Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நாவாந்துறையில் சுற்றிவளைப்பு தேடுதல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாவாந்துறையில் சுற்றிவளைப்பு தேடுதல்

April 28, 2019

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

IMG-6869_1080.jpg?resize=800%2C600

யாழ்.நாவாந்துறை பகுதியில் இஸ்லாமிய மக்கள் செறிந்து வாழும் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.30 மணி தொடக்கம் சுற்றிவளைப்பு தேடுதல் நடத்தப்பட்டது.

இலங்கையில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதல்களை தொடர்ந்து தொடர்ச்சியான தேடுதல் நடவடிக்கைகள், சுற்றிவளைப்புகள் நாடளாவியரீதியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக நாவாந்துறை, ஐந்துலாம்புச் சந்தி பகுதிகளில் இராணுவம், மற்றும் விசேட அதிரடிப்படையினர், காவல்துறையினர் இணைந்து அந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டதுடன், இந்த பகுதிக்குள் செல்வதும், அங்கிருந்து வெளியே செல்வதும் தடைசெய்யப்பட்டுள்ளதுடன், வீடுகள், வாகனங்கள், வர்த்தக நிலையங்கள் அனைத்தும் சல்லடைபோட்டு தேடுதல் நடத்தினார்கள்.

 #navanthurai #jaffna #roundup #checking #eastersundaylk

IMG-6867_1080.jpg?resize=800%2C600IMG-6868_1080.jpg?resize=800%2C600

 

http://globaltamilnews.net/2019/119727/

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நல்லவர்களான இஸ்லாமியர்களை இந்த பகுதியிலிருந்து விடுதலைபுலிகள் விரட்டியது தவறு என்று  நம்மிடையே உள்ள உத்த சீலர்கள் சிலர்  மனசு புளுங்கியிருக்கும் நேரம் அதிரடிபடைகூட அவர்களை  தப்பா நினைக்கிறதே.....இப்போ வடபகுதி முஸ்லீம்கள் யாருக்கு நல்லவர்கள் சிங்களவருக்கா..தமிழர்களுக்கா?

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் ஏன் சும்மா இருக்கிறார்....? 🤔

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Paanch said:

சுமந்திரன் ஏன் சும்மா இருக்கிறார்....? 🤔

அவர் எங்கே சும்மா இருக்கிறார்....

நீர்கொழும்பிலிருந்து வெளியேற்றப்பட்ட பாகிஸ்தான் அகதிகளை வடக்கில் குடியேற்ற ஓடித்திரிகிறார்...

18 minutes ago, valavan said:

மிகவும் நல்லவர்களான இஸ்லாமியர்களை இந்த பகுதியிலிருந்து விடுதலைபுலிகள் விரட்டியது தவறு என்று  நம்மிடையே உள்ள உத்த சீலர்கள் சிலர்  மனசு புளுங்கியிருக்கும் நேரம் அதிரடிபடைகூட அவர்களை  தப்பா நினைக்கிறதே.....இப்போ வடபகுதி முஸ்லீம்கள் யாருக்கு நல்லவர்கள் சிங்களவருக்கா..தமிழர்களுக்கா?

 

இஸ்லாமியத் தமிழர்கள் நல்லவர்களா கெட்டவர்களா என்ற அணுகுமுறையே அடிப்படையில் ஆரோக்கியமற்றது.

இஸ்லாமியர்கள் வெளியேற்றத்திறக்கு விடுதலைப் புலிகள் பின்னாளில் வருத்தம் தெரிவித்தது அனைவரும் அறிந்தது. 

வெளியேற்றியதற்கு தவறு என்ற கருத்து அதன் பின் விழைவில் இருந்தே ஆரம்பிக்கின்றது. மதவாரியாக ஒரு மக்கள் கூட்டத்தை செந்தநாட்டில் தமது வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றி அகதியாக்கியதில் இருந்து இனவிடுதலைப்போராட்டம் பயங்கரவாதமாக சர்வதேச சமூகத்தின் முன் கொண்டுவரப்பட்டது. அதன் பின்னர் புலிகளின் அரசியல் படுகொலைகள் தற்கொலைத் தாக்குதல்கள் எல்லாம் பயங்கரவாதத்திற்கு பக்கபலமாக இணைக்கப்பட்டது. இறுதியில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதாக இனவிடுதலைப்போராட்டம் ஒழிக்கப்பட்டது. இதன் போக்கறிந்தே புலிகள் வருத்தம் தெரிவித்தனர். புலிகளின் வெளியேற்ற நடவடிக்கைக்கான விழைவு நடந்துவிட்டது. அதன் பின்னர் தற்போதைய சம்பவங்களை வைத்து அதை நியாயப்படுத்த முனைவது கண்கெட்ட பிறகு சூரிய வணக்கம் செய்வதுபோன்றது. 

இஸ்லாமியர்கள் என்ற பெரும் மக்கள் கூட்டத்தில் சில அடிப்படைவாதிகள் செய்யும் தவறுக்கு எல்லா முஸ்லீமையும் பயங்கரவாதியாகவோ அல்லது நல்லது கெட்டவர்களாகவோ அணுகுவது பெருத்தமற்றது. 

சிங்கள பேரினவாதத்தின் அடுத்த இலக்கு இஸ்லாமியர்களின் வளரச்சிதான் என்பதை இந்த களத்தில் கூட சில வருடங்களுக்கு முன்பே பல கருத்துக்களாக பதியப்பட்டுள்ளது. இப்போது நடப்பது ஒன்றும் ஆச்சரியமான விசயம் இல்லை. இன்று இஸ்லாமியர்களுக்கு நடந்தது நாளை தமிழர்களுக்கு நடக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, சண்டமாருதன் said:

இன்று இஸ்லாமியர்களுக்கு நடந்தது நாளை தமிழர்களுக்கு நடக்கும்.

அனைத்துமே சரியாகதான் சொல்லியிருக்கிறீர்கள் , நான் மேற்கோள் காட்டியதை தவிர...

உங்களுக்கு பிடிக்கவில்லையென்றாலும் என் சார்பாக உங்கள் பதிவை திருத்திக்கொள்ளூம் நாகரிகமில்லாத ஒன்றை செய்கிறேன்  அந்த வரிகள்: 

‘’அன்று தமிழர்களுக்கு நடந்தது இன்று இஸ்லாமியர்களுக்கு நடக்கிறது’’

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, valavan said:

அனைத்துமே சரியாகதான் சொல்லியிருக்கிறீர்கள் , நான் மேற்கோள் காட்டியதை தவிர...

உங்களுக்கு பிடிக்கவில்லையென்றாலும் என் சார்பாக உங்கள் பதிவை திருத்திக்கொள்ளூம் நாகரிகமில்லாத ஒன்றை செய்கிறேன்  அந்த வரிகள்: 

‘’அன்று தமிழர்களுக்கு நடந்தது இன்று இஸ்லாமியர்களுக்கு நடக்கிறது’’

தமிழர்களுக்கு இன்னும் நடப்பதற்கு என்ன மீதமிருக்கிறது?

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, valavan said:

‘’அன்று தமிழர்களுக்கு நடந்தது இன்று இஸ்லாமியர்களுக்கு நடக்கிறது’’

அன்று தமிழர்களுக்கு நடந்தது ஒரு இன அழிப்பு.

இன்று இசுலாமியருக்கு நடப்பது... அரசியல்வாதிகள், அவர்கள் சார்பான கட்சிகளின் வளர்ச்சியை நோக்கியது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

அன்று தமிழர்களுக்கு நடந்தது ஒரு இன அழிப்பு.

இன்று இசுலாமியருக்கு நடப்பது... அரசியல்வாதிகள், அவர்கள் சார்பான கட்சிகளின் வளர்ச்சியை நோக்கியது.

அது மட்டுமல்ல அயல் உறவுகள் உள்ளே வாரதற்கும்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.