Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு தௌஹீத் ஜமாத்தின் பெயரில் எச்சரிக்கைக் கடிதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு தௌஹீத் ஜமாத்தின் பெயரில் எச்சரிக்கைக் கடிதம்

May 5, 2019

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

chundukuligirlscollege.jpg?resize=800%2C

யாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு பயங்கரவாத அமைப்பு ஒன்றின் பெயரில் எச்சரிக்கைக் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தேசிய தௌஹீத் ஜமாத் – யாழ். மாவட்டம் என்ற பெயரிடப்பட்ட இந்தக் கடிதம் தபால் ஊடாக அனுப்பிவைக்கப்படதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘இது முஸ்லிம் நாடு. கிருஸ்தவர்களுக்கு இங்கு இடமில்லை’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாகப் காவல்துறையினர்; தெரிவித்துள்ளனர்.

குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது,

சுண்டுக்குளி கல்லூரி அதிபர்,

இந்தத் தேசம் அல்லாவின் தேசம். இங்கு இஸ்லாமிய மக்கள் மட்டுமே வாழ முடியும். இது எமக்கான புனித பூமி. உங்களைப் போன்ற சிலுவை தூக்கிகளோ வேறு யாருமோ வாழ முடியாது. வாழ விடவும் மாட்டோம்.

புதன்கிழமை 8.5.19 பாடசாலையில் குண்டு வைப்போம். எல்லா சிலுவை தூக்கி மாணவர்களையும் கொல்லுவோம். அல்லா மேல் ஆணை. எல்லாப் பாடசாலைகளும் குண்டு வைக்க ஜிகாதிகள் வந்துள்ளோம். இன்சா அல்ல, எங்கள் குடும்பத்தை அல்லா காப்பாற்றுவார்.

முகமது உமர் றியாஸ் (பிரதீப்)

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பு – யாழ்.மாவட்டம். என அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

குறித்த கடிதம் தொடர்பில், யாழ்ப்பாணம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

#chundukuligirlscollege #muslimcountry #christians #letter  #thowheedjamath

 

http://globaltamilnews.net/2019/120649/

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டுக்குளி பெட்டையளே இப்படி ஒன்றை எழுதிப் போட்டிருக்கக் கூடும். இன்னும் கொஞ்ச நாளைக்கு வீட்டில நிப்பம்.. சோதனைகள் பின்போடப்படட்டும் என்று. 😂😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

சுண்டுக்குளி பெட்டையளே இப்படி ஒன்றை எழுதிப் போட்டிருக்கக் கூடும். இன்னும் கொஞ்ச நாளைக்கு வீட்டில நிப்பம்.. சோதனைகள் பின்போடப்படட்டும் என்று. 😂😂

என்ன ஓர் கண்டுபிடிப்பு நெடுக்கரும் கம்பனில சேர்ந்துட்டார்  போல இருக்கு  ஆனால் காலம் செல்ல செல்ல படிப்பு சுமை கூடும் அவர்களுக்கு 

அதென்ன தமிழ் இடத்தில் மட்டுமே இந்த உலக பயங்கரவாதிகள் இலக்கு வைப்பார்கள் ...சிங்கள அரசாங்கத்தின் நாச வேலை இது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பிய கடிதத்தில் உள்ளவர் கைது

யாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பிவைக்கப்பட்ட பயங்கரவாத அமைப்பின் பெயரிலான மிரட்டல் கடிதத்தில் உள்ள ஒளிப்படத்தில் காணப்பட்டவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

 

யாழ்ப்பாணம் சுன்னாகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே நேற்றிரவு  கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

தனது முகநூலில் உள்ள படங்களை எடுத்து எவரோ ஒருவர் தனக்கு எதிராக இந்த வேலையைச் செய்துள்ளார் என்று சந்தேகநபர் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

தேசிய தௌஹீத் ஜமாத் – யாழ். மாவட்டம் என்ற பெயரிடப்பட்ட இந்தக் கடிதம்  அனுப்பிவைக்கப்பட்டது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

இந்தத் தேசம் அல்லாவின் தேசம். இங்கு இஸ்லாமிய மக்கள் மட்டுமே வாழ முடியும். இது எமக்கான புனித பூமி. உங்களைப் போன்ற சிலுவை தூக்கிகளோ வேறு யாருமோ வாழ முடியாது. வாழ விடவும் மாட்டோம்.

புதன்கிழமை 8.5.19 பாடசாலையில் குண்டு வைப்போம். எல்லா சிலுவை தூக்கி மாணவர்களையும் கொல்லுவோம். அல்லா மேல் ஆணை. எல்லாப் பாடசாலைகளும் குண்டு வைக்க ஜிகாதிகள் வந்துள்ளோம். இன்சா அல்ல, எங்கள் குடும்பத்தை அல்லா காப்பாற்றுவார், எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

 

http://www.virakesari.lk/article/55374

  • கருத்துக்கள உறவுகள்
 

தமிழ் பாடசாலையுடன், முஸ்லிம் பெயரில் விளையாடும் கொடியவர்கள்

 

தன்னை முகம்மது உமர் ரியாஸ் என அறிமுகப்படுத்தும் பிரதீப் எனும் யாழ் இளைஞன், தடை செய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் பேரில் யாழ் சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு எச்சரிக்கை கடிதம் ஒன்று அனுப்பி வைத்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. முழுமையாக யாழ்ப்பாண பேச்சு வழக்கில் அமைந்துள்ள குறித்த கடிதத்தில், 08ம் திகதி புதன் கிழமை பாடசாலைக்கு குண்டு வைக்கப் போவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
 
இதேவேளை, கடிதத்தின் எழுத்து நடை முஸ்லிம்களோடு தொடர்பில்லாத வகையில் அமைந்துள்ளதால் இது தனிப்பட்ட கோபம் அல்லது தேவைக்காக அனுப்பப்பட்ட கடிதமாக இருக்கலாம் அல்லது யாழில் தலையெடுக்க விளையும் பயங்கரவாத குழுவொன்றின் நடவடிக்கையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
 
Mohamed Ihjas 1. ஸலாத்தை கொன்டு ஆரம்பிக்கவில்லை
 
2.அல்லாஹ் காப்பாற்றுவார் என்று முஸ்லிம்கள் சொல்வதில்லை காப்பாற்றுவான் என்றுதான் சொல்வார்கள்
 
3. ஜிகாத் என்று முஸ்லிம்கள் சொல்வதில்லை ஜிஹாத் என்று சொல்வார்கள்
 
4.மக்கா மதீனா அல் அக்ஷா இம் மூன்று இடங்களை தவிர முஸ்லிம்களுக்கு புனித பூமி கிடையாது
 
5 இஸ்லாமியர்கள் மட்டுமே வாழ வேண்டும் என்று சவூதியில் கூட சொன்னது கிடையாது
 
6. கிருஸ்தவ சகோதரர்களை சிலுவை தூக்கி என்று வர்னிப்பவர்கள் புலித்தீவிரவாதிகள்
 
7. அல்லாஹ் மீது ஆணை எனறு முஸ்லிம்கள் சொல்வதில்லை அல்லாஹ்வின் மீது சத்தியமாக என்றே சொல்வார்கள்..
 
8.இன்ஸா அல்லாஹ் என்பதும் தவரு
இன்ஷா அல்லாஹ் என்று இருக்க வேண்டும் ஆக மொத்தம் இது ஏதோ ஒரு முன்னாள் தீவிரவாதியான ஏதோ ஒரு வேட தமிழனின் செயல்
மற்றும் உலக வரலாற்றில் எல்லா தகவலையும் சரியாக கொடுத்து தாக்குதல் நடத்தபோவது இதுதான் முதல் தடவை
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நடந்ததை திசை திருப்ப மேற்கொல்லபட்ட செயல்..... 🤔🤔🤔
  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, colomban said:

6. கிருஸ்தவ சகோதரர்களை சிலுவை தூக்கி என்று வர்னிப்பவர்கள் புலித்தீவிரவாதிகள்

மத ரீதியான அனைத்துப் பயங்கரவாதச் சிந்தனைகளையும் செயற்பாடுகளையும் செய்து கொண்டு அதற்கு வக்காளத்து வாங்கும் முஸ்லிம் மத அடிப்படைவாத பயங்கரவாதிகளால் நடத்தப்படும் jaffnamuslim என்ற இந்த இணையத்தளம் யாழில் தடை செய்யப்பட வேண்டும்.

விடுதலைப்புலிகள் என்றுமே மத வெறுப்புப் பிரச்சாரங்களை செய்ததும் இல்லை.. ஊக்கு வித்ததும் இல்லை.

இப்படியான அப்பட்டமான பொய்களையும் திரிபுகளையும் தமது இஸ்லாமிய மத வெறிப் பயங்கரவாதத்தை நியாயப்படுத்த... இந்த இணையத்தளம் பயன்படுத்துவது தொடர்ந்து மக்கள் மத்தியில் பரவ இடமளிக்கக் கூடாது.

இந்த இஸ்லாமிய மதவெறிப் பயங்கரவாதிகளால்.. தமிழ் மக்கள் 1990 இல் இருந்து ஏன் அதற்கு முன்னிருந்தே பட்ட துன்பங்கள் போதும். 

இவர்களின் இதர மத வெறுப்பு பாசிச நோக்கக் கருத்துக்களை யாழில் ஒட்டுவதை தவருங்கள். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

மத ரீதியான அனைத்துப் பயங்கரவாதச் சிந்தனைகளையும் செயற்பாடுகளையும் செய்து கொண்டு அதற்கு வக்காளத்து வாங்கும் முஸ்லிம் மத அடிப்படைவாத பயங்கரவாதிகளால் நடத்தப்படும் jaffnamuslim என்ற இந்த இணையத்தளம் யாழில் தடை செய்யப்பட வேண்டும்.

விடுதலைப்புலிகள் என்றுமே மத வெறுப்புப் பிரச்சாரங்களை செய்ததும் இல்லை.. ஊக்கு வித்ததும் இல்லை.

இப்படியான அப்பட்டமான பொய்களையும் திரிபுகளையும் தமது இஸ்லாமிய மத வெறிப் பயங்கரவாதத்தை நியாயப்படுத்த... இந்த இணையத்தளம் பயன்படுத்துவது தொடர்ந்து மக்கள் மத்தியில் பரவ இடமளிக்கக் கூடாது.

இந்த இஸ்லாமிய மதவெறிப் பயங்கரவாதிகளால்.. தமிழ் மக்கள் 1990 இல் இருந்து ஏன் அதற்கு முன்னிருந்தே பட்ட துன்பங்கள் போதும். 

இவர்களின் இதர மத வெறுப்பு பாசிச நோக்கக் கருத்துக்களை யாழில் ஒட்டுவதை தவருங்கள். 

எப்பவாவது தமாஷாக பீல் பண்ண வேணும் எண்டு  பீல் பண்ணினால்  நான் இந்த முசுலீம் வெப் சைட் க்கு தான் போறனான் , தடை செய்யச் சொல்லுறியளே  

 

இன்றைய திகதியில் இன்னொருவர் சொல்லி யாரவது தங்கள் நிலையை மாற்றிக் கொள்ளும் சூழ்நிலை இருக்கின்றதா என்ன , எல்லோரும் தமக்கு எல்லாம் தெரியும் என்று தானே நம்பிக் கொண்டிருக்கின்றனர்  

 

  • கருத்துக்கள உறவுகள்

 

சுண்டுக்குளி மகளிர் கல்லூரியும், தேசிய தௌஹீத் ஜமாதும் – சுன்னாகம் இளைஞரும்

Inquiry1.jpg?resize=796%2C585
 

யாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பிவைக்கப்பட்ட பயங்கரவாத அமைப்பின் பெயரிலான மிரட்டல் கடிதத்தில் உள்ள ஒளிப்படத்தில் காணப்பட்டவர் யாழ்ப்பாணம் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் சுன்னாகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே நேற்றிரவு கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளார். தனது முகநூலில் உள்ள படங்களை எடுத்து எவரோ ஒருவர் தனக்கு எதிராக இந்த வேலையைச் செய்துள்ளார் என சந்தேகநபர் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

தேசிய தௌஹீத் ஜமாத் – யாழ். மாவட்டம் என்ற பெயரிடப்பட்ட இந்தக் கடிதம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது “இந்தத் தேசம் அல்லாவின் தேசம். இங்கு இஸ்லாமிய மக்கள் மட்டுமே வாழ முடியும். இது எமக்கான புனித பூமி. உங்களைப் போன்ற சிலுவை தூக்கிகளோ வேறு யாருமோ வாழ முடியாது. வாழ விடவும் மாட்டோம்.

புதன்கிழமை 8.5.19 பாடசாலையில் குண்டு வைப்போம். எல்லா சிலுவை தூக்கி மாணவர்களையும் கொல்லுவோம். அல்லா மேல் ஆணை. எல்லாப் பாடசாலைகளும் குண்டு வைக்க ஜிகாதிகள் வந்துள்ளோம். இன்சா அல்ல, எங்கள் குடும்பத்தை அல்லா காப்பாற்றுவார்.”

முகமது உமர் றியாஸ் (பிரதீப்)

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பு – யாழ்.மாவட்டம். என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. #ChundikuliGirlsCollege #jaffna #srilanka #NationalThowheethJamaath #NTJSriLanka

http://globaltamilnews.net/2019/120850/

 

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பப்பட்ட மிரட்டல் கடிதத்தின் ஒளிப்படத்தில் காணப்பட்டவர் விடுவிப்பு

யாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பிவைக்கப்பட்ட பயங்கரவாத அமைப்பின் பெயரிலான மிரட்டல் கடிதத்தில் உள்ள ஒளிப்படத்தில் காணப்பட்டவர், யாழ்ப்பாணம் காவல்துறையினரால் வாய் முறைப்பாடு பெற்ற பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்

யாழ்ப்பாணம் சுன்னாகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரையே காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்து விசாரித்த பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தனது முகநூலில் உள்ள படங்களை எடுத்து எவரோ ஒருவர் தனக்கு எதிராக இந்த வேலையைச் செய்துள்ளதார் என்று சந்தேகநபர் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

இதனால் அவரது ஒளிப்படம் முகநூலில் இருந்து தரவிறக்கப்பட்டு போலிக் கடிதத்தில் பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் இளைஞரிடம் வாய்முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் இளைஞரது ஒளிப்படத்தை அவரது முகநூலில் இருந்து தரவிறக்கம் செய்து அந்தக் கடிதத்தில் பயன்படுத்தியவர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.

தேசிய தௌஹீத் ஜமாத்தைச் சேர்ந்த சிலர் ஒருவருடத்துக்கு முன்னர் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்து தமது கொள்கைப் பரப்பில் ஈடுபட்டனர் என்ற தகவல் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் நிலையில் இந்தப் போலிக் கடிதம் தொடர்பிலும் காவல்துறையினர் அதிக அக்கறை கொண்டு விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

#ChundikuliGirlsCollege #release #police

http://globaltamilnews.net/2019/120977/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.