Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விக்னேஸ்வரன் தலைமையில் விசேட குழுவொன்று ஐ.நா. கூட்டத்தொடரில் பங்கேற்க வேண்டும் – அனந்தி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விக்னேஸ்வரன் தலைமையில் விசேட குழுவொன்று ஐ.நா. கூட்டத்தொடரில் பங்கேற்க வேண்டும் – அனந்தி

விக்னேஸ்வரன் தலைமையில் விசேட குழுவொன்று ஐ.நா. கூட்டத்தொடரில் பங்கேற்க வேண்டும் – அனந்தி

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில், வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் தலைமையில் விசேட குழு ஒன்று பங்குகொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

யாழ் ஊடக அமையத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த முன்னாள் வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், தமது வழிகாட்டலின் கீழ் இயங்கும் குழு ஒன்றை உருவாக்கி ஐ.நா.வுக்கு அனுப்பி வைக்கவேண்டும்.

அவர்கள் தாயக தமிழர்கள், புலம்பெயர் தமிழர்கள் மற்றும், தமிழக தமிழர்களுடன் இணைந்து, ஐ.நா.வில் செயற்படவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

http://www.samakalam.com/செய்திகள்/விக்னேஸ்வரன்-தலைமையில்-வ/

 

13 hours ago, கிருபன் said:

இதன்போது மேலும் தெரிவித்த அவர், வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், தமது வழிகாட்டலின் கீழ் இயங்கும் குழு ஒன்றை உருவாக்கி ஐ.நா.வுக்கு அனுப்பி வைக்கவேண்டும்.

அவர்கள் தாயக தமிழர்கள், புலம்பெயர் தமிழர்கள் மற்றும், தமிழக தமிழர்களுடன் இணைந்து, ஐ.நா.வில் செயற்படவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சிறந்ததொரு கோரிக்கை!

55 minutes ago, போல் said:

சிறந்ததொரு கோரிக்கை!

போல்,

அனந்தி தான் அரச சேவையில் பணியாற்றத் தொடங்கி விட்டமையால் இனி ஜெனிவாவுக்கு அரசு அனுமதி அளித்தால் தான் போக முடியும் என சொல்லியிருப்பதாக தகவல்கள் வருகின்றன. இது உண்மையா? இதே அனந்தி கடந்த முறை ஜெனிவா சென்ற சமயம் தான் இலங்கை மாகாணசபை உறுப்பினர் என்பதால் போர்க் குற்றம் பற்றி கதைக்க முடியாது என்று சொல்லி இரண்டு மூன்று வரிகள் மட்டும் வாசித்து விட்டு உட்கார்ந்து விட்டார் என சொல்கின்றனர்....இதுவும் உண்மையா

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, நிழலி said:

போல்,

அனந்தி தான் அரச சேவையில் பணியாற்றத் தொடங்கி விட்டமையால் இனி ஜெனிவாவுக்கு அரசு அனுமதி அளித்தால் தான் போக முடியும் என சொல்லியிருப்பதாக தகவல்கள் வருகின்றன. இது உண்மையா? இதே அனந்தி கடந்த முறை ஜெனிவா சென்ற சமயம் தான் இலங்கை மாகாணசபை உறுப்பினர் என்பதால் போர்க் குற்றம் பற்றி கதைக்க முடியாது என்று சொல்லி இரண்டு மூன்று வரிகள் மட்டும் வாசித்து விட்டு உட்கார்ந்து விட்டார் என சொல்கின்றனர்....இதுவும் உண்மையா

சிறீலங்காவில் அரச உத்தியோகத்தர்கள் நாட்டைவிட்டு செல்வதானால் அனுமதி பெற்றே செல்லலாம், அதுவும் மட்டுப்படுத்தப்பட்ட அனுமதியே வழங்கப்படும்.

விக்கியர் ஆளுநரின் அனுமதி பெற்றே முன்னர் வெளிநாடுகளுக்கு சென்று வந்தார்.

Edited by MEERA

49 minutes ago, நிழலி said:

போல்,

அனந்தி தான் அரச சேவையில் பணியாற்றத் தொடங்கி விட்டமையால் இனி ஜெனிவாவுக்கு அரசு அனுமதி அளித்தால் தான் போக முடியும் என சொல்லியிருப்பதாக தகவல்கள் வருகின்றன. இது உண்மையா?

நிழலி!
இது உண்மை! அவர் தனது சொந்த உழைப்பில் வாழ நினைப்பதால் கிடைத்த ஒரு வேலைவாய்ப்பை, சந்தர்ப்பத்தை, தனது அடிப்படை உரிமையை பயன்படுத்துகிறார் எனக் கருதுகிறேன்! இது கவுரவமான மனிதர்களின் குணங்களில் ஒன்று எனக் கருதுகிறேன்! பாராட்டப்பட வேண்டிய ஒன்று!

49 minutes ago, நிழலி said:

இதே அனந்தி கடந்த முறை ஜெனிவா சென்ற சமயம் தான் இலங்கை மாகாணசபை உறுப்பினர் என்பதால் போர்க் குற்றம் பற்றி கதைக்க முடியாது என்று சொல்லி இரண்டு மூன்று வரிகள் மட்டும் வாசித்து விட்டு உட்கார்ந்து விட்டார் என சொல்கின்றனர்....இதுவும் உண்மையா

இது தவறு!
தமிழரை பிரதிநிதித்துவப்படுத்தி பேசுபவர்கள் தமக்குள் பேசப்போகும் விடயதானங்களை தம்முள் பகிர்ந்து பிரித்துக்கொள்ளவது வழமை! அந்த அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொறுப்புக்கள் பொது உடன்பாடு அடிப்படையில் பிரிக்கப்படும்! கிடைக்கும் நேரத்தை முழுமையாக/பயனுள்ளதாக பயன்படுத்த முன்னமே தங்களுக்குள் கலந்துரையாடி ஒரு பொது இணக்கத்துடன் இவ்வாறான ஏற்பாடுகள் செய்யப்படுவது வழமை. தனது கடமையை அனந்தி சரிவர செய்திருந்தார்!

இவ்வாறு பிரிக்கப்படும் போது தனிப்பட்ட நபர்கள் வாழும் சூழ்நிலை, இடங்கள், அவர்கள் எதிர்காலத்தில் எதிர்கொள்ளக்கூடிய பிரச்சினைகள், அவர்கள் எதிர்காலத்தில் சாதிக்க வேண்டிய விடயங்கள் போன்றவையும் கருதப்பட்டு, பரவலாக ஆராய்ந்து பேசவேண்டிய விடயதானங்கள் முடிவு செய்யப்படுகிறது. இது ஒரு இராஜதந்திர நகர்வு என்று கருதலாம்.

Edited by போல்
எழுத்துப்பிழை திருத்தம்

17 minutes ago, போல் said:

நிழலி!
இது உண்மை! அவர் தனது சொந்த உழைப்பில் வாழ நினைப்பதால் கிடைத்த ஒரு வேலைவாய்ப்பை, சந்தர்ப்பத்தை, தனது அடிப்படை உரிமையை பயன்படுத்துகிறார்! இது கவுரவமான மனிதர்களின் குணங்களில் ஒன்று எனக் கருதுகிறேன்! பாராட்டப்படப் வேண்டிய ஒன்று!

.

விளக்கத்துக்கு நன்றி போல்.

அனந்தி சொந்த உழைப்பில் வாழ நினைப்பதற்கு உரிமையுடைவர் என்பதை ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் எந்த அரசை / அரச இயந்திரத்தை இவ்வளவு காலமும் கடுமையாக விமர்சித்தாரோ, எந்த அரச இயந்திரத்தை பேரினவாத அரசு என்று ஏற்றுக் கொண்டு அதற்கு எதிராக போராடினாரோ அந்த அரச இயந்திரத்தில் ஒரு வேலையை ஏற்றுக் கொண்டு ஜெனிவாவுக்கு செல்வதற்கு அந்த அரசிடம் அனுமதி பெற வேண்டி வந்தமையை சந்தர்ப்பவாதமாகத்தான் பார்க்கின்றேன்.

 

Just now, நிழலி said:

விளக்கத்துக்கு நன்றி போல்.

அனந்தி சொந்த உழைப்பில் வாழ நினைப்பதற்கு உரிமையுடைவர் என்பதை ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் எந்த அரசை / அரச இயந்திரத்தை இவ்வளவு காலமும் கடுமையாக விமர்சித்தாரோ, எந்த அரச இயந்திரத்தை பேரினவாத அரசு என்று ஏற்றுக் கொண்டு அதற்கு எதிராக போராடினாரோ அந்த அரச இயந்திரத்தில் ஒரு வேலையை ஏற்றுக் கொண்டு ஜெனிவாவுக்கு செல்வதற்கு அந்த அரசிடம் அனுமதி பெற வேண்டி வந்தமையை சந்தர்ப்பவாதமாகத்தான் பார்க்கின்றேன்.

இல்லை நிழலி!

எம்மிடம் வரிகளை சுரண்டி, எமது சொத்துக்களை கொள்ளையடித்து, எமது சொத்துக்களை ஆக்கிரமித்து  இயங்கும் அரசு ஒரு ஆக்கிரமிப்பு அரசாக இருந்தாலும் அதில் எமக்குரிய வேலை வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வது சந்தர்ப்பவாதம் ஆகவே முடியாது! அது வேறுவழிகளின்றி வரிகளை செலுத்தும் ஒருவரது அடிப்படை உரிமை!  அரச ஊழியர்கள் வெளிநாடு செல்ல சம்பந்தப்பட்ட துறைகளில் அனுமதி பெற வேண்டும் என்பது இங்கு நடைமுறை. தமிழர்கள் எதிர்கொள்ளும் இக்கட்டான நிலைகளில் இது போன்ற சூழ்நிலைகளும் ஒன்று என்பதை விளங்கிக்கொள்வீர்கள் என நினைக்கிறேன்! நிச்சயமாக சந்தர்ப்பவாதம் ஆகாது!

ஒரு வீரப் பெண்மணி தவறான முடிவுகளை எடுத்திருப்பார் எனக் கருத இடமில்லை.

அவருக்கு உதவாவிட்டாலும் தமிழர்கள் எதிர்கொள்ளும் இக்கட்டான நிலைகளின் முரண்பாடுகளை வைத்து அவரை கொச்சைப்படுத்துவது அழகல்ல!

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, போல் said:

இல்லை நிழலி!

எம்மிடம் வரிகளை சுரண்டி, எமது சொத்துக்களை கொள்ளையடித்து, எமது சொத்துக்களை ஆக்கிரமித்து  இயங்கும் அரசு ஒரு ஆக்கிரமிப்பு அரசாக இருந்தாலும் அதில் எமக்குரிய வேலை வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வது சந்தர்ப்பவாதம் ஆகவே முடியாது! அது வேறுவழிகளின்றி வரிகளை செலுத்தும் ஒருவரது அடிப்படை உரிமை!  அரச ஊழியர்கள் வெளிநாடு செல்ல சம்பந்தப்பட்ட துறைகளில் அனுமதி பெற வேண்டும் என்பது இங்கு நடைமுறை. தமிழர்கள் எதிர்கொள்ளும் இக்கட்டான நிலைகளில் இது போன்ற சூழ்நிலைகளும் ஒன்று என்பதை விளங்கிக்கொள்வீர்கள் என நினைக்கிறேன்! நிச்சயமாக சந்தர்ப்பவாதம் ஆகாது!

ஒரு வீரப் பெண்மணி தவறான முடிவுகளை எடுத்திருப்பார் எனக் கருத இடமில்லை.

அவருக்கு உதவாவிட்டாலும் தமிழர்கள் எதிர்கொள்ளும் இக்கட்டான நிலைகளின் முரண்பாடுகளை வைத்து அவரை கொச்சைப்படுத்துவது அழகல்ல!

வீரப் பெண்மணியா உங்களுக்கே இது ஓவராய் இல்லை😠 ..மு.வாய்க்காலில் மரணித்த பெண் போராளிகள்,அங்கவீனமான போராளிகள் இதை கேட்டால்😞 ...கணவர் பலவந்தமாய் இயக்கத்திற்கு ஆட்களை சேர்க்கும் போதும் அம்மணி தன்ட குடும்பத்தை மட்டும் கவனித்து கொண்டு இருந்தா...இப்பவும் அதைத் தான் செய்கிறா😫 ...என்னத்தை செய்து கிழித்தார் என்று வீரப் பெண்மணி என்று பட் டம்?
 

22 hours ago, MEERA said:

சிறீலங்காவில் அரச உத்தியோகத்தர்கள் நாட்டைவிட்டு செல்வதானால் அனுமதி பெற்றே செல்லலாம், அதுவும் மட்டுப்படுத்தப்பட்ட அனுமதியே வழங்கப்படும்.

விக்கியர் ஆளுநரின் அனுமதி பெற்றே முன்னர் வெளிநாடுகளுக்கு சென்று வந்தார்.

 

விக்கியருக்கு ஆளுநரிடம் அனுமதி பெற்று வெளிநாட்டுக்கு போய் வரத் தெரியுது...அபிவிருத்தி செய்யத் தான் தெரியல்ல 

தாயகத்தில் இருந்து ஓர் கனமான தலைமை கண்டிப்பாக ஜெனீவா வர வேண்டும்.

* கஜேந்திரகுமார்  - பாராளுமன்ற உறுப்பினர் பதவி அற்ற பிரதிநிதி/கட்சி - கனதி கேள்விக்குறியது.

* கூட்டமைப்பு - சிங்கள யாணைப்பாகர்களாக கண்டிப்பாக வருவார்கள்

நிச்சயம், விக்கியரின் வரவு காலத்தின் தேவை!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

விக்கியருக்கு ஆளுநரிடம் அனுமதி பெற்று வெளிநாட்டுக்கு போய் வரத் தெரியுது...அபிவிருத்தி செய்யத் தான் தெரியல்ல 

ஆளுநர் அனுமதிக்க வேண்டுமே.....

இது தொடர்பாக பல தடவைகள் இங்கு எழுதியாச்சு...

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, MEERA said:

ஆளுநர் அனுமதிக்க வேண்டுமே.....

இது தொடர்பாக பல தடவைகள் இங்கு எழுதியாச்சு...

நான் உங்களுக்கு மட்டும் எழுத வேண்டும் என்று எழுதவில்லை...விக்கியின் சொந்த நலனுக்காய் எதை கேட்டாலும் குடுத்த ஆளுநர் மக்கள் நலனுக்காய் கேட்டால் மட்டும் கொடுக்கவில்லையாக்கும்...இன்னொரு திரியில்  டக்ளசின் பகுதியில் உள்ள வீதிகள் அந்த மாதிரி இருக்குது என்று நெடுக்கர் எழுதி இருந்தார்...அவரால் செய்ய முடியுது என்றால் ஏன் சம்மந்தர்,சுமத்திரன்,சீ வி யால் முடியவில்லை😧

.
கடைசியில் தீர்வும் இல்லை,அபிவிருத்தியும் இல்லை...இப்படியே காலத்தை கடத்த வேண்டியது தான் 
 

On 2/15/2019 at 1:40 AM, ரதி said:

வீரப் பெண்மணியா உங்களுக்கே இது ஓவராய் இல்லை😠 ..மு.வாய்க்காலில் மரணித்த பெண் போராளிகள்,அங்கவீனமான போராளிகள் இதை கேட்டால்😞 ...கணவர் பலவந்தமாய் இயக்கத்திற்கு ஆட்களை சேர்க்கும் போதும் அம்மணி தன்ட குடும்பத்தை மட்டும் கவனித்து கொண்டு இருந்தா...இப்பவும் அதைத் தான் செய்கிறா😫 ...என்னத்தை செய்து கிழித்தார் என்று வீரப் பெண்மணி என்று பட் டம்?

ஊர் மக்கள் அவரை வீரப் பெண்மணி என்று நினைத்தபடியால் தான் அவருக்கு பெருமளவு வாக்குகள் கிடைத்துள்ளது.

அனந்தி நேர்மையாக செயற்பட்டதால் தான் ஒட்டுண்ணிகளாக வாழும் தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் அவருக்கு பல்வேறு பிரச்சினைகளை கொடுத்து, கட்சியிலிருந்து வெளியேற்றினர்.

எனவே உங்களைப் போலவே நாட்டை விட்டு தப்பி ஓடியதுடன் வம்பளந்து கொண்டிருந்தால்  தான் வீரப்பெண்மணி என்று நீங்கள் நினைத்தால் அதற்கு யாரும் ஒன்றும் செய்ய முடியாது!

On 2/15/2019 at 1:40 AM, ரதி said:

விக்கியருக்கு ஆளுநரிடம் அனுமதி பெற்று வெளிநாட்டுக்கு போய் வரத் தெரியுது...அபிவிருத்தி செய்யத் தான் தெரியல்ல  

முற்று முழுதாக விதண்டாவாதம் என்பது இதைத் தான்!

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, போல் said:

ஊர் மக்கள் அவரை வீரப் பெண்மணி என்று நினைத்தபடியால் தான் அவருக்கு பெருமளவு வாக்குகள் கிடைத்துள்ளது.

அனந்தி நேர்மையாக செயற்பட்டதால் தான் ஒட்டுண்ணிகளாக வாழும் தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் அவருக்கு பல்வேறு பிரச்சினைகளை கொடுத்து, கட்சியிலிருந்து வெளியேற்றினர்.

எனவே உங்களைப் போலவே நாட்டை விட்டு தப்பி ஓடியதுடன் வம்பளந்து கொண்டிருந்தால்  தான் வீரப்பெண்மணி என்று நீங்கள் நினைத்தால் அதற்கு யாரும் ஒன்றும் செய்ய முடியாது!

முற்று முழுதாக விதண்டாவாதம் என்பது இதைத் தான்!

சரி வேற என்ன?...இன்னொரு தேர்தல் வராமலா போகப் போது வீரப் பெண்மணியைம்,ஜயாவும் தேர்தலில் நின்று வெல்லட்டும் பிறகு பார்ப்போம் 

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களின் உயிருக்கு யார் பொறுப்பு ஐ நா பதில் கூற வேண்டும்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.