Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரபல கோடீஸ்வரரின் மூன்று பிள்ளைகள் குண்டுவெடிப்பில் உயிரிழப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Asos--720x450.jpg

பிரபல கோடீஸ்வரரின் மூன்று பிள்ளைகள் குண்டுவெடிப்பில் உயிரிழப்பு

ஆஸஸ் (Asos.com) என்ற நிறுவனத்தின் தலைவரான பிரபல பிரித்தானிய கோடீஸ்வரர் அன்டெர்ஸ் ஹோல்ச் போவ்ல்செனின் மூன்று பிள்ளைகள் இலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்துள்ளனர்.

இணைய வர்த்தகத்தில் கொடிகட்டிப் பறக்கும் ஹோல்ச் போவ்ல்செனுக்கு நான்கு குழந்தைகள். இந்நிலையில், இலங்கையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் அவரது மூன்று பிள்ளைகள் உயிரிழந்துள்ளனர்.

தமது பிள்ளைகளில் உடல்களை ஏற்க இவர்கள் இலங்கை வருவார்களா என்ற தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

46 வயதான ஹோல்ச் போவ்ல்சென் ஸ்கொட்லாந்தின் முக்கிய நிலப்பகுதிகளுக்கு சொந்தக்காரர் ஆவார். அவரும் அவருது மனைவியும் சுமார் 200,000 ஏக்கர் மலைப்பாங்கான பிரதேசத்திற்கு உரிமையாளர்கள் ஆவர். எதிர்கால சந்தத்திக்காக இவர்கள் இந்த நிலத்தை வளமானதாக்க முயற்சிகளை மேற்கொண்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று நடத்தப்பட்ட தொடர் குண்டுத்தாக்குதல்களில் 290 பேர் உயிரிழந்ததோடு, சுமார் 500 பேர் வரை காaயமடைந்தார்கள். சம்பவத்திற்கு எந்த தீவிரவாத அமைப்பும் இதுவரை உரிமைகோரவில்லை.

உயிரிழந்தவர்களில் 8 பேர் பிரித்தானிய பிரஜைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

asos.jpg

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, தமிழ் சிறி said:

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று நடத்தப்பட்ட தொடர் குண்டுத்தாக்குதல்களில் 290 பேர் உயிரிழந்ததோடு, சுமார் 500 பேர் வரை காaயமடைந்தார்கள். சம்பவத்திற்கு எந்த தீவிரவாத அமைப்பும் இதுவரை உரிமைகோரவில்லை.

முஸ்லீம் கூட்டத்தை காப்பாற்ற எல்லாரும்தான் முயற்ச்சி செய்கினம்  ஏனென்றால் இவ்வளவு குண்டு வெடிப்பிலும் இலங்கையில் உள்ள அதிகார வர்க்கம் காயப்படவில்லை எல்லாம் தெரிந்தே தான் செய்து முடிக்கப்ட்டுள்ளது .

  • 10 months later...

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் 3 பிள்ளைகளை இழந்த கோடீஸ்வர தம்பதிக்கு இரட்டை குழந்தைகள்! |

கடந்த 2019 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை குண்டுத் தாக்குதலில் ஸ்கொட்லாந்தின் மிகப்பெரிய தனியார் நில உரிமையாளரின் மூன்று பிள்ளைகள் உயிரிழந்தமை சர்வதேச ரீதியில் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
IPE5WY0PHOO3LLIYU661.jpg

இந்நிலையில் குழந்தைகளை இழந்த அவர்களுக்கு தற்போது இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கோடீஸ்வரர் அண்டர்ஸ் ஹோல்ச் போவ்ல்சென் மற்றும் அவரது மனைவி ஆன் ஆகியோர் டென்மார்க்கில் பிறந்த தமது குழந்தைகளை இரண்டு சிறிய அற்புதங்கள்" என வர்ணித்துள்ளனர்.

அத்தோடு அவர்களுக்கு பிறந்த இக் குழந்தைகளை வரவேற்பதில் அவர்கள் இருவரும் பெரும் மகிழ்சியாகவும் , மன நிறைவுடன் இருப்பதாவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த இரட்டை குழந்தைகளின் பிறப்பானது அனைவரையும் சந்தோசத்தில் ஆழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/77765

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ampanai said:

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் 3 பிள்ளைகளை இழந்த கோடீஸ்வர தம்பதிக்கு இரட்டை குழந்தைகள்! |

கடந்த 2019 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை குண்டுத் தாக்குதலில் ஸ்கொட்லாந்தின் மிகப்பெரிய தனியார் நில உரிமையாளரின் மூன்று பிள்ளைகள் உயிரிழந்தமை சர்வதேச ரீதியில் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
IPE5WY0PHOO3LLIYU661.jpg

இதனை விட... ஒரு சந்தோசம் இருக்க முடியாது. 💓

இப்படியான தருணங்களில்...தான், கடவுள் என்று, 
ஒருவர்  💯 வீதம்  இருக்கின்றார்.. என்ற நம்பிக்கையும் பிறக்கின்றது. :)

அந்த... இரணை குழந்தைகளுக்கும், பெற்றோருக்கும்....
மனம் உவந்த வாழ்த்துக்கள்.  💓

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் மகிழ்ச்சியான செய்தி. 

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்சியான செய்தி சரி...
சரியாய் ஒரு வருஷத்துக்குள்ளேயே (9 mths) திரும்பவும் பிள்ளைகளை பெற்றுக்கொள்வதற்கு "விடா முயற்சி " 
மனோ நிலை இவர்களிடம் இருந்து இருக்கிறது....பெரும் ஆச்சர்யம் தான் 🤫

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Sasi_varnam said:

மகிழ்சியான செய்தி சரி...
சரியாய் ஒரு வருஷத்துக்குள்ளேயே (9 mths) திரும்பவும் பிள்ளைகளை பெற்றுக்கொள்வதற்கு "விடா முயற்சி " 
மனோ நிலை இவர்களிடம் இருந்து இருக்கிறது....பெரும் ஆச்சர்யம் தான் 🤫

அது தான்.... வெள்ளைக்காரன் சசி வர்ணம். :)
பிறந்த குழந்தைக்கே... தனி அறை கொடுத்து, குறிப்பிட்ட நேரம் மட்டுமே.... 
"பம்பஸ்" மாற்றி, பால் ஊட்டி விட்டு...
பெற்றோர்... தங்கள் அறைக்கு சென்று விடுவார்கள்.

நடுச் சாமத்தில்.... குழந்தை, கத்திக் குழறி அழுது,    
தன்னை தூக்கி வைத்து...  "ஆராரோ... ஆரிராரோ..."  
பாட்டுப் பாட மாட் டார்களா.... என ஏங்கினாலும், 
எட்டியும், பார்க்க மாட்டான்.... வெள்ளைக்காரன்.

குழந்தை வளர்ப்பிற்கு மட்டும்.... வெள்ளைக்காரன் திறமானவன். 
சிறுவர் வளர்ப்பிற்கு... தமிழர்கள் திறமையானவர்கள் என்பது எனது அபிப்பிராயம். :rolleyes:

டிஸ்கி: தமிழர்,  சிறுவரை வளர்ப்பதற்கு... முன்பு ஒரு காலத்தில்  "பிரம்பால்" அடித்தார்களாம். 
இப்போ.... வெளிநாட்டில் உள்ள தமிழர்,  ஜீன்ஸ் கால்சட்டையில் இருந்த,
"பெல்ட்டை"   உருவி...  அடித்து, திருத்தினார்களாம் என கேள்விப் பட்டேன். :grin:

  • கருத்துக்கள உறவுகள்

அண்டெர்ஸ் கோல்ஸ் பௌல்சென் பிரித்தானிய கோடீஸ்வரர் என்பது தவறு. அவர் டென்மார்க் கோடீஸ்வரர். பிரித்தானியாவில் அதிகளவு நிலத்தை வாங்கி வைத்திருக்கும் தனிமனிதர் என்பதுடன் டென்மார்க்கின் முதலாம் இடத்தில் உள்ள கோடீஸ்வரர்.

On 3/13/2020 at 9:04 PM, தமிழ் சிறி said:

அது தான்.... வெள்ளைக்காரன் சசி வர்ணம். :)
பிறந்த குழந்தைக்கே... தனி அறை கொடுத்து, குறிப்பிட்ட நேரம் மட்டுமே.... 
"பம்பஸ்" மாற்றி, பால் ஊட்டி விட்டு...
பெற்றோர்... தங்கள் அறைக்கு சென்று விடுவார்கள்.

நடுச் சாமத்தில்.... குழந்தை, கத்திக் குழறி அழுது,    
தன்னை தூக்கி வைத்து...  "ஆராரோ... ஆரிராரோ..."  
பாட்டுப் பாட மாட் டார்களா.... என ஏங்கினாலும், 
எட்டியும், பார்க்க மாட்டான்.... வெள்ளைக்காரன்.

குழந்தை வளர்ப்பிற்கு மட்டும்.... வெள்ளைக்காரன் திறமானவன். 
சிறுவர் வளர்ப்பிற்கு... தமிழர்கள் திறமையானவர்கள் என்பது எனது அபிப்பிராயம். :rolleyes:

டிஸ்கி: தமிழர்,  சிறுவரை வளர்ப்பதற்கு... முன்பு ஒரு காலத்தில்  "பிரம்பால்" அடித்தார்களாம். 
இப்போ.... வெளிநாட்டில் உள்ள தமிழர்,  ஜீன்ஸ் கால்சட்டையில் இருந்த,
"பெல்ட்டை"   உருவி...  அடித்து, திருத்தினார்களாம் என கேள்விப் பட்டேன். :grin:

சிறுவர் வளர்ப்பிற்கு தமிழன் திறமையானவன் என்ற பாராட்டை உங்களிடம் இருந்து பெற்ற தமிழ் சிறுவர்கள் தலைமுறை தலைமுறையாக வளர்ந்து என்ன செய்து கிழித்தார்கள் என்பதையும் சொல்லி இருந்தால் நல்லது. பழைய தலைமுறைகளை விடுவோம். கடந்த 50 - 60 வருட காலத்தில் தமிழரின் அரசியலை குட்டிச்சுவராக்கி இன்று அவர்களை நிரந்தர அடிமைகள் ஆக்கிய அத்தனை அரசியல்வாதிகளும். போராளிகளும் தமிழன் வளர்த்த சிறுவர்கள் தானே. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.