Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குண்டு வெடிப்பு: இஸ்லாமிய தீவிரவாத அமைப்பு, என முதற் கட்ட தகவல்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரஞ்சித் said:

மேற்குலக பாதுகாப்பு நிபுணர்களின் கரித்துப்படி, இலங்கையில் இருந்து இசிச் பயங்கரவாதிகளுடன் இணைந்து மத்திய கிழக்கில் போர்ப் பயிற்சி பெற்ற பல முன்னால் ஐஸிஸ் பயங்கரவாதிகள் நாடு திரும்பியிருப்பதாகவும், இவர்களை இடைத் தரகர்களாகக் கொண்டு, ஏற்கனவே உள்ளூரில் இலைமறை காயாகவிருந்த இஸ்லாமிய அடிப்படைவாதிகளைக் கொண்டே சர்வதேசப் பயங்கரவாதிகளான ஐஸிஸ் இக்கொலைகளைப் புரிந்திருக்கலாம் என்று சொல்கிறார்கள். 

இருக்கலாம் அண்ணா

ஆனால் ஏன் இலங்கை??

 

ஏன் நியூசிலாந்து தெரிவு செய்யப்பட்டது. அதேபோலத்தான் இலங்கையும் தெரிவு செய்யப்பட்டது .இப்போதைக்கு  வசதியாக அமைந்த இடம்.

  • Replies 63
  • Views 7.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நியுசிலாந்து தாக்குதலுக்கு பதிலடி  என்றால், மேற்கத்தைய நாடுகளை தான் அந்த அமைப்பு தெரிவு செய்திருக்கும் 

2 minutes ago, ooravan said:

ஏன் நியூசிலாந்து தெரிவு செய்யப்பட்டது. அதேபோலத்தான் இலங்கையும் தெரிவு செய்யப்பட்டது .இப்போதைக்கு  வசதியாக அமைந்த இடம்.

அதாவது இனிவரும் காலங்களில் தாக்குதல் சிறிலங்காவில் நடை பெறமாட்டாதா?

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, putthan said:

ஆனால் இது சிறிலங்காவில் நடந்திருக்கு சிறிலங்கா சிங்கள பெளத்தர்களுக்கு சொந்தமான நாடு என்பதை முஸ்லீம்கள் நன்கு அறிவார்கள் ....சிறிலங்காவில் குண்டு வைத்தால் அது சிங்களவர்களு
சவால் விடும் ஒரு விடயம்....அதில் தமிழர்கள்,வெளிநாட்டவர்கள் யார் இற‌ந்தாலும் சிறிலங்கா அரசுக்கு சவால் தான்.... 

சிங்களவரின் அடிக்கு பயந்து அவர்கள் இதை தமிழர் பகுதியில் செய்தார்கள் என்று சொல்லமுடியாது...ஆறு தற்கொலை குண்டுதாரிகளை சிறிலங்காவில பயிற்றுவித்திருக்கிறார்கள் என்றால் சிந்திக்க வேண்டிய விடயம்...

இது நன்கு திட்டமிடப்பட்டது அத்துடன் புலனாய்வுப் பிரிவுக்கு தெரியாமல் இருந்திருக்கும் என்பதில் எந்தவித ஆதாரமும் இல்லை. அவர்களுக்கும் என்ன நடக்கப்போகிறது என்பது தெரிந்து மௌனம் காத்து இருக்கக்கூடும் இந்தியா வழங்கிய உளவுத் தகவலை புறக்கணித்தமை இதற்கு நல்ல சான்று.சரி அப்படி என்றால் இதுவரையில் அவர்களுக்கு எதிரான எந்த வன்முறைகளும் சிங்களவர்களால் நடத்தப்படவில்லையே வழக்கமாக கடைகளை எரித்தல் சூறையாடுதல் துரத்தி அடித்தல் என்பன நடைபெற்றது போல ஒரு இடம் கூட நடைபெறவில்லையே

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ooravan said:

இது நன்கு திட்டமிடப்பட்டது அத்துடன் புலனாய்வுப் பிரிவுக்கு தெரியாமல் இருந்திருக்கும் என்பதில் எந்தவித ஆதாரமும் இல்லை. அவர்களுக்கும் என்ன நடக்கப்போகிறது என்பது தெரிந்து மௌனம் காத்து இருக்கக்கூடும் இந்தியா வழங்கிய உளவுத் தகவலை புறக்கணித்தமை இதற்கு நல்ல சான்று.சரி அப்படி என்றால் இதுவரையில் அவர்களுக்கு எதிரான எந்த வன்முறைகளும் சிங்களவர்களால் நடத்தப்படவில்லையே வழக்கமாக கடைகளை எரித்தல் சூறையாடுதல் துரத்தி அடித்தல் என்பன நடைபெற்றது போல ஒரு இடம் கூட நடைபெறவில்லையே

இதற்கான காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள்? சிங்களத்திற்கும் இத்தாக்குதல்களுக்கும் தொடர்பிருக்கலாம், அல்லது இது மும்னமே எதிர்பார்க்கப்பட்ட தமிழர் மீதான கொலை என்பதால் பேசாமல் இருக்கிறார்கள் என்கிறீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, putthan said:

நியுசிலாந்து தாக்குதலுக்கு பதிலடி  என்றால், மேற்கத்தைய நாடுகளை தான் அந்த அமைப்பு தெரிவு செய்திருக்கும் 

அதாவது இனிவரும் காலங்களில் தாக்குதல் சிறிலங்காவில் நடை பெறமாட்டாதா?

சிரியாவில் சேடம்இழுக்க தொடங்கிய அமைப்பினால் மேற்கத்திய நாடுகளில் இவ்வளவு பெரிய தாக்குதலை செய்யும் சக்தி அவர்களிடத்திலே தற்போது இல்லை.மழை நின்றாலும் தூவானம் நிற்காது என்பது போல் இதன் தொடர்ச்சியாக சிறு தாக்குதல்கள் நடைபெறக்கூடும் ஆனால் இவ்வாறான பாரிய தாக்குதல்கள் நடைபெறுவதாக இருந்தால் அது தமக்கு எதிராக கலவரம் வெடிப்பவர்களுக்கு எதிராக இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ooravan said:

இது நன்கு திட்டமிடப்பட்டது அத்துடன் புலனாய்வுப் பிரிவுக்கு தெரியாமல் இருந்திருக்கும் என்பதில் எந்தவித ஆதாரமும் இல்லை. அவர்களுக்கும் என்ன நடக்கப்போகிறது என்பது தெரிந்து மௌனம் காத்து இருக்கக்கூடும் இந்தியா வழங்கிய உளவுத் தகவலை புறக்கணித்தமை இதற்கு நல்ல சான்று.சரி அப்படி என்றால் இதுவரையில் அவர்களுக்கு எதிரான எந்த வன்முறைகளும் சிங்களவர்களால் நடத்தப்படவில்லையே வழக்கமாக கடைகளை எரித்தல் சூறையாடுதல் துரத்தி அடித்தல் என்பன நடைபெற்றது போல ஒரு இடம் கூட நடைபெறவில்லையே

அரசு அதிகாரம் யார் கையில் என்ற சந்தேகம் அமைச்சர்களுக்கு உண்டு.முப்படைகளுக்கு உண்டு,இதனால் கலவரத்தை யார் தூண்டிவிடுவது என்று தெரியாமல் இருக்கின்றனர்...போலும்...

ஊரடங்கு சட்டம் உடனடியாக அமுல்படுத்தியபடியால் கலவரங்கள் நடக்காமல் இருந்திருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரஞ்சித் said:

இதற்கான காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள்? சிங்களத்திற்கும் இத்தாக்குதல்களுக்கும் தொடர்பிருக்கலாம், அல்லது இது மும்னமே எதிர்பார்க்கப்பட்ட தமிழர் மீதான கொலை என்பதால் பேசாமல் இருக்கிறார்கள் என்கிறீர்களா?

நிச்சயமாக அவ்வாறுதான் ஊகிக்கிறேன் பொறுத்திருந்து பார்ப்போம்  "அல்லது இது மும்னமே எதிர்பார்க்கப்பட்ட தமிழர் மீதான கொலை என்பதால்"

2 minutes ago, putthan said:

அரசு அதிகாரம் யார் கையில் என்ற சந்தேகம் அமைச்சர்களுக்கு உண்டு.முப்படைகளுக்கு உண்டு,இதனால் கலவரத்தை யார் தூண்டிவிடுவது என்று தெரியாமல் இருக்கின்றனர்...போலும்...

ஊரடங்கு சட்டம் உடனடியாக அமுல்படுத்தியபடியால் கலவரங்கள் நடக்காமல் இருந்திருக்கலாம்.

ஊரடங்கு அமலில் இருந்த பொழுது தானே கினிகத்தன்னையில் தாக்குதல்கள் மோசமான நடைபெற்றது

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் 5 வருடங்களிற்கு தமிழர் தரப்போ அல்லது வேறு எந்த தரப்போ போர்க்குற்றம் பற்றியோ அரசியல் தீர்வு பற்றியோ இலங்கையுடனும் சரி, சர்வதேசத்துடனுடம் சரி பேச முடியாதவாறு இலங்கை மீது இப்பொழுது அனுதாப அலை வீசுகின்றது.
யார் லாபம் அடைந்தார்கள் என்பதைவிட யாருக்கு நஷ்டம் என்று பார்த்தால் தமிழர்களுக்கே.

உல்லாச துரையின் வீழ்ச்சி என்பது தற்காலிகமானது. இதற்கான தொகையினை சர்வதேசம் வேறு வழிகளில் (மீள்கட்டமைப்பு, அன்பளிக்கு etc) சரிசெய்து கொடுக்கும் என்பது என்னுடைய அபிப்பிராஜம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஊர்க்காவலன் said:

இன்னும் 5 வருடங்களிற்கு தமிழர் தரப்போ அல்லது வேறு எந்த தரப்போ போர்க்குற்றம் பற்றியோ அரசியல் தீர்வு பற்றியோ இலங்கையுடனும் சரி, சர்வதேசத்துடனுடம் சரி பேச முடியாதவாறு இலங்கை மீது இப்பொழுது அனுதாப அலை வீசுகின்றது.
யார் லாபம் அடைந்தார்கள் என்பதைவிட யாருக்கு நஷ்டம் என்று பார்த்தால் தமிழர்களுக்கே.

உல்லாச துரையின் வீழ்ச்சி என்பது தற்காலிகமானது. இதற்கான தொகையினை சர்வதேசம் வேறு வழிகளில் (மீள்கட்டமைப்பு, அன்பளிக்கு etc) சரிசெய்து கொடுக்கும் என்பது என்னுடைய அபிப்பிராஜம்.

சரியான பார்வை

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ooravan said:

 

ஊரடங்கு அமலில் இருந்த பொழுது தானே கினிகத்தன்னையில் தாக்குதல்கள் மோசமான நடைபெற்றது

பொறுத்திருந்து பார்ப்போம் கலவரம் எப்போ வ‌ருகின்றது என ...மற்றும் இன்னும் வெடிகுண்டுகள் தலை நகரில் கண்டு பிடிக்கின்றனர் இவையாவும் செட் டப் என்று சொல்லலாமா?

8 minutes ago, ஊர்க்காவலன் said:

இன்னும் 5 வருடங்களிற்கு தமிழர் தரப்போ அல்லது வேறு எந்த தரப்போ போர்க்குற்றம் பற்றியோ அரசியல் தீர்வு பற்றியோ இலங்கையுடனும் சரி, சர்வதேசத்துடனுடம் சரி பேச முடியாதவாறு இலங்கை மீது இப்பொழுது அனுதாப அலை வீசுகின்றது.
யார் லாபம் அடைந்தார்கள் என்பதைவிட யாருக்கு நஷ்டம் என்று பார்த்தால் தமிழர்களுக்கே.

உல்லாச துரையின் வீழ்ச்சி என்பது தற்காலிகமானது. இதற்கான தொகையினை சர்வதேசம் வேறு வழிகளில் (மீள்கட்டமைப்பு, அன்பளிக்கு etc) சரிசெய்து கொடுக்கும் என்பது என்னுடைய அபிப்பிராஜம்.

அனுதாபம் இறந்த மக்கள் மீதே அரசின் மீது அல்ல...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, ஊர்க்காவலன் said:

இன்னும் 5 வருடங்களிற்கு தமிழர் தரப்போ அல்லது வேறு எந்த தரப்போ போர்க்குற்றம் பற்றியோ அரசியல் தீர்வு பற்றியோ இலங்கையுடனும் சரி, சர்வதேசத்துடனுடம் சரி பேச முடியாதவாறு இலங்கை மீது இப்பொழுது அனுதாப அலை வீசுகின்றது.
யார் லாபம் அடைந்தார்கள் என்பதைவிட யாருக்கு நஷ்டம் என்று பார்த்தால் தமிழர்களுக்கே.

உல்லாச துரையின் வீழ்ச்சி என்பது தற்காலிகமானது. இதற்கான தொகையினை சர்வதேசம் வேறு வழிகளில் (மீள்கட்டமைப்பு, அன்பளிக்கு etc) சரிசெய்து கொடுக்கும் என்பது என்னுடைய அபிப்பிராஜம்.

👍👍

4 hours ago, ரஞ்சித் said:

இதற்கான காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள்? சிங்களத்திற்கும் இத்தாக்குதல்களுக்கும் தொடர்பிருக்கலாம், அல்லது இது மும்னமே எதிர்பார்க்கப்பட்ட தமிழர் மீதான கொலை என்பதால் பேசாமல் இருக்கிறார்கள் என்கிறீர்களா?

ரஞ்சித்,
இதனை ஏன் தமிழர்கள் மீதான தாக்குதல் எனக் குறிப்பிடுகின்றீர்கள்? மட்டக்களப்பு தவிர்ந்த ஏனைய இடங்களில் கொல்லப்பட்டவர்களில் சிங்கள மக்களே அதிகம். நீர்கொழும்பில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் பலியானோர்களில் அநேகமானோர் சிங்கள மக்களே. சிங்களத்தில் பூசை (Service) நடந்து கொண்டு இருக்கும் போதுதான் குண்டு வெடிக்கப்பட்டது.

கொச்சிக்கடையினை சுற்றி இருப்பவர்களில் அதிகமானோர் தமிழ் கிறிஸ்தவர்கள். இவர்கள் பக்கத்தில் தான் தேவாலயம் இருப்பதால், நடுச்சாம பூசைக்கு அதிகாலை பூசைக்கும் போய் வந்து விட்டார்கள். காலை யில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் இறந்தவர்கள் தூர இடங்களில் இருந்து வந்தவர்கள். இதிலும் பலர் சிங்களவர்கள்.

ஏன் எதிர்வினை இல்லையென்பதுக்கு பதில் அரசு திட்டமிட்டால் மட்டும்தான் சிங்களவர்களை கொண்டு தென்பகுதியில் கலவரம் செய்ய முடியும். கொழும்பில் எத்தனையோ குண்டுகள் வெடித்து சிங்கள மக்கள் கொல்லப்பட்டு இருந்த காலத்திலும் அங்கு வாழ்ந்த தமிழ் மக்கள் மீது சிங்கள மக்களால் வன்முறை ஏவி விடப்படவில்லை.

ஆனால் முஸ்லிம் மீது நையாண்டிகளும், தூற்றுதல்களும் வெறுப்பும் இச் சம்பவங்களுக்கு பின் மிக அதிகமாக வளர்ந்து வருவதை சிங்கள சமூக வலைத்தளங்களில் காண முடிகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நிழலி said:

ஆனால் முஸ்லிம் மீது நையாண்டிகளும், தூற்றுதல்களும் வெறுப்பும் இச் சம்பவங்களுக்கு பின் மிக அதிகமாக வளர்ந்து வருவதை சிங்கள சமூக வலைத்தளங்களில் காண முடிகின்றது.

நியுட்டனின் 3ம் விதி போலதான் எறிந்தால் எறியும் வேகத்தை போலவே வந்து சேரும் 

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களத் தலைமைகள் இந்தச் சந்தர்ப்பத்தை தமக்கு சர்வதேச அனுதாபத்தை தேடவே அதிகம் பாவிப்பார்கள். இந்த தாக்குதலில் தமிழ் மக்களும் பாதிக்கப்பட்டுள்ளதை இன்று வரை எந்த தமிழ் அரசியல்வாதிகளும் பேசவில்லை. பேச மறுப்பது.. மெளனிப்பது ஏனோ..?!

தமிழ் மக்களின் இழப்பு என்பது சிங்கள அரச பயங்கரவாதப் படைகளின் இனப்படுகொலைக்கு மேலதிகமானது என்பதை ஏன் இவர்கள் இந்தச் சந்தர்ப்பதில் உலகிற்கு சொல்ல மறுக்கிறார்கள்..????! மறக்கிறார்கள்...??! 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.