர நினைத்தாலும்கூட, அவர் கூட ஏமாற்றப்படலாம் என்கிற நிலைதான் இப்போது. எல்லோரும் ஏறி விழுந்த குதிரையில், சுமந்திரனும் ஏறி விழக்கூடும். பார்க்கலாம்.
 

இது தான் நடக்கப்போகின்றது.......இருந்தும் ஒரு நப்பாசை எங்களுக்கு தீர்வு கிட்டும் என்று.....மகிந்தா மீண்டும் ஜனதிபதியாக வந்தவுடன் தமிழ்மக்களுக்கு நல்ல தீர்வை கொண்டுவர புதிய அரசியல் யாப்பை உருவாக்குவார் அத‌ற்கு இன்னுமோர் தமிழ் அரசியல் தலைவர் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்.....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நேற்று நண்பன் ஒருத்தனுக்கு வாட்சப்  போன் டேய் எங்கு இருக்கிறாய் சோமாலி க்கு பக்கத்தில் ஏதோ இடத்து கடல் பாசையில் அது இங்கு வேணாம்   அப்ப பிறகு ஆறுதலா போன் போடுகிறேன் இல்லையட இப்பத்தான் ரிலக்ஸ்சா இருக்கிறம் உலக நாட்டு நேவி முழுக்க இங்குதான் நிக்குரான்கள் இவங்களுக்கு பியுள் புல் பண்றதிலே நமக்கு மாதம் முழுதும் இதுதான் வேலையாகி போகுது .   மேற்குலகு என்ன முடிவில் உள்ளது என்பது விளங்குது .
    • படம் இல்லாத இலங்கைப் பயணம் - நான்கு ------------------------------------------------------------------- ஊருக்கு பயணம் போனால் ஊரில் சிலரை போய் பார்ப்பது தவிர்க்க முடியாத ஒரு விடயம். அவர்கள் வயதான நெருங்கிய சொந்தமாகவோ, அல்லது ஆசிரியர் போன்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் காட்டும் அன்பும், வாஞ்சையும் உண்மையானது, அதை உணரக் கூடியதாகவே இருக்கும். பலர் எங்களை இன்னும் சிறுவர்களாகவே நினைத்தும் கதைப்பார்கள். எங்களின் கதைகளை கேட்பதை விட, அவர்களின் கதைகளை சொல்வதிலேயே ஆர்வமாக இருப்பார்கள். மீண்டும் சந்திக்கும் அடுத்த முறை என்று ஒன்று இருக்குமா அல்லது இல்லையா என்று தெரியாததால், அவர்கள் நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாத சிலவற்றை சொன்னாலும், அது ஒரு பெரிய அசௌகரியத்தை உண்டாக்குவதில்லை. மாறாக, பார்த்து விட்டு கிளம்பும் போது, மனம் கொஞ்சம் கனக்கும்.   முதல் போன இடத்திலேயே, 'நீ இந்த தலைமயிரை முதலில் வெட்டு. இது என்ன கோலம். முக்கால்வாசி வெள்ளையாக வேற இருக்குது...' என்றார் நான் பார்க்கப் போனவர். 'சரி, வெட்டிறன்...' என்று தலையை நன்றாகவே ஆட்டினேன். சிறுவயதில் பள்ளிக்கூடத்தில் படிக்கின்ற காலத்தில் இருந்தே இந்த 'நீட்டுத் தலைமயிர்' பிரச்சனை தொடருகின்றது. பள்ளிக்கூடத்தில் இன்றைக்கு யாருக்கு எதுக்கு அடிக்கலாம் என்று பார்த்துக் கொண்டிருக்கின்ற சில ஆசிரியர்கள், ஏன் தலைமயிரை வெட்டவில்லை என்று அதில் பிடித்து இழுத்தே அடிப்பார்கள். பின்னர் வீட்டில், பின்னர் ஊரில் என்று தடைகள் வந்து கொண்டேயிருந்தது. இன்று எல்லாமே கொட்டி விட, மிச்சமாக இருக்கிற நாலு முடியை நீட்டாக வளர்க்க நினைத்தாலும், அதுவும் முடியாது போல.   ஒரு புதிதாகக் கட்டப்பட்ட சிறிய வீட்டில் அவர் மட்டும் தனியாக இருந்தார். அவரின் துணை சில மாதங்களின் முன் இறந்து போயிருந்தார். இங்கு ஊரில் புதிதாக கட்டப்படும் வீடுகள் மூன்று வகைகளில் இருக்கின்றன. முதலாவது மிகவும் அடக்கமான சிறிய வீடுகள். வீட்டின் முன்பக்கம் திறந்த ஒரு விறாந்தை. அங்கு இருக்கும் கதவை திறந்தால், உள்ளே ஒரு சிறிய மண்டபமும் இரண்டு அறைகளும். அதன் பின்னால் ஒரு சிறிய மண்டபம்/நடை, அதன் பின்னால் ஒரு சமையலறை. உள்ளிருக்கும் மண்டபத்தின் முடிவில் ஒரு குளியலறையும் கட்டப்பட்டிருக்கும். மிகவும் சிறிய ஒரு காணித் துண்டுக்குள்ளேயே, அரை பரப்பு அளவுள்ளது, இந்த மாதிரி வீட்டை பலரும் கட்டியிருக்கின்றனர். ஊருக்குள் காணிகள் என்றும் பெரிதாக இருந்ததில்லை. மிகவும் நெருக்கமாக அமைந்த வீடுகள். ஒருவர் அல்லது இருவர் மட்டுமே இருப்பவர்கள் இந்த மாதிரி புது வீட்டைக் கட்டிக் கொள்கின்றனர். கடைசிக் காலத்தில் ஊரில் வந்து இருக்கப் போவதாக சில புலம் பெயர்ந்தவர்களும் இதே போன்ற அடக்கமான வீடுகளை கட்டியிருக்கின்றனர்.   அடுத்த வகை புது வீடுகள் மிகப் பெரியவை, ஆடம்பரமானவை. அமெரிக்க பாணியில் அமைந்த வீடுகள். கனடா, அவுஸ்திரேலியாவிலும் இதே போன்ற வீடுகள் பின்னர் அமெரிக்காவைத் தொடர்ந்து கட்டப்பட்டன. இப்பொழுது இவை ஊரில் கட்டப்படுகின்றன. இரண்டு அல்லது மூன்று மாடிகளும் உண்டு. ஊருக்கு கொஞ்சம் வெளியே அயல் கிராமங்களில் ஓரளவு பெரிய காணியை வாங்கி இந்த மாதிரியான வீடுகளை கட்டிக் கொள்கின்றனர். ஊருக்குள்ளே என்றால் சிறிய இடத்தில் மேலே மேலே அடுக்கடுக்காக கட்டிக் கொள்கின்றனர். சில வீடுகளில் பல நிறங்களில் விட்டு விட்டு எரியும் மின் விளக்குகள் உள்ளேயும், வெளியேயும் பளிச்சிடுகின்றன. சில கோடிகளில் மொத்த செலவை சொல்கின்றனர். இந்த வகை வீடுகளுக்குள் போய் வரும் போது, ஒரு இலட்சியத்தின் முடிவு இந்த வீடுகளோ என்ற நினைப்பு வருவதை தவிர்க்க முடியவில்லை. சிலர் வெளிநாட்டில் இருந்து வீட்டை கட்டி விட்டு, வருடம் முழுவதும் வீடுகளைப் பூட்டியே வைத்துள்ளனர். சிசிடிவியின் துணையுடன் வீட்டைப் பார்த்துக் கொள்கின்றனர்.   சில வருடங்களின் முன் மிக அதிகமாக இருந்த திருட்டுப் பயம் இப்பொழுது பெருமளவு குறைந்து விட்டது. பல வீடுகளில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவியே அதற்குக் காரணம். ஒரு வீட்டில் இருக்கும் சிசிடிவி சுற்றிவர இருக்கும் பல வீட்டை காவல் காக்கின்றது. ஆனால் இந்த சிசிடிவியால் தேவையில்லாத சில புதுப் பிரச்சனைகளும் உண்டாகியிருக்கின்றது. உங்கள் வீட்டு சிசிடிவி பதிவுகளை பார்க்க வேண்டும் என்று சிஐடி மற்றும் போலீசார் சில வீடுகளுக்கு வந்து, துப்பு துலக்கிய நிகழ்வுகளும் உண்டு. அப்படி சிஐடி பதிவுகளைத் துப்புத் துலக்கி ஒரு பெரிய கேரளா கஞ்சா கடத்தலை பிடித்ததாக ஒரு கதையையும் சொன்னார்கள்.   மூன்றாவது வகை புது வீடுகள் அரசாங்கத்தின் வீடு கட்டும் திட்ட உதவியுடன் கட்டப்படுவன. இந்த திட்டம் மிக நன்றாக செயற்படுகின்றது போன்று தெரிகின்றது. ஒரு வீட்டைக் கட்ட அரசாங்கத்தால் பத்து இலட்ச ரூபாய்கள் ஒரு குடும்பத்திற்கு பகுதி பகுதியாக வழங்கப்படுகின்றது. இரண்டு அறைகள், ஒரு மண்டபம், சமையலறை கொண்ட ஒரே மாதிரியான வீடுகள். பலர் வீட்டைக் கட்டும் போதே, பின்னர் அதை நீட்டி பெரிதாக்க்கும் திட்டத்துடன் கட்டி, பெரிதாக்கியும் உள்ளனர். சில கட்டுப்பாடுகள் இருப்பதாகச் சொன்னார்கள், உதாரணம்: கூரை ஓட்டுக் கூரையாக இருக்க வேண்டும், அஸ்பெஸ்டாஸ் சீட் பாவிக்கக் கூடாது.   'தனிய இருக்க இரவில் பயமாக இருக்குது...' என்றார். என்ன சொல்வது என்று தெரியாமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். இவர் லண்டன் போய் பிள்ளைகளுடன் சில வருடங்கள் இருந்து விட்டு, அங்கு இருக்க முடியாது, இருக்க விருப்பம் இல்லை என்று திரும்பி ஊர் வந்தவர். இப்பொழுது பிள்ளைகள் வந்து கூட்டிக் கொண்டு போகப் போகின்றனர் என்றார். வேறு வழி ஏதும் இருப்பதாகவும் தெரியவில்லை.   பொதுவாக, ஒரு துணை போய் விட, தனியாக இருப்பவர்கள் தனிமையில் ஒரு துயரத்துடனும் பயத்துடனும் இருக்கின்றனர் போன்றும், இருவராக இருப்பவர்கள் சாதாரணமாக இருப்பது போன்றும் தோன்றியது.   இதே போன்ற இன்னொருவரிடம் போயிருந்த பொழுது, அவருக்கு நோர்தேர்ன் தனியார் மருத்துவமனை மீது இருந்த ஆதங்கம் முழுவதையும் சொன்னார். அவரின் துணைக்கு உடம்புக்கு மிகவும் முடியாமல் போக, யாழ் பெரியாஸ்பத்திரிக்கு கொண்டு சென்றிருக்கின்றனர். அங்கு ஆரம்பத்தில் இருந்தே, வாசல் காவலாளிகள் உடபட, எவரும் தன்மையுடன் நடக்கவில்லை என்றார். மூன்று நாட்களின் பின்னர் நீங்கள் நோர்தேர்ண் போங்கள் என்று யாழ் பெரியாஸ்பத்திரியிலிருந்து இவர்களை நோர்தேணிற்கு அனுப்பியிருக்கின்றனர்.    நோர்தேர்ணில் 'பாசத்தை பணமாக்கினார்கள்' என்பது அவர் எனக்கு சொன்ன அதே வார்த்தைகள். 15 நாட்கள் மேல் அங்கிருந்த அவரின் துணை, அதற்கு மேல் அவர்களின் நிதி நிலைமையால் முடியாதென்று வீடு வந்து, இரண்டோ மூன்று நாட்களில் இறந்து போனார். பல இலட்சங்கள் ஒரு பயனும் இல்லாமல் செலவழிந்தது என்றும் சொன்னார். ஆனால் ஒரு தடவை கூட ஒரு வைத்தியரும் தன்னை சந்திக்கவில்லை என்றார். அவர் தினமும் அங்கே இருந்திருக்கின்றார். ஆனால் தினமும் மாலையில் வரும் கணக்குச் சீட்டில், வைத்தியர் வந்து பார்த்ததிற்கான கட்டணம் இருந்தது என்றார்.   பின்னர் இலங்கையில் இருக்கும் எனக்குத் தெரிந்த ஒரு வைத்தியர் ஒருவருடன், அவர் அங்கு நோர்தேணில் வேலை செய்வதில்லை, இப்படியான நிலைமைகள் குறித்து பொதுவாகக் கதைத்தேன்.   (தொடரும்........)
    • கட்டுரை எழுதிய ச.அருணாசலம் இன்னொரு கட்டுரையும் எழுதியுள்ளார் .ஒக்டோபர் 7 ஹமாஸ் பயங்கரவாதிகள் பெண்கள் குழந்தைகள் மக்கள் மீது தாக்குதல் நடத்தி 1200 பேரை படுகொலை செய்ததை இஸ்ரேலிய துருப்புகள் 1200 பேர் மீதான ஹமாஸ் தாக்குதல் என்றும் அதற்கு பழிவாங்க இஸ்ரேல் பாலத்தீனிய மக்களை கொல்கின்றது என்று எழுதியவர்.
    • இது ஜப்பான முஸ்லிம் https://www.jaffnamuslim.com/2024/05/blog-post_916.html இராஜாங்க அமைச்சர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பேயாட்டம் ஆடிய சம்பவம் பதிவு.  Madawala News  14 hrs ago        கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த இராஜாங்க அமைச்சர் ஒருவர் பயணிகளின் பயணப்பொதிகளை கொண்டு செல்லும்  ஊழியர் ஒருவரை (போர்ட்டர்) கன்னத்தில்  அறைந்து, பாதுகாப்பு அதிகாரிகளையும் அச்சுறுத்தியதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளது .   இந்த இராஜாங்க அமைச்சரின் மனைவி உட்பட சிலரின் வெளிநாட்டு பயணமொன்றுக்காக குறித்த இராஜாங்க அமைச்சர் புதன்கிழமை (15) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார் .   அவர் தனது பாதுகாவலர்களுடன் நுழைவுச்சீட்டு வாங்காமல் பிரதான நுழைவாயில் ஊடாக விமான நிலையத்திற்குள் பிரவேசிக்க முயற்சித்துள்ளார்.  அவரின் பாதுகாவலர்கள் துப்பாக்கியுடன் இருந்ததால் அவை கொண்டு செல்ல அனுமதிக்க முடியாது என விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் இராஜாங்க அமைச்சரிடம் கூறியுள்ளனர் .   அப்போது, அவர் பாதுகாப்பு  அதிகாரிகளை திட்டி, அவர்களை தனது கைத்தொலைபேசியால் புகைப்படமாகவும் பதிவு செய்துகொண்டுள்ளதாக விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .   பின்னர் , குறித்த இராஜாங்க அமைச்சருடன் வந்தவர்களின் பயணப்பொதிகளை விமான நிலையத்திற்கு  எடுத்துச் செல்வதற்காக வந்த போர்ட்டருக்கு குறைந்த பணத்தை வழங்கியுள்ளதுடன் அவர் உரிய கட்டணத்தை கேட்ட போது ,  ஆத்திரமடைந்த இராஜாங்க அமைச்சர் , தனது காலணியால் போர்ட்டரின் காலை மிதித்து, கன்னத்தில் அறைந்து பாதுகாவலர்களுடன் வெளியேறியதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.   தாக்குதலுக்குள்ளானதாக கூறப்படும் போர்ட்டர், தேவையில்லாத பிரச்னையை ஏற்படுத்திவிடும் என்ற அச்சத்தில் பொலிஸாரிடம்  முறைப்பாடு செய்யவில்லை என தெரியவந்துள்ளது .   அரசியல்வாதியின் இந்த செயல்  தற்போது பகிரங்கமான ரகசியமாக மாறியுள்ளமை  குறிப்பிடத்தக்கது . இது மடுவலவை https://www.madawalaenews.com/2024/05/blog-post_97.html விமான நிலையத்தில் ராஜாங்க அமைச்சரின் சண்டித்தனம் Thursday, May 16, 2024  சர்வதேசம்     கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த இராஜாங்க அமைச்சர் ஒருவர் பயணிகளின் பயணப்பொதிகளை கொண்டு செல்லும்  ஊழியர் ஒருவரை (போர்ட்டர்) கன்னத்தில்  அறைந்து, பாதுகாப்பு அதிகாரிகளையும் அச்சுறுத்தியதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளது .         இந்த இராஜாங்க அமைச்சரின் மனைவி உட்பட சிலரின் வெளிநாட்டு பயணமொன்றுக்காக குறித்த இராஜாங்க அமைச்சர் புதன்கிழமை (15) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார் .   அவர் தனது பாதுகாவலர்களுடன் நுழைவுச்சீட்டு வாங்காமல் பிரதான நுழைவாயில் ஊடாக விமான நிலையத்திற்குள் பிரவேசிக்க முயற்சித்துள்ளார்.  அவரின் பாதுகாவலர்கள் துப்பாக்கியுடன் இருந்ததால் அவை கொண்டு செல்ல அனுமதிக்க முடியாது என விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் இராஜாங்க அமைச்சரிடம் கூறியுள்ளனர் .   அப்போது, அவர் பாதுகாப்பு  அதிகாரிகளை திட்டி, அவர்களை தனது கைத்தொலைபேசியால் புகைப்படமாகவும் பதிவு செய்துகொண்டுள்ளதாக விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .   பின்னர் , குறித்த இராஜாங்க அமைச்சருடன் வந்தவர்களின் பயணப்பொதிகளை விமான நிலையத்திற்கு  எடுத்துச் செல்வதற்காக வந்த போர்ட்டருக்கு குறைந்த பணத்தை வழங்கியுள்ளதுடன் அவர் உரிய கட்டணத்தை கேட்ட போது ,  ஆத்திரமடைந்த இராஜாங்க அமைச்சர் , தனது காலணியால் போர்ட்டரின் காலை மிதித்து, கன்னத்தில் அறைந்து பாதுகாவலர்களுடன் வெளியேறியதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.   தாக்குதலுக்குள்ளானதாக கூறப்படும் போர்ட்டர், தேவையில்லாத பிரச்னையை ஏற்படுத்திவிடும் என்ற அச்சத்தில் பொலிஸாரிடம்  முறைப்பாடு செய்யவில்லை என தெரியவந்துள்ளது .   அரசியல்வாதியின் இந்த செயல்  தற்போது பகிரங்கமான ரகசியமாக மாறியுள்ளமை  குறிப்பிடத்தக்கது .   இரண்டு முஸ்லிம் இணையமும் ஒரே மாதிரி எழுதி உள்ளன யாவரும் கவனிக்க இங்கு தேவையில்லாத பிரச்சனையை உருவாக்கி குளிர் காய்பவர்கள் யார் என்று புரிந்து கொள்க . இலங்கையில் நாங்கள் இரண்டாம் தர குடிமக்கள் போர் முடிந்தபின் வேறு வழி கிடையாது இன்னும் எழுதலாம் வேணாம் காலையில் நிம்மதியாய் எழுந்து கோப்பி குடிக்கணும் .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.