Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுரேன் ராகவன் தலைமையில் ஆரம்பமாகும் வட.மாகாண பௌத்த மாநாடு

Featured Replies

22 hours ago, Jude said:

பாமரர் என்றால் சுயநலவாதிகள் என்று பொருள் வழங்குகிறீர்களா? தமிழ் சொற்களுக்கு நாம் நினைத்த அர்த்தம் கொடுத்து தமிழை குழப்பலாமா?

இல்லை அவ்வாறு நான் பொருள் வழங்க வில்லை. ஒரு சமுதாயத்தில் கல்லவியறிவுடையோர் அதிகரிக்க அந்தசமுதாயத்தில் பண்பாட்டு மறுமலர்சசி ஏற்படும். பத்தாம் பசலித்தனமான சமூக நடைமுறைகள் காலாவதியாகி புதுமையான பண்பாட்டு வளர்ச்சி உருவாகும்.ஆனால் தமிழ்ச் சமுதாயத்தில் அவ்வாறான மாற்றம் கடந்த 2 நூற்றாண்டுகளாக  ஏற்படவில்லை.  சாதி அமைப்பு சீதனம்,பிரதேசரீதியில் மக்களை ஒடுக்குதல் போன்ற  விடயங்களை ஒழிப்பதற்கு பதிலாக அவற்றை அவற்றை ஊக்குவித்ததில் படித்தவர்கள் என கூறிக்கொள்வோருக்கு தலைமுறை தலைமுறையாக  முக்கிய பங்கு உண்டு. 

மேற்கு நாடுகளில் கல்வி கற்ற வேளை பல்வேறு நாட்டு மக்களுடன. நெருங்கி பழகும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கும். அவ்வேளைகளில் எம்மில் உள்ளபல பிற்போக்கு நடைமுறைகள் படித்தவர்களுக்கு வெட்கத்தை உண்டு பண்ணவில்லை.  மாற்றங்றாகளை எமது சமுதாயத்தில்க ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் வரவில்லை. மாறாக அதே மனநிலையில் திரும்ப இங்கு வந்து கொழுத்த சீதனத்துடன் திருமணம் செய்து யாழ்பாண சமுகத்தின் அத்தனை பத்தாம்பசலித்தனங்களையும் ஏற்றுக்கொண்டு ஊக்கிவித்த இவர்களை பாமரர்கள் என்று கூறுவது தவறாகுமா?

 

Edited by tulpen
எழுத்து பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Eppothum Thamizhan said:

தமிழ் கிறீஸ்தவர்கள் எல்லோரும் தமிழ் பெளத்தர்களாக தயாரா??

ஏன் தமிழ் இந்துக்களை விட்டு விட்டீர்கள்?  தமிழரில் பெரும்பான்மையானவர்களாக இருந்தாலும் அவர்கள் இப்போது    தமிழர் இல்லையா? 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Jude said:

ஏன் தமிழ் இந்துக்களை விட்டு விட்டீர்கள்?  தமிழரில் பெரும்பான்மையானவர்களாக இருந்தாலும் அவர்கள் இப்போது    தமிழர் இல்லையா? 

அந்த இளிச்சவாய் கூட்டத்தைத்தானே எல்லோருமே அவர் அவர் இஷ்டத்துக்கு மாற்றிக்கொண்டே இருக்கிறீர்கள். அதை  தனியாக ஏன் குறிப்பிடவேண்டும் என்றுதான் விட்டுவிட்டேன்.

3 hours ago, Eppothum Thamizhan said:

அந்த இளிச்சவாய் கூட்டத்தைத்தானே எல்லோருமே அவர் அவர் இஷ்டத்துக்கு மாற்றிக்கொண்டே இருக்கிறீர்கள். அதை  தனியாக ஏன் குறிப்பிடவேண்டும் என்றுதான் விட்டுவிட்டேன்.

உண்மை தான். எனக்கு தெரிந்து மதம் மாறியவர்கள் எல்லோரும் முன்பு சைவப்பழங்ககளாக கோவில், கோவிலாக திரிந்தவர்கள்.யாரிடமாவது ஏமாற வேண்டும் அவர்களுக்கு. ஒன்றில் பிராமணர்களிடம் இல்லையேல் அல்லோயா கும்பலிடம். 

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Eppothum Thamizhan said:

அந்த இளிச்சவாய் கூட்டத்தைத்தானே எல்லோருமே அவர் அவர் இஷ்டத்துக்கு மாற்றிக்கொண்டே இருக்கிறீர்கள். அதை  தனியாக ஏன் குறிப்பிடவேண்டும் என்றுதான் விட்டுவிட்டேன்.

நீங்கள் தமிழரான இந்துவாக இருந்தாலும் அந்த உரிமையில் கூட இப்படி எங்கள் மக்களை குறைகூறாதீர்கள்.

இந்து மதம் தனிப்பட்ட ஆன்மீக தேடலுக்கு மிகச்சிறந்த மதம். அரசியல் ஆதிக்கத்துக்கு சிறந்த ஆற்றல் கொண்ட மதங்களாக கத்தோலிக்கம் முதலிலும் ஏனைய கிறீஸ்தவங்களும் இசுலாமும் யூதாயேயமும் அடுத்து பௌத்தமும் அமைந்து இருக்கின்றன. இலங்கையை பொறுத்த அளவில் அரசியல் ஆதிக்கத்தின் திறவுகோலே பௌத்தம் தான். அரசியல் ஆதிக்க மதங்களில் வளர்த்தவர்கள் இவ்வாறாக மதங்களை கொண்டு அரசியல் சக்தியை அதிகரிக்கும் யுக்தியை மற்றவர்களிலும் பார்க்க நன்கு அறிவர். இன்றைய ஆளுனரும் சுமேந்திரனும் இவ்வாறானவர்களே.

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Jude said:

பெரும்பான்மையான சிங்கள கிறிஸ்தவர்கள் இனவாதிகள் அல்ல. சொந்த அனுபவத்தில் நான் இதனை சொல்ல முடிகிறது. இதற்கு காரணம் சிங்கள கிறிஸ்தவர்களை சிறுபான்மையாக  மட்டுமல்ல இனத்துரோகிகலாகவே சிங்கள பௌத்தர்கள் பார்க்கிறார்கள். பெரும்பான்மையான சிங்கள பௌத்தர்கள் இலங்கைக்கு தமிழர்கள் அனைவரையும் ஐரோப்பிய கிறிஸ்தவர்கள் தான் கொண்டு வந்தார்கள் என்றே கருதுகிறார்கள். இந்த சிங்கள பௌத்தர்களில் நன்கு கல்வி கற்று வெளிநாடுகளில் வாழ்பவர்களும் இலங்கை அரசின் உயர்மட்ட அலுவலர்களாக இருந்தவர்களும் அடக்கம்.

இன்றும் ஐரோப்பா மற்றும் அமெரிக்க ஆதிக்க நோக்கங்களுக்கு விடுதலை புலிகளை கிறிஸ்தவர்ளே பின்னின்று ஊக்குவித்தார்கள் என்பதே சிங்கள பௌத்தர்களின் வாதமாக இருக்கிறது. யு.என்.பி. யில் பெருமளவு கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். ரணில் விக்க்ரமசிங்கவும்  கிறிஸ்தவ பின்னணியை கொண்டவரே. யு.என்.பி.  ஐரோப்பா மற்றும் அமெரிக்க நலன்களுக்கு ஆதரவான கட்சி.ஆகவே இந்த கிறிஸ்தவ பின்னணியை கொண்டவர்களை சிங்கள  பௌத்தர்கள் துரோகிகளாக பார்க்கிறார்கள். சிங்கள பௌத்தர்களை சாந்தப்படுத்தும் நோக்கில் சிங்கள கிறிஸ்தவ தலைவர்கள் சிங்கள  பௌத்த மேலாண்மையை  ஏற்றுக்கொண்டு அறிக்கைகள் விடும் வழக்கத்தை கொண்டிருக்கிறார்கள்.

சிங்கள கிறிஸ்தவர்களும் தமிழ் கிறிஸ்தவர்களும் மத ரீதியில் பல நிகழ்வுகளில் ஒன்றாக சந்திப்பது வழக்கம். மடு திருப்பதி ஆண்டாண்டு சிங்கள கிறிஸ்தவர்களும் தமிழ் கிறிஸ்தவர்களும் சந்திக்கும் ஒரு இடமாக இருக்கிறது. காலம் சென்ற வைத்தியரும் அரசியல்வாதியுமான ஜெயலத் ஜெயவர்த்தன தமிழரின் அபிமானம் பெற்ற சிங்கள கிறிஸ்தவர். இவர் போல பலர் இருக்கிறார்கள்.

சிங்களவர்களை பொருத்தவரை சிங்கள மொழி பேசும் பெளத்தர்கள் உலகிலயே தாங்கள் மட்டும் தான் என்று நினைக்கிறார்கள் அதை அழிய விடாமல் பாதுகாக்க வேண்டும் என்ற கொள்கையுடன் மதவெறி ,இனவெறி பிடித்து வாழ்கிறார்கள்.இதை தமிழ‌ர்கள் பெளத்தர்களாக மாறி தடுக்க முடியாது...

சிங்கள சைவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.தேவநம்பியதீசன் ஒரு சைவன்....
மேலும் மதங்கள் வன்முறைகள் மூலம் பரப்பட்ட ஒன்று....ஒரு காலகட்டத்தில் ஒரு இனக்குழுமத்தை ஆயுத பலம் மூலம் மாற்றக்கூடியதாக இருந்தது...இன்றைய காலகட்டத்தில் அது சாத்தியமில்லை...

சிங்கள இராணுவம் தமிழர்களை ஆயுத பலத்தால் தமிழ் பெளத்தர்களாக மாற்றமாட்டார்கள்....
இந்துக்களும் எல்லோரும் விரும்பி பெளத்தர்களாக மாறமாட்டார்கள்..

அதுடன் நடைமுறைக்கு சாத்தியமான விடயம் அல்ல....

சிங்கள பெளத்தர்கள் கிறிஸ்தவர்கள் மீது கோபம் கொள்ள முக்கிய காரணம் 1962 ஆம் ஆண்டு இராணுவ புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்றுவ‌தற்காக  இராணுவசதி முயற்சியில் ஈடுபட்டவர்கள் சிங்கள தமிழ் கிறிஸ்தவர்கள் அத்துடன் பறங்கியினரும்.....அன்று புரட்சியில் ஈடுபட்ட டி மெல்,சில்வா,பெரேரா,அந்தோனிபிள்ளை,பஸ்டியாம்பிள்ளை போன்றோரின் வாரிசுகள் எல்லாம்  இன்று அரச அதிகாரத்தில் உள்ளனர்....

சுமத்திரனின் பெயருக்கு முன்னாள் ஒரு கிறிஸ்தவர் பெயர் இருந்திருந்தால் சிங்களம் அதை பிரச்சார்த்திற்க்கு பாவித்திருப்பார்கள்


 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Jude said:

இலங்கையை பொறுத்த அளவில் அரசியல் ஆதிக்கத்தின் திறவுகோலே பௌத்தம் தான். அரசியல் ஆதிக்க மதங்களில் வளர்த்தவர்கள் இவ்வாறாக மதங்களை கொண்டு அரசியல் சக்தியை அதிகரிக்கும் யுக்தியை மற்றவர்களிலும் பார்க்க நன்கு அறிவர். இன்றைய ஆளுனரும் சுமேந்திரனும் இவ்வாறானவர்களே.

எமது இனத்தை விற்று தமது இருப்பை தக்கவைத்து கொள்வதற்கு இவர்கள் செய்யும் சுத்து  மாத்துக்களுக்கு  நீங்கள் சூட்டும் பெயர் அரசியல் யுக்தி!! நல்லாதான் வக்காலத்து வாங்குகிறீர்கள்.

Edited by Eppothum Thamizhan

  • கருத்துக்கள உறவுகள்
On 4/2/2019 at 2:44 AM, Eppothum Thamizhan said:

எமது இனத்தை விற்று 

என்ன விலை போனது?

கூட கொடுத்து உங்கள் இனத்தை திருப்பி வாங்கலாமே?

  • கருத்துக்கள உறவுகள்
On 4/2/2019 at 2:44 AM, Eppothum Thamizhan said:

எமது இனத்தை விற்று தமது இருப்பை தக்கவைத்து கொள்வதற்கு இவர்கள் செய்யும் சுத்து  மாத்துக்களுக்கு  நீங்கள் சூட்டும் பெயர் அரசியல் யுக்தி!! நல்லாதான் வக்காலத்து வாங்குகிறீர்கள்.

சுமேந்திரனும் இராகவனும் தமது இருப்பை தக்க வைக்க உங்கள் இனத்தை "விற்க" வேண்டிய தேவை இல்லாதவர்கள். உங்கள் இனத்தில் தயவில் அவர்கள் இருப்பு இல்லை. ஜனாதிபதியின் தெரிவாக முன்னர் அறியப்படாத ராகவன் ஆளுனராகி இருக்கிறார். உங்கள் தெரிவு அல்ல. ஜனாதிபதியின் பிரதிநிதி அவர். அவர் தமிழ் பெயர் கொண்டவர், தமிழ் பேசுகிறார் என்பதால் அவரிடம் நீங்கள் வேறு எதையும் எதிர்பார்த்தால் அது உங்கள் தவறு.

சுமேந்திரனும் அவ்வாறே அழைக்கப்பட்டு அரசியலுக்கு வந்தவர். அவரது ஆதரவாளர்களால் தெரிவு செய்யப்பட்டு இருக்கிறார். உங்கள் தயவு அவர்களின் இருப்புக்கு தேவை இல்லாதது. 

அரசியல் யுக்தியை நீங்கள் சுத்து மாத்து என்று சொல்லும் போது எவ்வாறு அரசியல் யுக்தியை வரைவிலக்கண படுத்துகிறீர்கள் என்பதையும் சொன்னால் தான் சுத்து மாத்து எவ்வாறு அரசியல் யுக்தியில் இருந்து வேறு படுகிறது என்று நாம் அடையாளம் காணக்கூடியதாக இருக்கும். 

விடுதலை போராட்டங்களை பிடிக்காதவர்கள் அவற்றை பயங்கரவாதம் என்றார்கள். அரசியல் யுக்தியை நீங்கள் சுத்து மாத்து என்று சொல்வதும் அவ்வாறான ஒன்றா என்ற கேள்வி எழலாம் இல்லையா?

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்
On 4/2/2019 at 12:58 AM, putthan said:

சிங்களவர்களை பொருத்தவரை சிங்கள மொழி பேசும் பெளத்தர்கள் உலகிலயே தாங்கள் மட்டும் தான் என்று நினைக்கிறார்கள் அதை அழிய விடாமல் பாதுகாக்க வேண்டும் என்ற கொள்கையுடன் மதவெறி ,இனவெறி பிடித்து வாழ்கிறார்கள்.
 

சிங்கள மொழி பேசும் பெளத்தர்கள் உலகிலயே இவர்கள் மட்டும் தானே? இல்லையா? அவர்களுக்கு தமது தனித்துவத்தையும் கலாச்சாரத்தையும் பாதுகாக்க வேண்டும் என்ற விருப்பம் நியாயமானது தானே? அதை நீங்கள் மறுக்கும்  போது அவர்களுக்கு கோபம் வருவது எதிர்பார்க்க வேண்டிய ஒன்று தானே? உங்களுக்கு உங்கள் கலாச்சாரத்தையும் மொழியையும் கோவில்களையும் மறுக்கும் போது "வெறி கொள் தமிழர் புலிப்படை" என்று பொங்கி எழ வில்லையா நீங்கள்? அந்த கோபம் நியாயமானது தானே?

On 4/2/2019 at 12:58 AM, putthan said:

இதை தமிழ‌ர்கள் பெளத்தர்களாக மாறி தடுக்க முடியாது...

தமிழ் பௌத்தர்களின் தேவை சிங்கள பெளத்தர்கள்களின் தனித்துவத்தை அழிப்பதற்காக அல்ல. மாறாக,  பெளத்தம் இலங்கையில் சிங்களவர்களுக்கு மட்டும் உரித்தானதல்ல என்று நிறுவுவதற்கே தமிழ் பௌத்தம் தேவையானதாகிறது. தமிழ் பிரதேசங்களில், குறிப்பாக கந்தரோடையில் உள்ள விகாரைகள் சிங்களவர் இங்கு வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் அல்ல - தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்த ஆதாரங்கள் என்று நிறுவ தமிழ் பௌத்தம் தேவை. தொல்பொருள் திணைக்களம் பௌத்த எச்சங்களை கண்டவுடன் சிங்கள பௌத்தர்களை கொண்டு வரும் முயற்ச்சியை கேள்விக்குறியாக்கி தமிழ் பௌத்த விகாரைகளை நிறுவ தமிழ் பௌத்த வரலாறு மீளவும் உயிர் பெற வேண்டி உள்ளது.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக சிங்கள பொது மக்கள் பிக்குகளுக்கு தெய்வீக சக்தி இருப்பதாக நம்பி அஞ்சுகிறார்கள். தமிழ் பௌத்த பிக்குகள் இருந்தால் இந்த பிக்குகளுக்கும் அந்த சக்தி இருப்பதாக நம்பி அஞ்சுவார்கள். மேலும் இந்து கடவுள்களுக்கும் சிங்கள மக்களும் அரசியல்வாதிகளும் அஞ்சுகிறார்கள். ஆகவே இந்த அச்சத்தை பயன்படுத்தி அரசியல் வெற்றி பெரும் சாத்தியம் உள்ளது.

 

On 4/2/2019 at 12:58 AM, putthan said:

சிங்களவர்களை பொருத்தவரை சிங்கள மொழி பேசும் பெளத்தர்கள் உலகிலயே தாங்கள் மட்டும் தான் என்று நினைக்கிறார்கள் அதை அழிய விடாமல் பாதுகாக்க வேண்டும் என்ற கொள்கையுடன் மதவெறி ,இனவெறி பிடித்து வாழ்கிறார்கள்.இதை தமிழ‌ர்கள் பெளத்தர்களாக மாறி தடுக்க முடியாது...

சிங்கள சைவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.தேவநம்பியதீசன் ஒரு சைவன்....
மேலும் மதங்கள் வன்முறைகள் மூலம் பரப்பட்ட ஒன்று....ஒரு காலகட்டத்தில் ஒரு இனக்குழுமத்தை ஆயுத பலம் மூலம் மாற்றக்கூடியதாக இருந்தது...இன்றைய காலகட்டத்தில் அது சாத்தியமில்லை...

சிங்கள இராணுவம் தமிழர்களை ஆயுத பலத்தால் தமிழ் பெளத்தர்களாக மாற்றமாட்டார்கள்....
இந்துக்களும் எல்லோரும் விரும்பி பெளத்தர்களாக மாறமாட்டார்கள்..

அதுடன் நடைமுறைக்கு சாத்தியமான விடயம் அல்ல....

சிங்கள பெளத்தர்கள் கிறிஸ்தவர்கள் மீது கோபம் கொள்ள முக்கிய காரணம் 1962 ஆம் ஆண்டு இராணுவ புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்றுவ‌தற்காக  இராணுவசதி முயற்சியில் ஈடுபட்டவர்கள் சிங்கள தமிழ் கிறிஸ்தவர்கள் அத்துடன் பறங்கியினரும்.....அன்று புரட்சியில் ஈடுபட்ட டி மெல்,சில்வா,பெரேரா,அந்தோனிபிள்ளை,பஸ்டியாம்பிள்ளை போன்றோரின் வாரிசுகள் எல்லாம்  இன்று அரச அதிகாரத்தில் உள்ளனர்....

சுமத்திரனின் பெயருக்கு முன்னாள் ஒரு கிறிஸ்தவர் பெயர் இருந்திருந்தால் சிங்களம் அதை பிரச்சார்த்திற்க்கு பாவித்திருப்பார்கள்


 

 

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Jude said:

சிங்கள மொழி பேசும் பெளத்தர்கள் உலகிலயே இவர்கள் மட்டும் தானே? இல்லையா? அவர்களுக்கு தமது தனித்துவத்தையும் கலாச்சாரத்தையும் பாதுகாக்க வேண்டும் என்ற விருப்பம் நியாயமானது தானே? அதை நீங்கள் மறுக்கும்  போது அவர்களுக்கு கோபம் வருவது எதிர்பார்க்க வேண்டிய ஒன்று தானே?

ஜூட்,

நீங்கள் எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றிவிட்டீர்கள்.

சிங்களவர்களின் இனத்தையும், அவர்களின் பெளத்த மதத்தையும் அழிக்கக் கங்கணம் கட்டிக்கொண்டிருப்பது யாரென்று இங்கே நீங்கள் கூறுகிறீர்கள்? தமிழர்களாகிய நாங்களா? அப்படியானால், அது எப்போது முதல் நடந்துவருகிறதென்று கூறமுடியுமா? ஆகத், தமிழர்கள் இதுவரை செய்துவந்த போராட்டம் சிங்களவர்களின் கலாசாரத்தையும், மொழியையும், மதத்தையும் அழிக்கத்தானேயன்றி, தமிழர்களின் இருப்பைப் பாதுகாக்க அல்ல என்று நீங்கள் நினைப்பது போலத் தெரிகிறது.

22 minutes ago, Jude said:

இவை எல்லாவற்றுக்கும் மேலாக சிங்கள பொது மக்கள் பிக்குகளுக்கு தெய்வீக சக்தி இருப்பதாக நம்பி அஞ்சுகிறார்கள். தமிழ் பௌத்த பிக்குகள் இருந்தால் இந்த பிக்குகளுக்கும் அந்த சக்தி இருப்பதாக நம்பி அஞ்சுவார்கள். மேலும் இந்து கடவுள்களுக்கும் சிங்கள மக்களும் அரசியல்வாதிகளும் அஞ்சுகிறார்கள். ஆகவே இந்த அச்சத்தை பயன்படுத்தி அரசியல் வெற்றி பெரும் சாத்தியம் உள்ளது.

ஜூட்,

உண்மையாகவே, நீங்கள் சொல்வதை உங்களாலேயே நம்பக்கூடியதாக இருக்கின்றதா? சிங்களப் பிக்குகளுக்கு இருக்கும் விஷேஷ சக்தியைக் கண்டு சிங்களவர்கள் பயந்து நடுங்குவதுபோல, தமிழ்ப் பிக்குகளுக்கும் பயந்து நடங்குவார்கள், அதன்பின்னர், எமது காட்டில் மழையோ மழை என்று நினைக்கிறீர்கள் போலத் தெரிகிறது. இப்படியொரு இலகுவான வழிமூலம் சிங்களவர்களை முட்டாள்களாக்கி எமது விடுதலையைப் பெறுவதை விடுத்து, சுமார் 50 ஆண்டுகாலம் அடிபட்டு லட்சக்கணக்கில் எமது மக்களை காவுகொடுத்ததுபற்றி வெட்கப்படுகிறேன். !!!

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Jude said:

சுமேந்திரனும் இராகவனும் தமது இருப்பை தக்க வைக்க உங்கள் இனத்தை "விற்க" வேண்டிய தேவை இல்லாதவர்கள். உங்கள் இனத்தில் தயவில் அவர்கள் இருப்பு இல்லை. ஜனாதிபதியின் தெரிவாக முன்னர் அறியப்படாத ராகவன் ஆளுனராகி இருக்கிறார். உங்கள் தெரிவு அல்ல. ஜனாதிபதியின் பிரதிநிதி அவர்.

ஜூட்,

நீங்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்கிறேன். சுமேந்திரனும், சுரேனும் தமிழர் பிரதிநிதிகள் இல்லை, அவர்கள் ஜனாதிபதியினாலும், அவர்களது பிரத்தியேக ஆதரவாளர்களாலும் நியமிக்கப்பட்டோ அல்லது பதவியில் அமர்த்தப்பட்டோ இருக்கும்போது, அவர்கள தங்களைத் தமிழர்களின் பிரதிநிதிகள் என்று விளம்பரம் செய்ய முடியாதல்லவா? இங்கே, சுரேன் தன்னை முற்றான சிங்களப் பிரதிநிதியாகக் காட்டிக்கொண்டிருப்பது வெளிப்படையானது, ஆனால், சுமேந்திரன் தன்னை தமிழர்களின் பிரதிநிதியென்றுதானே சொல்லிக்கொள்கிறார்? 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Jude said:

என்ன விலை போனது?

கூட கொடுத்து உங்கள் இனத்தை திருப்பி வாங்கலாமே?

என்ன விலை போனது என்று சம் , சும்மைத்தான் கேட்க வேண்டும். வாங்கியவர்கள் அவர்களல்லவா?

இவர்களுக்கு வோட்டு போட்டு பாராளுமன்ற உறுப்பினராக்கியதே பெரிய  காரியம். அதைவிட இன்னும் காசு வேறை கொடுக்க சொல்கிறீர்களா இந்த இந துரோகிகளுக்கு? அது சரி எப்பவும் வாங்கியே பழகியவர்களுக்கு இப்படித்தான் சொல்லத்தோன்றும்!!

எழுதுமுன் கொஞ்சமாவது யோசிக்கவேண்டும்  எதை எழுதுகிறோம் என்று? அது சரி சட்டியில் இருந்தால்தானே அகப்பையில வரும்!

Edited by Eppothum Thamizhan

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Jude said:

சுமேந்திரனும் இராகவனும் தமது இருப்பை தக்க வைக்க உங்கள் இனத்தை "விற்க" வேண்டிய தேவை இல்லாதவர்கள். உங்கள் இனத்தில் தயவில் அவர்கள் இருப்பு இல்லை. ஜனாதிபதியின் தெரிவாக முன்னர் அறியப்படாத ராகவன் ஆளுனராகி இருக்கிறார். உங்கள் தெரிவு அல்ல. ஜனாதிபதியின் பிரதிநிதி அவர்.

இதுக்குத்தான்  கருத்து எழுதும்போது மூளைக்கும் கைவிரல்களுக்கும் கொஞ்சமாவது தொடர்பிருக்க வேண்டுமென்று  சொல்லுறது.  சுமந்திரன் எங்கள் இனத்தின் தயவிலேயே பாராளுமன்ற உறுப்பினர் ஆனார். அதனால்தான் அவரால் கூட்டமைப்பின் பேச்சாளராக இருக்க முடிகிறது.

சுரேனின் இருப்பு ஜனாதிபதியின் கைகளில் இருப்பதால் அதை தக்க வைத்துக்கொள்ள எமது இனத்தை விற்கிறார்.

இதாவது புரிகிறதா அல்லது??

2 hours ago, Jude said:

அரசியல் யுக்தியை நீங்கள் சுத்து மாத்து என்று சொல்லும் போது எவ்வாறு அரசியல் யுக்தியை வரைவிலக்கண படுத்துகிறீர்கள் என்பதையும் சொன்னால் தான் சுத்து மாத்து எவ்வாறு அரசியல் யுக்தியில் இருந்து வேறு படுகிறது என்று நாம் அடையாளம் காணக்கூடியதாக இருக்கும். 

 

சுத்து  மாத்து  அரசியல் என்பது ஒரே விடயத்தை வெவ்வேறு மேடைகளில் நேரெதிராய் பேசுவது. மற்றயது கூட்டமைப்பின் தலைவர் ஒரு கருத்தை சொல்லும்போது அதற்கு நேரெதிரான கருத்தை சுமந்திரன் ஊடகங்களுக்கு கூறுவது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Jude said:

சிங்கள மொழி பேசும் பெளத்தர்கள் உலகிலயே இவர்கள் மட்டும் தானே? இல்லையா? அவர்களுக்கு தமது தனித்துவத்தையும் கலாச்சாரத்தையும் பாதுகாக்க வேண்டும் என்ற விருப்பம் நியாயமானது தானே? அதை நீங்கள் மறுக்கும்  போது அவர்களுக்கு கோபம் வருவது எதிர்பார்க்க வேண்டிய ஒன்று தானே? உங்களுக்கு உங்கள் கலாச்சாரத்தையும் மொழியையும் கோவில்களையும் மறுக்கும் போது "வெறி கொள் தமிழர் புலிப்படை" என்று பொங்கி எழ வில்லையா நீங்கள்? அந்த கோபம் நியாயமானது தானே?

 

நியாயமானது தப்பில்லை.....அதற்காக இன்னோர் இனத்தை அழித்து அதன் மூலம் தங்கள் இனத்தை தக்க வைக்கவேணும் என நினைப்பதை ஏற்றுக்கொள்ள கூடியது அல்ல ....சிலர் அதை ஏற்றுகொண்டாலும் பலர் அதை ஏற்றுக்கொள்ளமாற்றார்கள்....அது சிங்களவர்களாக இருக்கலாம் தமிழர்களாக இருக்கலாம் ...எந்த ஒர் இனமும் எற்றுக்கொள்ளாது.....

புலிப்படைக்கும் ஒர் அங்கிகரிக்கப்பட்ட அரசுக்கும் பல வித்தியாசங்கள் உண்டு என்பதை நான் கூறி நீங்கள் அறிவேண்டிய விடயம் இல்லை..

பல்கலாச்சார அரசு என்றால் அது தன்னுடைய மக்களை விரும்பியோ விருப்பாமலோ கெளரவ‌த்துடன் நடத்த வேண்டும் அதை விடுத்து அரச இயந்திரங்களும் ஒரு பயங்கர வாத அமைப்பு போன்று இயங்க வெளிக்கிடும் பொழுது அரசை விட பயங்கர மாக செயல் படக்கூடிய அமைப்புக்கள் உருவாகும் .. 

2 hours ago, Jude said:

 

தமிழ் பௌத்தர்களின் தேவை சிங்கள பெளத்தர்கள்களின் தனித்துவத்தை அழிப்பதற்காக அல்ல. மாறாக,  பெளத்தம் இலங்கையில் சிங்களவர்களுக்கு மட்டும் உரித்தானதல்ல என்று நிறுவுவதற்கே தமிழ் பௌத்தம் தேவையானதாகிறது. தமிழ் பிரதேசங்களில், குறிப்பாக கந்தரோடையில் உள்ள விகாரைகள் சிங்களவர் இங்கு வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் அல்ல - தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்த ஆதாரங்கள் என்று நிறுவ தமிழ் பௌத்தம் தேவை. தொல்பொருள் திணைக்களம் பௌத்த எச்சங்களை கண்டவுடன் சிங்கள பௌத்தர்களை கொண்டு வரும் முயற்ச்சியை கேள்விக்குறியாக்கி தமிழ் பௌத்த விகாரைகளை நிறுவ தமிழ் பௌத்த வரலாறு மீளவும் உயிர் பெற வேண்டி உள்ளது.

 

 

 

சரித்திரங்களை நிருபிக்க அந்த மக்கள் மதம்/ இனம் மாறி நிருபிக்க  வேண்டிய நிலையில் இருக்கின்றார்கள் என்றால் அதே ஒரு அடக்குமுறைதான்...தமிழ் பெளத்தர்கள் வாழ்ந்தார்கள் என்று அரசதிணைக்களம் ஆராச்சி செய்து முடிவுகளை பகிரங்கமாக  சொல்லவேண்டும்.

அனுராதபுரத்தில் எல்லாளன் படைகள் போர் புரிந்தமைக்கான் சான்றுகளை நிருபிக்க அங்கு உள்ள மக்கள் தமிழர்களாக மாற‌ வேண்டும் என்ற வாதத்தை வைக்க முடியாதுதானே....

தெற்க்கே தெய்வேந்திர முனையில் இருக்கும் சிவன்கோவில் சிங்கள சைவர்கள் வழிபட்ட கோவிலாக இருக்கலாம் அதற்காக சிங்களவர்கள் சைவராக மாறி நிருபிக்க வேண்டிய அவசியமில்லை

  • கருத்துக்கள உறவுகள்
On 4/1/2019 at 6:30 PM, Jude said:

தமிழ் நாட்டு அம்பேத்கார் வழி பௌத்தரின் உறவும் ஏற்படும். இந்த பௌத்த மறுமலர்ச்சி ஜப்பானிய மற்றும் சிங்கபூர் பௌத்தர்களின் உதவியுடன் வீரியம் பெற்று சிங்கள பௌத்தத்துக்கு சவாலாக மாற முடியும்.

அம்பேத்கார் காலத்திலிருந்து எவ்வளவு பெளத்தர்கள் இந்தியாவில் உருவாகினார்கள் என்று சொல்ல முடியுமா ,எத்தனை தமிழ்பெளத்தர்கள் உருவானார்கள் என்று சொல்லமுடியுமா?....

இந்தியா பாரளுமன்றில் அல்லது தமிழக சட்ட சபையில் ஒர் பெளத்த பாராளுமன்ற உறுப்பினர் அல்லது சட்ட சபை உறுப்பினராவது உண்டா?

ஆகவே மதங்களை அகிம்சை மூலம் பரப்பமுடியாது ...

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரஞ்சித் said:

ஜூட்,

நீங்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்கிறேன். சுமேந்திரனும், சுரேனும் தமிழர் பிரதிநிதிகள் இல்லை, அவர்கள் ஜனாதிபதியினாலும், அவர்களது பிரத்தியேக ஆதரவாளர்களாலும் நியமிக்கப்பட்டோ அல்லது பதவியில் அமர்த்தப்பட்டோ இருக்கும்போது, அவர்கள தங்களைத் தமிழர்களின் பிரதிநிதிகள் என்று விளம்பரம் செய்ய முடியாதல்லவா? இங்கே, சுரேன் தன்னை முற்றான சிங்களப் பிரதிநிதியாகக் காட்டிக்கொண்டிருப்பது வெளிப்படையானது, ஆனால், சுமேந்திரன் தன்னை தமிழர்களின் பிரதிநிதியென்றுதானே சொல்லிக்கொள்கிறார்? 

ரஞ்சித், சுரேன் ராகவன் மட்டுமல்ல, இலங்கையின் எல்லா ஆளுனர்களும் மத்திய அரசின் நியமனப் பிரதிநிதிகளே. இதில் சுரேன் ராகவன் மட்டும் தமிழர் பிரதிநிதியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தது எதிர்பார்த்தோரின் பிழை!.

சுமந்திரன் முதலில் வந்தது தேசியப் பட்டியலில்! அப்போது அவர் பின்கதவு தான்! பிறகு அவர் தேர்தலில் நின்று தமிழ் மக்களாலேயே தேர்வு செய்யப் பட்ட போது மக்கள் பிரதிநிதியானார். இது உங்களுக்குத் தெரியாதா? அல்லது உங்கள் வாதத்திற்கு உதவாத தகவல் என்பதால் குறிப்பிடாமல் விட்டு விட்டீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Eppothum Thamizhan said:

எழுதுமுன் கொஞ்சமாவது யோசிக்கவேண்டும்  எதை எழுதுகிறோம் என்று? அது சரி சட்டியில் இருந்தால்தானே அகப்பையில வரும்!

 

4 hours ago, Eppothum Thamizhan said:

இதுக்குத்தான்  கருத்து எழுதும்போது மூளைக்கும் கைவிரல்களுக்கும் கொஞ்சமாவது தொடர்பிருக்க வேண்டுமென்று  சொல்லுறது.  

மன்னிக்கவும் அறிஞர் ஐயா. உங்கள் அளவுக்கு எனது மூளைக்கு ஆற்றல் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Justin said:

சுமந்திரன் முதலில் வந்தது தேசியப் பட்டியலில்! அப்போது அவர் பின்கதவு தான்! பிறகு அவர் தேர்தலில் நின்று தமிழ் மக்களாலேயே தேர்வு செய்யப் பட்ட போது மக்கள் பிரதிநிதியானார். இது உங்களுக்குத் தெரியாதா? அல்லது உங்கள் வாதத்திற்கு உதவாத தகவல் என்பதால் குறிப்பிடாமல் விட்டு விட்டீர்களா?

தெரியும், வசதிக்காக விட்டு விட்டேன். 

அதுமட்டுமல்லாமல், ஜூட் வேறு சுமந்திரன் தனது ஆதரவாளர்களால் தெரிவுசெய்யப்பட்டவர் என்று சொன்னாரா?, அது எனக்கு வசதியாகப் போய்விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

தெரியும், வசதிக்காக விட்டு விட்டேன். 

அதுமட்டுமல்லாமல், ஜூட் வேறு சுமந்திரன் தனது ஆதரவாளர்களால் தெரிவுசெய்யப்பட்டவர் என்று சொன்னாரா?, அது எனக்கு வசதியாகப் போய்விட்டது.

நன்றி ஒத்துக் கொண்டமைக்கு! சுமந்திரனின் ஆதரவாளர்கள் என்றால் அரசியல் கூட்டத்திற்கு பஸ்ஸில் பாசல் கொடுத்துக் கூட்டி வரப்படும் ஆதரவாளர்கள் என்ற தொனியில் பார்க்கக் கூடாது! விருப்பு வாக்கில் மூன்றாவதாக வர வைத்த வாக்காளர்களையும் சேர்த்தே பார்க்க வேண்டும். அதே தேர்தலில் சைக்கிள் கட்சியினரைத் தெரிவு செய்ய அந்தளவு ஆதரவாளர்கள் இருக்கவில்லை என்பதையும் இங்கே பதிவு செய்ய வேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

விருப்பு வாக்கு எப்படி மாற்றினவை என்று அருந்தவபாலனை கேட்டால் சொல்லுவார்!

எல்லாத்துக்கும் ஆதாரத்தை கேக்காதீங்க! அவங்கள் தந்திரமா தான் செய்தவங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

விருப்பு வாக்கு எப்படி மாற்றினவை என்று அருந்தவபாலனை கேட்டால் சொல்லுவார்!

எல்லாத்துக்கும் ஆதாரத்தை கேக்காதீங்க! அவங்கள் தந்திரமா தான் செய்தவங்கள்.

கேட்கப் போவதில்லை! ஏனெனில் ஆதாரம் இருந்தால் அங்கேயே இருக்கிற அருந்தவபாலனோ யாரோ நீதிமன்றத்தில் ஒரு வழக்காவது போட்டு விசயத்தை வெளியில் வர வைத்திருப்பினமே? செய்யவில்லையே? ஏனென்றால் சந்தேகம் ஒரு நாளும் ஆதாரமாக ஏற்றுக் கொள்ளப் படாது! அதை வைத்து "அவர் சொன்னார், இவர் சொன்னர்" என்று கதை பின்னலாம்! வெறெதுவும் செய்ய இயலாது! எனவே என்ன குத்தி முறிந்தாலும் அடுத்த தேர்தலில் தோற்கும் வரை சுமந்திரன் மக்களால் தெரிவான பிரதிநிதி என்று தான் கொள்ள வேண்டும்! 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.