Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடற்படையினரால் தயாரிக்கப்பட்ட இரண்டு படகுகள் சீஷெல்ஸ் நாட்டுக்கு கையளிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை கடற்படையினரால் தயாரிக்கப்பட்ட இரண்டு கடலோர ரோந்து படகுகளை சீஷெல்ஸ் நாட்டுக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் இன்று (01) முற்பகல் கொழும்பு துறைமுக வளாகத்தில் உள்ள இலங்கை கடற்படை கப்பல் நிறுவனத்தில் இடம்பெற்றது.

இலங்கைக்கும் சீஷெல்ஸ் நாட்டுக்குமிடையிலான இருதரப்பு உறவுகளை பலப்படுத்தும் நோக்குடன் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கடந்த 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் சீஷெல்ஸுக்கு மேற்கொண்ட அரசமுறை பயணத்தின்போது வழங்கிய உறுதிமொழிக்கிணங்க இலங்கையின் அன்பளிப்பாக இந்த கடற்படை படகுகள் சீஷெல்ஸ் நாட்டுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த கடற்படை ரோந்து படகுகள் வெலிசரை கடற்படை முகாமில் அமைக்கப்பட்டுள்ள கடலோர ரோந்து படகுகள் நிர்மாணிக்கும் திட்டத்தின் கீழ் சர்வதேச நியமங்களுக்கேற்ப தயாரிக்கப்பட்டுள்ளதுடன், இலங்கை கடற்படை தொழிநுட்பத்தை பயன்படுத்தி கடற்படை பொறியியலாளர்களின் மேற்பார்வையின் கீழ் ஆறு வாரகால குறுகிய காலப்பகுதியில் தயாரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் இது போன்ற மற்றுமொரு படகையும் இலங்கையிடமிருந்து கொள்வனவு செய்வதற்கு சீஷெல்ஸ் அரசாங்கம் இலங்கை கடற்படையிடம் விருப்பம் தெரிவித்துள்ளது.

இந்த படகுகளை கையளிக்கும் நிகழ்வுக்கு சீஷெல்ஸ் நாட்டின் உப ஜனாதிபதி வின்சன்ட் மெரிடன் இலங்கைக்கு வந்திருந்ததுடன், ஜனாதிபதியினால் படகுகளை கையளிப்பதற்கான ஆவணங்கள் அவரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

http://globaltamilnews.net/2019/111897/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, பிழம்பு said:

இலங்கைக்கும் சீஷெல்ஸ் நாட்டுக்குமிடையிலான இருதரப்பு உறவுகளை பலப்படுத்தும் நோக்குடன் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கடந்த 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் சீஷெல்ஸுக்கு மேற்கொண்ட அரசமுறை பயணத்தின்போது வழங்கிய உறுதிமொழிக்கிணங்க இலங்கையின் அன்பளிப்பாக இந்த கடற்படை படகுகள் சீஷெல்ஸ் நாட்டுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இஞ்சை பாரடா!!!!!!! உலகம் முழுக்க புளுத்த கடனாம்......இதுக்கை தான தர்மம் வேறை :grin:

4 hours ago, குமாரசாமி said:

இஞ்சை பாரடா!!!!!!! உலகம் முழுக்க புளுத்த கடனாம்......இதுக்கை தான தர்மம் வேறை :grin:

 

கடன்காரர்கள், ஏழைகள் தர்மம்  செய்வது தப்பா?

  • கருத்துக்கள உறவுகள்

artworks-000425134896-o0x1re-t500x500.jp

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 hours ago, thulasie said:

 

கடன்காரர்கள், ஏழைகள் தர்மம்  செய்வது தப்பா?

ஏழைகள் தானதர்மம் செய்வது தப்பல்ல..
கடன்காரர் தானதர்மம் செய்வதுதான் பெரும் தப்பு....கேவலமும் கூட

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்னவோ இந்தக் கடலோர ரோந்துப் படகுகள் எல்லாம் அன்பளிப்பாக குடுக்கிற ப்ளவுஸ் பீஸ் , பொன்னாடை ரேஞ்ச்சுக்கு வந்திட்டுது போல....எல்லாரும் ஆளை ஆள் மாறி மாறி அங்கும் இங்குமாய் குடுத்துக் கொண்டிருக்கினம்.......!  😒

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவின் முதலீடுகள் இந்த நாட்டில் தானே உள்ளது என முன்பு செய்திகள் வந்தன?:unsure:

  • கருத்துக்கள உறவுகள்

சிலதை வைச்சிருப்பதைவிட தட்டி  விடுவது  இலாபகரமானது

  • கருத்துக்கள உறவுகள்

கப்பல் கட்டும் அளவுக்கு இலங்கை கடற்படை வளர்ந்திருக்கிறார்கள் என்பதை மறந்துவிட்டார்கள் நம்ம கருத்தாளர்கள்  இலங்கை அன்பளிப்பாக வாங்கியது போக இலங்கை அன்பளிப்பாக கொடுக்கிறதென்பது உலகச் செய்திகளாக வரப்போகிறது .

10 hours ago, குமாரசாமி said:

ஏழைகள் தானதர்மம் செய்வது தப்பல்ல..
கடன்காரர் தானதர்மம் செய்வதுதான் பெரும் தப்பு....கேவலமும் கூட

பெரும்பாலான ஏழைகள், கடனில்தான் சீவியம் நடத்துகின்றனர்.

புலம்பெயர்ந்தவர்கள், கடனட்டை பாவித்துதான் சிறி லங்கா போய், தன் சொந்த பந்தங்களுக்கு தர்மம் செய்கின்றனர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
41 minutes ago, thulasie said:

பெரும்பாலான ஏழைகள், கடனில்தான் சீவியம் நடத்துகின்றனர்.

புலம்பெயர்ந்தவர்கள், கடனட்டை பாவித்துதான் சிறி லங்கா போய், தன் சொந்த பந்தங்களுக்கு தர்மம் செய்கின்றனர்.

ஏழைகள் என்றால் கடன்பட்டவர்கள் என்ற அர்த்தமல்ல. உங்கள் விளக்கம் தவறானது. அத்துடன் புலம்பெயர்ந்தவர்கள் கடனட்டை பாவித்து தர்மம் செய்கின்றார்கள் என்பதற்காக அந்த நாடும் கடன்பட்டு உதவி செய்வேண்டுமா என்ன?tw_tounge:

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தனிக்காட்டு ராஜா said:

கப்பல் கட்டும் அளவுக்கு இலங்கை கடற்படை வளர்ந்திருக்கிறார்கள் என்பதை மறந்துவிட்டார்கள் நம்ம கருத்தாளர்கள்  இலங்கை அன்பளிப்பாக வாங்கியது போக இலங்கை அன்பளிப்பாக கொடுக்கிறதென்பது உலகச் செய்திகளாக வரப்போகிறது .

இந்தியாவுக்கு 150 கோடி ரூபாவை சிறிலங்கா கொடுக்கப்போகினமாம்

Just now, குமாரசாமி said:

ஏழைகள் என்றால் கடன்பட்டவர்கள் என்ற அர்த்தமல்ல. உங்கள் விளக்கம் தவறானது. 


 

பெரும்பாலான ஏழைகள், கடனில்தான் சீவியம் நடத்துகின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

ஏழைகள் என்றால் கடன்பட்டவர்கள் என்ற அர்த்தமல்ல. உங்கள் விளக்கம் தவறானது. அத்துடன் புலம்பெயர்ந்தவர்கள் கடனட்டை பாவித்து தர்மம் செய்கின்றார்கள் என்பதற்காக அந்த நாடும் கடன்பட்டு உதவி செய்வேண்டுமா என்ன?tw_tounge:

புலி அழிந்தமையால் எமக்கு இப்ப புலம்பெயர்ந்தவர்கள் தான் பகை க‌ண்டியளோ:14_relaxed:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, putthan said:

இந்தியாவுக்கு 150 கோடி ரூபாவை சிறிலங்கா கொடுக்கப்போகினமாம்

சீனாவிட்டையிருந்து ஒரு பில்லியன் டொலர் கடன் வாங்கினால் 150 இல்லை 300ம் குடுக்கலாம் தானே...😀

 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

சீனாவிட்டையிருந்து ஒரு பில்லியன் டொலர் கடன் வாங்கினால் 150 இல்லை 300ம் குடுக்கலாம் தானே...😀

அவையள் இவையளுக்கு புகையிரதமும் வீடும் கட்டிக்கொடுக்க... என்ன மாதிரி எல்லாம் அரசியல் செய்யிறாங்கள் .....ஆனால் தமிழனுக்கு அதிகாரம் கொடுக்கிறது என்றால் சிங்கங்கள் கிளர்ந்தெழுந்திடுவாங்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, putthan said:

இந்தியாவுக்கு 150 கோடி ரூபாவை சிறிலங்கா கொடுக்கப்போகினமாம்

இலங்கை வாங்குவது பிரச்சினை இல்லை நாடுகள் பல கடனில் தான் இருக்கு ( ஆசியாவில்) ஆனால் அன்பளிப்பு என்பது மிக பேசு பொருளாக இருக்கும் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.